Sunday, July 31, 2016

அரசியல் நாகரீகம்..

பொது இடத்தில் நாகரீகமாக நடந்துக்கொள்ளாத சசிகலா பஷ்பாவை முதல்வர் கண்டித்தார் என்கிறார்கள்.. இங்கே சிவாவை குறிப்பிட வேண்டும் நாலுபேர் முன் ஒரு பெண்அறைந்தால் சாதரணமாக யாராக இருந்தாலும் கோவம் வரும் திருப்பி அடிக்க தோன்றும் .. அதை தான் செய்யதோன்றும் மாறாக அமைதிகாத்து ஏன் அடித்தார் என தெரியவில்லை என சொல்லியிருப்பதிலிருந்தே அவரின் நாகரீகம் நமக்கு தெரிகிறது.. .. நிறைய பேர் அவர் சசிகலா மீது ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லையென்கிறார்கள் அதற்கு சிவா தந்தவிளக்கமே போதும்.. கட்சி தலைமையிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என்கிறார்.. .. டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் அந்த பெண் போதையிலிருந்ததாக தகவல்கள் வர தொடங்கியிருக்கிறது..அது எந்தளவிற்கு உண்மையென சிசிடிவி யில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..ஏனெனில் சிவாவும் சசிகலாவும் தமிழகத்தின் சார்ந்த எம்பிக்களாக இருக்கிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலே LAW MAKER OF UNDIA இந்திய சட்டதை உருவாக்குகிறவர்கள் என்று பெயர்.. இப்போதெல்லாம் தமிழகத்திலிருந்து செல்கிறவர்கள் குழாயடி சண்டை போடத்தான் அங்கே செல்கிறார்கள்.. .. சிறந்த நாடாளுமன்றவாதிகளை அனுப்பிய தமிழகம் தான் சசிகலா புஷ்பா போன்றவர்களையும் அனுப்பியிருக்கிறது.. காயிதே மில்லத், பெரும்தலைவர் காமராஜர்,சி.எஸ்,பேரறிஞர் அண்ணா, இரா.செழியன் என்.வி.என்.சோமு ,மாறன் வைகோ போன்ற தலைசிறந்த ஆளுமைகள் வீட்டிருந்த சபையில் போதையில் உளறுகிற அரைகுறைகளை அனுப்பிய பெருமை அதிமுகவையே சாரும்.. .. உண்மையிலேயே தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.. ஜனநாயகம் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களிடம் ஆட்சியை தருகிற போது இதுபோன்ற நிகழ்வுகள் சர்வசாதாரணமாய் கடந்துபோகும்.. தனக்கு தரப்பட்டிருக்கும் பதவியின் மேன்மை தெரியாமல் பொதுஇடத்தில் கைகலப்பில் ஈடுபடுகிற செயல் நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியது.. சிவா கைகலப்பல்ல தாக்குதல் என்கிறார் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.. மொத்தத்தில் #வெட்கப்படவேண்டும்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

கொஞ்சம் காதல் பேசுவோம்..

#கொஞ்சம்காதல்பேசுவோம் ************************* மறக்கத்தான் நினைக்கிறேன் மரிக்கொழுந்தே.. . ஆண்டுகள் போனாலும் ஆழ்மனதில் உன்நிழல் ஆற்றுப்படுகையில் கைகோர்த்து அலைந்த காலமெல்லாம் அசைப்போட்டு பார்க்கிறேன் இன்னும் நீ.. எங்கோ என்னுள் ஒளிந்து நிற்கிறாய்.. .. மழைகாலப்பொழுதில் மரத்தடியில் இலை சிந்தும் நீரில் தோள்சாய்ந்து..நீ கதைத்தெல்லாம், இன்னும் என்காதுகளில ரீங்காரமாய் இசைக்குதடி.. .. அரும்புமீசையை நீ..வருடியபடி ஆசையாய் நீ பார்த்தபார்வை அலைபாயவிட்டு அமுதமாய் நீ.. தந்ததெல்லாம் காமத்தில் இல்லை நானறிவேன்.. .. மறக்கத்தான் நினைக்கிறேன் மரிக்கொழுந்தே மரித்து மக்கி மண்ணாகிப்போகும் வரை மண்புழுவாய் மனதை புரட்டிப்போடுதடி.. உன் உருட்டும் விழிபேசிய கொஞ்சும் காதல்.. .. மறக்கவில்லை மரிக்கொழுந்தே மரிக்கும்வரை.. என் மனம் பேசும். நீயே.. என் காதலென்று.. .. ஆலஞ்சி.மன்சூர்..

சாதி இரண்டொழிய ...

சாதியை ஒழிக்கமுடியாது குருமூர்த்தி முடியாது சரி அதை ஏன் வன்மம் கொண்டு வளர்த்தெடுக்கிறீர்.. எப்போது வந்தது சாதி ஆரியர் வருகைக்கு பிறகு தானே குருமூர்த்தி தொழில் செய்தவனை அவன் தொழில் கொண்டு பிரித்து அதில் வர்ணம் பூசியது உங்கள் கூட்டம்தானே தாழ்வான இடம் தேடி ஆடுமேய்க்க வந்தவர்கள் அரசர்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி ஆளுமைக்கு வந்ததாகதானே வரலாறு சொல்கிறது.. .. சமதர்மம் வேண்டுமென்பதற்காகதானே ஏற்றதாழ்வில்லாத சமுதாயத்தை கட்டமைக்கதானே ஆன்றோர்களும் அறிவின் சான்றோர்களும் காலகாலமாய் பாடுபடுகிறார்கள் .. பெரியார் போன்ற தொலைநோக்கு சிந்தனையாளர்கள் செம்மைப்படுத்திய மண்ணில் இடைசாதிக்காரனை கொம்புசீவி மதத்தின் ஜாதியின் வெறியை ஊட்டி வளர்த்தெடுக்கிறீர்களே..ஏன்.. .. உங்கள் நோக்கம் இதுதான் ஜாதியை மதத்தை வளர்த்தெடுத்தால் தான் அவர்களுக்குள் குழப்பத்தை வெறியை உண்டுசெய்தால்தான் தொடர்ந்து அதிகாரபீடத்தில் அமர்ந்து இவர்களை ஆட்டிப்படைக்கலாம்.. தமிழனை சாதிமதத்திற்குள் அடைத்தால்தான் குளிர்காயலாம் என நினைப்பது புரியாமல் இல்லை.. .. என்னதான் நீங்கள் ஆரியகூத்தாடினாலும்.. இங்கே நாங்கள் காரியத்தில் கண்ணாய் இருப்போம்.. .. ஆலஞ்சி.மன்சூர்..

சபை நாகரீகம்

சபாநாயகர் தனபால் பொய் சொல்கிறார் அவர்வகிக்கும் பதவிக்கு அழகல்ல #தளபதிஸ்டாலின்.. தனபாலை சொல்லி குற்றமில்லை நேற்றையதினம் சட்டமன்றத்தில் அவர் பேசியது கண்டு எங்கே தன் ஜாதியை துணைக்கழைப்பாரோ என அஞ்சினேன் பாவம் பகடையாக பயன்படுத்தபடுவது அப்பட்டமாக தெரிகிறது. தனபால் சுதந்திரமாக செயல்படமுடியாது காரணம் அவருக்கு அந்த அதிகாரமில்லை அவரது தலைமை அவரை சுயமாக சிந்தித்து செயல்பட அனுமதிக்காது .. .. சபாநாயகராக இருந்தவர்கள் பல்வேறு சமயங்கள் பலரும் ஆளும்கட்சிக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறார்கள் இக்கட்டான சூழலில் அரசை காத்திருக்கிறார்கள் ஆனால் இப்போது தொடர்ந்து எதிரிகட்சியினரை அவர்கள் அவையில்லாத போது விமர்சிப்பது நகைப்பது என தொடர்ந்து சபையை கேலிகூத்தாக்கியதில் பெரும் பங்கு ஜெயலலிதாவையும் தனபாலையுமே சேரும்.. .. ஜெயலலிதா சபைக்கே வருவதில்லை இனி .. முதல்வர் இல்லாத சபையில் திமுக பங்கேற்க போவதில்லை என முடிவெடுக்கவேண்டும்.. சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்கிறார் .. எப்போது அதிமுகவினர் உண்மையை பேசியிருக்கிறார்கள் அதிமுக தலைமை முதல் கடைதொண்டன் வரை பொய்யில்தானே காலம்தள்ளுகிறார்கள்.. .. பொய்யில் பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவரின் விசுவாசமானவரிடம் ஜனநாயகத்தை எதிர்ப்பார்பது அறீவீனம்.. இனி சபைக்குள்ளேயே இருந்து சபையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் மிக கடுமையான வார்த்தைகள் வந்தாலும் சபையை ஸ்தம்பிக்க செய்திட வேண்டும் ..சபை நடத்தவிடாமல் செய்தால்தான் (பாராளுமன்றத்தைப்போல) விடிவுபிறக்கும்.. .. கலைஞர் ஆட்சியில் ஜெயலலிதாவையோ எம்ஜிஆரையோ தரகுறைவாக விமர்சித்ததில்லை ஆனால் ஜெயலலிதா வந்தபிறகுதான் தனிநபர் தாக்குதல் சபையில் அதிகமாக கேட்க தொடங்கியது.. காரணம் ஜெயலலிதா வந்த பாரம்பர்யம் அப்படி.. .. #தனபால்_தடுமாறுவதுதெளிவாய்தெரிகிறது .. ஆலஞ்சி.மன்சூர்..

திமுக திறமையாளர்களின் களஞ்சியம்

திமுக .. பாராளுமன்றத்தில் திருச்சி சிவா மாண்பிமை பாதுகாப்பு அமைச்சரை சபைக்கு வரவழைத்து விளக்கம் அளிக்கவைத்தார்.. திமுககாரர்கள் சபையின் நெறி அறிந்தவர்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் தங்களின் பணியை செவ்வனே செய்பவர்கள்.. சிவா என்றில்லை திமுகவினரின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியாகவும் அதேபோல் கம்பீரமாகவும் நேர்மையாகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்காமலும் இருக்கும்.. .. ஒருமுறை மேல்சபை தலைவர் சங்கர்தயாள் சர்மாவைப்பற்றி தரக்குறைவாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது சபையின் கவனத்திற்கு வந்தபோது திமுக கடுமையான கண்டனத்தை பதிவு செய்யவேண்டுமென கலைஞர் அறிவுறுத்தியிருந்தார்.. அப்போது பேசிய வைகோ சபைக்கு வரவழைத்து கண்டனத்தை பதிவு செய்யவேண்டுமென்றார் அப்போது குறிக்கிட்ட சர்மா அவர்கள் இதை பெரிதுப்படுத்த வேண்டாமென்றார் .. அப்போது பேசிய வைகோ சர்மா என்கிற தனிநபரைப்பற்றியல்ல எங்கள் அவையின் தலைவரை அவமதித்தவர் சபைக்கு வரவேண்டுமன்று வரவழைத்து மன்னிப்பு கேட்கவைத்த வரலாறு உண்டு .. மற்றொரு சுவாரஸ்யம்... அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரைப்பற்றி ஓரிசா காங்கிரஸ் எம்பி கிண்டலடித்து பேசினார் உடனே திமுக எம்பிகள் எங்கள் மாநிலத்தின் முதல்வரை கிண்டலடித்து பேசியதை திரும்ப பெறவேண்டுமென கடுமையாக வாதிட்டு திரும்பபெற/ வருத்தம் தெரிக்க வைத்தனர்.. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அதிமுகவினரே அமைதியாக இருக்கிறார்கள் நீங்கள் ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள் என்றபோது பேசிய மாறன் எங்கள் மாநிலத்தின் முதல்வர் அவர் என்றார்.. அவரோடான அரசியல் என்பது வேறு உரிமை என்பது வேறு என்றார்.. .. இதெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடும் அறிவிலிகளுக்கோ அம்மா ரயில்விடவேண்டுமென்று சொல்லும் சிறுப்பிள்ளைகளுக்கோ தெரியவாய்ப்பில்லை.. காரணம் தெளிவில்லாதவர்கள் அதைவிட தகுதியில்லாதவர்களை அனுப்பி வைத்தால் கேன்டீன் மசாலாதோசை சாப்பிட்டுவிட்டு கண்ணயரதான் முடியும்.. .. #திமுக_திறமையின்களஞ்சியம் Storehouse of talent..DMK.. .. ஆலஞ்சி.மன்சூர்..

இரு பெரும் ஆளுமைகள்

#இருபெரும்_ஆளுமைகள்.. தமிழக அரசியல் வரலாற்றில் நிறையபேர் வந்தார்கள் சிறந்தார்கள்.. ஆனால் வாழும் காலமெல்லாம் வரலாறாய் திகழ்ந்தவர்கள் தங்களை சுற்றியே அரசியலை இயங்க செய்தவர்கள் .. நிறையபேரை நாம் நினைவில் கொள்கிறோம் வாழந்தபோதும் வாழ்கின்ற போதும்..சிலர்மட்டும் இந்த சமூகசார் சிந்தனையோடு செயல்பட்டிருக்கிறார்கள்.. எதிரிகளையும் அவர்களின் அரசியலையும் மதித்திருக்கிறார்கள்..கடுமையாக எதிர்த்தபோதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை எப்போதும் தந்ததில்லை மாறாக நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்கள்.. #பெரியார்_கலைஞர்.. .. நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.. திரு.கல்கி அவர்களின் மகள் திருமணத்திற்கு பெரியார் அழைக்கப்பட்டிருந்தார் கடவுள் மறுப்பாளரான பெரியார் திருமண சடங்குகளெல்லாம் முடிந்த பிறகுதான் அங்கு சென்றார்.. குறிப்பாக வைணவ குடும்பங்களில் மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள் பிராமண குடும்பங்களில் நடக்கும் நல் நிகழ்வுகளில் சிலரை அனுமதிக்க மாட்டார்கள் இப்போது கூட சோ வீட்டு திருமணத்திற்கு ஜெயலலிதாவை அழைத்தபோதும் திருமண சடங்களில் கலந்துக்கொள்ளவில்லை.. சுபகாரியங்களில் திருமணமாகதவர்கள் வருவதைகூட விரும்பமாட்டார்கள்.. கல்கி வீட்டுதிருமணத்திற்கு சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு பெரியார் செல்கிறார் மணமக்களை ஆசீர்வதிக்கும்படி கல்கி சொல்கிறார் குங்குமத்தை கொண்டுவரச்சொல்லி மணப்பெண்ணின் நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்.. கல்கியின் உதவியாளர் இந்த நிகழ்வை கல்கியிலே வெளியிட்டு பெரியாரின் இரட்டைவேடம் என தலைப்பிடலாம் என்கிறார்.. கல்கி சொன்னார் #பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியானவர் நமக்காக வந்தார் நம்மை நம்கலாச்சாரத்தை நம் நம்பிக்கையை மதிக்கவேண்டுமென்பதற்காக குங்குமம் இட்டார் என சொன்னார்.. இதைதான் கலைஞர் அவர்களிடமும் காணலாம்.. தங்களை தொடர்ந்து எதிர்த்து வருபவர்களை கூட அவர்கள் சுப நிகழ்வுகளுக்கு போய் வாழ்த்திவிட்டுதான் வருவார்.. ஒருவரின் அரசியல் வரலாற்றில் தனிமனித கசப்புணர்வை கொள்ளாமல் அரசியல் நடத்தியவர்கள் நிறையபேர்களுண்டு ஆனால்.. வன்மத்தை நெஞ்சில் கொண்டு அரசியல் செய்பவர்களை எம்ஜிஆருக்கு பிறகே காண முடிந்தது... .. #இப்போதெல்லாம்கழிவுகள்_வரலாறாகிறது.. .. ஆலஞ்சி.மன்சூர்..