Monday, August 29, 2022

(೨ಣೆಯೊಳಗಿನ ಹಿಂಬದಿ ಗೋಡೆಯಲ್ಲಿ ಎತ್ತರದಲ್ಲಿ ಆಕಾಶ ಕೂಡ ಕಾಣಿಸದ ಕಿಂಡಿ. ಸಾವರ್ಕ‌್ರರ ಕೋಣೆಯಲ್ಲಿ ಆ ಕಿಂಡಿ ಕೂಡ ಇಲ್ಲ. ಆದರೂ ಎಲ್ಲಿಂದಲೋ ಬುಲ್‌ಬುಲ್ ಹಕ್ಕಿಗಳು ಹಾರಿ ಸೆಲ್‌ನೊಳಗೆ ಬರುತ್ತಿದ್ದವು. ಅವುಗಳ ರಕೆಯ ಮೇಲೆ ಕುಳಿತು ಸಾವರ್ಕರ್ ಪ್ರತಿದಿನ ತಾಯ್ಯಾಡಿನ ನೆಲವನ್ನು ಸಂದರ್ಶಿಸಿ ಬರುತ್ತಿದ್ದರು.)
In the back wall inside the room, there is a kindle that can't even be seen high up in the sky.  Savarkar's room doesn't even have that kindle.  However, from somewhere, bulbul birds were flying into the cell.  Savarkar used to visit the motherland every day sitting on their rake..
..
அந்தமான் சிறையிலிருந்து புல்புல் பறவை மீதேறி இந்திய பெருநிலம் வந்து போவார் .. 
கர்நாடக மாநில 9 வது பாட புத்தகத்தில் இடம் பெற்ற "கதை " விமர்சனமாகியிருக்கிறது .. பாடநூல் குழுவின் தலைவர் 
புரிந்து கொள்ள "அறிவு" வேண்டுமென்கிறார் கூடவே கல்வி அமைச்சரும் .. 
என்ன கொடுமை 
..
இவர்களை சொல்லி பலனில்லை .. புராண கதைகளை வரலாறாய் நமக்கு தந்து,அதை நம்பவைத்தவர்கள் .. 
இதிகாசம் என்ற பெயரில் கட்டுகதைகள் நம் நெஞ்சில் நிலைபெற வைத்தார்கள்.. பக்தி என்ற பெயரில் நம்மை மடமையில் தள்ளியவர்கள் .. பிஞ்சு உள்ளங்களில் "கடவுளென" கதையளந்து  அதற்காக நம்மை வேறுபடுத்தி மனதில் வேற்றுமையை உருவாக்கி ரத்தத்தில் மண்ணை நனைத்தவர்கள் .. அண்ணன் தம்பியாய் பழகியவனை அரிவாளோடு திரியவிட்டவர்கள் இல்லாத சாதியை உருவாக்கி ரத்த சகதியில் நம்மை மூழ்கடித்தவர்கள் ..
..
அறிவு பெற தெளிவு பெற பள்ளிக்கு செல்பவனிடம் மதத்தையும் சாதியையும் பொய் புனைவுகளை திணித்து மூளையை மழுங்கடிப்பதுதான் இந்திய கல்வியின் பிரதானமாக இருக்கிறது ..  எதையும் அறிவுக்கொண்டு பாரென தமிழகம் விழுப்போடிருப்பதுதான் சங்கிகளுக்கு பெருந்தொல்லை..  பெரியார் மட்டும் இங்கே இல்லாமல் போயிருந்தால்  இதேநிலை தமிழகத்திற்கு வந்திருக்கும்..
..
இன்றைய தேவை எதுவென மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் .. ஆன்மீகம் மெய்ஞானம் என அருதப்பழசுகளை இளம் பிஞ்சுகள் நெஞ்சில் விதைக்காதீர்கள் .. இந்த மண் ஆன்மீக மண் என்றெல்லாம் கதையளக்காமல் நல்லதை சொல்லி தாருங்கள் .. மாணவ செல்வங்கள் மதமேறி  திரியாமல் அறிவுவெனும் பூஞ்சோலைக்கு அழைத்துவாருங்கள் ..
..
உண்மையை சரியான தரவுகளோடு  ஆய்வுகளை வரலாற்றை சொல்லிதாருங்கள் ..பொய்யை மெய்யாக்க முயலாதீர்கள் .. தீமையை விதைத்து தீயவைகளை உருவாக்காதீர்.. 
சாதிசமயற்ற சமுதாயம் உருவாக முயலுங்கள்
இதுபோன்ற பொய்களை பாடமாக்கி நஞ்சை விதைத்து 
வரும் தலைமுறையை நூற்றாண்டு பின்னுக்கு தள்ளாதீர் ..
..
நயவஞ்சக பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .. கூச்சமே இல்லாமல் பொய்யை மாணவச் செல்வங்களில் மூளையில் ஏற்ற நினைக்கும் படுபாவிகளை இனங்கண்டு ஒதுக்குங்கள் ..
அறிவுவெனும் ஒளி வீசட்டும் 
பாசிச சிந்தனை வீழட்டும் 
..
ஆலஞ்சியார்

Sunday, August 28, 2022

ஐந்தாண்டு..

அறுபதாண்டு பொதுவாழ்வு ..
ஐம்பதாண்டு அனுபவம்,
ஏற்றம் இறக்கம் எதிலும் கலங்காது மக்கட்பணி செய்வதொன்றே எமது தலையாய பணி என பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு 
அலுக்காமல் உழைத்துக்கொண்டிருக்கும் போராளி 
தலைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
தந்தை பெரிய அரசியல்வாதி 
மிகப்பெரிய அரசியல் பின்ணணி எதுவும் எளிதாக கிடைக்கும் .. ஆனாலும் மக்கள் அங்கீகாரம் உழைத்தால் மட்டுமே கிடைக்குமென்ற உண்மையின் சாட்சியாய் நிற்கிறார்.. 
வாரிசுகள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள் ஆனால் மக்கள் செல்வாக்கோடு வலம் வர வேண்டுமெனில் அதற்கு கடும் உழைப்பும் அரசியலில் நேர்மையும் தேவை .. 
..
இவரது அரசியல் 
தெளிவாக இதுதான் என சொல்லி அடிப்பது ..உண்மையில் வியக்கவைக்கும் இவரது உழைப்பு .. மக்கள் தரும் தீர்ப்பு எதுவாகினும் உம்மோடிருப்பேன் என செயலால் உணர்த்துவது அரிதாகிப்போன காலத்தில் மக்களோடு கலந்து நிற்கிறார் .. 
திராவிடக் கொள்கைகளை சரியாக உள்வாங்கி இவர்கள் எம் பகைவர்கள் என வெளிப்படையாக அறிவித்து கலங்கடிக்கிறார் .. எத்தனை சூழ்ச்சிகள் .. பெரும் முதலாளிகளின் ஊடகங்கள் அறமிழந்து விஷத்தை கக்கும் போதும் தன் அறச்செயலால் மீண்டு வருகிறார் .. என்னால் கலைஞரை போல எழுத பேச தெரியாது ஆனால் அவரைப்போல உழைக்க தெரியுமென மக்களிடையே தனது நிலையை விளக்கி வெற்றிகாண்கிறார் .. வீண்பழிகளால் பித்தலாட்டத்தால் எம் இன பகைவர் பொய்யாட்டமாடும் போதும்  நேர்மையெனும் மெய் ஆட்டமே வெல்லும் என நிரூபித்து சாட்டையை வீசுகிறார் எதிரிகள் வீழ்கிறார்கள் ..
..
உழைப்பு உயர்வு தரும் என்ற சொல்லின் பொருள் ஸ்டாலின் 
உண்மையும் நேர்மையும் காலங்கடந்தேனும் உயரத்தில் நிறுத்தும் .. கொண்ட கொள்கையில் உறுதியாய் விளிம்புநிலை மக்களின் குரலுக்கு செவிமடுக்கும் தலைவனாய் எதிரிகள் துரோகிகளின் குலைநடுங்கவைக்கும் தளபதியாய்.. கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கும் ஆண்டவனாய் மக்கள் மனதில் நிலைத்துநிற்கிறார் ஸ்டாலின் 
..
தகைசால் தந்தையே.. 
நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன் உங்கள் சொல்படி தான் நடக்கிறேன் அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் மேலும் மேலும் வெல்ல வாழ்த்துங்கள் என்கிறார் தளபதி அவர்கள்..
ஆம் 
ஐந்தாம் ஆண்டில் திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராய், தமிழகத்தின், தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவராய் நம்பிக்கைஒளியாய்..
எளியோருக்கும் இன்பம் தரும் 
இன்ப நிலவாய்..
எதிரிகளை பகைவர்கள் சுட்டெரிக்கும் சூரியனாய்
எம் தலைவர் திகழ்கிறார்
..
தமிழ் நிலம் கண்ட சொக்க தங்கம் நீ..
அரசியலின் நன்னெறி நீ 
இன்னும் பல ஆண்டு 
தலைமையேற்று எம்மை வழி நடத்துவாய்..
வாழ்க தலைவர் ஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Friday, August 26, 2022

செந்தில் பாலாஜி ..
புதிய வரவு, அதிமுகவிலிருந்து வந்தவர் காலங்காலமாய் இங்கேயே இருப்பவனை விட அதிக முக்கியத்தவம் தரபடுகிறது என்றெல்லாம் விமர்னங்கள் ..
அவர்களுக்கெல்லாம் "உழைப்பவனை தேடி கட்சியை(பொறுப்பை)  ஒப்படைக்கவேண்டும் அப்போதுதான்  கட்சி வளரும் இயக்கம் தொடர்ந்து நிலைக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் சொல்லே பதில்..
..
ஐம்பாதியிரம் பேரை கட்சியில் இணைக்கிறார், தலைவரே இது எப்படி  முடிந்ததென வியக்கிறார் 
எங்களோடு பாஜகவை ஒப்பிடாதீர்கள் வலைதளங்களிலும் தொலைகாட்சி ஊடகமும் எங்களுக்கு சமமாக வைக்க முற்படுவது சரியா .. நோட்டாவோடு போட்டி போடுகிறவர்களும் நாங்களும் சமமா என கேள்வி எழுப்புகிறார் எதையும் மிக சரியாக செய்யும் ஆற்றல் இருக்கிறது அதைவிட மக்களோடு பயணிக்கிறார் .. வேறென்ன வேண்டும்
..
இன்றைய தேவை இது .. திமுகவினர் குறிப்பாக பொறுப்பிற்கு வர "ஆசைபடும்" தோழர்கள் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கிறது ..மாவட்ட செயலாளராக இருந்த மன்னை நாராயணசாமி,அன்பில் தர்மலிங்கம், தூத்துக்குடி பெரியசாமி, நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி, மதுராந்தகம் ஆறுமுகம், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி..  போன்ற எண்ணற்ற அடலேறுகள் இயக்கத்தை வளர்க்க .. இன்றைக்கும் திமுக அடிமடிடத்தில் கொள்கையோடு 
ஆழமாக வேரூன்றி நிற்பதற்கு தந்த உழைப்பும் உத்வேக செயல்பாடும் முக்கியம் .. அடிமட்ட தொண்டனையும் தோளில் கைபோட்டு பேசும் பழக்கம் இருந்தது .. ஒவ்வொரு கிளையிலும் கட்சிகாரன் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் அத்துபடி ..
ஆம் அத்தகைய உழைப்பு இன்றைக்கும் திமுக எழுச்சியோடு இருக்க காரணம் 
..
ஒரே ஒரு தகவல் மட்டுமே போதும் .. தஞ்சையில் தலைவர் கலைஞர் நிற்க வேண்டுமென ஆசைபடுகிறார் மாவட்ட செயலாளர் நீலமேகத்திடம் விருப்பத்தை தெரிவித்த போது இங்கெல்லாம் கட்சியை வளர்க்க முடியாதுன்னே.. "ஆண்டே" சொன்னாதான் கேட்பாய்ங்க, பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வடபாதிமங்கலம் தியாகராஜன், கவித்தலம் மூப்பனார் சொல்வதுதான் அம்பலமேறும் என்ற போது வா..மக்களை சந்திப்போமென ஊரூராக சென்று மக்களோடு கலந்து அவர்களோடு அளவளாவி சுகதுக்கங்களில் பங்கெடுத்து நமக்காக உழைக்க நம் வாழ்வை மேம்படுத்த நமக்கு துணைநிற்க ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை விதைத்து .. மிராசுகள்,நிலக்கிழார்கள் கடவுளாக பார்க்கபட்ட ஜமீன்களிடமிருந்து மீட்டு சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்து இன்று பெருமையோடு தலைநிமிர வைத்தது கலைஞரின் உழைப்பு .. காரணம் மக்களோடு செல் ..மக்களோடு கலந்து பேசு மக்களுக்காக உழை என்ற அண்ணாவின் மந்திரத்தை தலைமேல் கொண்டு செயல்பட்டதே காரணம் ..
..
இன்றைய திமுக மாவட்ட பொறுப்பாளர்/செயலாளர்கள் மக்களோடு கலந்து நிற்கிறார்களா  அங்கங்கே தெருமுனையில்,சந்தையில், மக்கள் கூடுமிடங்களை  நின்று கொள்கை பிரசாரம் செய்கிறார்களா..சிற்றூர் பேரூரென தொடர்ந்து சுற்றுபயணம் செய்கிறார்களா.. பதவியை தக்கவைக்க பெரும்பாடுபடுபவர்கள் வளரும் தலைமுறையை செழுமையாக வளர என்ன முயற்சி எடுக்கிறார்கள் .. இன்றைய தேவை இது .. பதவியும் பவுசும் நிலைக்காது கொள்கை உணர்வோடு கழகம்/இயக்கம்  இன்னும் நூற்றாண்டு பாசிசத்தோடு போராட வேண்டியிருக்கிறது .. விலைபோகும் வீணர்கள், சாதி பேசும் வெற்றுகிளைகள், சோரம் போகும் கழிவுகள்,  பணத்தை தேடும் பாசாங்கு பிறவிகள் இவர்களையும் சேர்த்தே எதிர்க்கவேண்டிய சூழல் .. இங்கே பலம் மட்டுமல்ல நம் பலவீனமும் கேள்வியாகும் .. 
உழைக்கும் தொண்டனும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்ற தளபதிகளும்(பொறுப்பாளர்கள்) இங்கே பெரும் படையோட்டம் நடத்த வேண்டியிருக்கிறது ..
..
தலைவர் மிகச் சரியாக தேர்வு செய்கிறார் .. யாரை எப்போது உயர்த்த வேண்டும்,யாரை எங்கே நிறுத்தி வைக்கவேண்டுமென அறிவார் .. எதையும் மேம்போக்காக பேசுவது கருத்து தெரிவிப்பதும் அறிவிலித்தனம் ..

"இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து 
அதனை அவண் கண் விடல் ..
தலைவர் அதனை சிறப்பாக கையாள்கிறார்
..
ஆலஞ்சியார்

Tuesday, August 23, 2022

நீங்க மட்டும் தான் புத்திசாலியா?
என உச்சநீதிமன்றம் கேட்கிறது ..
கேட்கவே காதுகளில் தேன் பாய்கிறது .. உனக்கு படிப்பே வராது உனக்கு அறிவில்லை என எம்மை ஒதுக்கிவைத்த காலம் உண்டு .. 
..
எம் பிள்ளைகளை நான்காவது  வரையாவது படிக்க அனுமதியுங்கள் 1904 ல் விக்டோரியா ஹாலில் நடத்த ஆங்கிலேய அரசிற்கு பரிந்துரைக்க நடத்தபட்ட கூட்டத்தில் அயோத்திதாசர் கேட்டதும்  அவர் வெளியேற்றபட்ட வரலாறும் உண்டு ..  விடுதலையடைந்தும் 1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் ஏறக்குறைய அதே கோரிக்கையை வைத்த போது 
ராஜகோபாலாச்சாரி  துறைசார்ந்த கோரிக்கையை கேளுங்கள் .. சவுக்காரம் மலிவுவிலையில் வேண்டும் படித்துறை வேண்டும் என கேளுங்கள் என கேட்ட வரலாறு உண்டு .. "துறைசார்ந்த கோரிக்கை " என்ற பதம் கையாளபட்டது அப்போதுதான் 
எம் பிள்ளைகள் கல்வியில் அறிவில் சிறந்து விளங்க வேண்டிதான் தொடர்ந்து உழைக்கிறோம் .. முதல்பட்டதாரிக்கு கல்வி இலவசம் பிறகு முதல் தலைமுறைக்கே இலவசம் 
என தொடர்ந்து இயங்கி எம் மக்களை அறிவுடையோராய் மாற்றியிருக்கிறோம் அதனால் தான் மதவெறியர்களால் காலூன்ற முடியவில்லை
..
நாங்கள் புத்திசாலிதான் ஆனால் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள் என எங்கும் சொல்லவில்லை ..
பி.டி.ஆர். கூட எங்களை விட திறமையாக செயல்பட்டிருந்தால் தரவுகளை தாருங்கள் என்றுதான் சொன்னார் .. எதையும் அறிவுக்கொண்டு பார்ப்பவர்கள், சட்டத்தின் மூலமே தீர்வு வேண்டுமென நினைப்பவர்கள் எங்கள் IPC  மீது
அரசியல் சாசனம் எதை சொல்லியிருக்கிறதோ அதன் அடிப்படையில் தீர்ப்பு வேண்டுமே தவிர மநுநீதி அடிப்படையில் அல்ல .. அரசன் உத்தரவென்ன ஆண்டவன் உத்தரவிற்கே கேள்வி கேட்பவர்கள் நாங்கள் காரணம் அறிவு தரும் தெளிவு .. 
..
மலையப்பன் வழக்கில் தீர்ப்பை விமர்சனம் செய்தார் பெரியார் 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது ..அதில் நேர்நின்று பேசியது உண்மை ..உண்மையைதான் சொன்னேன் என்றார் .. எதையும் அறிவு கொண்டே சிந்திப்பவர்கள் .. அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து கலைஞர் பேசியது 
மலத்தை கையிலும் தலையில் அள்ளுவோருக்கு  தனி ஒதுக்கீடை தலையில் தூக்கி ஆடுகிறேன் இதேபோல் பள்ளத்தை கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் பகுத்தறிவு துணைக்கொண்டு என்றார் .. ஆம் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் மின்னுகிறதே.. இங்கே மதவாதத்தின் பொய் பிரச்சாரங்களை மக்களே எள்ளிநகையாடுகிறார்களே .. இறை நம்பிக்கையுள்ளவர்கள் இல்லாதோர் யாராயினும் மனிதத்தோடு வாழ்கிறார்களே 
மத சாதிவெறியை தூண்டுபவர்கள் மக்களால் ஒதுக்கபடுகிறார்களே இவையாவும் திராவிடத்தால் நிகழ்ந்தது ஆம் திராவிடம் செப்பனிட்டது ..
..
குஜராத்திற்கு ட்ரம்ப் வந்தபோது துணியைகட்ட மறைக்கும் புத்திசாலிதிதனம் எங்களிடமில்லை .. எதையும் வெளிப்படையாக செய்யும் நேர்மையும் துணிவு உண்டு.. காரணம்
எங்களின் மக்கள் நல திட்டங்கள் காலங்கடந்தும் பேசபடுகிறது இந்திய ஒன்றியம் இப்போதுதான் கொண்டு வரும்  திட்டங்கள்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எம் தலைவர் 
கலைஞர் செயல்படுத்தி காட்டினார் காரணம் பெரியார் எனும் பெருந் தீ தந்த அறிவின் வெளிச்சம் எம்மை முன்னேற்ற பாதையில் செலுத்தியது ..
..
இங்கே அறிவு தான் பேசபடும் .. இங்கே கல்விதான் தெளிவை தந்திருக்கிறது .. பொய் மூட்டைகளை மூடநம்பிக்கைகளை இனங்கண்டு புறந்தள்ளும் நேர்மையும் தெளிவும் உண்டு ..இயல்பாகவே தமிழர்கள் பன்னெடுங்காலமாய் அறிவின் நிழலில் வாழ்பவர்கள்  ஐம்பெரும் காப்பியங்களும் தொல்காப்பியம், திருக்குறளென எல்லா இலக்கியமும் அறிவையும் நன்னெறியையும் சொல்லித் தந்திருக்கிறது  
..
கடைசியாக 
திமுக மட்டும்தான் புத்திசாலி கட்சியா என கேட்போருக்கு 
எங்கள் தலைமையகத்தின் 
பெயர் கூட #அறிவாலயம் தான் 
..
ஆலஞ்சியார்

Tuesday, August 16, 2022

நாமெல்லாம் அரசியல் சொல்லி கொடுக்கும் நிலையில் திமுக இல்லை .. ஏன் இப்படி,  இதை ஏன் செய்யவில்லை .. இதை செய்தது தவறு என ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு கவனியுங்கள் ..
எதை எப்படி செய்யவேண்டுமென தலைவர் அறிவார்..
..
அன்பில் விலக வேண்டுமென குரல் உயர்த்துகிறவர்கள், ஒன்றிய அரசின் கல்வி கொள்கை குறித்து வாய் திறப்பதில்லை .. சிலநேரங்களில் சில முடிவுகள் எடுப்பதும் பின் திரும்ப பெறுவதும் இயல்பு .. விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதும் தலைவரின் குடும்ப தலையீடு என்றெல்லாம் எழுதுவது ஏற்புடைதல்ல ..
..
மிக தெளிவாக 
இந்த ஆட்சியில் இருப்பதே பெரியார் பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திராவிட கருத்தியலை நிறைவேற்றதான் 
 டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது; 
ஒன்றிய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது; திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை  என தெளிவாக தமிழ்நாட்டின் தலைவர் முதலமைச்சர் 
முத்துவேல் கருணாநிதி சொல்கிறார்..
..
விமர்சனங்கள் அவசியம் ஆனால் அவசரபடகூடாது 
இந்தபக்கம் போவோம் என்றால் ஏன் போகவேண்டும் என என் தம்பிமார்கள் கேட்பார்கள் என்றார் பேரறிஞர் அண்ணா .. கலைஞரே கூட விமர்சனங்களை காதுகொடுத்து கேட்பார் 
விரிவாக பதில் தருவார்.. ஆனால் குதர்க்கம் பேசுபவர்களை வீண்பழி சுமத்தி திசை திருப்ப முயற்சிப்போரை இடதுகையால் தள்ளிவிடுவார் .. அதைபோலதான் தலைவர் ஸ்டாலின் அவர்களும் சரியான பாதையில் சரியான வேகத்தில் பயணிக்கிறார்
அவசரக்குடுக்கைகள் குறுக்கே வந்தால் அதற்கு பொறுப்பாக முடியாது 
..
இரண்டு நாட்களாக தொண்டர்கள் மன வருத்தமடைந்து நிற்பதறிந்து தலைவர் மிக தெளிவாக நமது பாதை எது என்பதையும் நமது பயணம் சரியான திசையில் செல்வதையும் சொல்லி நம்பிக்கையளித்திருக்கிறார் 
எத்தனை இன்னல்கள் வந்தாலும், எத்தனை பொய்பரப்புரைகள், கேலி கிண்டல்கள், வீண்பழிகள் வந்தாலும் கலங்காது காத்துநிற்கும் காவலன் நம் தலைவர்..
..
நம்புங்கள் 
தலைவர் பாசிசத்திற்கு சிம்மசொப்பனம் ..
Stalin was more dangerous than Karunanidhi..
..
ஆலஞ்சியார்

Wednesday, August 10, 2022

செஸ் ஒலிம்பியாட் ..
இந்தியா நடத்தியது என்பது மறைந்து தமிழ்நாடு நடத்தியதாக பேசபடுகிறது .. குறுகியகாலம் ,நடத்தமுடியுமா என சில மாநிலங்கள் சந்தேகத்தபோதும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் 
மிக திறமையாக செயல்பட்டு சரியான நபர்களை கொண்டு திட்டம் வடிவமைக்கபட்டு சிறு குறையும் வராதவாறு யாரெல்லாம் தவிர்த்தார்களோ அவர்களே பிரமிக்கவைத்து வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
இறுதி நிகழ்ச்சிகள் திராவிட புகழ்பாடியது .. தமிழ்நாட்டின் தலைவர்கள் நினைவு கூர்ந்து அதில் யாரையும் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்ககூடாது என செமையாக செதுக்கியிருக்கிறார்.. A1ஜெயலலிதா படம் தேவையா என்ற கேள்வி எழுந்தது ஆயினும் அவரது சில பக்கங்களை நாம் புறக்கணிப்பதையோ அல்லது எள்ளுவதையோ கூடாதென்பதும் .. திராவிட இயக்கத்தின் பிரதான நோக்கமான பெண்கள் அதிகாரத்திற்கு வருவது தான் பெரியார் விரும்பியதென்பதும் சில கசப்பான ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை கையாண்டாலும், அவரை நினைவுகூறதான் வேண்டும்.. தண்டிக்கபட்டவர் என்பதாலேயே அவரது சில முன்னெடுப்பகளை நாம் குறைகூறி திரியவேண்டியதில்லை .. அவரின் அரசியல் எமக்கு எப்போதும் ஏற்புடையதல்ல எனினும் வரலாற்றில் தவிர்க்கமுடியாத தலைவராக இருந்தார் என்பதை மறுக்கமுடியாது 
..
பெரியாரை கொண்டுவரலாமா என சிலர் வயிறெரிகிறார்கள் பெரியாரை தவிர்த்து தமிழ்நாட்டின் வரலாற்றில் அவரை மறுத்தோ,மறைத்தோ எதையும் செய்திடமுடியாது .. இன்றைய தமிழ்நாட்டில் முன்னேற்றத்தில் 
அவரின் பங்கு மிக முக்கியமானது.. அவரின் வார்ப்புகள் நடத்திய படையோட்டமும், சாதித்ததும் இந்திய ஒன்றியத்தால் சாதிக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.. அவர் சிந்தனையை தாங்கியதுதான் திராவிட மாடல் ,அதுவொன்று தான் தமிழ்நாட்டின், குறிப்பாக தமிழர்களின் வாழ்வை வளமாக்க முடிந்தது ..கல்வியில் சிறந்து விளங்கவும், பெண்கள் விழிப்புணர்வோடு கல்வியே தங்களின் பாதுகாப்பு அரணென 
கொண்டாடுவதும் இந்த கிழவன் தந்த ஊக்கமும், தூண்டுதலும் காரணம் ..
அவரின் கடவுள் மறுப்பை மட்டுமே பேசி திரிகிற கூட்டம் அவர் பேசிய பெண்ணீயம் சமூகநீதி, ஒடுக்கபட்டவருக்கான அவரின் செயல்பாடு, இவையெல்லாம் இன்னும் சில நூற்றாண்டுகளானாலும் பேசப்படும்,  போற்றப்படும் .. தமிழ்நாட்டின் ஒல்வொரு வளர்ச்சியிலும் பேராசான் பெரியாரின் சொல் எண்ணம் இருக்கும் ..அவர் விருப்பியதைதான் அவர் சொன்னதைதான் தமிழ்நாடு செயல்படுத்தமுடியும்.. ஏனெனில் அவர் மதத்தையோ சாதியையோ இனத்தையோ மொழியையோ பற்றி கவலைபட்டவரில்லை ,மனித குலத்திற்காக சிந்தித்தவர் 
அவர் மானுடகுல நேசர் 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்.. 
வலிமையான தலைவர் 
மட்டுமல்ல .. எதை எப்படி செய்யவேண்டும்,சிலரை எப்படி கையாளவேண்டும் எப்படி பதிலடி தரவேண்டும் என அறிவார் .. இவரின் துல்லியமான தாக்குதலில் சிலர் இருக்குமிடம் தெரியாமலோ அல்லது பேசமுடியாமலோ போகிறார்கள்.. எதை கொடுத்தால் எதிரிகள் கதறுவார்கள் என்றறிந்து அதை மிக சாதூர்யமாக அதிலும்  மிக சரியாக செய்கிறார் .. பிரதமரை அழைத்துவந்து ஏற்கனவே திராவிடமாடல் வகுப்பெடுத்தவர் ஆளுநரை  பொம்மையைப்போல அமரவைத்து காட்சிபடுத்தியவர் 
இம்மண்ணில் இதுதான் நடக்கும் இதைதான் எம் மக்கள் விரும்புவர் என சொல்லி அடிக்கிறார் .. மூக்குவிடைக்க பேசுவதில்லை ..ஆணவத்தோடு பதில் சொல்வதில்லை .. வாய்திறந்தால் பொய் சொல்லி மக்களை ஏமாற்றவில்லை .. மக்கள்பிரதிநிதிகள் சபையில் இதைதான் பேசவேண்டுமென உத்தரவு போடுவதில்லை .. எதையும் மரபு மீறபடாமல், ஜனநாயகத்திற்கு சேதம்வராமல் ,கொண்டகொள்கையில் உறுதியோடு மக்கள் நலன், மண்ணின் வளம்,/பெருமை, ஏழ்மையை போக்கிய நல்ல வளர்ச்சி ,எதையும் உயர்சிந்தனையோடு மக்களுக்காக ஏற்றதாழ்வற்ற சமுதாயம் வேண்டுமென உழைக்கும் நல்ல தலைவர் ..
வேறென்ன வேண்டும் ..
இறுமாப்போடு சொல்வோம் 
எங்கள் தலைவர் தளபதி 
எதையும் வெல்வார் .. பகுத்தறிவு துணைக்கொண்டு .. மக்களாட்சி மாண்பை காப்பார் ..
..
ஆலஞ்சியார்

Saturday, August 6, 2022

கலைஞர் கருணாநிதி
பெயரை கேட்டாலே பதறுவதும் 
அவரை நினைத்தாலே எதிரிகள் குலைநடுங்குவதுமாக மறைந்து நான்காண்டாகியும் பகைவர்களை கதறவைக்கிறார் எம் தலைவர் ..
..
தலைமைக்கு இலக்கணமாய், அரசியல்வாதிக்கு பொது பாடமாய், எதிரியை வீழ்த்த எங்கனம் எப்படி எதைக்கொண்டு வீழ்த்த வேண்டுமென வழிகாட்டிய ஆசானாய், எளியவரை கண்டு இரக்கம் கொள்,அவருக்காக ஆளும் காலமெல்லாம் வழி செய் என அரச இலக்கியம் சொன்ன மன்னனாய், வீழும் போதெல்லாம் வீறுக்கொண்டு எழு.. நீ கலங்குவதை கூட பகைவர் கொண்டாடுவர் ஆதலால் தோல்வியின் போதும் புன்சிரி என வாழ்ந்துகாட்டி புதியபாதை சொன்ன பெருந்தலைவன் ..
..
கலைஞர் ..
தமிழக அரசியலில் தன்னைச் சுற்றியே சுழலவைத்த பேரதிசியம்.. இத்தனை திறமையாளன் இதுவரை கண்டதில்லையென
இந்திய ஒன்றியம் வியப்போடு பார்த்தது .. 
..
உண்மையில் ஒரு நல்ல ஜனநாயகவாதியாய் .. இடர்வரும் போதெல்லாம் வீறுகொண்டெழுந்து ஜனநாயகத்தை காத்த பெருந்தலைவன் .. பேருக்கு அரசியல் செய்யாமல் பேரெடுப்பதற்கும் செய்யாமல் 
பலபேர் பயனடைய வேண்டும் பட்டினி கிடப்போர் வயிறு நிறையவேண்டும் ..ஏழ்மையால் அறிவு தடைபடகூடாது .. காலங்காலமாய் அழுத்தபட்ட சமூகமக்கள் ஏறிவர வேண்டும் என பொதுவுடைமை பேசிய தோழனவன் ..
..
சமூகநீதி சமநீதியாக வேண்டுமென பாடுபட்டு .. அதற்கெதிராய் மநுநீதி இருப்பதையும் பூணூல் தடுப்பதையும் உணர்ந்து மிக சிரத்தையோடு காய் நகர்த்தி கதறவிட்டவன் .. எப்பாடுபட்டாகினும் படி .. அதற்கு அரசு துணைநிற்கும் .. தடைபோடுவர், தடுப்பமைத்து தகராறு செய்வர்.. அஞ்சாதே .. எவன் ஸ்வாமி என அழைக்க சொன்னானோ அவனையே கையெடுத்து கும்பிட வைக்க உனக்கு கல்வி அவசியமென சொல்லி அதற்கான  கட்டமைப்பை செய்து இன்று இன்ஜினியர் இல்லாத தெரு இல்லை மருத்துவர் இல்லாத ஊரில்லை என தமிழனை உயரத்தில் நிறுத்தி அழகுபார்த்தவன் ..
..
இதோ, ஒழிந்தது திராவிடம்.. இல்லாதாக்கிவிட்டோம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், முடிந்தது பார் திமுக வரலாறு என்றவனெல்லாம் காணாமல் போய்விட்டான் .. ஆனால் கருத்தாளன் கருணாநிதி அரணாய் நின்று .. விழுந்தபோதெல்லாம் வீறுக்கொண்டு எழுந்து எப்போதுமில்லாத திமிரோடு ஓடி எதிரிகளை கலங்கடித்தார்..
கருணாநிதியோடு முடிந்தது திமுக என்றவன் கதறுவதை கேட்கதான் கலைஞரில்லை .. நான்காம் தலைமுறையை மிக அருமையாக செதுக்கி பண்படுத்தி செல்லும்பாதை எது எப்படி எங்கனம் கையாளவேண்டும் .. எதை சொன்னால் பகைவன் அலறுவான் .. எங்கே அடித்தால் வலிக்கும் என கற்றுதந்து சரியானவரை அடையாளபடுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்.. அவரும்(தளபதியார்) "திராவிடமாடல்" கையிலெடுத்து இதுதான் முன்னேற்றத்திற்கானதென வகுப்பெடுப்பதை பார்க்க என் ஆசான் இல்லை .. பெரியாரின் வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்.. என் தமிழ் சமூகமே தலைவர் தளபதி கரத்தை வலுவாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ..
வாழ்க்கை தரம் உயரும், சரியான கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரமென இந்திய ஒன்றியத்தில் தமிழகம் தனித்து மிளிரும்
..
நான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தலைவன் .. அறத்தோடும் அன்போடும் அறியணையேறிய போதெல்லாம் தமிழ் நிலத்தை வளமாக்கிய பெரும்மழையாய் ..
பகைவரை அறிந்து அவர்தம் சூழ்ச்சியை உன் விவேகத்தால் வீழ்த்தி கடைசிவரை கதறவிட்ட போராளி ..நீ..
உன் ஒவ்வொரு சொல்லும் எதிரியை சுட்டது 
எதிர்க்க நிற்க அஞ்சி தலைமறைவானவர்கள் .. 
இப்போது கண்விழிக்க தொடங்கியதும் .. நீ வார்த்து வைத்த "திராவிட மாடல் " சூரியன் சுட்டெரிக்கிறது .. காலமெல்லாம் தமிழர் நெஞ்சில் நீ வாழ்வாய் ..
இனம் மொழி பண்பாடு காத்த 
பெருவீரனே!..
ஆரியத்தை அலறவிட்டு 
பேரரசனே!!..
நீ..
பெருஞ்சுவர் 
உனை மீறி எதுவும் அண்டாது 
 காலமானதாக சொல்கிறார்கள் 
ஆம் 
"காலமாயே" காத்துநிற்கிறார் 
என்றும் உன் புகழ் நிலைத்திருக்கும் 
..
கலைஞர் என்பதாண்டுகாலம் செப்பனிட்டபாதை தான் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது .. தமிழ் சமூகத்திற்கு தன் எழுத்தால்,பேச்சால்,செயலால் 
"பெருஞ்சுவராய் " காத்துநின்ற எல்லைசாமி.. எதிர்ப்போரும் எதோவொருவகையில் இவரால் பலனடைந்திருப்பர்.. இன்றைய வளர்ச்சியில், தமிழர் வாழ்வில் இவரின் பங்கு இல்லாமல் இல்லை .. 
காலம் கொண்டு சென்றிருக்கலாம் .. ஆனால் "காலமாய் " நம்மோடு நம் நினைவோடு என்றும் நிலைத்திருப்பார் ..
..
வாழ்க! கலைஞர் பெருமகன் புகழ்!!
..
ஆலஞ்சியார் 
ஆலஞ்சி மு மன்சூர் 
ஆலஞ்சி.ம.தமீம் 

என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ
..
கலைஞர்
ஒரு அசுரத்தனமான உன்னத தலைவனின் உழைப்பு🖤❤️

இந்த பிரம்மாண்டதொகுப்பு அசத்தலானது 

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர் #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். 

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். 

#காற்று
#தண்ணீர்
#உணவு
#உடை
#உறைவிடம்
#மொழி
#மருத்துவம்
#கல்வி
#பாதுகாப்பு
#சாலைவசதி 
#மின்சாரம்
#போக்குவரத்து
#உள்கட்டமைப்பு 
#தொழிற்சாலை
#தொலைத்தொடர்பு

#தண்ணீர்/ Water

1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர். 

2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர் 

3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்

4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.  
 
5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்

6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம்

7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்

8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர் 

10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம். 

11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். 

12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரித்து வந்தார். 
 
#உணவுமற்றும்விவசாயம்
/ Food and Agriculture 

1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது கலைஞர் 

2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தார். 

 3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர். 

4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர் 

5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர் ..

6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக,10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர் கலைஞர்

7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்

11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்
 
12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர் 

13. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தியது கலைஞர்

14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியது கலைஞர்
 
 15. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர் 

16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது கலைஞர் 

 #உறைவிடம்/ HOME

1. கிராமங்களில்,நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியவர் கலைஞர் 

2. தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுத்தவர் கலைஞர்

3. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட்வீடு திட்டம் வகுத்தது கலைஞர் 

4. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர் 

5. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் 

6. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர் ..

 #மருத்துவம்_Healthcare 

1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்,13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 

மேலும் மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள்,தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 

2.ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர் 

3.முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் 

4.வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர் 

5.104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர்

6. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மருத்துவ கல்லூரிகளை அமைத்தது கலைஞர்...
7. மருத்துவ கல்லூரிகளில் பல துறைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 

8. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்

9. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான "நலமான தமிழகம் திட்டம்" தந்தது கலைஞர்..

10. ஒன்றிய  அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர் 
 
#கல்வி/ Education:

1. 1996 - 2001 காலகட்டத்தில் 7,000 பள்ளிகளை நிறுவியது. 

2. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்

3. மிக பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்... தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

5. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர் 

6. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது கலைஞர்...10ம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு திருமண உதவி 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர்

7.பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர் 

8.வருமான உச்ச வரம்புக்கு கீழுள்ள  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசகல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

 9. விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர் 

10. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்

11. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர் 

12. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் ..சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்  நிறுவியது கலைஞர் 

13. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 

14. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் 

15. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் ...

 16. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர் 

17. முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீடு அளித்தது கலைஞர் 

18. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர்

19. உருது அக்காடமி தந்தது கலைஞர் 

20. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர் 

21. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது கலைஞர் 

22. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000...
பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்

23. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்

24. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர் 

25. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர் 

26.பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்
 
27. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர் 

28. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர் 

29. பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர்...

130. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்

31. உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும் என்ற திட்டமிட்டு, முதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி , பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர் கலைஞர்..

 #மொழி/ Language:

1. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர் 

2. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் 

3. திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர்...

பாரதிதாசன், அண்ணாவுடன் சேர்ந்து நாம் இன்று ஷ,ஸ,க்ஷ கலக்காமல் எளிய தமிழை வழங்கியவர் 

5. திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தியவர் கலைஞர். 

#பாதுகாப்பு/ Police

1. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்...
 2. மகளிர் காவலர்களை நியமித்தவர்

3. சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர்

4. புழல் சிறைச்சாலை கட்டியவர்

#சாலைவசதி/ Road and Rail

1. 1,000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை அமைத்தது கலைஞர் 

2.கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட்சாலை அமைத்தவர் கலைஞர்..
 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக  இருந்தவர் கலைஞர்

4. சென்னை - மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்....🖤❤