என்ற எச்.ராசா உணர்ந்து பேசியிருக்கிறார்..
அமித்சா தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்தவுடன் பார்பன ஊடகங்கள் சந்தித்து என்னபயன் என்பதால் தவிர்த்ததாக பெருமை பேசின.. சந்திப்பு நடந்திருந்தால் கூட என்ன பேசினார்கள் என்பதை உலகறிய வாய்ப்பில்லாது போயிருக்கும் .. காணொளி வாயிலாக மருத்துவக்கல்லூரிகள் திறக்கும் போது மக்களை சாட்சியாக வைத்து எங்களுக்கு நீட் அவசியமில்லை .. தமிழகம் மருத்துவதுறையில் ஒன்றியத்திற்கு வழிகாட்டுகிறது எங்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்க அனுமதிக்கமுடியாதென "கூப்பிட்டுவைத்து கொட்டு வைத்திருக்கிறார் எம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் ..
..
தெளிவாக சொல்லி அடித்தல் ..
11 முறை ஒன்றிய அரசென புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்கிறார் .. இங்கே அடிமைகளும் அல்லகைகளும் மூர்ச்சையாகிறார்கள் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் மக்களின் குறைகளை தீர்க்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என ஆய்ந்து, கொண்ட கொள்கை சமரசமற்ற நிலைபாட்டை தொடர்ந்து கடைபிடித்து, திராவிட இயக்கம் தோற்றுவிக்கபட்டதின் நோக்கம் சிதையாமல் பணியாற்றுகிறார் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் .. உங்கள் கைகளில் தேர்தல் அறிக்கை புத்தகமாக உள்ளது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்கிறார் முதலமைச்சர் .. ஆம் ஒவ்வொன்றும் நிறைவேறும்.. அடுத்த ஆட்சியும் திமுகதான் என "மக்கள் குரல் " கேட்க தொடங்கியிருக்கிறது .. இன்னும் 20 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர்ந்தால் உலகமே வியக்கும் ஆட்சியை தருவார் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பாடமாக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இருக்கும். எச்சைகளின் கனவுகள் பலிக்காது இம்மண்ணிலிருந்து பாசிச பாஜக துடைத்தெறியப்படும் ..அதிமுக எனும் வாடகை காலில் நிற்கிறார்கள் அதுவே "பொய்க்கால் " என்பது தெரியும் போது ஆழ புதைந்து போவார்கள்
..
திராவிட இயக்கம் சமூகநீதி/ இனம் /பண்பாடு/கலாச்சாரம்/கல்வி/ஒடுக்கபட்டஇனத்தின்மீட்சியென உயர்நோக்கோடு செயலாற்றுகிறது .. பகை எதுவென அறிந்து படையோட்டம் நடத்துகிறது .. உழைப்பு நேர்மை நீதிதவறாமை என துடிப்போடு செயலாற்று தலைமை .. இன்னும் இருபத்தாண்டுகள் தமிழ்நிலம் காக்கபடும் ..
கவலையில்லை
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்கிறார்
..
#தலைவனிருக்கிறான்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment