Thursday, September 30, 2021
Monday, September 27, 2021
தமிழ்நாடே..
இவர் கைகளைப் பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் .. விட்டுவிடாதீர்கள் ..
இன்னும் பத்தாண்டுகள்
தமிழ்நாட்டை யாருமே தொட முடியாத உயரத்திற்கு கொண்டுபோவார் ..
நேர்க்கொண்ட பார்வை நெஞ்சுரம்
மனிதாபிமானம், எளியவரின் குரல் கேட்கும் மனது .. யாருக்கும் எதற்கும் அஞ்சாமை, உறுதி,நெஞ்சில் ஈரம், நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான்
கரங்களை விட்டுவிடாதீர் ..
தமிழ்நாடு இழந்ததை பெறவும் .. இழக்காமல் இருக்கவும் நம் உரிமைகளை அடையவும் பறிபோகாமல் தடுக்கவும்,
தலைவன் கிடைத்திருக்கிறான்
விட்டுவிடாதீர்கள்
..
சொல்லொண்ணா துயரம் கண்டோம் .. ஒவ்வொன்றாய் இழந்து நின்றோம் .. கொள்ளைக்கூட்டம் அழித்த நமது கலாச்சாரத்தை பண்பாட்டை அடகுவைத்த மானத்தை மீட்டு சுயமரியாதையோடு தமிழகத்தை வழிநடத்துகிறார்.. இடையிடையே துரோகிகள் மதத்தையும் சாதியையும் கையிலெடுத்து தடைபோட நினைக்கும் போதெல்லாம் உடைத்தெறிந்து நம் பெருமையை நிலைநாட்டுகிறார் தமிழை நீசமொழியெனும் கூட்டம் நம் பெருமைகளை நாகரீகத்தை பாரத பெருமையாக பேசி திரிந்ததை தலையில் கொட்டி இது எம் இனத்தின் நாகரீகம் தமிழர்கள் நாகரிகம் என பறைச்சாற்றி இந்திய ஒன்றியத்தின் வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என எம் நாகரிகம் பழைமையானது என உலகுக்கு உணர்த்தி கீழடியை காத்தநின்ற சாமியின் கரங்களை விட்டுவிடாதீர்கள்..
..
சொன்னதை செய்துமுடிக்கும் ஆற்றல் மிகு தளபதியை அறிவும் திறமையும் கடின உழைப்பும் கொண்ட படையோடு ஆட்சி செய்கிறார் .. நீட் தேர்வை ஏன் ரத்துசெய்யவேண்டுமென நீதிபதியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் இதோ இவரை பின்பற்றி மகாராஷ்டராவும் நீட் எதிர்ப்பை கையிலெடுக்கிறது .. பணமுள்ளவன் மட்டுமே இனி மருத்துவராகலாம் என்ற நிலைக்கு கொண்டுவந்த கயவர்களை இனம் கண்டு தோலுரிக்கிறார்.. அடிமைகள் தயவில் குடியுரிமைச்சட்டம், நீட்தேர்வு என நினைத்ததை சாதித்துக்கொண்டவர்கள் இப்போது விழிபிதுங்குகிறார்கள் .. சமநீதியை சமூகநீதியை இழந்துநின்றோம் இதை மீட்டெடுக்க போர்பிரகடனம் செய்து படையோட்டம் நடத்தும் மாவீரன் கைகளை பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் ..
..
நல்ல மனம் படைத்தவரிடம் கடும் உழைப்பாளியிடம் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாதவரிடம், இந்திய ஒன்றியமே வியந்து நோக்கும் ஒப்பற்ற தலைவராய் மிளிரும் தளபதியார் .. விடாது பிடித்துக்கொள்ளுங்கள் .. பகைவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள் .. செய்வதறியாது அடிமைகளும் அற்பர்களும் மிரளுகிறார்கள் .. தரந்தாழ்ந்தவர்களில் செயலால் தமிழனித்தின் பெருமைகள் சீர்குலைய அதை சரிசெய்து தமிழினத்தை தலைநிமிர செய்ய ஒப்பற்ற தலைவன் கிடைத்திருக்கிறார் விட்டுவிடாதீர் கரத்தை பலமாக பற்றிக்கொள்ளுங்கள்..
ஆலஞ்சியார்