Thursday, September 30, 2021

திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று நாண்குமாதங்கள் கடந்து.. எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தது ..
ஆனால் நம் இன பகைவர் எச்.ராசா
"STALIN is more dangerous than KARUNANIDHI" - 
கருணாநிதியை விட மிகவும் ஆபத்தானவர் மு.க ஸ்டாலின் ..
என்றது தேன்வந்து பாய்ந்ததை போல மனம் மகிழ்ந்தது.. ஆம் அண்ணாவை போல அல்ல கலைஞர் என்றநிலையிலிருந்து
சற்று முன்னேறி ஸ்டாலின் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்றது பெருமை தரகூடிய விடயம் தான் ..
என்னவெல்லாம் சொன்னார்கள் 
துண்டு சீட்டு வைத்து பேசுகிறார் 
கலைஞரைப் போல் செயல்பட முடியுமா கலைஞரைப்போல அறிவு உண்டா ஆளுமை உண்டா என்றவர்கள் இன்று  கலைஞரை விட ஆபத்தானவர் என அஞ்சுகிறார்கள் 
..
திராவிடம் நல்ல விதையை தான் தேர்வு செய்து விதைக்கும்.. வீரியமுள்ள விதைகள் நிறைய காணகிடைக்கும் 
 மானமும்அறிவும்  மனிதருக்கு அழகென்று பேராசான் பெரியாரின் வழிதோன்றல்கள் சலசலப்பை கண்டு எப்போதும் அஞ்சுவதில்லை.. 
எத்தனை இன்னல்கள் வசைமொழிகள் கேலிகிண்டல்கள் எல்லாம் கொள்கைமுன் எதுவுமில்லை என காலம்தந்த தலைவன் நிரூபணம் செய்கிறார்.. ஆரம்பம் முதலே பாசிசத்திற்கெதிரான குரலை கொஞ்சமும் சுருதிபிறழாமல் ஆணியடிக்கிறார்.. 
..
ஆரம்பம் முதலே சொல்லி வருவதுதான் நீங்கள் பார்க்கபோகும் ஸ்டாலின் வேறு .. அனுபவமும் தனிதிறமையும் நிதானமும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட தலைவர் .. பாசிசத்தை வேரறுக்க திராவிடத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்தி வெற்றிகாண்பார் .. மக்கள் நலனே முக்கியம் யாரை எப்போது எப்படி கையாள்வதென அறிந்தவர் .. கட்சி அரசியல் தெளிவாக அறிந்து யாரை எப்போது களமாட வைப்பதென்ற வித்தையறிந்து செயல்படுகிறார்..
மக்கள் மனமறிந்து ஆளும் தலைவர் காலங்கடந்து பேசபடுவார் .. 
..
காலம் சமைத்த திராவிடத் தலைவன் .. இவரின் ஆளுமை வியக்கவைக்கிறது .. எளிமை  எல்லோரையும் கவர்கிறது .. அரசை நடத்தும் ஆற்றல் தலைவர் தந்தது .. ஒவ்வொரு நாளும் தன் செயலால் ஒன்றியமே திரும்பி பார்க்கிறது..
இப்படியொரு தலைவன் ஒன்றியத்திற்கு தேவையென இங்கே மொழியபடுகிறது .. இவையெல்லாம் கண்டு சங்கிகள் கதறுகிறார்கள் ..
..
கொஞ்சம் பொறுங்கள் பெரியாரே தேவலாம் என சங்கிகள் சொல்லும் காலம் வரும் ஏனெனில் இவர் பெரியாரின் பெயரன் ..
அஞ்சாமை,அளவோடு திமிர், அடங்காமை , இவையாவும் திராவிடம் தரும் .. அறிவுக்கொண்டே ஆயுதம் செய்யும் 
இனி ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  காலம்..
..
ஆலஞ்சியார்

Monday, September 27, 2021

தமிழ்நாடே..

இவர் கைகளைப் பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் .. விட்டுவிடாதீர்கள் ..

இன்னும் பத்தாண்டுகள்

தமிழ்நாட்டை யாருமே தொட முடியாத உயரத்திற்கு கொண்டுபோவார் ..

நேர்க்கொண்ட பார்வை நெஞ்சுரம்

மனிதாபிமானம், எளியவரின் குரல் கேட்கும் மனது .. யாருக்கும் எதற்கும் அஞ்சாமை, உறுதி,நெஞ்சில் ஈரம்,  நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான்

கரங்களை விட்டுவிடாதீர் ..

தமிழ்நாடு இழந்ததை பெறவும் .. இழக்காமல் இருக்கவும் நம் உரிமைகளை அடையவும் பறிபோகாமல் தடுக்கவும்,

தலைவன் கிடைத்திருக்கிறான்

விட்டுவிடாதீர்கள்

..

சொல்லொண்ணா துயரம் கண்டோம் .. ஒவ்வொன்றாய் இழந்து நின்றோம் .. கொள்ளைக்கூட்டம் அழித்த நமது கலாச்சாரத்தை பண்பாட்டை அடகுவைத்த மானத்தை மீட்டு சுயமரியாதையோடு தமிழகத்தை வழிநடத்துகிறார்.. இடையிடையே துரோகிகள் மதத்தையும் சாதியையும் கையிலெடுத்து தடைபோட நினைக்கும் போதெல்லாம் உடைத்தெறிந்து நம் பெருமையை நிலைநாட்டுகிறார் தமிழை நீசமொழியெனும் கூட்டம் நம் பெருமைகளை நாகரீகத்தை பாரத பெருமையாக பேசி திரிந்ததை தலையில் கொட்டி இது எம் இனத்தின் நாகரீகம் தமிழர்கள் நாகரிகம் என பறைச்சாற்றி இந்திய ஒன்றியத்தின் வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என எம் நாகரிகம் பழைமையானது என உலகுக்கு உணர்த்தி கீழடியை காத்தநின்ற சாமியின் கரங்களை விட்டுவிடாதீர்கள்..

..

சொன்னதை செய்துமுடிக்கும் ஆற்றல் மிகு தளபதியை அறிவும் திறமையும் கடின உழைப்பும் கொண்ட படையோடு ஆட்சி செய்கிறார் .. நீட் தேர்வை ஏன் ரத்துசெய்யவேண்டுமென நீதிபதியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் இதோ இவரை பின்பற்றி மகாராஷ்டராவும் நீட் எதிர்ப்பை கையிலெடுக்கிறது .. பணமுள்ளவன் மட்டுமே இனி மருத்துவராகலாம் என்ற நிலைக்கு கொண்டுவந்த கயவர்களை இனம் கண்டு தோலுரிக்கிறார்.. அடிமைகள் தயவில் குடியுரிமைச்சட்டம், நீட்தேர்வு என நினைத்ததை சாதித்துக்கொண்டவர்கள் இப்போது விழிபிதுங்குகிறார்கள் .. சமநீதியை சமூகநீதியை இழந்துநின்றோம் இதை மீட்டெடுக்க போர்பிரகடனம் செய்து படையோட்டம் நடத்தும் மாவீரன் கைகளை பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் ..

..

நல்ல மனம் படைத்தவரிடம் கடும் உழைப்பாளியிடம் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாதவரிடம், இந்திய ஒன்றியமே வியந்து நோக்கும் ஒப்பற்ற தலைவராய் மிளிரும் தளபதியார் .. விடாது பிடித்துக்கொள்ளுங்கள் .. பகைவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள் .. செய்வதறியாது அடிமைகளும் அற்பர்களும் மிரளுகிறார்கள் .. தரந்தாழ்ந்தவர்களில் செயலால்  தமிழனித்தின் பெருமைகள் சீர்குலைய அதை சரிசெய்து தமிழினத்தை தலைநிமிர செய்ய ஒப்பற்ற தலைவன் கிடைத்திருக்கிறார் விட்டுவிடாதீர் கரத்தை பலமாக பற்றிக்கொள்ளுங்கள்..


ஆலஞ்சியார்

Friday, September 24, 2021

அதிமுக அமைச்சர்கள் திமுகவை விமர்சிப்பதாக எண்ணி உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்  ஜெயலலிதா 100 சதவிகிதம் வாக்குறுதியை நிறைவேற்றியவர் என எடப்பாடி கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.. பிடிஆர் எப்படி அண்ணாமலைக்கு மனசிதைவு  என சொல்லலாம் என ஊடகம் பொங்குகிறது பாஜகவிற்கு செம்படிக்கும் அதிமுகவை களமிறக்கி அவமானபடுகிறது .. யாரிந்த பிடிஆரென இந்தியா முழுவதும் பேசபடுவதும் இந்திய "ஒன்றிய நிதியமைச்சர் " நிர்மலா சீதாராமனின் தகுதி கேள்விக்குறியாக்கபடுவதும் சுக்கிநூறாக உடைத்தெறியபடுவதும் பாசிச கூட்டத்திற்கு பொறுக்கவில்லை ..
..
எப்படி மனசிதைவு என சொல்லலாம் என கதறுகிறார்கள் பாஜகவில் இருப்பவர்கள் பெரும்பாலோனர் அறிவுக்கொண்டு சிந்திப்பதில்லை அதோடு மூளைச்சலவை செய்யபட்டு பொய்யை கொஞ்சமும் கவலைபடாமல் திரும்ப திரும்ப சொல்பவர்கள் .. மாநிலங்கள் இல்லையேல் ஒன்றியம் இல்லையென நெற்றியில் அடித்து சொன்னதும் நிர்மலாவின் முகம் கருக தொடங்கியது அதிலிருந்தே பொருளாதாரம் குறித்த இவரின் குறியீடுகளும் தெளிவுகளும் வடநாட்டு ஊடகங்கள் செய்தியாக்க பாஜக தலைகள் திணறுவதும் தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எங்கேவிட்டால் "எல்லாம் தெரிந்துவிடும்" என அஞ்சுகிறார்கள் ..
..
பிராமணரல்லாத ஒருவர் மூளைக்காரி வேசம் போட்ட நிர்மலாவை ஒன்றும் அறியாதவர் என அடுக்கடுக்காய் ஆதாரத்தோடு பிரித்தெறிகிறார் ..கோவம் வரதானே செய்யும் கடவுள் மறுப்பாளர் இல்லை மதுரை மீனாட்சி கோவிலின் "அறங்காவலர்" குடும்பம், எனவே அதையும் குறைகூற முடியவில்லை புள்ளிவிவரத்தோடு பேசுகிறார் பதில் சொல்லமுடியவில்லை  எல்லாபக்கமும் கேட்டை மூடுகிறார்கள் என்ற எரிச்சல் ஊடகங்களில் வலதுசாரிகளின் மொழிகளில் தெரிகிறது .. ஊடகங்களில் புள்ளிவிவரத்தோடு பேசுவதும் GST ல் உள்ள குறைபாடுகள் பெட்ரோலை ஏன் சேர்க்கவில்லை செஸ்வரி குறித்த விளக்கங்கள் ஒன்றிய அரசின் அமைச்சர்களை தூங்கவிடவில்லை வட மாநிலங்களில் பி..டிஆரின் திறமையும் அறிவும் தெளிவாக கருத்துகளும் வியக்கவைக்கிறது கண்டு எரிச்சலை தருகிறது..
..
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை என காலுக்கடியில் பதவியை தேடிய எடப்பாடி .. இப்போதல்ல திமுக எக்காலத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் இன்று தமிழகத்தின் கட்டமைப்பை பிறமாநிலங்கள் பெருமை பேசுகின்றன.. ஆட்சிக்கு வந்து நான்கே மாதங்களில் 500 வாக்குறுதிகளில் 202 மேற்பட்டவை நிறைவேற்றபட்டிருக்கிறது பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்,பேறுகாலவிடுமுறை, நகைகடன் தள்ளுபடி என,அடுக்கிகொண்டே போகலாம் எல்லாவற்றிலும் முறைகேடு செய்தவர்கள் போலி பெயர்களில் ஒரே ஆதார் எண்ணில் நகை கடன் என கொள்ளையடித்த கூட்டம் நிர்வாகத்தை பற்றி பேசுவது கொடுமை ஒன்றிய அரசின் அமைச்சர் கைநீட்டி மிரட்டுவதும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அடிமை பயத்தில் எழுந்துநின்றது இந்த நாடு கண்டதுதான் .. திமுகவை கருணாநிதி ஆரம்பிக்கவில்லை என முனுசாமி சொல்கிறார் அதுதெரியும் ஆனால் அதிமுகவை ஜெயலலிதா ஆரம்பிக்கவில்லை என்ற உண்மையும் எம்ஜிஆரை மறந்ததும் மக்கள் அறிவார்கள் .. புழுவைவிட கேவலமானவர்கள் திமுகவையோ தமிழ்நாட்டின் அமைச்சர்களையோ குறைகூற அருகதையற்றவர்கள் ..
கொலைவழக்கும் கொள்ளையடித்து சேர்த்ததும் கண்முன்னே வருவதும் பீதியில் உளறி வைக்கிறார்கள் ..

விரைவில் சிறையில் காலந்தள்ள நேரிடும் என அஞ்சிவது அதிமுக தலைவர்களின் பேச்சுகளில் தெரிகிறது ..  
விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் அது அடிமைகளுக்கில்லை திறமையை வளர்த்துக்கொள்ளவும் அவர்களால் இயலாது .. பி.டி.ஆரை அடக்கிவாசிக்க சொல்லும் ஊடகங்கள் திமிரோடு பதில் தரும் நிர்மலாவை கேள்வி எழுப்புவதில்லை .. நாக்பூரின் வளர்ப்பில் வளரும் ஊடக பொறுக்கித்தனம் .. சரி தவறென்பதை கூட சொல்ல மறுத்து 
மௌனம் காத்துநிற்பது கூட அறம்தவறிய செயல் ..  பொதுவாழ்விற்கு வந்தவர் எல்லோரையும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு அதில் உண்மையும் நேர்மையும் வேண்டும் .. இரண்டுமில்லாதவர்கள் மௌனம் காப்பதே மேல் 
..
திராவிடம் உண்மையை பேசும் அறிவைக் கொண்டே பேசும் .. நேர்மையோடு நெஞ்சுரத்தோடும் அஞ்சாது நிற்கும் .. அறிவே எமது ஆயுதம் ..
தெளிவோடு திறனோடு எதிர்க்கொள்ளும் ஆற்றல் உண்டு திராவிடப் பேராசான்கள் கற்றுதந்த வழியில் பயணிப்போம் 
..
ஆலஞ்சியார்

Tuesday, September 21, 2021

சமூகநீதிக்காக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை ஏற்கமுடியாதென பொய்யன் பேசுகிறான் .. இவனுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா என கேட்க கூடும் ..திரும்ப திரும்ப ஒன்றைச்சொல்லி அது குறிப்பிட்டகாலம் வரை நம்பவைப்பதென்பது நாக்பூர் தந்திரம் அதைதான் கூலிக்கு மாரடிக்கும் சின்னபுத்திகாரன் பேசுகிறான் ..
..
பெரியார் கஞ்சன் எனவும் கையெழுத்து போடகூட காசுகேட்பார் என்பதும் உண்மைதான் அந்த பெரியார்தான் பெரியார் கல்லூரியை நிறுவி அடிதட்டுமக்களின் குழந்தைகளின் கல்விக்கு வழிவகுத்தார் .. சமூகநீதிக்காக யாருமே போராடவில்லையா என்ற கேள்வியில் நியாயமிருக்கும் ஆனால் யாரால் நிம்மதியடைய முடிந்தது வெற்றிபெற முடிந்ததென்ற உண்மையை அறிந்தும் ஏன் நாங்களெல்லாம் படிக்கவில்லையா ..அவ்வையார் படிக்கவில்லையா என குதர்க்கம் பேசி திசைதிருப்புவார்கள் ..
உண்மையில் தமிழன் அறிவோடும் நாகரீகத்தோடும் வாழ்ந்தவனை வந்தேறிகள் மதத்தை முன்வைத்து வர்ணத்தை சொல்லி பிரித்து எதைவேண்டுமானாலும் கொடு கல்வியை கொடுக்காதே என பலதலைமுறைகள் கல்வி மறுக்கபட்டு மீண்டு வர நினைக்கும் போதெல்லாம் கல்வியை கேட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என்ற பலநூறாண்டாய் நம்மை அடிமைபடுத்தியவர்களிடமிருந்து தன்மானத்தோடு திமிரி ஏழ வைத்த பெரியாரை யார் என கேட்கிறார்கள்..
..
1892 ல் இந்து மகாஜன சபை நடத்திய கூட்டத்தில் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்பதற்காக கூடிய கூட்டத்தில் அயோத்திதாச பண்டிதர் கோவில் நுழைவு உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டபோது சமாதானம் பேசி ஆகமவிதிகளை சொல்லி மறுத்தவர்கள் எங்கள் வீட்டு குழந்தைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்ற போது பண்டிதரை வெளியேற்றினார்களே அதெல்லாம் இந்த சின்னபயலுக்கு தெரியுமா ..இந்திய வரலாற்றில் அரசியல் சாசனத்தை திருத்தி சாதனை படத்தவர் பெரியார் என்ற உண்மை தெரியுமா .. ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றவர் பெரியார்.. ஒடுக்கபட்டவனும் தாழ்த்தபட்டவனும் சமநீதியோடு முன்னேற வேண்டுமென்பதற்காக பாடுபட்டவர் பெரியார்.. விதவை திருமணத்தை ஆதரித்தோடு, தன் நண்பர் ராஜாஜி குடும்பத்திலேயே பால்ய விதவையாக இருந்த லட்சுமிக்கு மறுமணம் செய்துவைக்க மறுத்த ராஜாஜியோடு அவள் தலைவிதி அவ்வளவு தான் என்றவரை மாற்றி புரட்சி செய்தாரே அதெல்லாம் சமூகநீதியில் வராதா ..
வடமாநிலங்களை போல அல்லாமல் இங்கே ஒடுக்கபட்டோர் கல்வியறிவில், சுயமரியாதையில்,
உயரத்தில் நிற்கிறார்களே.. இதெல்லாம் கிழவன் செய்த "காரியம்" என்பது எப்போது புரியும்
..
நிறைய பேர் சமூகநீதி வேண்டி உழைத்தார்கள்.. பாடுபட்டார்கள் அவர்களிடம் கொஞ்சமேனும் தன்சமுதாய உணர்வும்,பதவி,புகழுக்காகவும் 
"அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் " அதை போல சுயநலம் இருந்தது ஆனால் சுயநலமற்று மக்களுக்காக தொண்டாற்றிய "பழம்" பெரியார் 
இதை சிறியோர் அறியார்.. பெரியார் கலங்கரை விளக்கானார் திக்குதெரியாமல் நின்றோருக்கு திசைகாட்டினார்.. சமூகநீதி என்பது 
எவனும் எவனும் அடிமையில்லை தன்னிலும் தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ இல்லை பெண்களை அடிமைபடுத்தும் ஆணாதிக்கசமூகத்திற்கு எதிராக நின்று குரல்தந்து சக மனுஷியாக அவர்களையும் மதித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாக உயரத்தில் ஏறிட காலமெல்லாம் உழைத்த பெருமகனார் பேசுவும் அருகதைவேண்டும் ..
காசுக்காக விலைபோகும் இந்த கேடுகெட்டவன் கூச்சல்கள் கடைக்கால் மயிறுக்கு சமம் ..
..
பெரியார் என்றென்றும் பெரியார்
..
ஆலஞ்சியார்

Saturday, September 18, 2021

கோவில் ஆக்ரமிப்புகள் அகற்றபட்டும், அத்துமீறி கையகபடுத்தியவை மீட்கபட்டும் வருகின்றன ..வக்ப் நிலங்கள் பெருமளவில் சிலரின் ஆதிக்கத்தில் இருப்பது கண்டறியபட்டிருக்கிறது விரைந்து மீட்கபடும்.. கல்விச்சாலைகள் ஆக்ரமிப்புகள்  மீட்கபடுவது மகிழ்ச்சி தருகிறது ..சரியான நபரிடம் ஆட்சியை தந்திருக்கிறார்கள் மக்கள் 
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கொப்ப அறநெறிமாறாத அரசு அமைந்திருக்கிறது ..
..
ஜேப்பியார் ..
எம்ஜிஆரின் அடியாள் என்று அறியபட்டவர் யாரையாவது மிரட்ட வேண்டுமெனில் ஜேப்பியாரை தான் எம்ஜிஆர் அனுப்புவார்.. ஜெயலலிதா குடும்பவாழ்க்கைக்கு ஆசைபட்டு சோபன்பாபுவோடு இருந்தபோது அவரை மீடக ஜேப்பியாரைதான் அனுப்பினார்  அதை ஜேப்பியாரே சொல்லியும் இருக்கிறார் .. இடையில் அடைக்கலம் தந்த ஜெய்சங்கரிடமிருந்து மீட்டு ஒரிரவு தன்னோடு வைத்திருந்துவிட்டு எம்ஜிஆரிடம் சேர்த்ததாக அவர் எழுதியது ஞாபகம் வருகிறது ..
எம்ஜிஆர் காலத்தில் கள்ளசாராயம் வழிந்தோட காரணமானவர்.. சார்பட்டாவில் கூட இவரின் நினைவு வந்தது .. எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவரிடமிருந்து பதவியை பிடுங்கி திருநாவுகரசுவிடம் எம்ஜிஆர் தந்தபோது  ஜேப்பியாரை சமாதானபடுத்த எம்ஜிஆர் அளித்த கொடை  இந்த புறம்போக்குநிலங்கள் அதில் கல்லூரியை எழுப்பி இன்று கல்வியாளராக நம்பவைக்கபடுகிறார்.. சாராய வியாபாரிகள் விஸ்வநாதன் போன்றோரையும் கல்வியாளராக ஆக்கியதில் குடிகாரனாக கூட நடிக்காத பொன்மனசெம்மலுக்கு பெரும்பங்குண்டு ..
..
இன்று 91, ஏக்கர் நிலங்கள் மீட்கபட்டிருக்கின்றன சந்தை மதிப்பு ₹6010 கோடி என்கிறார்கள் இப்படி நிறைய கல்வி நிறுவனங்கள் நீர்நிலைகள் மீது கட்டிடங்கள் எழுப்பியிருக்கின்றன வடிகால்கள் மூடபட்டு தண்ணீர் தேங்குகிறநிலை .. சிறுமழையை கூட தாங்கமுடியாமல் வழிந்தோட வழிதடமில்லாமல் தத்தளிக்கிறது .. நிறைய கிராமங்களில் பள்ளிகள் கூட குளங்களை ஆக்ரமித்திருக்கின்றன ஒழுக்கத்தை நேர்மையை போதிக்கவேண்டிய கல்விசாலைகள் ஆக்ரமிப்பில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு கேட்டை விதைப்பதை போல.. 
..
சாஸ்திரா பல்கலைகழக ஆக்ரமிப்பு நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் காலதாமதபடுத்துவதை தவிர்க்கவேண்டும் பெரும் அழுத்தம் தரபடலாம் ஆனாலும் விரைந்து அகற்றபடவேண்டும்.   எங்கெல்லாம் நீர்நிலைகளில் கல்விநிலையங்கள் வணக்க, வழிபாட்டுதளங்கள், கோவில் மசூதி தேவாலயம் எம்மதமாகினும் அகற்றிடவேண்டும்.. திடீர் கோவில்கள் அடக்கத்தலங்கள் எதுவாகினும் அகற்றி தூய்மைபடுத்திடல் அவசியம்..
..
துணிவும் நேர்மையும் அறநெறி அரசியலும் கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இதை செய்து முடிப்பார் .. மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாக்களித்தது பொய்த்திடவில்லை இன்னமும் நிறைய ஆக்ரமிப்புகள் உண்டு கல்விநிலையங்கள் பெயரில் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் இல்லாத கடவுளின் பெயரில் வழிநெடுக உண்டு அரசியல் பின்புலத்தில் கொஞ்சமும் அச்சவுணர்வின்றி கயமைகள் அரங்கேறியிருக்கிறது எல்லாகட்சியிலும் இப்படி சிலர்  .. 
தொடர்ந்து ஆக்ரமிப்புகளும் அத்துமீறி விதிமுறைகளை மீறி கட்டபட்டவைகள் கடவுளின் பெயரின் இருந்தாலும் அகற்றபட்டு  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் ..
கொண்டுவருவார் நம் முதல்வர் தளபதியார்
..
ஆலஞ்சியார்

Friday, September 17, 2021

பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்..  இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று "மகாபெருசுகள்" உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட  எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே எல்லா மதமும் சொன்னது பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக "தெய்வ"செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும்  தங்களின் குல வாரிசை சுமக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் 
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று "ஜகத்குருக்கள்" சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் .. ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் 
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு  மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண் குழந்தைகள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் 
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி திராவிட ஆட்சியால் முடிந்தது .. இந்நாளை சமூகநீதி நாள் என அறிவித்த  தமிழக முதல்வருக்கு நன்றிகூர்வோம்..
பெண்ணடிமைத்தனத்தை 
வேரறுத்த எம் பெரியாருக்கு 
#வீரவணக்கம்..
..
#பெரியார்
கிழவனல்ல
எங்கள் கிழக்கு...
..
ஆதிக்கவெறியர்களின்
செவிட்டில் அறைந்தவன்..
சிந்தனையை  புதிதாய் 
சிந்திக்கச் சொன்னவன்
உறக்கத்திலிருந்த
தமிழினத்தை தட்டியெழுப்பி
உன்னை....
வந்தேறி ஆட்டி 
அடித்தமர்த்தியாள்கிறான்...
அடிமடாய் நடத்துகிறான்..
திமிறி எழு ..எனச்சொன்ன
தெற்காசியாவின்
#சாக்ரடீஸ்..
..
புதிய
தொலைநோக்காளான்..
தெய்வத்தொண்டென்கிறார்
சத்யமூர்த்தி  என்று 
முத்துலெட்சுமி அம்மையார்
முறையிட்டபோது
இதுவரை..
எங்கள் வீட்டு பெண்கள்
தேவதாசியாய்
தெய்வதொண்டாற்றிவிட்டோம்
இனி..
உங்கள் வீட்டு பெண்கள்
(பார்பனப் பெண்கள்)
தெய்வத்தொண்டாற்றலாம்
என்றுச் சொல்ல சொன்ன
நம்பிக்கை..
தைரியத்தை..
தன்மானத்தை..
விதைத்த..
#பெருங்கிழவன்...
..
இந்த..
கிழவன் 
மட்டுமில்லையென்றால்
வந்தேறிகளால்..
எங்கள்..
இனம்,கலாச்சாரமெல்லாம்
வேரருக்கப்பட்டிருக்கும்..
..
பிறர்க்கு
தீங்கிழைக்காமல் வாழு..
உனக்கு கடவுளோ,
மதமோ,வழிகாட்டியோ 
தேவையில்லை என்று 
எளிமையாய் வாழ்வியலை 
உணர்த்தியவர்
..
எதையும்
ஆழ்ந்தறியச்சொன்ன
ஏன் எதற்கு..
என கேட்கச்சொன்ன..
எங்களுக்கு உணர்வூட்டியவன்..
..
எங்களின் விடியல்..
ஆம்..
#கிழக்கு_திசை..
..
#HBDPeriyar143
#SocialJusticeDay 
#சமூகநீதிநாள் 
..
ஆலஞ்சியார்

Monday, September 13, 2021

நீட் தேர்விற்கெதிரான சட்டமுன்வரைவு தாக்கலாகிறது எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் மாண்பிமை முதல்வர்.. ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்து தன் எஜமானிய விசுவாசத்தை காட்டி நாங்கள் சிறந்த அடிமைகள் என சொல்லியிருக்கிறது .. பாசிச பாஜக தனக்கு கிடைத்த அடிமைகள் மிகச்சிறந்தவர்கள் சொல்லாமலேயே செய்துகாட்டுவார்கள் என மகிழ்கிறது .. எடப்பாடி மற்றமாநிலங்கள் எதிர்க்கவில்லை என சப்பைகட்டுகிறார் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டில் தான் மருத்துவ கட்டமைப்பு மிக சிறப்பாக இருப்பதும் இங்குதான் உலகில் மிகசிறந்த மருத்துவசேவைகள் கிடைப்பதும் நீண்டநாட்களாக கண்ணை உறுத்திவந்தது .. ஜெயலலிதா உடலநலக்குறைவும் தொடர்ந்து மரணமும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி மாஃபா பாண்டிராஜனின் நீட்டிற்கு ஆதரவாக கையெழுத்தும் இன்றைய அவலங்களுக்கு காரணம் ..  அதிமுக முதல்வருக்கே தெரியாமல் பாண்டியராஜன் கையெழுத்திட்டது அதை தொடர்ந்து மிரட்டல் ரெய்டு என அடிமைகளை கொண்டு தமிழ்நாட்டின் நலன்களை ஒவ்வொன்றாய் இழந்ததும் இந்த பாவிகளால் தான் இன்று வாய்சவடால் பேசுவதுதான் வேதனை ..
..
நாடாளுமன்றத்தில் அதிமுகவும் பாமகவும் செய்த சதி இன்று எம் பிள்ளைகள் உயிரை குடிக்கிறது ..
அதிமுக பாமக மக்களை  வஞ்சித்தது .. சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட அப்போது எதிர்கட்சியான திமுகவும் ஆதரித்து நீட் தேர்விற்கெதிரான தீர்மானம்  ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை சொல்லாமல் மறைத்த நயவஞ்சகன் இந்த எடப்பாடி பழனிசாமி .. கொஞ்சமும் குற்றஉணர்வற்று இன்று திமுகவை குறைச்சொல்ல கல்நெஞ்சம் வேண்டும் .. ரெய்டுக்கே பயந்து காலில் விழுந்தி கிடந்தவர் கொடநாடு கொலை வழக்கின் துரிதம் கண்டு நடுங்குவதும் ஒன்றிய அரசு எப்படியும் காப்பாற்றும் என நம்புவதுமே இவ்வளவு நடுங்க காரணம் .. பாவம் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு எதற்கும் அஞ்சாது பின்வாங்காது பயம்கொள்ளாது 
..
நீட் தேர்வு முதலில் மாநில பாடத்தின் கீழ் வரவில்லை வசமாநிலங்களில் நீட்தேர்வில் அப்பட்டமாக விதிமீறல்கள் பள்ளிக்கே வராமல் நீட்தேரேவு எழுத அனுமதிப்பது வினாதாள்கள் முன் வெளியாவது நீட் சென்டர்கள் பணம் பெற்றுக்கொண்டு வினாதாளை மாற்றுவதென அனைத்து அநியாயங்களும் நடக்கிறது தமிழகத்தில் மட்டுமே கெடுபடிகள் பணமுள்ளவர்களின் பிள்ளைகள்  மட்டுமே மருத்துவராக முடிகிறதென உயர்நீதிமன்றமே கவலை கொள்கிற நிலை இது களையபடவேண்டாமா..
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், முத்தமிழறிஞர் ஆட்சியில் நடைபெற்றதை போல் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவும் நீட் விலக்கு கோரியும் வலிமையான சட்ட முன்முடிவை முன்மொழிந்த மாண்பிமை முதல்வர் .. வரவேற்றிருக்கவேண்டாமா வெளிநடப்பு செய்து மீண்டும் துரோகம் செய்திருக்கிறார் எடப்பாடி .. துரோக வரலாறு மட்டுமே அறிந்து தனக்கு முதல்வர் பதவி தந்தவரையே யாரென கேட்ட, காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிக்கலாம் என கூச்சமே இல்லாமல் சொன்ன மானங்கெட்டவர் .. 
உச்சநீதிமன்ற தீர்ப்பு  எதுவும் செய்யமுடியாதென்று சமாளிக்கிறார்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத்தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றம் செய்ய முடியாதது அல்ல மக்கள் மன்றமே அதிகாரம் கொண்டது அரசியல்சாசனத்திற்கெதிராகவோ இறையாண்மைக்கு எதிராகவோதான் சட்ட திருத்தம் / விலக்கு கொண்டுவர முடியாதே தவிர நீட் விலக்கு நிச்சயம் சாத்தியபடும் .. தயை கூர்ந்து தமிழ்நாட்டு நலனுக்காக குரல்கொடுங்கள் பயந்து தொடைநடுங்கி கேவலமாக நடந்துக்கொள்ளாதீர்கள் ..
நீட் தேர்விற்கெதிரான தீர்மானத்திற்கு பாஜக தவிர்த்த கட்சிகள் ஆதரவு அதிமுகவும் ஆதரவு தந்திருக்கிறது நன்று! 
..
நீட் கோச்சிங் சென்டர், பணம் தீர்மானிக்கிறபோது நடுநிலையோடு தேர்வு என்பதே அயோக்கியத்தனம் .. ஏழை மாணவர்களும் மருத்துவராகலாம் என்ற கனவு மெய்பட நீட்தேர்வை ஒழித்தலே தீர்வு ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
செய்து முடிக்கும் செயல்தலைவர் 
..
ஆலஞ்சியார்

Saturday, September 11, 2021

ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.   
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள் 
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு ..
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் .. 
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் .. நாகலாந்தில்
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் அவ்வளவுதான்  இங்கே  தமிழ்நாட்டில் எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் .. 
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான  அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள்  இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என  அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள் 
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
.. 
தமிழ்நாடு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் நாடு ..
நல்லதை நினை 
நாட்டுக்குமக்கள் சிறப்புற
நல்லதாய் செயல்படு ..
இதுவே திமுக தலைவரின் மந்திரம்  சூழ்ச்சிகளை தந்திரத்தை  வெல்லும் மௌனபுரட்சியாளர் 
எங்கள் முதல்வர் 
அறிவோம் .. அறிந்துகொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்

Wednesday, September 8, 2021

CAA விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தை எதிர்த்தோ ஆதரித்தோ பேசாமல் வெளிநடப்பு செய்த அதிமுகவின் செயல் அதன் இன்றைய பரிதாபநிலையை உணர்த்துகிறது .. நாடாளுமன்றத்தில் பாமக செய்த தவறை திருத்திக்கொண்டது நன்று ..
அதிமுக முழுவதுமாக தன் பலமறியாமல் எழுந்துநிற்க முடியாதவனிடம் அடங்கிநிற்கிற நிலை பாவம் .. அதிமுகவின் தோற்றமும் மறைவும் என எழுதவேண்டிவருமோ என கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது .. மெல்ல மெல்ல விழுங்கபடுவது அறியாமல் அடிமைகள் பயத்தில் நடுங்கி நிற்பது தமிழகத்திற்கு ஏற்படும் அவமானம் .. ஆளுமையற்ற தலைமையோ/ ஒருங்கிணைப்போ எதையும் எதிர்க்கவோ சாதிக்கவோ இயலாதென மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ..
..
நயினார் சொறிந்தால் போதும் என கிண்டல் செய்யவில்லை அவை முன்னவர் உண்மையை சொல்கிறார் .. சட்டமன்றத்தின் அங்கீீீகரீக்கபடாத தலைவராக நயினார் செயல்படுவதும் அதை அமோதிப்பதும் இவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு செய்கிற துரோகம் .. துரோகத்தில் தோன்றிய கட்சி இன்று ஒருவருக்கொருவர் காலவாரி கடைசியில் பொம்மலாட்டத்தில் கயிறு மற்றொருவன் கையில் 
எப்படி ஆடவேண்டுமென டெல்லி தீர்மானிக்கிறது .. ஆதரிக்க தைரியமில்லை ஓடிவிட்டார்கள் என முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மை ..
..
வெளிநடப்பு செய்யவும் சரியான காரணம் வேண்டும்.. சிறுபான்மை சமூகத்திற்கெதிராக அதிலும் முஸ்லிம்களுக்கெதிராக இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதும் அப்போது அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அன்று தங்கள் மீது வழக்குகள் பாயும் ஆட்சி கழுவும் என அஞ்சினார் அடிமைகள்.. வெளிப்படையாகவே எச்.ராசா மிரட்டினார் .. இப்போது நெஞ்சுரத்தோடு பெரியாரின் வாரிசு #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் .. 
“குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியாக பாகுபாடு காட்டுகிறது; அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது CAA 
..
அடுக்கடுக்காக சமூகநீதியை நிலைநாட்டி எல்லாதரப்பு மக்களுக்கு நலன்பயக்கும் அரசாய், பாதிக்கபட்டவர்களுக்கு துணைநிற்கும் செயலால் உயர்ந்துநிற்கிறார்
அவரது மகுடத்தில் மற்றுமொரு வைரம் ..
அஞ்சாமையும் நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகளும் முத்தங்களும் 
நன்றி முதல்வரே..
..
ஆலஞ்சியார்

Saturday, September 4, 2021

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.. யாரிந்த அயோத்திதாசர் சனாதனத்தால் ஒடுக்கபட்டு தீட்டானவர்களென ஒதுக்கபட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர்.. ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்று உறுதியோடு சொன்னவர்  பறையர்சமூக முன்னேற்றத்திற்கு முதன்முதலில் பாடுபட்டவர்..
..
ஆங்கிலேயர்களிடம் பணிசெய்ய ப்ராமணர்களே முன்னுரிமை பெறுவார்கள் சமையல் செய்வதற்கு மாட்டுக்கறியை சமைப்பதற்கு அப்போது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தபடுவார்கள் அவ்வாறு
இவரது தாத்தா பட்லர் கந்தப்பன்
ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தார் .. 
நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் 
இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.. இல்லையெனில் தமிழ்நூல்கள் ஆரிய சூழ்ச்சியில் "போகி" யில் எரிக்கபட்டிருக்கும்..
..
இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.. பறையர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் பௌத்தர்கள் என சொன்னவர் ..
..
பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 தேதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. 
..
சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில்,
(அதாவது அரசுக்கு எது எது தேவை என்பதை பரிந்துரை செய்வதற்காக)
நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, சில கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்..அதில் முக்கியமாக கோரிக்கைகள் எங்கள் குழந்தைகளை 4வது வரையாவது படிக்க அனுமதியுங்கள் ..எங்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்..
கோவிலுக்கு அனுமதியுங்கள் என்றவுடையே தஞ்சை சாஸ்திரிகள் எழுந்து அதுதான் உங்களுக்கென்று தனிகோவில்கள் உள்ளதே ஏன் ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவிலில் அனுமதிகிடையாதென சொல்லி இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கும் நாங்கள் தரும் விளக்கத்தையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன் என்றார் .. எங்கள் குழந்தைகள் படிக்க என்றவுடன் அங்கே கலகம் ஏற்பட்டு விக்டோரியா ஹாலில் இருந்து வெளியேற்றபட்டார்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் திராவிடம் என்ன கிழித்தது என்போருக்கு ஏறக்குறைய இதே கோரிக்கைகளோடு 
1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் கடைசிவரை மக்கள் ஆதரவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் அதிகாரத்திற்கு வரும் வழியறிந்த அன்றைக்கு முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி "துறைசார்நத கோரிக்கைகளை " வையுங்கள் என்றார் அதாவது சவுக்காரம் படித்துறை,துணிதுவைக்க தண்ணீர்" இப்படி கேளுங்கள் என்றார் அதாவது குழந்தைகள் 4வது வரை படிக்க கூட அனுமதி மறுக்கபட்டது  இடையில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது  இனி கல்விசாலைகள் நிறுவ அனுமதி வேண்டுமெனில் எல்லோரையும் சமமாக அமர்த்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பட்டது ஆனால் யாரும் புதிதாக பள்ளிகூடம் திறக்க அனுமதி கோரவில்லை என்பதும் உண்மை.. 
..
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குகள் பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு #பகுத்தறிவுவிடுதலையே அவரது தேடலாக இருந்தது.. சாதிசமயமற்ற தமிழர்கள் என அழைக்கவேண்டும் என்றவர் .. பலமொழிகளை கற்றுணர்ந்தவர் வடமொழியில் புலமையும் சித்தவைத்திய அறிவும் கொண்டவர் .. காத்தவராயன் என்ற பெயரை தன் குருவின் மீதுள்ள அன்பால் அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்

திராவிட மகாஜனசபை 1891ல் தொடங்கிய, திராவிட பாண்டியன், ஒருபைசா தமிழன் ,என அச்சு ஊடகம் மூலம் திராவிட கருத்தியலை சொன்னவர் 
திராவிட இயக்கத்தின் முன்னோடியான
இவருக்கு தமிழ்நாடு அரசு நினைவு மண்டபம் அமைப்பது போற்றுதலுக்குரிய செயல் 
முதல்வர் தளபதியாருக்கு பாராட்டுகள்
..
ஆலஞ்சியார்