ஐந்தாண்டு..
அறுபதாண்டு பொதுவாழ்வு ..
ஐம்பதாண்டு அனுபவம்,
ஏற்றம் இறக்கம் எதிலும் கலங்காது மக்கட்பணி செய்வதொன்றே எமது தலையாய பணி என பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு
அலுக்காமல் உழைத்துக்கொண்டிருக்கும் போராளி
தலைவர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
தந்தை பெரிய அரசியல்வாதி
மிகப்பெரிய அரசியல் பின்ணணி எதுவும் எளிதாக கிடைக்கும் .. ஆனாலும் மக்கள் அங்கீகாரம் உழைத்தால் மட்டுமே கிடைக்குமென்ற உண்மையின் சாட்சியாய் நிற்கிறார்..
வாரிசுகள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள் ஆனால் மக்கள் செல்வாக்கோடு வலம் வர வேண்டுமெனில் அதற்கு கடும் உழைப்பும் அரசியலில் நேர்மையும் தேவை ..
..
இவரது அரசியல்
தெளிவாக இதுதான் என சொல்லி அடிப்பது ..உண்மையில் வியக்கவைக்கும் இவரது உழைப்பு .. மக்கள் தரும் தீர்ப்பு எதுவாகினும் உம்மோடிருப்பேன் என செயலால் உணர்த்துவது அரிதாகிப்போன காலத்தில் மக்களோடு கலந்து நிற்கிறார் ..
திராவிடக் கொள்கைகளை சரியாக உள்வாங்கி இவர்கள் எம் பகைவர்கள் என வெளிப்படையாக அறிவித்து கலங்கடிக்கிறார் .. எத்தனை சூழ்ச்சிகள் .. பெரும் முதலாளிகளின் ஊடகங்கள் அறமிழந்து விஷத்தை கக்கும் போதும் தன் அறச்செயலால் மீண்டு வருகிறார் .. என்னால் கலைஞரை போல எழுத பேச தெரியாது ஆனால் அவரைப்போல உழைக்க தெரியுமென மக்களிடையே தனது நிலையை விளக்கி வெற்றிகாண்கிறார் .. வீண்பழிகளால் பித்தலாட்டத்தால் எம் இன பகைவர் பொய்யாட்டமாடும் போதும் நேர்மையெனும் மெய் ஆட்டமே வெல்லும் என நிரூபித்து சாட்டையை வீசுகிறார் எதிரிகள் வீழ்கிறார்கள் ..
..
உழைப்பு உயர்வு தரும் என்ற சொல்லின் பொருள் ஸ்டாலின்
உண்மையும் நேர்மையும் காலங்கடந்தேனும் உயரத்தில் நிறுத்தும் .. கொண்ட கொள்கையில் உறுதியாய் விளிம்புநிலை மக்களின் குரலுக்கு செவிமடுக்கும் தலைவனாய் எதிரிகள் துரோகிகளின் குலைநடுங்கவைக்கும் தளபதியாய்.. கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கும் ஆண்டவனாய் மக்கள் மனதில் நிலைத்துநிற்கிறார் ஸ்டாலின்
..
தகைசால் தந்தையே..
நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன் உங்கள் சொல்படி தான் நடக்கிறேன் அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் மேலும் மேலும் வெல்ல வாழ்த்துங்கள் என்கிறார் தளபதி அவர்கள்..
ஆம்
ஐந்தாம் ஆண்டில் திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராய், தமிழகத்தின், தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவராய் நம்பிக்கைஒளியாய்..
எளியோருக்கும் இன்பம் தரும்
இன்ப நிலவாய்..
எதிரிகளை பகைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாய்
எம் தலைவர் திகழ்கிறார்
..
தமிழ் நிலம் கண்ட சொக்க தங்கம் நீ..
அரசியலின் நன்னெறி நீ
இன்னும் பல ஆண்டு
தலைமையேற்று எம்மை வழி நடத்துவாய்..
வாழ்க தலைவர் ஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment