Monday, April 2, 2018

திராவிடத்தின் நன்முத்து

ஆ.ராசா.. மூன்று நேர்காணல்கள்.. புதிய தலைமுறை நியூஸ்18 தந்தி .. மிகச்சிறந்த தெளிவோடு கூடிய பதில்கள் குணா நேர்மையான ஊடகவிலாளரோடும் பாண்டே எனும் ஊடக அறமற்றவரோடும் பதலிளித்த விதமும் .. எந்த கேள்விக்கும் தான் கொள்கையிலிருந்து பிறழாமல் சொன்ன விதம் மிக சிறந்த அரசியல்வாதி...தகுதிவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருத வேண்டியிருக்கிறது.. .. மனோதிடம் கொண்ட கொள்கையில் உறுதி அறம் வெல்லுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை .தலைமை நம்மை கைவிடாது என்று கடைசி வரை தெளிவாக நின்று வென்று வந்தவர் .. கட்சியின் கொள்கைப்பரப்பு செயலராக மிக சாதூர்யமான கேள்விகளுக்கெல்லாம் அழகான நடையில் ஆணித்தரமாக பதிலை தந்து தன்னை திறமையாளராக சிறந்த ஆளுமையாக நிலைநிறுத்தியது மெச்சதகுந்தது.. .. ஆண்டிமுத்து ராசா .. திமுகவிற்கு கிடைத்த பொக்கிஷம் திறமையானவர்களை இனம் கண்டு எங்கள் திராவிட கிழவன் படையேற்றிவிடுவார்.. பகைவர் குலை நடுக்க வீறுக்கொண்டு எழும் சிம்மமாய் பாய்வர்.. எத்தனை இடைஞ்சல்கள் .. மிக மிக சூழ்ச்சியோடு பகைவர்களி பின்னிய வலையை .. அறுத்தெறிந்து வெளியே வரும் போது பகைவர் தலையையே கொண்டு வருவார்கள்.. எல்லாருக்கும் கொள்கை பிடிக்கும் செயல்படுவதில் ஆர்வம் கூட வரும் சிறப்பாக பணி செய்வர் ..ஆனாலும் பழிவரும் வேளையிலும் துவண்டுவிடாமல் எதிரிகளை துளைக்கும் கூர்வாளாய் .. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரம் பெற்ற அமைப்பைகளையும் ..தன் திறமையான வாதத்தால் தவறே நடக்கவில்லையென வாதாட துணிவு மட்டும் போதாது நெஞ்சுரம் மட்டும் போதாது நேர்மை வேண்டும் ..அறம் வெல்லுமென்ற அசைக்கமுடியாத உறுதி வேண்டும்.. .. வலிமையானவர்களை கண்டெடுத்து பயிற்சியளித்து .. பண்படுத்தி.. துன்பம் வரும்வேளையிலும் துவண்டுவிடாமல் எழுந்துநிற்கும் களம் காணும் வித்தையை பயிற்றுவித்து செம்மைப்படுத்தி நம்மிடையையே தந்திருக்கிறார் கலைஞர்.. இன்னும் நிறைய மின்னும் வைரங்கள் உண்டு எம்மிடம் .. அறிவின் தெம்பில் பேராசான் பெரியாரின் நிழலில்.. கலைஞரெனும் பெருமகனின் பயிற்சியில் பண்பட்டு செயல்படும் பல்லாயிரம் நன்முத்துகள் உண்டு.. எதிரிகள் கலங்கடிக்க .. சிதறி ஓடவைக்க .. எம்மண்ணை இனத்தை மொழியை காக்க.. .. திரு.ராசா திராவிட இயக்கத்தின் இரத்தினக்கல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அவருக்கான உயரம் நிச்சயம் கிடைக்கும் காலம் தகுதியானவர்களை தந்துக்கொண்டே இருக்கும் அது திராவிடத்தின் சிறப்பு.. ராசா.. திராவிடம் தந்த நன்முத்து வீரியமிக்கமிக்க விதை .. எதிர்கால நம்பிக்கை .. .. Aalanci Spm

No comments:

Post a Comment