Friday, June 30, 2023

நல்ல தொடக்கம்..
சனாதன சாம்ராஜ்யத்தை வீழ்த்த பெரும்படை ஒன்று தயாராகிறது.. அவ்வளவு எளிதல்ல அதிகாரம் பலம்  பணம், அரச இயநதிரம் அதற்கெல்லாம் மேலாய் மதம் .. மக்களின் அறியாமையை, புராதன கட்டுக்களை மண்டையில் ஏற்றி அவனைக் கொண்டே பல்லாக்கை தூக்க செய்து பலகாலமாய் பவனி வரும் தேரின் அச்சாணியை பிடுங்குவது சுலபமல்ல.. பெருமலையை உளிக்கொண்டு சிதைக்கும் செயல் தொடர்ந்து அடித்தடித்து உடைத்தோறிவோம்..
..
மக்களை மனவோட்டம் இந்த அழிச்சாட்டியகாரர்களின் அழிமதியாளர்களின் பொய்யே பிரதானமாக கொண்டு கோட்டை எழுப்பி கொக்கரிக்கும் ஈனர்களை  குறிப்பிட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஓட்டுமொத்த மக்களை வதைக்கும் செயலை கண்டு சினர்ந்தெழுந்து நிற்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாய் நிற்போரை ஒருங்கிணைத்து பொது உடன்பாட்டில் இந்த பாசிச பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே செயல்திட்டத்தில் இணைந்து நிற்கிறார்கள் ..தங்களுக்கும் இருக்கும் வேற்றுமையை மறந்து பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டுமென ஒரே நோக்கம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவுமில்லை 
..
சனாதன எதிர்ப்பின் அடித்தளம் மிக பலமாக உள்ள தமிழ்நாட்டை எப்படியும் உடைக்க வேண்டுமென பெரும் காத்திருப்பில் பாஜக தொடர்ந்து பொய்யை புரளியை வேகமாக பரப்புவதும் அதை ஊடகங்களை கொண்டு ஊதி பெரிதாக்குவதும் சற்றென்று பொட்டிதெரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.. எதையு‌ம் ஆய்ந்தறிந்து ஏற்கும் தமிழரின் குணம் பண்டே பழக்கபட்டதால் பாவம் பாசிசம் முழி பிதுங்குகிறது..வட மாநிலங்களில்
மதத்தை முன்னுறுத்தி பயம் காட்டி தொடர்ந்து மூளைச்சலவை செய்து அறியாமையில் உலளச்செய்து வந்தது.. சமூகநீதியை முன்னிறுத்தும் பீகாரிலிருந்து சிறிய பொறி பெரும் சுவாலையாக
 (கனலொழுங்கு) மாறி பாசிசம் எனும் தீமையை சுட்டெரிக்கும்..
..
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் வலுவான கட்சிகள் தலைமையில் குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு தொகுதி பங்கீடு வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருக்கிறார்.. வரவேற்கத்தக்கது .. ஏதோவொரு கட்சிக்கு எதிரானது அல்ல இந்தியாவின் ஐனநாயகதன்மையை மதசார்பின்மையை, பன்முகதன்மையை காப்பதற்காக ஒருங்கணைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உரையாற்றியிருக்கிறார்.. நோக்கம் ஒன்றுதான் இந்தியாவின் முகத்தை காப்பது உலகின் மிகப்பெரிய மதசார்பற்ற ஜனநாயக நாட்டின் இறையாண்மை காப்பது ..
வெல்வோம் ..
முடியாதென்று ஏதுமில்லை..
..
ஆலஞ்சியார் 

Friday, June 23, 2023

கலைஞர் கோட்டம் ..
மாபெரும் தலைவனுக்கு ,தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்த அறிஞருக்கு, தமிழர் பண்பாட்டை காத்துநின்ற பெருவுடையானுக்கு ,
பிறந்த மண்ணில் பெயர் சொல்ல ஒரு கோட்டம்.. 
..
14 வயதில் திருவாரூர் வீதிகளில் படையோட்டம் நடத்திய பெருவீரன்..
நிலகிழார்களின் கைகளில் இருந்த தஞ்சையை மீட்ட எங்கள் ராசராசன்
ஆரூர் தந்த சங்கத்தமிழ், கீழ்தஞ்சையின் கனியமுது, தமிழை ஆண்ட தமிழ்நாட்டை ஆண்ட பேரறிவாளன், எல்லோர்க்கும் இனிய பேரன்பாளன் ,எதிரிக்கும், பகைவர்க்கும்,துரோகிகளுக்கும் அருள்பாலும் பேரருளாளன்..
..
தமிழ்நாட்டின் பெருஞ்செல்வம், தமிழர்களின் பெரும் தவம்,
எளியவரின் அமுதசுரபி, கடைநிலையோருக்கு கிட்டிய கருணை.. பொதுவாழ்வின் பேரொளி, துன்பத்தை நீக்கும் யாழிசை, எதற்கும் அஞ்சா திராவிடத் திமிர், பகைவரும் மயங்கி நிற்கும் தமிழிசை, அரசியல் கற்றோரக்கும் கற்போர்க்கும் தெளிவான பாடத்திட்டம்(Syllabus)..
..
என்பதாண்டு பொதுவாழ்வு அறுபதாண்டு கலைவாழ்வு..
எளியவரை, இயலாதோரை ஏற்றிட படிகளாய் நின்று , பகுத்தறிவு துணைக் கொண்டு திட்டம் வகுத்து, 
பள்ளத்தில் கிடந்தோரை படிகளில் ஏற்றி அனைவருக்கும் அவர்தம் உரிமையை பெற ஓயாது உழைத்த பெருந்தலைவன் .. தமிழ் நாட்டின் ஒளிவிளக்காய், தமிழர்களின் அகல்விளக்காய், மங்காத புகழ்விளக்காய், மானுடத்தின் மணிவிளக்காய், திகழ்ந்திட்ட 
செம்மொழி நாயகனுக்கு  ஆரூரில் கோட்டம்  ..
தமிழர் நெஞ்சமெல்லாம் கொண்டாட்டம்..
வாழ்க! கலைஞர்..
..
 ஆலஞ்சியார்


 


Monday, June 19, 2023

தலைவா..
உன் கண்ணசைவில் 
காத்திருந்து காரியமாற்ற 
கழகத்தவர் நெடிய வரிசையில் 
நீயோ.. அமைதியாய் 
காய் நகர்த்தி அதிரவைக்கிறாய்..
..
வல்லவனோடு மோதலாம் 
இவர்கள் 
சரிநிகரில்லாதவர்கள் 
சூழ்ச்சியும்  வஞ்சமும் 
நஞ்சும் கலந்த நரகல்கள்..
இவர்களிடத்தில் 
அறம் செல்லாது தலைவா..
நாகரீகம் 
ஒற்றை வழி பாதையல்ல 
கர்ப்பிணி வயிற்றில் கத்திவைப்பவனிடம் 
பூக்களையா தர முடியு‌ம்..
..
அறநெறி அரசியல் 
அற்றுப்போன காலத்தில் 
போதனை வகுப்புகள்
பலனளிக்காது தலைவா..
நாம் 
அரசியல் பல்கலைக்கழகத்தில்
பாடமெடுப்பவர்கள்..
அரிச்சுவடி கூட தெரியாதவனிடம்
எதைச் சொன்னாலும் புரியாது 
அவன் வழியில் சென்று
அறைந்தால் தான் புரியும் 
..
பொறுப்பானவர்கள்,
புரிந்தவர்கள்,
கருத்துவேறுபாட்டை கூட ரசிப்பவர்கள் 
ஜனநாயகத்தை நேசித்தவர்கள் 
பண்பான பெருமக்களோடு 
அரசியல் செய்தோம் 
அதுவொரு காலம் 
இன்றோ  
பொய்மையும்,புரட்டும் 
எதிர்கருத்தை நசுக்க நினைக்கும் 
அரசியல் கோமாளிகள்
நம்மை
அடக்கநினைக்கிறார்கள் 
நமக்கு எல்லா அரசியலும் தெரியும்
மிசாவை காட்டினால் விசா வாங்க வேண்டிவரும் என்றவர்கள் 
உறவுக்கு கை கொடுப்போம்
உரிமை குரல் கொடுப்போம் என்றோம் 
எங்கே
எங்கனம் 
எப்படி ஆடுவதென 
கற்பிப்பவர்கள் 
உன் கண் அசைவு போதும் தலைவா..
..

நாம் 
வாய்க்கரிசி போட்டுக்கொண்டுதான் 
வலம் வருகிறோம்..
விவரகேடுகளும் 
விளங்காதவர்கள் 
பதவிக்காக எதையும் செய்யும் 
பாதகர்களுக்கு 
புரிகிற மொழியில் தான் 
பேச வேண்டும் 
புறவழியில் வந்தவர்களுக்கு
நம் பெருமைகள் தெரியாது 
..
சில நேரம் 
ரௌத்திரம் வேண்டும் 
கொடுவாளை தூக்குபவனிடம் 
அஹிம்சை பேசி பலனில்லை 
அவன் வழியில் வீசினால் தான் 
மண்டையில் ஏறும்..
அடித்தாடவேண்டிய  நேரமிது ..
ஆடு தலைவா..
ஆரிய தாண்டவத்தை அடியோடு 
பெயர்த்தெறிய வேண்டிய நேரமிது
ஆடு..
எதிரிகள் காலை நடுங்க..
..
பயமில்லை நம் இனத்திற்கு
அஞ்சாமை நம் உடைமை
..
ஆலஞ்சியார்





Tuesday, June 13, 2023

ஜெயலலிதாவை ஊழல் முதல்வரென எப்படி சொல்லலாம் என அதிமுக ஜெயகுமார் பதறுகிறார் .. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை  என்கிறார் பன்னீர்,  அதிமுகவிற்கே கற்பூர வாசனை தெரியாதே!  
.. 
தமிழ்நாட்டை ஊழல் மாநிலமாக பார்ப்பதாக அவரின் பேச்சு இருந்ததையும் கூட்டணியில் இருந்துக்கொண்டே சொல்வது நியாயமா என சத்தம் குறைந்த தோனியில் புலம்புகிறார்.. அண்ணாமலை உண்மையைதான்  பேசுவாரென குஷ்பு பக்கவாத்தியம் இசைக்கிறார்,  தமிழன் பிரதமரென்றால்  கம்பராமாயண புகழ் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்த கடைசியாக படித்த புத்தகத்தை மறந்து போன 
பழனிதான் தகுதியானவரென பொன்னயன் சிரிக்க வைக்கிறார்
.. 
ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு தீராத களங்கம் எனச் சொன்னதற்கு
என்ன செய்திருக்க வேண்டும் அண்ணாமலைக்கெதிராக போராட்டம், குறைந்தபட்சம் அவர் தலைவராக தொடர்ந்தால் கூட்டணியிலிருந்து விலகுவோமென இந்நேரம் அறிக்கை வந்திருக்க வேண்டாமா..
அவர் சரியாக சொல்லியிருந்தாலும் மிகப்பெரிய கட்சியை விமர்சிக்கிறார்,கூடயிருந்தே வலைப் பின்னுகிறார் என்பதை மறந்து அதிமுக செயல்படுவது அதன் அந்திமம் நெருங்குவதை காட்டுகிறது
..
பாஜகவின் திட்டம் அதிமுகவை வலுவிழக்க செய்து அந்த இடத்தை கபளீகரம் செய்வது .. ஆரம்பத்திலிருந்தே பாஜகவிற்கு வளைந்து பழக்கபட்டதால் இன்று 25 என பேச தொடங்குகிறார்கள்.. தனியாக நின்றால் கட்டிவச்ச காசும் போகும் என்பதை அறியாதவர்கள் அல்ல  ஆனால் அதிமுகவின் பிடி இறுக்கமாகியிருப்பது பல பிரிவுகளாய் பிரிந்து தங்களுக்குள் அடித்துக்கொண்டபோதும் பாஜகவை தாங்கி நிற்பதில் பலத்த போட்டி போட்டு வளைந்த
 நின்றதெல்லாம் இன்றைய இழிநிலைக்கு காரணம் ..
..
அதிமுகவெனும் பொம்மலாட்டத்தின் கயிறு பாஜக கையில் கிடைத்து வெகுநாட்களாகிவிட்டது.. இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடும் நிலை தமிழ் நாட்டின் வரலாற்றில் கேலிக்கூத்து.. மிகப்பெரிய அரசியல் அறிவெல்லாம் இல்லையென்றாலும் காங்கிரஸின் கைப்பாவையாக இருந்த நிறுவனர் எம்ஜிஆர் கூட இந்தளவு பயந்தததில்லை..இரும்பு பெண்மணி என வெளிவேசம் கட்டினாலும் தன் வழக்கில் தண்டனை பெற்றபோது கூட இந்தளவு தாழ்ந்ததில்லை,ஆனால் இவர்கள் பயத்தில் நிற்பதும் எது சொன்னாலும் தலையாட்டுவதும் தமிழ்நாட்டிற்கு பேரிழிவை தேடி தருகிறது என்றறியாமல் இவர்கள் அழுக்கை சுமந்து நிற்கிறார்கள் 
..
என்ன தான் பேசினாலும் பாஜக சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளைகள்.. 25 என்ன இன்னும் வேண்டுமானாலும் தர தயார் என கும்பிடு போடும் பழனியும் பன்னீரும் போட்டி போட்டு கூனிகுனிந்து நிற்பார்கள்..
பாஜகவிலிருந்து வெளியேறி வரும் தைரியம் இவர்களுக்கில்லை.. தலைக்குனிவை தன்மானத்திற்கு இழுக்கென்று அறியாதவரை,  கால் கிடைத்தால் விழுந்து கிடப்பதை பெருமையாக நினைக்கும் இந்த கேடுக்கெடுடவர்கள் அரசியலின் பிழைகள் ..
..
பொம்மலாட்டம் ஆனால்  ரசிக்க முடியவில்லை 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, June 12, 2023

தான் யாரென்று 
முதலில் உணருங்கள்..
இதுவரை யாரால் 
இந்த இடத்தில் எத்தினோம் 
என அசைபோடுங்கள்..
நீங்கள் நடக்கும் பாதையை
யாரோ 
சீர்படுத்தியிருக்காவிடில் 
உங்கள் பயணம் எளிதில் 
சாத்தியப்பட்டிருக்குமா என்ன..?
..
தலைகனம்,
அகந்தை 
தன்னால்தான் எல்லாம் 
என்றவனெல்லாம் 
இடம் தெரியாமல் போன 
வரலாறு அறிவீரா 
பகிர்ந்தளிப்பவனும் 
பகட்டு காட்டாதவனும் 
சேர்ந்திழுப்பவனும், 
உயர எழ..
படிகளில் காலம் ஏற்றிவிடும்
..
முகம் சுளிக்காமல் 
மனம் இளகி நின்று பாருங்கள்
முகம் தெரியாதவன் கூட
நேசக்கரம் நீட்டுவான்.. 
எந்தவொரு விடயத்திலும் 
கூட இருப்பவர்களை 
அன்பால் 
அனுசரணையாக நடத்துங்கள்
நீங்கள் விழும் போது 
தாங்கி நிற்பான் ..
..
எல்லோரிடம் உழைப்பும் 
உண்மையும் 
உறுதியும்  இருக்கிறது 
வாய்ப்பு கிட்டினால் 
நம்மை விட சிறப்பாக செயல்படும் திறனும் உண்டு ..
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர் 
காலம் கனிந்தால் 
சிறகு முளைக்கும் 
வானில் பறப்பதொன்றும் 
பெரிய வித்தையில்லை 
..
உண்மையில் 
நீங்கள் பலவீனமானவர் 
அடுத்தவன் உழைப்பில் 
உயரத்தில் நிற்கிறீர்..
உம்மை தாங்கி பிடிப்பவன் 
சிறிது சலனபட்டால் 
கீழே விழ வேண்டிவரும் 
அடி பலமாய் படும் 
தகர்ந்துவிட்டால்  
திருப்பி எழுப்ப உம்மால் இயலாது
..
அதிகாரத்தாலோ,
அகம்பாவத்தாலோ, 
தனக்கு கிட்டியது 
தன்னால்தான் என்ற 
இறுமாப்பாலோ 
நினைத்திருந்தால் 
திருத்திக் கொள்ளும் 
உமது எதிரிகள் வேறெங்குமில்லை..
நீயே தான் வீழ்ச்சியின் காரணியாவாய் 
எதிர்க்கிறளவிற்கெல்லாம் 
தகுதி உம்மிடம் இல்லை..
..
நீ யாரென்பதை 
முதலில் நீ உணரு..
உனது பாதையை 
நீயே சீர்செய்  
அன்பெனும் ஆயுதம் கொண்டு வா
நேசிக்க நிரம்பிவழியும் 
பெருங்கூட்டம் ..
உனது சொல்லும் செயலும் 
நேர்பட இருந்தால் 
வழி நெடுக பூக்கள் மலரும் 
உண்மையாய் இரு..
உலகம் உன்னை நேசிக்கும் 
எளிமை,
இனிமை,
இளகும்தன்மை, 
கருணை இருந்தால் 
நீ பெரும் படையோட்டம் 
நடத்தலாம்..
..
நீ யாரென்று 
நீதான்
தீர்மானிக்க வேண்டும்..
..
ஆலஞ்சியார்



 

Wednesday, June 7, 2023

தலைவன்..
உன்னை நினைக்கும் போதெல்லாம் கண்ணில் 
நீர் கோர்க்கிறது..
உன்னை நினைத்தாலே 
நெஞ்சில் ஈரம் சுரக்கிறது
உன்னைப் பற்றி பேச தொடங்கினால் 
மனம் குதூகலிக்கிறது 
..
உன்னை ஏன் எப்போதும்
கொண்டாட வேண்டும் என எண்ணுவதுண்டு..
வாழ்ந்த காலமெல்லாம் 
இனத்திற்காக உழைத்த 
உன்னை..
எப்படி கொண்டாடி தீர்ப்பதென்றே தெரியவில்லை..
மனிதனுக்கு தூக்கமும் ஒய்வும்  கட்டாய தேவை ஆனால் 
நீயோ ஓய்வின்றி உழைத்தாய்
..
வாழும் காலமெல்லாம் 
உன்னை கண்டு கதறியவர்கள் 
நீ..
இல்லாத போதும் 
கதறுவதை நிறுத்தவில்லை..
உன் சாவில் கூட 
பகை கொண்டிருந்த கூட்டம்
இன்றும் பதறுகிறது 
உன் பேனா கண்டு 
..
நீ 
இந்திய அரசியலையே புரட்டிப்போட்டவன் 
இன்னமும் 
கைரிக்சா இழுத்துக்கொண்டுதானிருக்கிறது
ஆனால் நீ.. 
முப்பதாண்டு முன்பு 
பாடம் நடத்தினாய்..
உன் சிந்தனை 
தொலைநோக்காய் இருந்தது
நீ ..
செயல்படுத்தியது தான் 
இந்திய அரசியலின் 
பாட புத்தகம் ..
அரசியலின் இலக்கணம் நீ..
உன்னை படிக்காமல் 
எவரும் பொதுவாழ்வில் ஜொலிக்கமுடியாது..
..
உன் அரசியல் பாமரனுக்கானது 
பள்ளத்தில் கிடப்போரை 
படிகளில் ஏற்றிட 
நீ வகுத்த சூத்திரம் சிலருக்கு 
எரிச்சலை தந்தது ..
உன் அரிச்சுவடி தான் 
அரசியல் பயில்வோர்க்கு பாலபாடம்..
நீ செதுக்கிய தமிழ்நாடு
தமிழனின் புகழ் பாடுகிறது ..
..
பசித்தவனுக்கு மீன் சோறு போடாமல்
மீன் பிடிக்க கற்றுதந்து 
மானம் காத்த மகேசனே!..
சுயமரியாதை உணர்வூட்டி 
சுயமாய்  தன்மானத்தோடு 
தன் நம்பிக்கையோடும் 
வாழ.. 
கல்வியே முக்கியமென 
முதல் பட்டதாரிக்கு 
கல்வி கட்டணமில்லாமல் 
புதிய தொடக்கம் கண்டவனே 
பெண்களுக்கு கல்வி முக்கியமென்ற பேராசான் பெரியாரின் கொள்கை வழி 
திட்டங்கள் வகுத்தாய் 
பெண்கள் உரிமை பெற்று 
சமூகம் சிறக்க முன்னேறுகண்டு 
பேரானந்தம்..
பெண்கல்வி சமூகத்தை புரட்டிபோடும்..
சொத்தில் சம உரிமை 
அம்பேத்கர் தோற்ற இடத்தில் 
வென்று காட்டி அவர் வாழ்வில்
நம்பிக்கை எனும் ஒளியேற்றிய தகப்பன் நீ..
..
சமூகநீதி காவலனே! எல்லோருக்கும் எல்லாமென்ற 
கோட்பாட்டை வடிவமைத்த
ஆண்டவனே! 
புறமுதுகில் குத்தியோரையும் 
மன்னித்த மாமன்னனே!..
வறியவர் நிலைகண்டு 
அவர்தம் வாழ்வு முன்னேற 
திட்டங்கள் தீட்டிய அமைச்சனே! 
எல்லோருக்கும் இனியவனே!..
வாழ்க! நின்புகழ்!!.. 
..
உன் அரசியல்
எம் இனத்திற்கான அரசியல்
உன் அரசியல் 
எம் மொழிகாகானது
உன் அரசியல் 
எம் மக்களுக்கானது 
உன் அரசியல் 
இனப் பகைவர் உணர்ந்ததைப்போல்
எம் மக்கள் உணரவில்லை என்ற வருத்தம் உண்டு..
ஆனால் அதைப் பற்றி 
கவலைப் பட்டவனில்லை ..
உன் சிந்தனையும் செயலும்
எமக்காகதான் இருந்ததென்பதை 
நீ 
இல்லாத போது உணர்கிறார்கள்
..
ஆசானே..
அருந்தமிழே..
எங்கள் வேந்தனே!!..
வழிகாட்டியே..
வாழ்வியல்
சித்தாந்தமே..
மாசற்ற மாமணியே !!..
மதுரமே..
மங்காத ஒளிவிளக்கே..
எங்கள் களனியே..
எங்கள் செருக்கே..
பெருவுடையாரே..
பெருஞ்சுவரே..
ஞானத் தந்தையே!! 
வாழ்க! நின்புகழ்!!..
..
ஆலஞ்சியார்