Wednesday, January 26, 2022

தமிழகம் கண்ட முதல்வர்களில் தலைசிறந்தவர் என்ற இலக்கை நோக்கி நகர்கிறார் எம் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
சமரசமில்லை அதிகம் பேசுவதில்லை கலைஞரைப்போல் நாவன்மையால் வீழ்த்தவில்லை ஆனால் திருப்பி அடிப்பதில்  
எதிரி கதிகலங்கி நிற்கிறார்கள் .. 
யாருமே எதிர்பார்க்காத நகர்வுகள் அவரை உயரத்தில் ஏற்றுகிறது .. 
..
ஒன்றிய அரசால் தமிழக ஊர்திகள் மறுக்கபட்டதும் துவண்டுவிடவில்லை எங்கள் தமிழ் நாட்டில் நாங்கள் விடுதலைப் போராட்ட தியாகிகள் மதிப்போம் .. சாமியார்களை மாடுகளை காட்டி "மகிமை" பேசாமல் .. அறிவின் நிழலில் எங்கள் ஊர்திகள் உண்மை பேசும் என உரக்க சொல்லி ஒன்றியத்தை சுயமரியாதைகாரர்கள் தமிழர்கள் என சொல்லியிருக்கிறார்..
..
பகைவர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் அதனால் தான் அவர்களால் Stalin is more dangerous than Karunanidhi என சொல்ல முடிந்தது .. ஆனால் நம்மவர்கள் தான் இன்னமும் கம்பு சுத்துகிறார்கள் .. பெரியார் விடுதலைப் போராட்ட வீரரா என விடலைகள் பேசுகின்றன .. 
இன விடுதலை இல்லாமல் மக்கள் விடுதலை இல்லாமல் ஏற்றதாழ்வற்ற சமூக விடுதலையில்லாமல் விடுதலை வீண் என்றவர் .. அதெல்லாம் புரிய வேண்டுமெனில் சொந்த காசில் சோறு தின்பவனாக இருக்கவேண்டும்.. புலம்பெயர் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவனாக இருந்தால் புரியாது ..
..
பெரியார் தடியோடு முன்னே  மனம் மகிழ்கிறது ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் தவறவிட்டதை செய்துகாட்டியிருக்கிறார் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. காவி சங்கிகள் பதறுகிறார்கள் ஒப்பாரி வைத்து பார்த்தார்கள் .. உயர் அழுத்தங்கள் வந்தன் சளைக்கவில்லை .. எப்படி திருப்பி தரவேண்டுமென எம் முதலமைச்சருக்கு தெரியும் ..
அனுமதி மறுத்த  எமது வரலாற்றை பேசும் ஊர்திகள் தமிழ்நாடெங்கும் வலம் வருகிறது அதை மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சரே துவக்கி வைத்து பலருக்கு பாடமெடுத்திருக்கிறார்..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை சரியாக கட்டமைக்கபட்டிருக்கிறது ..தகுதிவாய்ந்த தலைவரின் கையில் தமிழகம் பாதுகாப்போடு அடிமைகள் அல்ல மறுத்தால் திருப்பி அனுப்பினால் .. "மத்தியஅரசு" அனுமதிக்கவில்லையென மௌனமாய் கடந்து போக .. இது திராவிட அரசு தளபதியெனும் அஞ்சாத சிங்கம் ஆள்கிறது .. 
அதனால் தான் நிம்மதி பெருமூச்சுவிட முடிகிறது 
..
சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தை துவக்கிவைத்திருக்கிறார் .. கலைஞரைப்போல அல்ல இவர் என்ற சொல் உண்மையாகிறது ..
அண்ணாவை உள்வாங்கிய கலைஞரை படித்த பெரியாரின் பேரன் இவர் .. #கைத்தடியின் நீளமும்,அது நடப்பதற்கு இல்லாமல் வடிவமைத்திருப்பது சூசகமாய் சொல்லவருகிறார் ..
திராவிட தந்த நன்முத்துக்களில் ஒருவராய் நாளைய வரலாற்று நாயகராய் மிளர்வார்..
..
பகையே 
இதுவரை மிதமான தாக்குதலை கண்டிருக்கிறாய்
இனி ஸ்டாலின் எனும் அறம் தரும் வீச்சில் நிலைகுலைந்து போவாய்.. 
தமிழ்நாடு எல்லைசாமியாய் 
பெரியாரின் பாதையில் அண்ணாவும் கலைஞரும் தந்த அறிவில் நடைபோடும் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடும் மக்களும் நன்றிகடன்பட்டிருக்கிறோம் .. 
ஸ்டாலின் கரத்தை விடாது பிடித்துக்கொள்வோம் ..
எல்லைசாமி காத்துக்கொள்ளும்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment