Sunday, October 20, 2019

அறமிழந்த ஊடகங்கள்

இந்த அரசும் ஆட்சியாளர்களும் ஏன் ஊடகங்களும் அறமிழந்து செயல்படுவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது .. 
லக்னோவில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி அண்மையில் கொல்லப்பட்டார். 
இந்த பிரச்சனை குறித்து டிவி சேனல் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரியும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலேஷ் திவாரி படுகொலை, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பேச்சு என பல்வேறு கோணங்களில் பேசினார் மிக தெளிவாக கமலேஷ் திவாரியின் தாயார் இந்த பிரச்சனையை ஏன் திரும்ப திரும்ப இந்து/முஸ்லிம் விவகாரமாக்க முயல்கிறீர்கள் அது ரொம்ப தப்பு என கூறினார்.. கடைசியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தன் எதிர்ப்பை பதிவு செய்தார் குசும் திவாரி அம்மையாரிடமிருந்த
அந்த அறம் செய்தியாளரிடத்தில் இல்லை

இந்த நடப்பை நாம் சாதாரண நிகழ்வாக கருத முடியாது ..திட்டமிட்டு இஸ்லாமிய குரோதத்தை வளர்த்தெடுக்க முயல்வது தெரிகிறது ..
நாட்டின் வளர்ச்சியை பற்றியோ 6 கோடி பேர் இரவில் பசியோடு தூங்க செல்கிறார்கள் என்ற ஆய்வறிக்கை பற்றியோ அரசு கவலைபட்டதாக தெரியவில்லை.. இளஞ்சிறார்கள் "குழந்தை தொழிலாளர்களாக" இருப்பதன் பின்னணியைப் பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை ..
ஆனால் "ஜெய்ராம்" சொல்லாமல் போனால் தேச விரோதி என்று நாடு முழுவதும் பரப்பபடுகிறது ..
..
இந்த நாட்டிற்கு கோவில்கள் தேவை இல்லை கல்விநிலையங்கள் தான் தேவை.. 13% விழுக்காடு ஆரம்ப கல்வியோடு நிறுத்தபடுவதைப்பற்றி ஏதேனும் திட்டமுண்டா இந்த அரசிடம் .. நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமாகி கொண்டிருக்கிறதென அறிந்த "பொருளாதார நிபுணர்கள்" சொல்லியும் கடந்த அரசின் திட்டங்களே காரணமென திசை திருப்புவதால் ஒரு பலனுமில்லை என டாக்டர் மன்மோகன் சிங் சொல்வதை கவனமாக இந்த அரசு செவிமடுக்க வேண்டும் .. முஸ்லிம் விரோத போக்கு மட்டுமே வாக்கு வங்கியாக மாற்ற முடியுமென மக்கள் மனதில் விஷத்தை மெல்ல ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் .. பண்டித ஜவகர்லால் நேரு .. அரசாங்கம் தவிர்த்து வேற பிற அமைப்புகள் ஆயுத பயிற்சி எடுப்பது ஆபத்தானதென்று சொன்னது இப்போது தான் புரிகிறது .. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆயுத பயிற்சியை சின்னஞ்சிறார்களுக்கு கூட அளிப்பது பேராபத்தில் முடியும் .. 
..
இந்த அரசு நிச்சயமாக மனித விரோத அரசாகதான் காண நேரிடுகிறது  ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே பயன் பெற,பலன் பெற, பிற சமூக மக்களிடையே பகையை உண்டாக்கி குளிர்காய்கிற பாசிசத்தின் பிடியில் நாடு .. ஜனநாயகத்தின் பிரதான தூணாக விளங்கவேண்டிய ஊடகங்கள் மக்களிடையே பகை உணர்வை ஊட்டுவதில் குறியாக இருக்கிறது.. நாட்டில் எத்தனையோ விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய  விரோத போக்கை கையிலெடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமென நம்புவதை புகழ்ச்சியோடு மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் "பெருந்தொண்டு " ஆற்றுகின்றன ஊடகங்கள் .. மிசா காலத்தில் கூட அஞ்சாத ஊடகவியலாளர்கள் கண்ட இந்தியா தான் இன்று கேடுகெட்ட அடிமைத்தனத்தில் ஊறிப்போனவர்களை ஊடகத்தில் காண முடிகிறது 
அறமிழந்தது நிற்கிறது ஜனநாயகத்தின் நான்காம் தூண்..
..
ஆலஞ்சியார்

Friday, October 18, 2019

முரசொலி நிலம் விவாதமாக்கியிருக்கிறார் ராமதாஸ் .. பஞ்சமி நிலம் அதை ஆக்ரமித்து முரசொலி கட்டிடம் உள்ளது .. சென்னை போன்ற பெருநகரங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை ஆனால் ஆக்ரமிப்புகள் நீர்வள பகுதிகள் ஏரிகள் என அதிவேகமாக நடந்தேறியது எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தான் .. ஒரு குற்றசாட்டை சொல்கிறவன் யோக்கியனாக இருக்கவேண்டும் .. ஆனால் ராமதாஸ் போன்ற அயோக்கியர்களுக்கு 
அதற்கான தகுதி இல்லை ..
..
வன்னியர் அறக்கட்டளை சார்பில் கட்டபட்ட கல்லூரிக்கு தன் மனைவியின்
(சரஸ்வதி அம்மாள்) பெயரை வைத்தவர் 
அது கூட விளை நிலத்தில் அமைக்கபட்டதாக குற்றசாட்டு எழுந்தது அப்போது இதே ராமதாஸ் தான் அது பயிர்விளையும் நிலமென ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன் என "வீரவசனம் பேசினார் .. அப்போதைய திமுக பொருளாளர் ஆற்காட்டார் 
பதிவு எண் உள்பட வெளியிட்டு அந்த இடம் தற்போதைய நிலைவரை விளைநிலம் தான் என வெளியிட்டபோது இந்த ராமதாஸ் பேச்சையே காணோம்..  சில நாட்கள் கழித்து தனிப்பட்ட முறையில் ஆற்காட்டாரை "செவிடன்" என தாக்கி பேசினார் .. அதற்கு கொஞ்சமும் கோபபடாமல் ஆம் "மிசா"வில் கைதான போது அறைந்ததில் காது சவ்வு கிழிந்ததில் கேட்கும் திறன் குறைந்தது ..ஆனால் ஜெயலலிதா கைது செய்த போது மனைவியை விட்டு கெஞ்சியதை போல இல்லை ..மன்னிப்பு கேட்கும் பழக்கம் எமது இனத்திற்கே இல்லை காலில் விழுவதும் பெற்ற தாயை கூட அசிங்கபடுத்துவதும் ராமதாஸூக்கு வேண்டுமானால் இருக்கலாம் மானகெட்டு காலில் விழவில்லை என பதில் தந்தார் .. 
..
இப்போது கூட தளபதியார்  வழி வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான நிலம் என்பதை உறுதிபடுத்த ஆவண எண் உள்பட வெளியிட்டிருக்கிறார்..  பஞ்சமி நிலம்  என நிரூபித்தால் விலக தயார் என்று சொல்லியிருக்கிறார் .. எதையும்,ஆதாரத்தோடு வெளியிடுவது திமுகவினரின் செயல் ஆனால் இந்த மானங்கெட்ட ராமதாஸ் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை நமக்கென்று தரம் உள்ளது அரசியலில் தரங்கெட்ட அரசியலை வியாபாரமாக்கி சொந்த சமுதாய மக்களையே ஏலம் விடும் அயோக்கியத்தனத்தை கொஞ்சம் கூச்சமின்றி செய்து பிழைப்பு நடத்தும் மக்களால் புறக்கணிக்கபட்டவரோடு அரசியல் செய்ய தேவையில்லை .. அரசியல் ஓழுக்கமற்ற அறமற்ற பொய்யரோடு விவாதிப்பது கூட வீண்வேலை
..
தமிழக அரசியலில் இப்படி ஒருவரை நாடு சந்தித்ததில்லை ராமதாஸ் அரசியலை உற்று கவனித்தால் சுயநலம் மட்டுமே,மிஞ்சும் சாதிவெறியை இளைஞர்களிடத்தில் விதைத்து 
கலவர பூமியாக்கி குளிர்காய்கிறவர் தன் மகனுக்காக தன்னோடு இணைந்து செயலாற்றியவர்களை கூட கழுத்தறுக்க தயங்காதவர் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு வின் இறுதி காலம் மிக மோசமான இருந்ததும் 
அப்போலோவில் இருந்து உடலை பெற மூன்று லட்சம் வரை வீரவன்னியர் பேரவை செலவு செய்ததும் அப்போது பேசபட்டது தான் தன் மகனுக்கு இடைஞ்சலாக குரு இருந்துவிடுவாரோ என பயந்தவர் ராமதாஸ் .. மிக மிக கேவலமான அரசியலை செய்பவர் ராமதாஸ் அரசியலில் இருந்தே துடைத்தெறியபட வேண்டிய "குப்பை" திரு.ராமதாஸ் ..
..
ஆலஞ்சியார்

Monday, October 14, 2019

காந்தி

காந்தி எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்..? தவறாக அச்சடிக்கபட்டதாக கடந்து போக முடியாது கவனகுறைவென்றோ அதிகாரிகளின் அலட்சியமென்றோ திசை திருப்ப முயற்சிக்கலாம் திட்டமிட்டே பரப்பபடுகிறது கோட்சேவை "தேசதந்தை" என சில ஆர்எஸ்எஸ் எடுபிடிகள் சொன்னபோதே செவிட்டில் அறைந்து வழக்கு பதிவு செய்து தேசதுரோகம் என செய்திருந்தால் இன்று காந்தி "தற்கொலை" வரை வந்திருக்காது .. திட்டமிட்டு குறிப்பாக குழந்தைகளின் மனதில் காந்தியைப் பற்றி தவறான கருத்தை விதைக்க முயல்கிறார்கள் நாளை கோட்சேவை புனிதராக்கி பள்ளிக் குழந்தைகளின் மனதில் ஒரு நல்லெணெணத்தை விதைக்க முற்படலாம் .. பாசிசத்தின் திட்டமே வரலாற்றை திரித்து எழுதுவதுதான் இல்லாத ஒன்றை "புராணம்" வேதமென்ற பெயரில் எழுதி மக்களை பிரித்தாள்கிறவர்கள் இன்று இந்திய சுதந்திர வரலாற்றை அதை தொடர்ந்து இந்திய மண்ணின் ஒற்றுமையை சிதைத்து மாற்றி எழுத முயற்சிப்பதின் வெளிபாடுதான் காந்தி தற்கொலை .. விடுதலை போராட்டத்தில் காட்டியும் கூட்டியும் கொடுத்து பகிரங்க மன்னிப்பை எழுதிகொடுத்து சுதந்திரமாய் திரிந்தவர்கள் .. நாட்டை காட்டி கொடுத்தவர்கள் தேசபக்தர்களை போல வேசம்கட்டுகிறார்கள் .. தேசத்தின் விடுதலையில் ஆர்எஸ்எஸ் காரர்கள் யாராவது பங்கேற்றிருக்கிறார்களா என்ற தொடர்ந்து எழுப்பபட்டும் இதுவரை பதில்லை ..அடிமை இந்தியாவில் என்னை புதைக்க விரும்பவில்லை என்ற ஒருவரையாவது காட்டமுடியுமா தேசவிடுதலைக்காக தன் சொத்து முழுவதும் எழுதிக் கொடுத்த ஒரு ஆர்எஸ்எஸ்/பார்பனரையோ காட்டமுடியுமா .. இதெல்லாம் செய்தவர்கள் இன்று தேசதுரோகிகளாய் சித்தரிக்கபட்டதுதான் கொடுமை திட்டமிட்டு இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள்.. வருங்கால சந்ததிகளிடத்தில் "பொய்" செய்திகள் மிக நுணுக்கமாக கொண்டு சேர்த்து இந்திய வரலாற்றையே இந்துராஷ்ரீய வரலாறாக்க முயற்சிக்கிறார்கள் .. ஆனால் மக்கள் மனதில் "மகாத்மா" வாக நிறைந்து நிற்கிறார் காந்தி .. இது போன்ற ஈனச்செயல்களில் ஈடுபடுவோர்களை கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் இதன் பின்னில் யார் இருக்கிறார்களென கண்டறிந்து மக்கள் மன்றத்தின் இத்தகைய "போலிதேசியவாதிகளை" நிறுத்தவேண்டும் .. ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு தீங்கு.. .. குஜராத் அரசின் மீதும் பாடநூலில் இடம்பெற செய்த சக்திகளின் மீதும் கடும் நடவடிக்கை தேவை .. காந்தியார் மீது கடும் கருத்துவேறுபாடு இருந்த போதும் அவரை மதிக்க தவறியதில்லை.. காந்தியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை ஆனால் காந்தி தேசதந்தை என்பதிலோ மகாத்மா என்பதிலோ மாற்று கருத்தே இல்லை நம் தேச தந்தையை கொன்ற கூட்டம் இன்று அதிகாரத்தில் இருப்பதால் இத்தகைய அலுச்சாட்டியங்கள் நடைபெறுகிறது ..இதை இப்படியே விட்டால் காந்தி தேசதுரோகி என்று கூட நாளை பேசபடுவார் .. காந்தி #மகாத்மா .. .. ஆலஞ்சியார்

Monday, October 7, 2019

பெண்கள் மீதான கட்டுபாடுகள்

சவுதி தன் பிடியை தளர்த்துகிறது இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து திசை திரும்புகிறது நிறைய கட்டுபாடுகள் தளர்த்தி பெண்களுக்கு விதிக்கபட்ட ஒழுங்குகளை திரும்ப பெற்றிருக்கிறது உடை விடயத்திலும் தனியாகவோ தன் கூட்டாளியுடனோ தங்க இனி சான்றிதழ் சரிபார்ப்பெல்லாம் தேவையில்லை முதலில் வெளிநாட்டவர்களுக்கு விதிகள் தளர்த்தபட்டு படிபடியாக உள்நாட்டினருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் திருத்தபடும் .. .. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்களில் இனி வெளிநாட்டினர் திருமணம் ஆகாத ஆண் , பெண்கள் ஜோடியாக தங்கலாம் என்று சவுதி நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக 49 நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அடிப்படையில் விஷேச சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு திருமணம் ஆனவர்கள் என்கிற ஆவணம் சமர்பிக்க தேவையில்லை சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்கள் அவர்கள் விரும்பும் உடைகளை அணியலாம்.. .. சிலர் இஸ்லாமிய கோட்பாடுகளை தகர்க்குமென விமர்சிக்கிறார்கள் கூடவே ஒழுக்கம் கெடும் என்ற வார்த்தையை மறக்காமல் பதிவு செய்கிறார்கள் ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே என்பது பொதுவாக எல்லா சமூகத்திலும் இருக்கிறது வேலை செல்லும் பெண்களை விபச்சாரிகள் என்றழைத்த மத குருமார்கள் எல்லாம் இப்போது எதுவும் கதைப்பதில்லை .. பெண்கள் மீதான அடக்குமுறைகள் காலபோக்கில் செயலிழந்து நிற்கும் என்பதற்கு இந்த அறிவிப்பு சான்றாகும் ..இஸ்லாமிய நாடுகளில் எல்லா நாடுகளும் (சவுதியை தவிர) பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது அந்த பட்டியலில் சவுதியும் இணைகிறது அவ்வளவுதான் .. .. சில அடிப்படைவாதிகள் பிற்போக்கு சிந்தனையை தூக்கிபிடித்து முனக தொடங்கியிருக்கிறார்கள் ஷரியத் சட்டத்தில் சொல்லபட்டதை மீற யாருக்கும் உரிமையில்லை .. மதம் கூறும் ஒழுக்க பண்பாடுகள் நேர்வழிக்கானது என்கிறார்கள் மறுப்பதற்கில்லை அது ஒருவழிபாதையாக இருப்பதைதான் சரியில்லை என்கிறோம் .. பெண் தவறு செய்துவிடுவாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றெல்லாம் சில நண்பர்கள் பதிவிடுகிறார்கள் .. அதே தவறை ஆண் செய்கிற போது மௌனம் காக்கிறார்கள் ஒழுக்கம் இருபாலருக்கும் பொருந்தும் என்பதை மறந்து போகிறார்கள் ..கட்டுபாடுகள் இருந்த போதும் இவர்கள் சொல்கிற "தவறுகள்" நிகழாமல் இல்லை ஆனாலும் பெண்கள் மீதான "சுமத்தல்கள்" இவர்களின் கூப்பாடாகவே இருக்கிறது .. ஆணுக்கு பெண் அடிமை என்கிற மனநிலையை தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்தால் இவர்கள் இதுவரை சொல்லிவந்ததெல்லாம் அபத்தம் என புரியும் .. பெண்கள் எல்லாதுறைகளில் மிளிர்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொள்கிற சூழல் அமைந்தாலே போதும் ஆண்களை விட தாங்கள் திறமையால் சாதித்து காட்டுவார்கள் .. .. ஆலஞ்சியார்

Thursday, October 3, 2019

கொடுங்கோன்மை

இந்து கிருஸ்துவ ஜைன,சீக்கிய அகதிகள் பயப்பட தேவையில்லை இஸ்லாமிய அகதிகள் மட்டுமே வெளியேற்றபடுவார்கள் என்று வெளிப்படையாக இன அழிப்பிற்கு வித்திட்டிருக்கிறார் அமித்ஷா ..என நடிகர் சித்தார்த்த் ட்விட் செய்திருக்கிறார்.. இதை எந்த கட்சிகளும் இதுவரை கண்டிக்கவில்லை மிக தெளிவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இந்த அரசு செயல்படுமென அறிவித்திருக்கிறார் இஸ்லாம் அல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்பதே அதன் சுருக்கம் .. .. முதலில் இந்தியாவிற்கு நுழைந்த அகதிகளை வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தே சர்வதேச அரங்கில் இந்தியாவின் முகத்தை மாற்றிவிடும் இதுவரை இந்தியாவின் மீதான மதிப்பு இவரின் பேச்சால் தரந்தாழ்ந்துவிடும் .. பிற சமூக மதத்தை சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளும் போது இஸ்லாமிய அகதிகளை மட்டும் வெளியேற்றபடுவார்கள் என்பதிலிருந்தே எவ்வளவு வன்மத்தோடு இந்த ஆட்சியாளர்கள் இருப்பதை உணர்த்துகிறது .. ஆனால் வரலாறு வேறுவிதமாக பதிவு செய்திருப்பதை அறியாமல் பேசுகிறார் .. இஸ்லாத்தை அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் இருக்குமிடம் தெரியாது போனதாகதான் வரலாறு ..இதுபோன்ற செயல்களால் இஸ்லாத்தை நோக்கி நிறையபேர் வருவதற்கே வழிவகுக்கும் இதனால் எதிர்மறையாக இஸ்லாம் வளரும் .. .. இஸ்லாத்திற்கெதிராக குறிப்பிட்ட பிரிவினரை (பார்ப்பனர் தவிர்த்து) ஏவிவிடுவார்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு நம் இளைஞர்கள் சிறை வழக்கென சீரழிவார்கள்.. ஒரு சமுகத்தின் மீதான தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது மனித மாண்புகள் சிதைத்து மனிதநேயமற்ற கொடுங்கோலர்களின் ஆட்சியை போல நடத்துவது இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தும் "இந்துத்துவா" கொள்கை பெரும்பான்மை இந்துக்களாலேயே வெறுக்கபடுகிற ஒன்றாய் இருக்கிறது ..மதவெறிபிடித்த செயல்களை யாரும் ஏற்பதில்லை பாகிஸ்தானை காட்டி பயமுறுத்துதல் சமீபகாலமாக பலிக்காமல் போகிறதென்பதே உண்மை .. பாகிஸ்தானை பலம்பொருந்தியதாக சித்தரிப்பதால் "இந்துத்துவா " வெறியேற்ற பயன்படுமே தவிர இந்தியாவின் பலத்தை கொச்சைபடுத்துவதாகதான் அமையும்.. அமித்ஷாவின் இந்த பேச்சு இஸ்லாமிய மக்களுக்கெதிராக பிற சிறுபான்மையினரை ஒருங்கிணைக்க உதவும் ஆனால் அதே கத்தி பிறகு அவர்களையும் குத்தி குதரும் .. பாஜக ஆர்எஸ்எஸின் நோக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மதகலவரம் வரவேண்டும் என்பதே .. ஆனால் விழிப்புணர்வு பெற்ற கல்வியறிவு பெற்றவர்களாய் இந்திய மக்கள் இருக்கிறார்கள் ... இவர்களது எண்ணம் ஈடேறாது.. .. இன்னும் சிலகாலம் பாசிசத்தின் கையில் நாடு இருந்தால் துண்டாகும் .. மக்கள் தன்னெழுச்சியாய் இந்த அரசை அகற்ற முன்வருவார்கள் இந்திய பன்முகதன்மைக்கெதிராக ..ஒரு குறிப்பிட்ட இன மத மொழிக்கு எதிராக செயல்பட்டால் காலம் நல்ல படிப்பினையையே தரும் .. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. என்றான் வள்ளுவன் நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும் #கொடுங்கோன்மை .. ஆலஞ்சியார்

Tuesday, October 1, 2019

தமிழ்க்குடி

கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம் அல்ல பாரத நாகரீகம் பாண்டியராஜன் .. கீழடி தமிழ் கலாச்சாரமல்ல .. இந்து கலாச்சாரம் ..பொன்னர் .. ஒரே குரலில் ஒலிக்கிறார்கள் பின்னால் இருந்து இயக்குவதும் எழுதிகொடுத்த திரைகதையை வார்த்தை பிசகாமல் பேசுவதும் புரிகிறது .. அதிமுக அமைச்சர்களுக்கோ அல்லது அதிமுக தலைவர்களுக்கு இப்படி பேசவராது ஆனால் மாபா.பாண்டியராஜன் பேசுகிறாரென்றால் அவர் யார் எப்படி அதிமுகவிற்கு வந்தார் அவரால் இவ்வளவு சீக்கிரம் அமைச்சர் பதவியை அடைய முடிந்ததென்றால் அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது .. .. இந்து /பாரத நாகரீகம் என்ற சொல்லே தவறு அப்படியெனில் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி இருந்திருக்கவேண்டும் அது தமிழாக இருந்திருக்கவேண்டும் இந்து நாகரீகமெனில் எந்தவொரு அடையாளமாவது இருந்திருக்கும் கோவில்களோ வழிபாட்டுமுறைகளோ அதற்காக சுவடுகளோ இருந்திருக்கும்.. எதுவுமே கிடைக்காத போது எங்கே தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு இந்திய கலாச்சாரத்தை சேதபடுத்திவிடும் அல்லது இதுவரை கட்டிவைத்த பண்பாட்டு பொய்களெல்லாம் உண்மையில்லை என்றாகிவிடும் என அஞ்சி சில விசுவாசமான அடிமைகளை கொண்டு கூர்தீட்டுகிறார்கள் .. .. தமிழன் தொன்மையானவன் என்ற உண்மை அவர்களை சுட்டெரிக்கிறது ஆரிய கலாச்சாரத்தை இந்து கலாச்சாரமாக மாற்றி அதுவே இந்திய கலாச்சாரமென நம்பவைக்க சூழல் அமைந்திருக்க வேளையில் அதை சுக்குநூறாக்கியது கீழடி அகழ்வாய்வு முடிவுகள் இதுவரை கட்டிவைத்தது தகர்ந்ததால் வேறு வழியின்றி கீழடிக்கு மத சாயம் பூசி .. பாரத கலாச்சாரமென பரப்ப முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களின் பொய் புராணங்களும் நம்பிக்கை என்ற பெயரில் நம்பவைத்த மூடங்களும் தகர்ந்து தமிழர்களின் வாழ்வியல் மிக தெளிவாக மதங்களற்ற.. சாதியற்ற பெரும் சமூகமாய் வாழ்ந்த வரலாறு உலகுக்கு உணர்த்தியிருக்கும் வணிகத்திலும் நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது ஒவ்வொரு தமிழனும் மதம் கடந்து சாதி மறந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும் ஆம் உன் வரலாறு இவ்வுலகின் தொண்மையானதென்ற உண்மை நிரூபிக்கபட்டிருக்கிறது .. ஏனோ தமிழர்கள் மௌனமாய் இருக்கிறார்கள் .. பிரதமரின் கனியன் பூங்கன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பெருமை பேசுகிறார் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்து தமிழை பெருமைபடுத்துங்கள் என திமுக தலைவர் திரு.தளபதி.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார் ..இது தமிழர்களின் உள்ளத்தின் எழும் ஆசை இது ஒட்டுமொத்த கோரிக்கை ..இதை மத்திய அரசு சாதி மதமற்ற தமிழ் பெருங்குடியை வரலாறு உணர்த்தும் உண்மையை தொல்பொருள் ஆய்வு தரும் சேதியை உலகமே வியந்து நிற்கும் தமிழனின் ஆற்றலை அறிவை ஏற்று மரியாதை செய்திட வேண்டும்.. தமிழை ஆட்சி மொழியாக்கி வரலாறுபடைக்கவேண்டும்.. .. தமிழன் மூத்த பெருங்குடி.. .. ஆலஞ்சியார்