Sunday, January 16, 2022

பெரியார் அம்பேத்கர் 
இருவரையும் இணைத்து அரசியல் செய்யவேண்டியவர்கள் அம்பேத்கர் போதும் என்ற நிலைபாட்டை எடுத்து பெரியாரை தூற்ற அல்லது தேவையில்லை என்ற நிலைக்கு வந்திருப்பது அவர்களுக்கே தீங்காய் விளையும் ..
..
அம்பேத்கர் 
படித்தவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு அறிஞர் பெருமக்களால் வார்த்தெடுக்கபட்டவர் .. இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாதவர் அதே நேரம் பார்பனர்களோடு சமசரம் செய்துக்கொண்டவர்  அவரே என் கைகளை பிடித்துக்கொண்டு அரசியல் சாசன சட்டத்தை எழுதினார்கள் என சொல்லியிருக்கிறார் .. 15% விழுக்காடு இடஒதுக்கீட்டோடு சமசரம் செய்துக்கொண்டவர்  அரசியல் சாசன திருத்தம் செய்ய முனைந்த போது முடியாமல் போய் பதவியை துறக்க துணிந்தவர் .. பெண்களுக்கு சொத்தில் பங்கென்ற சாசன திருத்தம் நிறைவேறாமலே போனது .. இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை வர்ணகோட்பாடுகளை எதிர்த்து ஒருகட்டத்தில் துவண்டுபோய் 
பௌத்தத்தில் கரையேறியவர்.. பதவியில் இருந்தும் புறசூழலால் சமூக நீதிகளில் சமரசம் செய்து கொண்டு கரைந்து போனவர் ..
..
பெரியார்  
பாசிச பார்பனீயம் நெருங்கமுடியாத நெருப்பாக தன்னை கட்டமைத்து கொண்டவர் .. எந்த பதவியும் வகிக்காமல் அரசியல் சாசன சட்டத்தையே திருத்தம் செய்ய முடிந்ததென்றால் அவர் கொண்ட கொள்கை பயணத்தின் நேர்மை நமக்கு புரியும் .. இன்றைக்கு தமிழகத்தில் தலித் சமூகம் கம்பீரமாக வலம் வருகிறதென்றால் பெரியார் எனும் பெருஞ்சுவரே காரணம் .. வடமாநிலங்களில் இன்றைக்கும் தலித் சமூகம் படும்பாடு கண்முன்னே காட்சியாய் நிற்கிறது .. இங்கும் 1960 களுக்கு முன்பு கூட தெருக்களில் நடமாடமுடியாத சூழல் இருந்ததும் "பாப்பாந்தெருக்கள்"
செருப்புகள் நடமாடமுடியாத நிலை இருந்ததும்  யாவரும் அறிந்தது தான் .. திராவிட இயக்க வளர்ச்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் தமிழக நிலை மாறியது .. இடை/கடைசாதிகாரர்கள் கல்வி வேலைவாய்ப்பில் வேகமாக வர முடிந்தது .. பெரியாரின் சிந்தனை பேச்சு எல்லா சமூகத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதாக இருந்தது .. அநீதி இழக்கபடுபவனுக்கு ஆதரவாக இருந்தது பெண்களுக்காக அதிகம் பேசினார்.. 
..
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 60 களுக்கு முன்பு அம்பேத்கரை யாரென்றே தெரியாது .. திலகரை அறிமுகம் செய்த அளவிற்கு அம்பேத்கர் பாட புத்தங்களில் கூட  இல்லை .. தலித் இயக்கங்கள் வர தொடங்கி பிறகுதான் அம்பேத்கர் பேசுபொருளானார் ..  தலித் இயக்கங்கள் அம்பேத்கரை தலித் தலைவராக முன்னிறுத்தவே முயற்சிக்கின்றன .. அவர் பொதுவானராக அறியபடவேண்டும் .. சிறந்த தலைவர்கள் வரிசையில் அவருக்கு இடமுண்டு
 ..
அம்பேத்கர் போற்றபடவேண்டியவர் அதற்காக பெரியாரை மறுத்தோ தவிர்த்தோ இங்கே தேவை ஏற்படாது .. நவீன தலித்வாதிகள் 1902ல் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த அரசிற்கு பரிந்துணைக்க கூடிய கூட்டத்தில் முழங்கிய அயோத்திதாசரையோ .. லண்டன் வட்டமேசையில் முழங்கிய ரெட்டைமலை சீனிவாசனையோ கூட இந்தளவு உயர்த்தி பிடிக்கவில்லை இவர்கள் நோக்கம் நமக்கு புரியும் பெரியாரை தாழ்த்த வேண்டும் அதுமட்டும்தான் அதுதான் அவர்களுக்கு வழங்கபட்ட வேலை ..  அது நடக்காது 
அம்பேத்கருக்கு சட்டகல்லூரி அமைத்து பல்கலையாக்கியவர்கள் இந்த மண் சமூகநீதி இயல்பாகவே கொண்டது .. சிண்டுமுடியும் வேலைகள் நடவாது ..
..
இங்கே 
பெரியாரே எம் பெருந்தலைவர் 
..
ஆலஞ்சியார்





No comments:

Post a Comment