Thursday, December 28, 2023

விஜயகாந்த் 
இவரைப் பற்றி பேச துவங்கினாலே இப்ராகிம் ராவுத்தர் ஞாபகம் வருகிறது .. மதுரையில் ரைஸ்மில்லை பாரத்துக்கொண்டிருந்தவரை சினிமா ஆசையை அறிந்து சென்னை அழைத்த வந்தவர்..
..
ஆரமபகாலங்களில் அவரை கேலிசெய்தவர்களின் அலுவலகம் சென்று சண்டை போட்டவர்.. நடித்தால் கதாநாயகனாக நடி என இல்லையென்றால் வேண்டாம் என்றவர்.. விஜயகாந்த் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த போது ராவுத்தர் பிலிம்ஸ்  என்ற கம்பெனியை உருவாக்கி வெற்றி படங்களை தந்தவர் .. அன்றைக்கு கும்பகோணம் யூகிசேது வின் தந்தையிடம் பைனான்ஸ் பெற்று படங்களை தயாரித்தார் விஜயகாந்திற்காக தானே பைனான்ஸ் கம்பெனியில் கடனுக்கு கையெழுத்திட்டு பணம் பெற்று புதிய இயக்குனர்களை கொண்டு வெற்றி படங்களை தந்து விஜயகாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ..  நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனிதர் தனக்கு கல்யாணம் ஆனால் விஜயகாந்தை பிரிய நேரிடுமோ என கல்யாணம் செய்தக் கொள்ளாதவர் இப்ராகிம்
..
ராவுத்தர் பிலிம்ஸில் தினமும் சாப்பாடு போட்டார், வெள்ளிக்கிழமை பிரியாணி என வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டவர் இதெல்லாம் ராவுத்தர் பிரிவதற்கு முன்பு வரை நடந்தது.. தனக்கான வாழாமல் தன் நண்பனுக்காக வாழ்ந்தவர்
கடைசி காலத்தில் நோயின் பிடியில் இருந்த போது கூட விஜயகாந்த் அருகில் வைத்துக்கொள்ளவில்லை..  விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முதன்மை காரணமானவர் ,
விஜயகாந்த் வாழ்வில் ஒளியேற்றியவர் இப்ராகிம் ராவுத்தர்  ஏனோ இந்நாளில் நினைவில் வந்தார் 
..
ஆலஞ்சியார்

Tuesday, December 26, 2023

இஸ்லாமிய சமுதாய பாதுகாவலர் எடப்பாடிக்கு வாழ்த்துகள் .. SDPI அரசியல் கட்சி அது தனக்கு வேண்டியவர்களோடு கூட்டணியமைக்க அதற்கு உரிமையுண்டு .. சமுதாயத்தை காப்பாற்றுகிற பணியில் தங்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என கருதி "பாதுகாவலன்"  பட்டத்தை எடப்பாடிக்கும் தரும் அந்த பெரிய மனதை பாராட்டாமல் போனாலும் வசைபாட கூடாது ..
..
SDPI பிழைப்புவாத இயக்கம் சமுதாய இளைஞர்களை வழக்கெடுக்கும் வேலைகளில் தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டு பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கும் வேலைகளில் எஜமானர்களின் சொல்லுக்கு ஆடும் விசுவாசமான எடுபடிகள்.. தலைமை எடுபடி எடப்பாடியை கொண்டாடாமல் போனால் தான் வியப்பு வரும்..  இஸ்லாமிய சமுதாயத்தைப் போல பரிதாபகரமான சமுதாயம் வேறெதும் இல்லை .. தடுக்கி விழுந்தால் தலைவன் அவன் வழியில் கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரு கூட்டம், ஏன் இப்படி என யாரும் கவலைக் கொள்வதில்லை ..
..
தங்களுக்கென ஒரு தலைவனை தேர்வு செய்ய முடியாமல் அதிகாரம்,பதவி தானென்ற மிதப்பில் "திரியும்" சிலரை தங்கள் சமுதாயத்தை காக்க வந்த "தெய்வமாய்" நினைத்து இளைஞர்கள் வழிகேட்டில் நிற்கிறார்கள்.. IUML ன் அலட்சியபோக்கு 
 குறிப்பாக தமிழகத்தில் இரு இலக்கங்களை தாண்டி "அமைப்புகள்" .. எல்லோருக்கும் சுயநலம் , தனக்கு கைதட்ட சிலர் இருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் .. பரிதாபம் தோன்றுகிறது ..
..
சிறைவாசிகளை விடுதலைச் செய்யவில்லை அதனால் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என சிலர் .. எதையும் திமுக சட்டரீதியாக வலுவான நிலையில் செய்யும் ஒரு உதாரணம் போதும் ஆந்திராவில் அவசரகதியில் கொண்டுவந்த இட ஒதுக்கீடடை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது அதை காரணம் காட்டி ஜெயலலிதா முதல் பார்ப்பன ஊடகங்கள் தமிழகத்திலும் இட ஒதுக்கீடு வராது வந்தாலும் ரத்தாகும் என புலம்பினர் .. கலைஞர் மிக தெளிவாக  சட்டவல்லுநர்களிடம் ஆலோசித்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் பரிந்துரைப் பெற்று 7.5%விழுக்காடுக்குமேல் போக கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இஸ்லாமிய கிருத்துவ சமுதாயத்திற்கு தலா 3.5% எனவும் ஜெயின் சமுதாய மக்களுக்கு 0.5%  விழுக்காடும் தந்தார் வழக்கம் போல் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தை நாடினர் ஆனால் உச்சநீதிமன்றம் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஏற்று உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது எடுத்தேன் கவிழ்த்தேன் என இல்லாமல் சரியான பாதையில் திமுக செல்லும் என்பதற்கு இந்த உதாரணம் போதும்.. 
..
எனக்கென்னவோ தமிழக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிமுகதான் சரியெனபடுகிறது ..  CAA  சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அதை செய்யாத அதிமுக சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்பது கொடுப்பினை.. தங்களுக்கென ஒரு தலைவனை கண்டறிய  முடியாத சமுகம், சட்டென்று உணர்சசிவயப்படும் சமுகம் நிலைகுலைந்து நிற்கும்.. 
சமுதாயத்தை பிடித்த பீடைகள் விலக காத்திருப்போம் ..
அது என்ன "மதசார்பின்மை"
..
ஆலஞ்சியார்

Monday, December 25, 2023

பொன்முடி ..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து வருமானவரித்துறை மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனையும் 50லட்சம் அபராதம் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது ..
..
உயர்நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது  .. ஆனால் தீர்ப்பில்  உள்ள முரண்கள் கேள்வி எழுப்புகிறது .. வருமானவரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டிருப்பது  அபராதம் 10% விழுக்காட்டிற்கு மேல் இருப்பதும் இங்கே கேள்வி எழுகிறது இரண்டு பேரும் தலா 50 லட்சம் என்பது 1.75 கோடியில் ஏறக்குறைய 60% விழுக்காடு வருகிறது .. 
..
பொன்முடி துணைவியார் விசாலாட்சி அவர்களின் பெயரில் இயங்கும் விஷால் மோட்டார்ஸ் வருடம் ₹5 கோடி வியாபாரம் ஆவதாக வங்கி அதிகாரி சாட்சியம் அளித்திருக்கிறார் .. ஆனால் ₹1.75 அதிக வருவாய் என வருமான வரித்துறை  வழக்கு .. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள் .. எது எப்படியோ பாஜக தன்னை எதிர்ப்பவர்கள வழக்குகளில் தனிக்கவனம் செலுத்துவதும் வேண்டியவர்களை வைத்து சந்திப்பதும் தொடர்கதையாகிறது..
..
உயர்நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறது .. மேல்முறையீட்டிற்கான அவகாசம் தந்திருக்கிறது .. அலட்சியமாக இல்லாமல் நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டு இன்னும் திறமையான ஆடிட்டர் ஆலோசனையில் வழக்கை எதிர்க்கொள்ள வேண்டும் ..  இது ஊழல் வழக்காக நீதிமன்றம் கருதாமல் வருமானத்தை மீறிய (சொத்து/பணம்) என தீர்ப்பு   வழங்கியிருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும் .. இப்படி நிறைய முரண்கள் தீர்ப்பில் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. ஆனாலும் திமுக மீது விழுந்த கரை .. அதை துடைத்து வெளிவரவேண்டியது 
அவசியம்..
..
காத்திருப்போம்
..
ஆலஞ்சியார்

Friday, December 15, 2023

விஜயகாந்த் 
சினிமாக்காரன் .. அதுவரை எந்த குழப்பமும் இல்லை ஆனால்  அரசியல்வாதி ஆவதற்கு அடிப்படை தகுதிகூட இல்லை .. சில முக்கிய காரணிகளே ஒருவரை அரசியல்வாதியாக தீர்மானிக்கிறது .. பொதுநலம், தீர்மானிக்கும் ஆற்றல், எதை எப்படி எதுவரை செய்யவேண்டும், எப்போது ஆடவேண்டும், தன் தகுதி என்ன என்பதை உணர்தல், இவையாவும் இல்லாதவர்..
..
வந்தவர்களுக்கெல்லாம் சோறுபோட்டேன் என்ற மகோராவின் சொல்லின் உண்மையாய் திகழ்ந்தார் அது அவரின் இயல்பாக இருக்கலாம் மீன் சோறு போடுவதல்ல மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டும் அதுதான் பொதுவாழ்வில் பெயர் சிறக்க வழிவகுக்கும்.. அது இருவரிடமும் இல்லை.. அரசியலை புரிந்துக் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது துவக்கத்தில் வெளிச்சம் தரும் அது மின்மினி பூச்சியின் வெளிச்சம் .. அதை உணரவே இல்லை என்பதுதான் கொடுமை..
..
சினிமா மோகம் வாழ்வு தரும் என்பது எழுபது என்பதுகளில் சரி.. ஆனால் இப்போதெல்லாம் உதவாது.. அரசியலில் சில முடிவுகள் குழியில் தள்ளிவிடும் அது நடந்தது.. சோவின் பேச்சை நம்பி ஜெயாவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கமானது .. அதிலிருந்த மீள பழம் நழுவி பாலில் விழ வாய்ப்பிருந்தது ஆனால் விழுந்தது சகதியில்.. தன் எதிர்காலத்தை சிதைத்த தருணம் அது .. இன்று அரசியலில் கோமாளியாக காட்சியளிக்கிறார்.. கிடைத்தது வரை லாபம் என்ற நிலையிலிருந்து லாபம் கிடைக்க காட்சிப்படுத்தும் பொருளாய் மாற்றிய பெருமை பிரேமலதாவை சாரும்..
.. 
இப்ராகிம் ராவுத்தரோடான நட்பும் பிரிவும் இவர் வாழ்வில் நல்ல பாடத்தை போதித்திருக்கிறது ..  உண்மையில் கேப்டனின் இன்றைய நிலை அவருக்கு ஓய்வு தரவேண்டிய நேரத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து  காட்சிபடுத்தி தன்னை பொதுச்செயலாளராக  முன்னிறுத்தி இனி கேப்டன் இல்லை நான் தான் எல்லாம் என சொல்லியிருக்கிறார் .. பெரிய கட்சியாக வர வேண்டிய தேமுதிக இன்னுமொரு லெட்டர்பேட் "அமைப்பாக" சுருங்குகிறது..  மற்றபடி கேட்பாரற்று கேப்டன் பரிதாபம் 
..
பிரேமலதாவிற்கு வாழ்த்துகள்  
விரைந்து நலம் பெறுக! கேப்டன் !! ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, December 14, 2023

நாடாளுமன்றம் ..  தோற்றுக்கொண்டிருக்கிறது 
பாதுகாப்பு காரணங்கள் மட்டுமல்ல சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கபடுவதும், ஊழல் பொய் எனும் சொற்களை கண்டு ஆள்பவர்கள் அச்சபடுவதும் விடுதலை இந்தியா மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதை காணமுடிகிறது .. 
..
நாடாளுமன்ற தாக்குதலில் யார் இவர்கள் என பரப்பரப்போடு செயல்பட்ட ஊடகங்கள் 'அவர்கள்" இல்லை இதன் பின்னணியில் என்றவுடன் நிசப்தமானது.. இவர்கள் மொழியில் "தேசவிரோதிகள்" இல்லையென்றவுடன் பிரதமர் உள்துறை அமைச்சர் தொடங்கி சுமந்த் மாமாக்கள் வரை அமைதி காக்கிறார்கள் 
வேறெதையோ எதிர்பார்த்து ஏமாந்து பாதுகாப்பு குறைபாடு என்ற சொற்சொடரோடு முடித்துக் கொணடார்கள் .. 
..
ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியவுடன் திமுக ஆட்சியை கலைக்க சொன்னவர்கள் இப்போது மௌனம் விரதம் இருக்கிறார்கள்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவனுக்கு அனுமதி சீட்டு தந்த பாஜக எம்பி அவையில் இருக்கிறார்.. விரிவான விரைந்த விசாரணை தேவையென குரல் கொடுத்த கனிமொழி Kanimozhi Karunanidhi   உள்ளிட்ட 15 பேர் இடை நீக்கம் வாழ்க சனநாயகம் 
..
சனநாயக விழுமியங்கள் கொஞ்சம் கொஞசமாய் செத்துக் கொண்டிருக்கிறது.. இங்கே பாரப்பனர்கள் தவிர மற்றவர்கள் நீதி,சட்டம், அரசியல் கொண்டு மெல்ல மெல்ல கொல்லப்படுகிறார்கள்..  இந்த நாடு தன் ஜீவனை இழக்கிறது.. சட்டம் முன் நின்றாலும், நிறமும் உடையும் அடையாளமும் உற்று நோக்கியே தீரப்புகள் எழுதப்படுகின்றன.. மிச்சமிருக்கும் நம்பிக்கை செயலிழக்கிறது.. வாக்குகள்,விலைபேசியோ மிரட்டியோ அல்லது இயந்திரம் கொண்டோ தனகாக்கிக் கொள்ளும் தந்திரமே இன்றைய தேசபக்திமார்களின் சூட்சமம்
..
எங்கே போகிறது எனது இந்தியா அடிப்படைவாதிகள் மதவெறிகள் முட்டாள்கள்,பொய்யர்கள் கையில் கிடந்து சீரழிகிறது.. இன்னமும் நாம்  இந்திய சனநாயகத்தின் ஆணிவேரில் இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது..
இன்றைய இந்திய ஒன்றியம் திராவிடத்தின் திமிலில் ஏறி பயணிக்க வேண்டும் .. மக்களின் தன்னெழுச்சியும் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் சாதிமத வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாய் ஒற்றை இலக்கோடு பாசிச மதவெறியாளரகளை வீழத்துவதே வரும் தலைமுறைக்கு 
செய்யும் நற்செயல் 
..
ஆலஞ்சியார்

Wednesday, December 13, 2023

மீண்டு வருகிறது சென்னை..
அனைவருக்கும் நன்றி!  இந்த பெருமழை நிறைய செய்திகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது..எம்ஜிஆர் எனும் கோமாளியின் நிஜத்தையும், இரும்பு பெண்மணி என பார்ப்பன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பத்தையும் அதிமுக எனும் அறிவிலிகள கூட்டத்தையும் திமுக என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்கும் "நடுநிலை" களையும் தோலுரித்து காட்டி இருக்கிறது..
.. 
நாடாளுமன்றத்தில் ₹4000 கோடி எங்கே என தம்பிதுரை கேள்வி எழுப்ப அவரது அறியாமையை அவரே வெளிச்சம் போட்டார்.. முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து தான் அறிவுஜீவிகள் செல்வார்கள் அதில் பார்ப்பனர்கள் கை ஓங்கி அரசியல் சாசனத்தை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள் தான் என இறுமாப்போடு இருந்தவர்களை I Am Dravidian stock என அதிரவைத்து தொடர்ந்து வல்லமையோடு பேசும் அறிவார்ந்தவர்களை அனுப்பியது தி.மு.கழகம்.. தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் என்றாலே சபை உற்றுநோக்கும்.. அதை உடைத்து காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென பாடலை  பாட செய்த பெருமை ஜெயலலிதாவை சாரும் தங்களை விட யாரும் அறிவாளிகளாகிவிட கூடாது என்ற மனப்பான்மை முட்டாள்களை அனுப்பி தமிழ்நாட்டில் இப்படியும் சில கோமாளிகள் இருக்கிறார்கள் என காட்டினார் அப்படியான வரிசையில் வந்தவர் தான் தம்பிதுரை
..
47 ஆண்டுகளுக்கு இப்படியொரு பெருமழை பேரிடராய் வந்தது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தாலும நினைக்கவே அச்சமாகிறது.. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் என உளறிவைத்து அதையும் ஊடகங்கள் சொல்லி குதூகலம் அடைந்திருக்கும் .. பேரிடர் நிவாரணத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கும் தவிர்க்க முடியாதுதான்.. காலதாமதமும் தனக்கு கிடைத்துவிட்டதென சிலர் பகிர்ந்ததை கண்டு பலர் கோபம் கொள்வதும் தனக்கு தெரிந்த அதிகார மட்டத்தில் காரியம் சாதித்துக் கொணடவர்களின் இறுமாப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தான் .. ஆனாலும் விரைந்து சேவை செய்து மாநகரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.. அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் #துப்புறவுதெயவங்கள்  என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி பெருங்துயரிலிருந்து மீட்டுயிருக்கிறார்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
மாநகர மேயர்.. இவரின் உழைப்பை திறமை கேலிசெய்தவர்கள் சின்னப் பெண் என்றவர்களுக்கு தான் சிங்கப்பெண்  என நிரூபித்திருக்கிறார் .. ஊடகங்கள் சமூகவலைத்தளங்கள் நேர்மை தவறிய போதும் எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் தனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தன் உழைப்பின் மூலம் தான் யார் என்பதை உணர்த்தி திறம்பட செயல்பட்டிருக்கிறார் PriyaRajan DMK ..
.. 
அனைத்து 
களப்பணியாளர்களுக்கும் நன்றி!🙏
..
ஆலஞ்சியார்

Friday, December 8, 2023

மேயர்.. 
மாநகரின் முதல் பெண்மணி ..
இதுவரை கண்ட சென்னை மாநகராட்சியின் மேயர்களில் அதிகம் பேசப்பட்டவர் அதிகம் உழைத்தவர் .. விமர்சனம் என்ற கக்கும் விசமங்களை புறங்கையால் தள்ளிவிட்டு வீணர்களின் வெற்று கூச்சல்களுக்கெல்லாம் கலங்காமல் காரியம் ஓன்றே குறிக்கோளாய் செயலாற்றும் மாநகரின் செல்லமகள்..
..
இதுவரை கண்டிராத பெருமழை ஒரு வருடம் பெய்ய வேண்டியதை ஒரே நாளில் கொண்டிதீர்த்து இயற்கை தாண்டவமாடியது கொஞசமும் அசராமல்  அயராமல் ஓடிக் கொண்டே இருந்தார் கிடைத்ததை தின்று கார் பார்க்கிங்கில் உணவருந்தி  வீட்டிற்கே செல்லாமல் அரசு அலுவலகத்திலேயே குளித்து உடைமாற்றி தனக்கு தலைவர் தந்த பொறுப்பு உணர்ந்து  உழைத்துக் கொண்ட இருந்தார் .. உடல் நலத்தையும் கொஞ்சம் பாருங்கள் 
..
சிலரின் விமர்சனங்கள் பொறுப்பற்ற அரசியலாய் இருந்தும் ஒன்றுகூடி உழைக்கவேண்டிய நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை கக்குவதும்  பேஷன் ஷோ நடத்த முடியாமல் போனதாய் கிண்டல் அடிப்பதும் மனித நாகரீகமற்ற செயல் .. அவர் உடுத்து உடை உங்களுக்கு எரிச்சலை தருகிறதென்றால் அதை தொடர்ந்து செய்வோம் ..  
..
மேயராக பொறுப்பேற்றபோது சின்ன பெண் என்றார்கள் அவர் உழைப்பை கண்டு அவரின் ஒழுங்கை திறமை நிர்வாக திறனை கண்டு சிலர் வாயடைத்துப்போய் செய்வதறியாது நிற்கிறார்கள் ..
கொள்கை உறுதியோடு தலைமை தந்த பணிகளை செவ்வனே செய்து மக்களிடம் பெரும் மதிப்பை பெற்ற மேயராய் திகழ்கிறார் ..  விமர்சனங்களை கண்டு பெறாமல் நடிப்பது போலல்ல இது உதவி வேண்டுமா கேளுங்கள் என இடது கையால் தள்ளி தான் நிஜத்தில் இரும்பு பெண்மணி .. ஓடியொளிந்துக் கொண்டு நடுக்கத்தல் ஏரியை திறந்து திக்குமுக்காட செய்யும் பேதை அல்ல.. எதையும் எதிர்க்கொள்ளும் மனோபலமும் உழைப்பும் சரியாக செய்யம் ஆற்றலும் உண்டு என நிரூபித்திருக்கிறார் ..
வரலாறு காணாத பெருமழையில் நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்படும் அதற்காக இவரின் அர்ப்பணிப்பை கேவலபடுத்தாதீர்.. 

..
 இயற்கை பேரிடரை எதிர்கொண்டு மாநகர மக்களின் நலன் காத்த இவரை கொண்டாட மனமில்லாமல் போனாலும் குறைச் செல்லாதீர்கள்  இதுவரை தலைநகர் கண்ட மேயரகளில் தலைசிறநதவராய் திகழ்கிறார் .. நேர்மையும் கடின உழைப்பும், திறமையும் அவரை இன்னும் உயர்த்தும்  ..
வாழ்த்துகள் தாயி..
..
ஆலஞசியார்