இந்த அரசும் ஆட்சியாளர்களும் ஏன் ஊடகங்களும் அறமிழந்து செயல்படுவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது ..
லக்னோவில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி அண்மையில் கொல்லப்பட்டார்.
இந்த பிரச்சனை குறித்து டிவி சேனல் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரியும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலேஷ் திவாரி படுகொலை, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பேச்சு என பல்வேறு கோணங்களில் பேசினார் மிக தெளிவாக கமலேஷ் திவாரியின் தாயார் இந்த பிரச்சனையை ஏன் திரும்ப திரும்ப இந்து/முஸ்லிம் விவகாரமாக்க முயல்கிறீர்கள் அது ரொம்ப தப்பு என கூறினார்.. கடைசியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தன் எதிர்ப்பை பதிவு செய்தார் குசும் திவாரி அம்மையாரிடமிருந்த
அந்த அறம் செய்தியாளரிடத்தில் இல்லை
இந்த நடப்பை நாம் சாதாரண நிகழ்வாக கருத முடியாது ..திட்டமிட்டு இஸ்லாமிய குரோதத்தை வளர்த்தெடுக்க முயல்வது தெரிகிறது ..
நாட்டின் வளர்ச்சியை பற்றியோ 6 கோடி பேர் இரவில் பசியோடு தூங்க செல்கிறார்கள் என்ற ஆய்வறிக்கை பற்றியோ அரசு கவலைபட்டதாக தெரியவில்லை.. இளஞ்சிறார்கள் "குழந்தை தொழிலாளர்களாக" இருப்பதன் பின்னணியைப் பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை ..
ஆனால் "ஜெய்ராம்" சொல்லாமல் போனால் தேச விரோதி என்று நாடு முழுவதும் பரப்பபடுகிறது ..
..
இந்த நாட்டிற்கு கோவில்கள் தேவை இல்லை கல்விநிலையங்கள் தான் தேவை.. 13% விழுக்காடு ஆரம்ப கல்வியோடு நிறுத்தபடுவதைப்பற்றி ஏதேனும் திட்டமுண்டா இந்த அரசிடம் .. நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமாகி கொண்டிருக்கிறதென அறிந்த "பொருளாதார நிபுணர்கள்" சொல்லியும் கடந்த அரசின் திட்டங்களே காரணமென திசை திருப்புவதால் ஒரு பலனுமில்லை என டாக்டர் மன்மோகன் சிங் சொல்வதை கவனமாக இந்த அரசு செவிமடுக்க வேண்டும் .. முஸ்லிம் விரோத போக்கு மட்டுமே வாக்கு வங்கியாக மாற்ற முடியுமென மக்கள் மனதில் விஷத்தை மெல்ல ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் .. பண்டித ஜவகர்லால் நேரு .. அரசாங்கம் தவிர்த்து வேற பிற அமைப்புகள் ஆயுத பயிற்சி எடுப்பது ஆபத்தானதென்று சொன்னது இப்போது தான் புரிகிறது .. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆயுத பயிற்சியை சின்னஞ்சிறார்களுக்கு கூட அளிப்பது பேராபத்தில் முடியும் ..
..
இந்த அரசு நிச்சயமாக மனித விரோத அரசாகதான் காண நேரிடுகிறது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே பயன் பெற,பலன் பெற, பிற சமூக மக்களிடையே பகையை உண்டாக்கி குளிர்காய்கிற பாசிசத்தின் பிடியில் நாடு .. ஜனநாயகத்தின் பிரதான தூணாக விளங்கவேண்டிய ஊடகங்கள் மக்களிடையே பகை உணர்வை ஊட்டுவதில் குறியாக இருக்கிறது.. நாட்டில் எத்தனையோ விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய விரோத போக்கை கையிலெடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமென நம்புவதை புகழ்ச்சியோடு மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் "பெருந்தொண்டு " ஆற்றுகின்றன ஊடகங்கள் .. மிசா காலத்தில் கூட அஞ்சாத ஊடகவியலாளர்கள் கண்ட இந்தியா தான் இன்று கேடுகெட்ட அடிமைத்தனத்தில் ஊறிப்போனவர்களை ஊடகத்தில் காண முடிகிறது
அறமிழந்தது நிற்கிறது ஜனநாயகத்தின் நான்காம் தூண்..
..
ஆலஞ்சியார்