Wednesday, August 10, 2022

செஸ் ஒலிம்பியாட் ..
இந்தியா நடத்தியது என்பது மறைந்து தமிழ்நாடு நடத்தியதாக பேசபடுகிறது .. குறுகியகாலம் ,நடத்தமுடியுமா என சில மாநிலங்கள் சந்தேகத்தபோதும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் 
மிக திறமையாக செயல்பட்டு சரியான நபர்களை கொண்டு திட்டம் வடிவமைக்கபட்டு சிறு குறையும் வராதவாறு யாரெல்லாம் தவிர்த்தார்களோ அவர்களே பிரமிக்கவைத்து வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
இறுதி நிகழ்ச்சிகள் திராவிட புகழ்பாடியது .. தமிழ்நாட்டின் தலைவர்கள் நினைவு கூர்ந்து அதில் யாரையும் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்ககூடாது என செமையாக செதுக்கியிருக்கிறார்.. A1ஜெயலலிதா படம் தேவையா என்ற கேள்வி எழுந்தது ஆயினும் அவரது சில பக்கங்களை நாம் புறக்கணிப்பதையோ அல்லது எள்ளுவதையோ கூடாதென்பதும் .. திராவிட இயக்கத்தின் பிரதான நோக்கமான பெண்கள் அதிகாரத்திற்கு வருவது தான் பெரியார் விரும்பியதென்பதும் சில கசப்பான ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை கையாண்டாலும், அவரை நினைவுகூறதான் வேண்டும்.. தண்டிக்கபட்டவர் என்பதாலேயே அவரது சில முன்னெடுப்பகளை நாம் குறைகூறி திரியவேண்டியதில்லை .. அவரின் அரசியல் எமக்கு எப்போதும் ஏற்புடையதல்ல எனினும் வரலாற்றில் தவிர்க்கமுடியாத தலைவராக இருந்தார் என்பதை மறுக்கமுடியாது 
..
பெரியாரை கொண்டுவரலாமா என சிலர் வயிறெரிகிறார்கள் பெரியாரை தவிர்த்து தமிழ்நாட்டின் வரலாற்றில் அவரை மறுத்தோ,மறைத்தோ எதையும் செய்திடமுடியாது .. இன்றைய தமிழ்நாட்டில் முன்னேற்றத்தில் 
அவரின் பங்கு மிக முக்கியமானது.. அவரின் வார்ப்புகள் நடத்திய படையோட்டமும், சாதித்ததும் இந்திய ஒன்றியத்தால் சாதிக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.. அவர் சிந்தனையை தாங்கியதுதான் திராவிட மாடல் ,அதுவொன்று தான் தமிழ்நாட்டின், குறிப்பாக தமிழர்களின் வாழ்வை வளமாக்க முடிந்தது ..கல்வியில் சிறந்து விளங்கவும், பெண்கள் விழிப்புணர்வோடு கல்வியே தங்களின் பாதுகாப்பு அரணென 
கொண்டாடுவதும் இந்த கிழவன் தந்த ஊக்கமும், தூண்டுதலும் காரணம் ..
அவரின் கடவுள் மறுப்பை மட்டுமே பேசி திரிகிற கூட்டம் அவர் பேசிய பெண்ணீயம் சமூகநீதி, ஒடுக்கபட்டவருக்கான அவரின் செயல்பாடு, இவையெல்லாம் இன்னும் சில நூற்றாண்டுகளானாலும் பேசப்படும்,  போற்றப்படும் .. தமிழ்நாட்டின் ஒல்வொரு வளர்ச்சியிலும் பேராசான் பெரியாரின் சொல் எண்ணம் இருக்கும் ..அவர் விருப்பியதைதான் அவர் சொன்னதைதான் தமிழ்நாடு செயல்படுத்தமுடியும்.. ஏனெனில் அவர் மதத்தையோ சாதியையோ இனத்தையோ மொழியையோ பற்றி கவலைபட்டவரில்லை ,மனித குலத்திற்காக சிந்தித்தவர் 
அவர் மானுடகுல நேசர் 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்.. 
வலிமையான தலைவர் 
மட்டுமல்ல .. எதை எப்படி செய்யவேண்டும்,சிலரை எப்படி கையாளவேண்டும் எப்படி பதிலடி தரவேண்டும் என அறிவார் .. இவரின் துல்லியமான தாக்குதலில் சிலர் இருக்குமிடம் தெரியாமலோ அல்லது பேசமுடியாமலோ போகிறார்கள்.. எதை கொடுத்தால் எதிரிகள் கதறுவார்கள் என்றறிந்து அதை மிக சாதூர்யமாக அதிலும்  மிக சரியாக செய்கிறார் .. பிரதமரை அழைத்துவந்து ஏற்கனவே திராவிடமாடல் வகுப்பெடுத்தவர் ஆளுநரை  பொம்மையைப்போல அமரவைத்து காட்சிபடுத்தியவர் 
இம்மண்ணில் இதுதான் நடக்கும் இதைதான் எம் மக்கள் விரும்புவர் என சொல்லி அடிக்கிறார் .. மூக்குவிடைக்க பேசுவதில்லை ..ஆணவத்தோடு பதில் சொல்வதில்லை .. வாய்திறந்தால் பொய் சொல்லி மக்களை ஏமாற்றவில்லை .. மக்கள்பிரதிநிதிகள் சபையில் இதைதான் பேசவேண்டுமென உத்தரவு போடுவதில்லை .. எதையும் மரபு மீறபடாமல், ஜனநாயகத்திற்கு சேதம்வராமல் ,கொண்டகொள்கையில் உறுதியோடு மக்கள் நலன், மண்ணின் வளம்,/பெருமை, ஏழ்மையை போக்கிய நல்ல வளர்ச்சி ,எதையும் உயர்சிந்தனையோடு மக்களுக்காக ஏற்றதாழ்வற்ற சமுதாயம் வேண்டுமென உழைக்கும் நல்ல தலைவர் ..
வேறென்ன வேண்டும் ..
இறுமாப்போடு சொல்வோம் 
எங்கள் தலைவர் தளபதி 
எதையும் வெல்வார் .. பகுத்தறிவு துணைக்கொண்டு .. மக்களாட்சி மாண்பை காப்பார் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment