Tuesday, January 18, 2022

தமிழ்நாட்டின் தலைநகரை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி திராவிடத் தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் வரலாறு படைத்திருக்கிறார் 
முதலில் அதை கொண்டாடவேண்டும் அதைவிடுத்து தலித் அமைப்புகள் விசிகவிற்கு தரவேண்டுமென குரல் எழுப்பி திசைமாற்ற முயல்கிறார்கள் 
விசிகவிற்கு தரகூடாதென்பதல்ல தர தேவையில்லை என்பது யதார்த்தம் .. 
..
திமுகவைவிட சிறந்த சமூகநீதி பேசும் கட்சி வேறு இல்லை பெருநகரங்களில் செல்வாக்கு உடைய கட்சி நிற்பதுதான் சிறந்ததும்கூட.. தேர்தல் களத்தில் வெற்றி முக்கியம் .. கள யதார்த்தம் புரியாத சில நீலசங்கிகள் ஒப்பாரி வைக்கலாம் கவலைபட தேவையில்லை .. "சிதம்பரம்" சொன்ன சேதி எல்லோரும் அறிவர் ..
..
இம்முறை பெண்களுக்கு அதிகளவில் மாநகரங்கள் ஒதுக்கபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது சென்னையில் பெண் என்பது கூட கூடுதல் மகிழ்ச்சி.. திமுகவில் பிரபலமான தலித் பெண் ஆளுமையில்லையென நாச்சியார்கள் கவலைக்கொள்ள தேவையில்லை திமுக நிறுத்துபவர் யாராக இருந்தாலும் வெளிச்சம் பெறுவார் வெற்றி வாகைசூடுவார்.. 
மன்னரை எதிர்த்து வண்டிக்காரரை நிறுத்த வென்ற இயக்கம் .. 
..
யாரை எங்கே நிறுத்துவதென மாண்பிமை முதலமைச்சர் நன்கு அறிவார் .. திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.. கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சிகளை தருவது வழக்கில்லை..  அதற்கான சூழலும் எழவில்லை 
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் "ஜனநாயக" குரல்கள் அதிகம் ஒலிக்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் "கள்ளமௌனம்" காப்பர் .. 
..
திமுகவிற்கு பாடமெடுப்பதை விடுங்கள்.. சமூகநீதியை நிலைநாட்டுவதில் ஒன்றியத்திற்கு பாடமாய் விளங்குவது தி.மு.கழகம் .. கொண்ட கொள்கையில் பிறழாமல் நடைபோடும் இயக்கம் 
திமுக தலைவர் 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைமையில்  வழிகாட்டுதலோடு நல்லாட்சி தொடரும் .. 
உள்ளாட்சியிலும் 
..
ஆலஞ்சியார்



No comments:

Post a Comment