Tuesday, August 16, 2022

நாமெல்லாம் அரசியல் சொல்லி கொடுக்கும் நிலையில் திமுக இல்லை .. ஏன் இப்படி,  இதை ஏன் செய்யவில்லை .. இதை செய்தது தவறு என ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு கவனியுங்கள் ..
எதை எப்படி செய்யவேண்டுமென தலைவர் அறிவார்..
..
அன்பில் விலக வேண்டுமென குரல் உயர்த்துகிறவர்கள், ஒன்றிய அரசின் கல்வி கொள்கை குறித்து வாய் திறப்பதில்லை .. சிலநேரங்களில் சில முடிவுகள் எடுப்பதும் பின் திரும்ப பெறுவதும் இயல்பு .. விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதும் தலைவரின் குடும்ப தலையீடு என்றெல்லாம் எழுதுவது ஏற்புடைதல்ல ..
..
மிக தெளிவாக 
இந்த ஆட்சியில் இருப்பதே பெரியார் பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திராவிட கருத்தியலை நிறைவேற்றதான் 
 டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது; 
ஒன்றிய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது; திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை  என தெளிவாக தமிழ்நாட்டின் தலைவர் முதலமைச்சர் 
முத்துவேல் கருணாநிதி சொல்கிறார்..
..
விமர்சனங்கள் அவசியம் ஆனால் அவசரபடகூடாது 
இந்தபக்கம் போவோம் என்றால் ஏன் போகவேண்டும் என என் தம்பிமார்கள் கேட்பார்கள் என்றார் பேரறிஞர் அண்ணா .. கலைஞரே கூட விமர்சனங்களை காதுகொடுத்து கேட்பார் 
விரிவாக பதில் தருவார்.. ஆனால் குதர்க்கம் பேசுபவர்களை வீண்பழி சுமத்தி திசை திருப்ப முயற்சிப்போரை இடதுகையால் தள்ளிவிடுவார் .. அதைபோலதான் தலைவர் ஸ்டாலின் அவர்களும் சரியான பாதையில் சரியான வேகத்தில் பயணிக்கிறார்
அவசரக்குடுக்கைகள் குறுக்கே வந்தால் அதற்கு பொறுப்பாக முடியாது 
..
இரண்டு நாட்களாக தொண்டர்கள் மன வருத்தமடைந்து நிற்பதறிந்து தலைவர் மிக தெளிவாக நமது பாதை எது என்பதையும் நமது பயணம் சரியான திசையில் செல்வதையும் சொல்லி நம்பிக்கையளித்திருக்கிறார் 
எத்தனை இன்னல்கள் வந்தாலும், எத்தனை பொய்பரப்புரைகள், கேலி கிண்டல்கள், வீண்பழிகள் வந்தாலும் கலங்காது காத்துநிற்கும் காவலன் நம் தலைவர்..
..
நம்புங்கள் 
தலைவர் பாசிசத்திற்கு சிம்மசொப்பனம் ..
Stalin was more dangerous than Karunanidhi..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment