Saturday, January 8, 2022

சமூகநீதி பயணத்தின் தொடர்ச்சி..
மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்ட மக்கள் நன்றியோடு புகழ்கிறார்கள் .. இந்திய ஒன்றியமே வாழ்த்தையும் நன்றியையும் மேதகு ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது கண்டு திராவிட இயக்கம் சரியான பாதையில் செல்வதோடு சரியானவரை தேர்வு செய்வு செய்திருக்கிறதென அகமகிழ்வு கொள்கிறோம் ..
..
பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தபட்ட மக்களின் உரிமைகளை கேள்விகுறியாக்கி அவர்களை புறக்கணிப்பதோடு அவர்களின் கனவு எதிர்காலத்தை சிதைத்தது .. மருத்துவம் உட்பட உயர்கல்விகளில் அரியவகை ஏழைகளுக்கு குறிப்பாக உயர்சாதியினருக்கு இடஒதுக்கீட்டை அவசரகதியில் கொண்டுவந்து அதை ஒரேநாளில் நடப்பிலாக்கி ₹8லட்சம் வருமானமுள்ளவர்கள் உயர்சாதியில் ஏழைகள் என கணக்கிட்டு வாய்ப்பை வழங்கிய பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து மருத்தவகல்வியில் OBC இடஒதுக்கீட்டை ரத்து செய்து வருடம் 4000 மாணவர்களின் கனவை பாழாக்கியது.. ஏனைை மாநில  அரசுகள் மௌனம் காத்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட தமிழகம் குறிப்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதர பிற்படுத்தபட்டமக்களின் /மாணவர்களின் உரிமையை மீட்டிதந்திருக்கிறது ..
..
இதோடு முடிவதில்லை எமது பயணம் இலக்கு என உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கபட்ட சலுகை இடஒதுக்கீடு சட்டவிரோதம் என குரல் கொடுத்திருக்கிறார் .. நாடாளுமன்றத்தில் இடதுசாரி ரங்கராஜன் ஆதரித்தபோது புலியென கிளர்ந்து அங்கேயே என்ன செய்கிறீர்களென போர்முரசாய் முழங்கியவர் மானமிகு கனிமொழி கருணாநிதி.. சமூகநீதி பயணத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சமசரம் செய்துக்கொள்ளாது என்பதோடு போராடவும் தயங்காதென்பதற்கு இது சிறந்த உதாரணம் .. 
..
நீட்தேர்வு ரத்து செய்யவேண்டுமென்ற அனைத்துகட்சி கூட்டத்தில் பாஜக ஆதரித்து வெளிநடப்பு செய்திருப்பது அவர்கள் இடை,கடைசாதியினருக்கு எதிரானவர்கள் எதிரான கட்சியென்பதை, பாஜக உயர்சாதியினருக்கானதென்பதையும் மக்களுக்கு மீண்டும் உணர்த்தியிருக்கிறார்கள் .. உனக்கு படிப்புவராது என தொடங்கி படிப்பு என்ன செய்ய போறே வரை வந்தவர்கள்  படிப்பை தர மறுப்பதிலிருந்தே  எவ்வளவு ஆபத்தானவர்கள் என விளங்கும் .. 
எல்லாவற்றையும் போராடிதான் பெற்றிருக்கிறோம் என தமிழ்நாடு முதல்வர் சொல்வதில் எவ்வளவு உண்மை .. நீட் தேர்வை ரத்து கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம் .. அதுவரை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்களின் கரம்கோர்ப்போம்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment