Sunday, January 30, 2022

தமிழக அரசு அச்சமற்றவரின் கைகளில் இருப்பதை உணர்கிறோம் .. ஆளுநருக்கு நேரடியாகவும் எழுத்தின் வாயிலாகவும் விளக்கம் தரும் அரசு .. இருமொழிக் கொள்கை தான் எம் கொள்கையென அமைச்சரே பதில் தருகிறார் .. காந்தி நினைவு நாளில் ஆளுநர் முன் வாழிய திராவிட நாடு என இசைத்து தெளிவுபடுத்துகிற தைரியம் இந்த அரசிற்கு உண்டு ..
ஆனாலும் கோவையில் இடதுசாரிகளும் தோழமைகளும் நடத்திய காந்தி நினைவஞ்சலிகள் கோட்சேவால் கொல்லபட்ட என்ற முழக்கம் வந்ததும் காவல்துறை அதிகாரிகள் தடை போடுவதும் வலைதளங்களில் கோவை தமிழகத்தில் இல்லையா என கேள்வி எழுவதும் கவனத்தில் கொள்ளவேண்டும் அதை மாண்பிமை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கடமை எமக்குண்டு ..
..
கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களின் தீய எண்ணங்களுக்கும் இந்தியாவில் இடமில்லை என சூளுரைப்போம் என முதலமைச்சரே சொல்வதிலிருந்தே நம்பிக்கை தெரிகிறது ..  தமிழகத்தில் தீய பாசிச சக்திகள் அதிமுக தயவில் காலூன்ற தொடங்கியதிலிருந்து 
தினம் தினம் மதகலவரத்தை தூண்டுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் .. "மதமாற்றம் " முயற்சி நடந்ததாக பொய்யாய் புனைந்து உண்மையை மறைக்க முயற்சிப்பதும் அதை வெளிகொணர வேண்டிய பொறுப்பு அரசிற்கு உண்டு ..
இரும்புகரம் கொண்டு இவர்களை அடக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது ..
..
ஒன்றிய அரசின் கடைக்கண் பார்வை உண்டென்பதால் இவர்களின் ஆடுகிறார்கள்.. ஆனால் ஆடுமிடம் தான் தவறாகிப்போனது .. இவர்களின் ஒவ்வொரு அசைவும் இங்கே கிழிக்கபடுவதும் கேலிகூத்தாகபடுவதும் மக்கள் புறந்தள்ளுவதும் தொடர்கதையாகிறது .. 
அதிமுக அடிமைகளின் தயவில் 
இங்கே துளிர்விட தொடங்கியவர்கள் நாளடைவில் அச்சுறுத்தும் நிலையில் இருப்பது கவனிக்கதக்கது .. பாவம் அதிமுகவை மெல்ல விழுங்க தொடங்கியதை பாவம் அதிமுகவினரே உணர்கிறார்கள்..
..
கோட்சேவால் கொல்லபட்டாார் காந்தி என்பதை மேலும் அதிகமாக எடுத்து செல்ல வேண்டும் இல்லையேல் "காந்தி மரணம் " என காலம் சொல்ல கூடும் .. இஸ்மாயில் என பச்சை குத்தி கொண்ட நேர்மையற்றவர்கள் நேரடியாக எதிர்க்க தெரியாது.. சரியான வித்தில் விளையாத கலப்படமானவர்கள் .. இவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் முதல்வர் அவர்களே .. உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும்.. மதகலவரத்தை தூண்டுபவர்களை தடுத்து சரியான முறையில் கவனித்தால்  தமிழகத்தில் பாசிசத்திற்கு பாஜகவிற்கு முடிவுரை எழுதலாம் ..
செய்வீர்கள் 
..
ஆலஞ்சியார்

Wednesday, January 26, 2022

தமிழகம் கண்ட முதல்வர்களில் தலைசிறந்தவர் என்ற இலக்கை நோக்கி நகர்கிறார் எம் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
சமரசமில்லை அதிகம் பேசுவதில்லை கலைஞரைப்போல் நாவன்மையால் வீழ்த்தவில்லை ஆனால் திருப்பி அடிப்பதில்  
எதிரி கதிகலங்கி நிற்கிறார்கள் .. 
யாருமே எதிர்பார்க்காத நகர்வுகள் அவரை உயரத்தில் ஏற்றுகிறது .. 
..
ஒன்றிய அரசால் தமிழக ஊர்திகள் மறுக்கபட்டதும் துவண்டுவிடவில்லை எங்கள் தமிழ் நாட்டில் நாங்கள் விடுதலைப் போராட்ட தியாகிகள் மதிப்போம் .. சாமியார்களை மாடுகளை காட்டி "மகிமை" பேசாமல் .. அறிவின் நிழலில் எங்கள் ஊர்திகள் உண்மை பேசும் என உரக்க சொல்லி ஒன்றியத்தை சுயமரியாதைகாரர்கள் தமிழர்கள் என சொல்லியிருக்கிறார்..
..
பகைவர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் அதனால் தான் அவர்களால் Stalin is more dangerous than Karunanidhi என சொல்ல முடிந்தது .. ஆனால் நம்மவர்கள் தான் இன்னமும் கம்பு சுத்துகிறார்கள் .. பெரியார் விடுதலைப் போராட்ட வீரரா என விடலைகள் பேசுகின்றன .. 
இன விடுதலை இல்லாமல் மக்கள் விடுதலை இல்லாமல் ஏற்றதாழ்வற்ற சமூக விடுதலையில்லாமல் விடுதலை வீண் என்றவர் .. அதெல்லாம் புரிய வேண்டுமெனில் சொந்த காசில் சோறு தின்பவனாக இருக்கவேண்டும்.. புலம்பெயர் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவனாக இருந்தால் புரியாது ..
..
பெரியார் தடியோடு முன்னே  மனம் மகிழ்கிறது ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் தவறவிட்டதை செய்துகாட்டியிருக்கிறார் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. காவி சங்கிகள் பதறுகிறார்கள் ஒப்பாரி வைத்து பார்த்தார்கள் .. உயர் அழுத்தங்கள் வந்தன் சளைக்கவில்லை .. எப்படி திருப்பி தரவேண்டுமென எம் முதலமைச்சருக்கு தெரியும் ..
அனுமதி மறுத்த  எமது வரலாற்றை பேசும் ஊர்திகள் தமிழ்நாடெங்கும் வலம் வருகிறது அதை மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சரே துவக்கி வைத்து பலருக்கு பாடமெடுத்திருக்கிறார்..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை சரியாக கட்டமைக்கபட்டிருக்கிறது ..தகுதிவாய்ந்த தலைவரின் கையில் தமிழகம் பாதுகாப்போடு அடிமைகள் அல்ல மறுத்தால் திருப்பி அனுப்பினால் .. "மத்தியஅரசு" அனுமதிக்கவில்லையென மௌனமாய் கடந்து போக .. இது திராவிட அரசு தளபதியெனும் அஞ்சாத சிங்கம் ஆள்கிறது .. 
அதனால் தான் நிம்மதி பெருமூச்சுவிட முடிகிறது 
..
சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தை துவக்கிவைத்திருக்கிறார் .. கலைஞரைப்போல அல்ல இவர் என்ற சொல் உண்மையாகிறது ..
அண்ணாவை உள்வாங்கிய கலைஞரை படித்த பெரியாரின் பேரன் இவர் .. #கைத்தடியின் நீளமும்,அது நடப்பதற்கு இல்லாமல் வடிவமைத்திருப்பது சூசகமாய் சொல்லவருகிறார் ..
திராவிட தந்த நன்முத்துக்களில் ஒருவராய் நாளைய வரலாற்று நாயகராய் மிளர்வார்..
..
பகையே 
இதுவரை மிதமான தாக்குதலை கண்டிருக்கிறாய்
இனி ஸ்டாலின் எனும் அறம் தரும் வீச்சில் நிலைகுலைந்து போவாய்.. 
தமிழ்நாடு எல்லைசாமியாய் 
பெரியாரின் பாதையில் அண்ணாவும் கலைஞரும் தந்த அறிவில் நடைபோடும் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடும் மக்களும் நன்றிகடன்பட்டிருக்கிறோம் .. 
ஸ்டாலின் கரத்தை விடாது பிடித்துக்கொள்வோம் ..
எல்லைசாமி காத்துக்கொள்ளும்
..
ஆலஞ்சியார்

Saturday, January 22, 2022

தூத்துக்குடி எஸ் சிவசூரியன்
என்ற நாடக நடிகர் 
கலைவாணர் குழுவில் நாடகங்கள் நடித்தவர் ..
கலைஞர் தலைமையில் திருமணம் செய்துக்கொண்டவர் 
பின்னாளில் எம்ஜிஆரோடு சென்றவர் .. நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த சிவசூரியன் மகன் 
இன்று வீட்டுவசதி வாரிய தலைவராகும் 
பூச்சி. எஸ். முருகன் ..
பூச்சி என்ற அடைமொழி 
நடிகர் அசோகன் தந்தது ..
..

Tuesday, January 18, 2022

தமிழ்நாட்டின் தலைநகரை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி திராவிடத் தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் வரலாறு படைத்திருக்கிறார் 
முதலில் அதை கொண்டாடவேண்டும் அதைவிடுத்து தலித் அமைப்புகள் விசிகவிற்கு தரவேண்டுமென குரல் எழுப்பி திசைமாற்ற முயல்கிறார்கள் 
விசிகவிற்கு தரகூடாதென்பதல்ல தர தேவையில்லை என்பது யதார்த்தம் .. 
..
திமுகவைவிட சிறந்த சமூகநீதி பேசும் கட்சி வேறு இல்லை பெருநகரங்களில் செல்வாக்கு உடைய கட்சி நிற்பதுதான் சிறந்ததும்கூட.. தேர்தல் களத்தில் வெற்றி முக்கியம் .. கள யதார்த்தம் புரியாத சில நீலசங்கிகள் ஒப்பாரி வைக்கலாம் கவலைபட தேவையில்லை .. "சிதம்பரம்" சொன்ன சேதி எல்லோரும் அறிவர் ..
..
இம்முறை பெண்களுக்கு அதிகளவில் மாநகரங்கள் ஒதுக்கபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது சென்னையில் பெண் என்பது கூட கூடுதல் மகிழ்ச்சி.. திமுகவில் பிரபலமான தலித் பெண் ஆளுமையில்லையென நாச்சியார்கள் கவலைக்கொள்ள தேவையில்லை திமுக நிறுத்துபவர் யாராக இருந்தாலும் வெளிச்சம் பெறுவார் வெற்றி வாகைசூடுவார்.. 
மன்னரை எதிர்த்து வண்டிக்காரரை நிறுத்த வென்ற இயக்கம் .. 
..
யாரை எங்கே நிறுத்துவதென மாண்பிமை முதலமைச்சர் நன்கு அறிவார் .. திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.. கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சிகளை தருவது வழக்கில்லை..  அதற்கான சூழலும் எழவில்லை 
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் "ஜனநாயக" குரல்கள் அதிகம் ஒலிக்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் "கள்ளமௌனம்" காப்பர் .. 
..
திமுகவிற்கு பாடமெடுப்பதை விடுங்கள்.. சமூகநீதியை நிலைநாட்டுவதில் ஒன்றியத்திற்கு பாடமாய் விளங்குவது தி.மு.கழகம் .. கொண்ட கொள்கையில் பிறழாமல் நடைபோடும் இயக்கம் 
திமுக தலைவர் 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைமையில்  வழிகாட்டுதலோடு நல்லாட்சி தொடரும் .. 
உள்ளாட்சியிலும் 
..
ஆலஞ்சியார்



Sunday, January 16, 2022

பெரியார் அம்பேத்கர் 
இருவரையும் இணைத்து அரசியல் செய்யவேண்டியவர்கள் அம்பேத்கர் போதும் என்ற நிலைபாட்டை எடுத்து பெரியாரை தூற்ற அல்லது தேவையில்லை என்ற நிலைக்கு வந்திருப்பது அவர்களுக்கே தீங்காய் விளையும் ..
..
அம்பேத்கர் 
படித்தவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு அறிஞர் பெருமக்களால் வார்த்தெடுக்கபட்டவர் .. இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாதவர் அதே நேரம் பார்பனர்களோடு சமசரம் செய்துக்கொண்டவர்  அவரே என் கைகளை பிடித்துக்கொண்டு அரசியல் சாசன சட்டத்தை எழுதினார்கள் என சொல்லியிருக்கிறார் .. 15% விழுக்காடு இடஒதுக்கீட்டோடு சமசரம் செய்துக்கொண்டவர்  அரசியல் சாசன திருத்தம் செய்ய முனைந்த போது முடியாமல் போய் பதவியை துறக்க துணிந்தவர் .. பெண்களுக்கு சொத்தில் பங்கென்ற சாசன திருத்தம் நிறைவேறாமலே போனது .. இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை வர்ணகோட்பாடுகளை எதிர்த்து ஒருகட்டத்தில் துவண்டுபோய் 
பௌத்தத்தில் கரையேறியவர்.. பதவியில் இருந்தும் புறசூழலால் சமூக நீதிகளில் சமரசம் செய்து கொண்டு கரைந்து போனவர் ..
..
பெரியார்  
பாசிச பார்பனீயம் நெருங்கமுடியாத நெருப்பாக தன்னை கட்டமைத்து கொண்டவர் .. எந்த பதவியும் வகிக்காமல் அரசியல் சாசன சட்டத்தையே திருத்தம் செய்ய முடிந்ததென்றால் அவர் கொண்ட கொள்கை பயணத்தின் நேர்மை நமக்கு புரியும் .. இன்றைக்கு தமிழகத்தில் தலித் சமூகம் கம்பீரமாக வலம் வருகிறதென்றால் பெரியார் எனும் பெருஞ்சுவரே காரணம் .. வடமாநிலங்களில் இன்றைக்கும் தலித் சமூகம் படும்பாடு கண்முன்னே காட்சியாய் நிற்கிறது .. இங்கும் 1960 களுக்கு முன்பு கூட தெருக்களில் நடமாடமுடியாத சூழல் இருந்ததும் "பாப்பாந்தெருக்கள்"
செருப்புகள் நடமாடமுடியாத நிலை இருந்ததும்  யாவரும் அறிந்தது தான் .. திராவிட இயக்க வளர்ச்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் தமிழக நிலை மாறியது .. இடை/கடைசாதிகாரர்கள் கல்வி வேலைவாய்ப்பில் வேகமாக வர முடிந்தது .. பெரியாரின் சிந்தனை பேச்சு எல்லா சமூகத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதாக இருந்தது .. அநீதி இழக்கபடுபவனுக்கு ஆதரவாக இருந்தது பெண்களுக்காக அதிகம் பேசினார்.. 
..
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 60 களுக்கு முன்பு அம்பேத்கரை யாரென்றே தெரியாது .. திலகரை அறிமுகம் செய்த அளவிற்கு அம்பேத்கர் பாட புத்தங்களில் கூட  இல்லை .. தலித் இயக்கங்கள் வர தொடங்கி பிறகுதான் அம்பேத்கர் பேசுபொருளானார் ..  தலித் இயக்கங்கள் அம்பேத்கரை தலித் தலைவராக முன்னிறுத்தவே முயற்சிக்கின்றன .. அவர் பொதுவானராக அறியபடவேண்டும் .. சிறந்த தலைவர்கள் வரிசையில் அவருக்கு இடமுண்டு
 ..
அம்பேத்கர் போற்றபடவேண்டியவர் அதற்காக பெரியாரை மறுத்தோ தவிர்த்தோ இங்கே தேவை ஏற்படாது .. நவீன தலித்வாதிகள் 1902ல் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த அரசிற்கு பரிந்துணைக்க கூடிய கூட்டத்தில் முழங்கிய அயோத்திதாசரையோ .. லண்டன் வட்டமேசையில் முழங்கிய ரெட்டைமலை சீனிவாசனையோ கூட இந்தளவு உயர்த்தி பிடிக்கவில்லை இவர்கள் நோக்கம் நமக்கு புரியும் பெரியாரை தாழ்த்த வேண்டும் அதுமட்டும்தான் அதுதான் அவர்களுக்கு வழங்கபட்ட வேலை ..  அது நடக்காது 
அம்பேத்கருக்கு சட்டகல்லூரி அமைத்து பல்கலையாக்கியவர்கள் இந்த மண் சமூகநீதி இயல்பாகவே கொண்டது .. சிண்டுமுடியும் வேலைகள் நடவாது ..
..
இங்கே 
பெரியாரே எம் பெருந்தலைவர் 
..
ஆலஞ்சியார்





Thursday, January 13, 2022

Stalin is more dangerous than Karunanidhi.. 
என்ற எச்.ராசா உணர்ந்து பேசியிருக்கிறார்.. 
அமித்சா தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்தவுடன் பார்பன ஊடகங்கள் சந்தித்து என்னபயன் என்பதால் தவிர்த்ததாக பெருமை பேசின.. சந்திப்பு நடந்திருந்தால் கூட என்ன பேசினார்கள் என்பதை உலகறிய வாய்ப்பில்லாது போயிருக்கும் .. காணொளி வாயிலாக மருத்துவக்கல்லூரிகள் திறக்கும் போது மக்களை சாட்சியாக வைத்து எங்களுக்கு நீட் அவசியமில்லை .. தமிழகம் மருத்துவதுறையில் ஒன்றியத்திற்கு வழிகாட்டுகிறது எங்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்க அனுமதிக்கமுடியாதென "கூப்பிட்டுவைத்து கொட்டு வைத்திருக்கிறார் எம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் ..
..
தெளிவாக சொல்லி அடித்தல் .. 
11 முறை ஒன்றிய அரசென புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்கிறார் .. இங்கே அடிமைகளும் அல்லகைகளும் மூர்ச்சையாகிறார்கள் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் மக்களின் குறைகளை தீர்க்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என ஆய்ந்து,  கொண்ட கொள்கை சமரசமற்ற நிலைபாட்டை தொடர்ந்து கடைபிடித்து,  திராவிட இயக்கம் தோற்றுவிக்கபட்டதின் நோக்கம் சிதையாமல் பணியாற்றுகிறார் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் .. உங்கள் கைகளில் தேர்தல் அறிக்கை புத்தகமாக உள்ளது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்கிறார் முதலமைச்சர் .. ஆம் ஒவ்வொன்றும் நிறைவேறும்.. அடுத்த ஆட்சியும் திமுகதான் என "மக்கள் குரல் " கேட்க தொடங்கியிருக்கிறது .. இன்னும் 20 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர்ந்தால் உலகமே வியக்கும் ஆட்சியை தருவார் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பாடமாக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இருக்கும். எச்சைகளின் கனவுகள் பலிக்காது இம்மண்ணிலிருந்து பாசிச பாஜக துடைத்தெறியப்படும் ..அதிமுக எனும் வாடகை காலில் நிற்கிறார்கள் அதுவே "பொய்க்கால் " என்பது தெரியும் போது ஆழ புதைந்து போவார்கள்
..
திராவிட இயக்கம் சமூகநீதி/ இனம் /பண்பாடு/கலாச்சாரம்/கல்வி/ஒடுக்கபட்டஇனத்தின்மீட்சியென உயர்நோக்கோடு செயலாற்றுகிறது .. பகை எதுவென அறிந்து படையோட்டம் நடத்துகிறது .. உழைப்பு நேர்மை நீதிதவறாமை என துடிப்போடு செயலாற்றும் தலைமை .. இன்னும் இருபத்தாண்டுகள் தமிழ்நிலம் காக்கபடும் ..
கவலையில்லை 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்கிறார்
..
#தலைவனிருக்கிறான் 
..
ஆலஞ்சியார்


Wednesday, January 12, 2022

Stalin is more dangerous than Karunanidhi.. 
என்ற எச்.ராசா உணர்ந்து பேசியிருக்கிறார்.. 
அமித்சா தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்தவுடன் பார்பன ஊடகங்கள் சந்தித்து என்னபயன் என்பதால் தவிர்த்ததாக பெருமை பேசின.. சந்திப்பு நடந்திருந்தால் கூட என்ன பேசினார்கள் என்பதை உலகறிய வாய்ப்பில்லாது போயிருக்கும் .. காணொளி வாயிலாக மருத்துவக்கல்லூரிகள் திறக்கும் போது மக்களை சாட்சியாக வைத்து எங்களுக்கு நீட் அவசியமில்லை .. தமிழகம் மருத்துவதுறையில் ஒன்றியத்திற்கு வழிகாட்டுகிறது எங்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்க அனுமதிக்கமுடியாதென "கூப்பிட்டுவைத்து கொட்டு வைத்திருக்கிறார் எம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் ..
..
தெளிவாக சொல்லி அடித்தல் .. 
11 முறை ஒன்றிய அரசென புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்கிறார் .. இங்கே அடிமைகளும் அல்லகைகளும் மூர்ச்சையாகிறார்கள் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் மக்களின் குறைகளை தீர்க்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என ஆய்ந்து,  கொண்ட கொள்கை சமரசமற்ற நிலைபாட்டை தொடர்ந்து கடைபிடித்து,  திராவிட இயக்கம் தோற்றுவிக்கபட்டதின் நோக்கம் சிதையாமல் பணியாற்றுகிறார் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
தேர்தல் வாக்குறுதியை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் .. உங்கள் கைகளில் தேர்தல் அறிக்கை புத்தகமாக உள்ளது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்கிறார் முதலமைச்சர் .. ஆம் ஒவ்வொன்றும் நிறைவேறும்.. அடுத்த ஆட்சியும் திமுகதான் என "மக்கள் குரல் " கேட்க தொடங்கியிருக்கிறது .. இன்னும் 20 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர்ந்தால் உலகமே வியக்கும் ஆட்சியை தருவார் .. ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பாடமாக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இருக்கும். எச்சைகளின் கனவுகள் பலிக்காது இம்மண்ணிலிருந்து பாசிச பாஜக துடைத்தெறியப்படும் ..அதிமுக எனும் வாடகை காலில் நிற்கிறார்கள் அதுவே "பொய்க்கால் " என்பது தெரியும் போது ஆழ புதைந்து போவார்கள்
..
திராவிட இயக்கம் சமூகநீதி/ இனம் /பண்பாடு/கலாச்சாரம்/கல்வி/ஒடுக்கபட்டஇனத்தின்மீட்சியென உயர்நோக்கோடு செயலாற்றுகிறது .. பகை எதுவென அறிந்து படையோட்டம் நடத்துகிறது .. உழைப்பு நேர்மை நீதிதவறாமை என துடிப்போடு செயலாற்று தலைமை .. இன்னும் இருபத்தாண்டுகள் தமிழ்நிலம் காக்கபடும் ..
கவலையில்லை 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்கிறார்
..
#தலைவனிருக்கிறான் 
..
ஆலஞ்சியார்


Saturday, January 8, 2022

சமூகநீதி பயணத்தின் தொடர்ச்சி..
மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்ட மக்கள் நன்றியோடு புகழ்கிறார்கள் .. இந்திய ஒன்றியமே வாழ்த்தையும் நன்றியையும் மேதகு ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது கண்டு திராவிட இயக்கம் சரியான பாதையில் செல்வதோடு சரியானவரை தேர்வு செய்வு செய்திருக்கிறதென அகமகிழ்வு கொள்கிறோம் ..
..
பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தபட்ட மக்களின் உரிமைகளை கேள்விகுறியாக்கி அவர்களை புறக்கணிப்பதோடு அவர்களின் கனவு எதிர்காலத்தை சிதைத்தது .. மருத்துவம் உட்பட உயர்கல்விகளில் அரியவகை ஏழைகளுக்கு குறிப்பாக உயர்சாதியினருக்கு இடஒதுக்கீட்டை அவசரகதியில் கொண்டுவந்து அதை ஒரேநாளில் நடப்பிலாக்கி ₹8லட்சம் வருமானமுள்ளவர்கள் உயர்சாதியில் ஏழைகள் என கணக்கிட்டு வாய்ப்பை வழங்கிய பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து மருத்தவகல்வியில் OBC இடஒதுக்கீட்டை ரத்து செய்து வருடம் 4000 மாணவர்களின் கனவை பாழாக்கியது.. ஏனைை மாநில  அரசுகள் மௌனம் காத்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட தமிழகம் குறிப்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதர பிற்படுத்தபட்டமக்களின் /மாணவர்களின் உரிமையை மீட்டிதந்திருக்கிறது ..
..
இதோடு முடிவதில்லை எமது பயணம் இலக்கு என உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கபட்ட சலுகை இடஒதுக்கீடு சட்டவிரோதம் என குரல் கொடுத்திருக்கிறார் .. நாடாளுமன்றத்தில் இடதுசாரி ரங்கராஜன் ஆதரித்தபோது புலியென கிளர்ந்து அங்கேயே என்ன செய்கிறீர்களென போர்முரசாய் முழங்கியவர் மானமிகு கனிமொழி கருணாநிதி.. சமூகநீதி பயணத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சமசரம் செய்துக்கொள்ளாது என்பதோடு போராடவும் தயங்காதென்பதற்கு இது சிறந்த உதாரணம் .. 
..
நீட்தேர்வு ரத்து செய்யவேண்டுமென்ற அனைத்துகட்சி கூட்டத்தில் பாஜக ஆதரித்து வெளிநடப்பு செய்திருப்பது அவர்கள் இடை,கடைசாதியினருக்கு எதிரானவர்கள் எதிரான கட்சியென்பதை, பாஜக உயர்சாதியினருக்கானதென்பதையும் மக்களுக்கு மீண்டும் உணர்த்தியிருக்கிறார்கள் .. உனக்கு படிப்புவராது என தொடங்கி படிப்பு என்ன செய்ய போறே வரை வந்தவர்கள்  படிப்பை தர மறுப்பதிலிருந்தே  எவ்வளவு ஆபத்தானவர்கள் என விளங்கும் .. 
எல்லாவற்றையும் போராடிதான் பெற்றிருக்கிறோம் என தமிழ்நாடு முதல்வர் சொல்வதில் எவ்வளவு உண்மை .. நீட் தேர்வை ரத்து கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம் .. அதுவரை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்களின் கரம்கோர்ப்போம்
..
ஆலஞ்சியார்