Friday, August 26, 2022

செந்தில் பாலாஜி ..
புதிய வரவு, அதிமுகவிலிருந்து வந்தவர் காலங்காலமாய் இங்கேயே இருப்பவனை விட அதிக முக்கியத்தவம் தரபடுகிறது என்றெல்லாம் விமர்னங்கள் ..
அவர்களுக்கெல்லாம் "உழைப்பவனை தேடி கட்சியை(பொறுப்பை)  ஒப்படைக்கவேண்டும் அப்போதுதான்  கட்சி வளரும் இயக்கம் தொடர்ந்து நிலைக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் சொல்லே பதில்..
..
ஐம்பாதியிரம் பேரை கட்சியில் இணைக்கிறார், தலைவரே இது எப்படி  முடிந்ததென வியக்கிறார் 
எங்களோடு பாஜகவை ஒப்பிடாதீர்கள் வலைதளங்களிலும் தொலைகாட்சி ஊடகமும் எங்களுக்கு சமமாக வைக்க முற்படுவது சரியா .. நோட்டாவோடு போட்டி போடுகிறவர்களும் நாங்களும் சமமா என கேள்வி எழுப்புகிறார் எதையும் மிக சரியாக செய்யும் ஆற்றல் இருக்கிறது அதைவிட மக்களோடு பயணிக்கிறார் .. வேறென்ன வேண்டும்
..
இன்றைய தேவை இது .. திமுகவினர் குறிப்பாக பொறுப்பிற்கு வர "ஆசைபடும்" தோழர்கள் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கிறது ..மாவட்ட செயலாளராக இருந்த மன்னை நாராயணசாமி,அன்பில் தர்மலிங்கம், தூத்துக்குடி பெரியசாமி, நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி, மதுராந்தகம் ஆறுமுகம், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி..  போன்ற எண்ணற்ற அடலேறுகள் இயக்கத்தை வளர்க்க .. இன்றைக்கும் திமுக அடிமடிடத்தில் கொள்கையோடு 
ஆழமாக வேரூன்றி நிற்பதற்கு தந்த உழைப்பும் உத்வேக செயல்பாடும் முக்கியம் .. அடிமட்ட தொண்டனையும் தோளில் கைபோட்டு பேசும் பழக்கம் இருந்தது .. ஒவ்வொரு கிளையிலும் கட்சிகாரன் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் அத்துபடி ..
ஆம் அத்தகைய உழைப்பு இன்றைக்கும் திமுக எழுச்சியோடு இருக்க காரணம் 
..
ஒரே ஒரு தகவல் மட்டுமே போதும் .. தஞ்சையில் தலைவர் கலைஞர் நிற்க வேண்டுமென ஆசைபடுகிறார் மாவட்ட செயலாளர் நீலமேகத்திடம் விருப்பத்தை தெரிவித்த போது இங்கெல்லாம் கட்சியை வளர்க்க முடியாதுன்னே.. "ஆண்டே" சொன்னாதான் கேட்பாய்ங்க, பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வடபாதிமங்கலம் தியாகராஜன், கவித்தலம் மூப்பனார் சொல்வதுதான் அம்பலமேறும் என்ற போது வா..மக்களை சந்திப்போமென ஊரூராக சென்று மக்களோடு கலந்து அவர்களோடு அளவளாவி சுகதுக்கங்களில் பங்கெடுத்து நமக்காக உழைக்க நம் வாழ்வை மேம்படுத்த நமக்கு துணைநிற்க ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை விதைத்து .. மிராசுகள்,நிலக்கிழார்கள் கடவுளாக பார்க்கபட்ட ஜமீன்களிடமிருந்து மீட்டு சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்து இன்று பெருமையோடு தலைநிமிர வைத்தது கலைஞரின் உழைப்பு .. காரணம் மக்களோடு செல் ..மக்களோடு கலந்து பேசு மக்களுக்காக உழை என்ற அண்ணாவின் மந்திரத்தை தலைமேல் கொண்டு செயல்பட்டதே காரணம் ..
..
இன்றைய திமுக மாவட்ட பொறுப்பாளர்/செயலாளர்கள் மக்களோடு கலந்து நிற்கிறார்களா  அங்கங்கே தெருமுனையில்,சந்தையில், மக்கள் கூடுமிடங்களை  நின்று கொள்கை பிரசாரம் செய்கிறார்களா..சிற்றூர் பேரூரென தொடர்ந்து சுற்றுபயணம் செய்கிறார்களா.. பதவியை தக்கவைக்க பெரும்பாடுபடுபவர்கள் வளரும் தலைமுறையை செழுமையாக வளர என்ன முயற்சி எடுக்கிறார்கள் .. இன்றைய தேவை இது .. பதவியும் பவுசும் நிலைக்காது கொள்கை உணர்வோடு கழகம்/இயக்கம்  இன்னும் நூற்றாண்டு பாசிசத்தோடு போராட வேண்டியிருக்கிறது .. விலைபோகும் வீணர்கள், சாதி பேசும் வெற்றுகிளைகள், சோரம் போகும் கழிவுகள்,  பணத்தை தேடும் பாசாங்கு பிறவிகள் இவர்களையும் சேர்த்தே எதிர்க்கவேண்டிய சூழல் .. இங்கே பலம் மட்டுமல்ல நம் பலவீனமும் கேள்வியாகும் .. 
உழைக்கும் தொண்டனும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்ற தளபதிகளும்(பொறுப்பாளர்கள்) இங்கே பெரும் படையோட்டம் நடத்த வேண்டியிருக்கிறது ..
..
தலைவர் மிகச் சரியாக தேர்வு செய்கிறார் .. யாரை எப்போது உயர்த்த வேண்டும்,யாரை எங்கே நிறுத்தி வைக்கவேண்டுமென அறிவார் .. எதையும் மேம்போக்காக பேசுவது கருத்து தெரிவிப்பதும் அறிவிலித்தனம் ..

"இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து 
அதனை அவண் கண் விடல் ..
தலைவர் அதனை சிறப்பாக கையாள்கிறார்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment