Saturday, April 14, 2018

அம்பேத்கர்

அம்பேத்கர்.. பார்பனன் படித்தவன்தானே தவிர அறிவாளி இல்லை என்பதை உலக்கு உணர்த்தியவர்..சிறந்த படிப்பாளி என்பதை தாண்டி யாருமே நெருங்க முடியாத அறிவாற்றல் கொண்டவர் போராடும் குணம்.. சமூக விடுதலை அடையாமல் நாட்டின் விடுதலை பயனற்று போகுமென்பதில் பெரியாரின் கருத்தை கொண்ட பண்பாளர்.. இந்துமதத்தை மிக கடுமையாக விமர்சித்தார்.. இந்துமதம் இந்தியர்களுக்கானதல்ல அது பிராமணீய மதம் என்றார் மதமும் தீண்டாமையும் பிரிக்க முடியாதென்றார்.. மனு ஸ்ம்ரிதியை தூக்கிப்பிடிக்கிற பிராமணர்கள் அது என்ன, எதை, எப்படி, ஏன், சொல்கிறது என்றோ விளக்க மாட்டார்கள் விளக்கினால் உண்மை புரிந்துவிடுமென்றார் ஒருவன் தன்னை மேலானவனாக எண்ணினால் அவனை விட முட்டாள் இல்லை.. .. சாதி அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாதென்றவர் .. இந்திய அரசியல் சாசனத்தை எழுதியபோது சுதந்திரமாக எழுத விடாமல் என் கையை பிடித்துக்கொண்டு எழுதினார்கள் என்றார்.. தலித் இடஒதுக்கீட்டை அறிவித்த போது .. காந்தி இந்துக்கள் ஒன்றுமைக்கு அது உதவாதென்று, ஊறுவிளைவிக்குமென உண்ணாவிரதமிருந்தார்.. காந்தி துணைவியார் அம்பேத்கரை சந்தித்து காந்தியை காப்பாற்ற வேண்டுமென்றார்.. மிக பெரியளவில் மன அழுத்ததிற்கு உள்ளானார்.. தெற்கிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.. ஒரு உயிருக்காக 6 கோடி மக்களை பலியிடாதீர்கள் .. காவு கொடுக்காதீர்கள் என்று பெரியார் தந்தி அனுப்பினார்.. இன்றைக்கு தலித் இடஒதுக்கீடு இருப்பதற்கும் .. தொடர்ந்து பிற்படுத்தபட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வருவதற்கும் காரணமாக இருந்தது அந்த நிகழ்வு... பெண்களுக்கு சொத்தில் உரிமையை பார்பன சக்திகள் எதிர்த்து நாடாளுமன்றத்தில் தோற்கடித்தார்கள் .. பெண்களுக்கு சொத்தில் உரிமையை வழங்கினால் ஆண்களை மதிக்கமாட்டார்களென பார்பனர்கள் கரைந்தார்கள்.. அப்போது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.. பிறகு பெண்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கபட்டாலும் (வேலைவாய்ப்பு கல்வி) சொத்தில் வழங்கபடவில்லை அதை முதன்முதலில் நடைமுறை படுத்தி மாநிலம் தமிழகம் தான் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது.. தொலைநோக்கோடு கூடிய சிந்தனை .. சமுக ஏற்றதாழ்விற்கெதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர்.. அறிவே தெய்வம் என்ற கடவுளை மறுத்த பேரறிவாளர்.. இந்துமதத்தில் சுய அறிவென்பதே இல்லையென்று நம்பினார்.. எதையும் அறிவோடு சேர்த்து கூற இயலாதென்றார்.. இந்துவாக மரிக்கவிரும்பவில்லையென்றவர்.. .. அண்ணல் அம்பேத்கர் மிக சிறந்த தலைவர் நாடு கண்ட சிறந்த அறிவுடையோரில் முதன்மையானவர் .. தான் சார்ந்த சமூக மக்களுக்காக பாடுபட்டவரென குறுகிய வட்டத்திற்குள் அடைக்க பார்க்கிற பாசிசத்தை மீறி போற்றபடவேண்டிய தலைவர்..அண்ணல் என அழைக்க தகுதியான ஒரே தலைவர்.. .. வாழ்க அண்ணல் அம்பேத்கர் #வீரவணக்கம் .. Aalanci Spm

No comments:

Post a Comment