Saturday, April 14, 2018
அம்பேத்கர்
அம்பேத்கர்..
பார்பனன் படித்தவன்தானே தவிர அறிவாளி இல்லை என்பதை உலக்கு உணர்த்தியவர்..சிறந்த படிப்பாளி என்பதை தாண்டி யாருமே நெருங்க முடியாத அறிவாற்றல் கொண்டவர் போராடும் குணம்.. சமூக விடுதலை அடையாமல் நாட்டின் விடுதலை பயனற்று போகுமென்பதில் பெரியாரின் கருத்தை கொண்ட பண்பாளர்..
இந்துமதத்தை மிக கடுமையாக விமர்சித்தார்..
இந்துமதம் இந்தியர்களுக்கானதல்ல அது பிராமணீய மதம் என்றார் மதமும் தீண்டாமையும் பிரிக்க முடியாதென்றார்..
மனு ஸ்ம்ரிதியை தூக்கிப்பிடிக்கிற பிராமணர்கள் அது என்ன, எதை, எப்படி, ஏன், சொல்கிறது என்றோ விளக்க மாட்டார்கள் விளக்கினால் உண்மை புரிந்துவிடுமென்றார்
ஒருவன் தன்னை மேலானவனாக எண்ணினால் அவனை விட முட்டாள் இல்லை..
..
சாதி அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாதென்றவர் ..
இந்திய அரசியல் சாசனத்தை எழுதியபோது சுதந்திரமாக எழுத விடாமல் என் கையை பிடித்துக்கொண்டு எழுதினார்கள் என்றார்..
தலித் இடஒதுக்கீட்டை அறிவித்த போது .. காந்தி இந்துக்கள் ஒன்றுமைக்கு அது உதவாதென்று, ஊறுவிளைவிக்குமென உண்ணாவிரதமிருந்தார்.. காந்தி துணைவியார் அம்பேத்கரை சந்தித்து காந்தியை காப்பாற்ற வேண்டுமென்றார்.. மிக பெரியளவில் மன அழுத்ததிற்கு உள்ளானார்.. தெற்கிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.. ஒரு உயிருக்காக 6 கோடி மக்களை பலியிடாதீர்கள் .. காவு கொடுக்காதீர்கள் என்று பெரியார் தந்தி அனுப்பினார்.. இன்றைக்கு தலித் இடஒதுக்கீடு இருப்பதற்கும் .. தொடர்ந்து பிற்படுத்தபட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வருவதற்கும் காரணமாக இருந்தது அந்த நிகழ்வு...
பெண்களுக்கு சொத்தில் உரிமையை பார்பன சக்திகள் எதிர்த்து நாடாளுமன்றத்தில் தோற்கடித்தார்கள் .. பெண்களுக்கு சொத்தில் உரிமையை வழங்கினால் ஆண்களை மதிக்கமாட்டார்களென பார்பனர்கள் கரைந்தார்கள்.. அப்போது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.. பிறகு பெண்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கபட்டாலும் (வேலைவாய்ப்பு கல்வி) சொத்தில் வழங்கபடவில்லை அதை முதன்முதலில் நடைமுறை படுத்தி மாநிலம் தமிழகம் தான் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது..
தொலைநோக்கோடு கூடிய சிந்தனை .. சமுக ஏற்றதாழ்விற்கெதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர்.. அறிவே தெய்வம் என்ற கடவுளை மறுத்த பேரறிவாளர்.. இந்துமதத்தில் சுய அறிவென்பதே இல்லையென்று நம்பினார்.. எதையும் அறிவோடு சேர்த்து கூற இயலாதென்றார்.. இந்துவாக மரிக்கவிரும்பவில்லையென்றவர்..
..
அண்ணல் அம்பேத்கர் மிக சிறந்த தலைவர் நாடு கண்ட சிறந்த அறிவுடையோரில் முதன்மையானவர் .. தான் சார்ந்த சமூக மக்களுக்காக பாடுபட்டவரென குறுகிய வட்டத்திற்குள் அடைக்க பார்க்கிற பாசிசத்தை மீறி போற்றபடவேண்டிய தலைவர்..அண்ணல் என அழைக்க தகுதியான ஒரே தலைவர்..
..
வாழ்க அண்ணல் அம்பேத்கர்
#வீரவணக்கம்
..
Aalanci Spm
Friday, April 6, 2018
ஏன் இந்த தயக்கம்
நான் இங்கே நானாய் இல்லையென்றா
நான் எப்போது நானாய் இருந்தேன்..
பொய் எனும் முகமூடிதரித்து
நயவஞ்சக சொல்லெடுத்து
நாவில் தேனோடு விசம் சேர்த்து..
உதடு சிரிக்க..
உச்சரித்ததெல்லாம்
நான் சுயமாய் செய்ததில்லை
..
பொய்யில் கட்டி வைத்த சுவனத்தை
நம்ப சொல்லி மதமென்றும் பிரிவென்றும்
நாமே உயர்ந்தவனென்றும்..
நம்மில் தாழே..
உள்ளவனெல்லாம் மனுஷனாய் பிறப்பதற்கே தகுதியில்லையென நம்ப வைத்து..
கூர்தீட்டி .. முனை மழுங்காமல் எம்மை காத்து வருவது யார்
..
அப்பனும் அம்மையும் சொன்னதை நம்பி
அப்பனின் திமிரில் விளைந்ததெல்லாம் நன்மையென எண்ணி..
சாதி பாசத்தை என்னையும் அறியாமல் என்னுள் விதைத்தது யார் ..
பத்துவயது வரை அண்ணன் தம்பியாய் தெரிந்தவனை
பங்காளியென பெயர்த்தது யார்
கூட நடந்த கூட்டாளியை
கேட்டிற்கு வெளியே நிறுத்திவைத்து
அதெல்லாம் வெளியே வச்சுக்கு வீட்டுக்கு கொண்டுவராதே என்ற போதே..
நான் என்னை இழந்துவிட்டேனே ..
..
அம்மாவிடம் அய்யனிடம்
அண்ணனிடம் அக்காளிடம்
சொன்ன பொய்தான்..
அரவணைத்து வந்தவளோடும்.
அவள் அணைப்பில் விளைந்த முத்துக்களோடும் .. சொன்னது
என்ன விதைத்தார்களோ அதுதானே விளையும்...
..
பொய் பொய்..
எல்லாம் பொய்
உதடு சிரிக்கிறது
உள்ளத்தில் கொலைவெறி
எப்படி உயர்ந்தானென்று ..
வெளியில் வந்தேன்..
விவரமாய் பேசினர்..
அடுக்கடுக்காய் பேசியதெல்லாம்
உண்மையில்லை..
கல்வியில்.. கலையில்..
கலாச்சாரமென்ற திணிப்பில் ..
வேதத்தில்.. வியாக்கானத்தில்
செப்பிய வித்தைகளில்..
வீரமாய் பேசி வெறியை வளர்த்ததில்
அரசியலில் ஆன்மீகமெனும் உளறலில்
ஊகூம்....
ஆன்றோர் சபையில்
அறிவின் நிழலை
தேடி தேடி கலைத்ததுதான் மிச்சம் ..
பேசும் போதினித்தது
பேசிய பிறகுதான் தெரிந்தது
பேசியதெல்லாம் மூளைச்சலவையென..
..
நான் சொல்வது சரியென்பவன்..
முட்டாள்..
நான் சரியென்பவன்
அயோக்கியன்..
யார் சொன்னாலும்
அறிவுக்கொண்டு பாரென்பவனே..
சிறந்த வழிகாட்டி..
..
தேடுகிறேன்.. தேடிக்கொண்டே இருக்கிறேன்..
நல்லவனை.. நா நயமின்றி.. நாணயமாய்
செயல்படுவோனை..
சொன்னதை சிந்தி ஏற்பது அறிவின் தேடலில் என்பவனை..
எங்கிருந்தும் வரலாம்
வரும் போது சொல்கிறேன்..
..
அதுவரை பொய் சூழ வாழ்கிறேன்..
நானே பொய்..
நான் சரியென்பதும் பொய்....
..
ஆலஞ்சியார்
Tuesday, April 3, 2018
வலிக்கிறதா.. வலிக்கவேண்டும் சேகர்
மோடியிடம் நைசாக பேசவேண்டும் அமைச்சர் ஜெயகுமார்.. இதை சொல்ல வெட்கமாக இல்லை.. நாம் கேட்பது பிச்சை அல்ல அல்லது திருட்டுத்தனமாக செய்ய சொல்லவில்லை .. மாறாக உரிமையை கேட்கிறோம்.. காவிரியில் எங்களுக்கான பங்கை திருடிக்கொள்ளும் கர்நாடகவையும்.. அதற்கு துணை போகும் மோடி அரசாங்கத்தையும் தான் நாம் கேட்கிறோம்.. உரிமையை கேட்பதற்கு எதற்கு தயைகூர்ந்தென சொல்லவேண்டும் நைசாக பேசி எதை சாதிக்க முடியும் .. உங்களால் எதையுமே சாதிக்க ஏன் அசைக்க கூட முடியாது காரணம் தகுதியற்றவர்களை அதிகாரத்தில் வைத்திருப்பதே ..அதுவும் நொடியில் கலைக்கவேண்டிய அரசை இன்னமும் தொடர விட்டிருப்பதே தமிழகத்தில் பார்பனன் நலன் காக்கபடவேண்டும்.. இருக்கிற உயர்பதவிகளில் பாப்பானை எந்த எதிர்ப்பின்றியும் அமர்த்த இதைவிட நல்ல வாய்ப்பு இனி எக்காலத்திலும் கிடைக்காதென்பதால் தான் .. நமக்கு கிடைத்த அடிமைகளை வைத்து சாதித்துக்கொள்கிறார்கள் அதனால் தமிழகத்தின் உரிமைகளை பறித்தால் கூட இந்த அடிமைகள்.. செய்த குற்றங்கள் கொள்ளைகளுக்கு பயந்து எங்கே காலம் பூராவும் கழி திங்க வேண்டுமோ என அஞ்சி மோடியின் காலை நக்கிக்கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை நம்பி எந்த பலனுமில்லை..
**************************
//எஸ்.வி.சேகர் மிகவும் தரகுறைவாக பேராசிரியர் சுப.வீ அவர்களையும் தமிழன் பிரசன்னாலையும் பேசியிருக்கிறார்..
குறை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் பீ திங்கிற பய கருத்து சொல்வதெல்லாம் கூடாது திமுகவிற்கு இவர்களால் கெட்டபெயராம்.. இவரின் கோபம் நமக்கு புரிகிறது அயோக்கியனென்று மோடியை சொன்னதால் கோபமாம்..
காலங்காலமாய் பாப்பானை மிதித்தே வைத்திருப்பதால் கொஞ்சம் திமிறி எழ நினைக்கிற போது செவிட்டிலேயே அறைவதைப்போல தங்களின் வாத திறமையால் திக்குமுக்காட செய்வதால் கோபம் வரதான் செய்யும் அதுவும் ராமராஜ்ஜியத்தை தோலுறித்து காட்டியதில் சம்பூகவதம் என்னவென்று அறியாமல் இருந்தவர்களுக்கு ராமன் யார் அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்..என்று தெளிவாக விளக்கியதும் தற்கொலை செய்துக்கொண்டவனென்ற உண்மையை அறியாதவர்களும் அறியும்வண்ணம் புரிந்து தெளிகிற மாதிரி எடுத்து சொன்னால் கோபம் வரதான் செய்யும்
ராமனை கோழையாக்கி.. அவன் புருஷனே அல்ல.. சந்தேகபிராணி அதைவிட மனோதிடமில்லாதவன் என்றெல்லாம் பேசினால் ..யாராவது ராமராஜ்ஜியம் கேட்பார்களா .. பாவம் கோபம் வரதானே செய்யும்.. இந்த மண்ணில் பெரியாரை மீறிய எதுவும் நடக்காது.. தமிழைப் படித்தவனெல்லாம் சாமியாரா போனான் என்பார் பெரியார்.. அது ஆண்டாள் விடயத்தில் காமத்தில் தொய்த்தெடுத்த பாசுரங்களை .. சே இவ்வளவுதானா என கேட்கவைத்தது.. இதைவிட நல்லவாய்ப்பு வாய்க்காது என்பதால் எதையாவது செய்து நடத்திகாட்டி .. கலவரம் மதவெறி சாதிவெறியென பேசி உசுப்பேற்றி குளிர்காயலாமென்றால் அறிவுக்கொண்டு அதை வீழ்த்தி.. வீழ்த்துவதோடு இல்லாமல் உண்மை முகத்தை வெளிகொணர்ந்து .. எல்லோரும் நகைக்கும்படி செய்கிறார்களே என்ற கடும்கோபம்.. பார்பன கும்பலை உளறவைத்திருக்கிறது தனிநபர் தாக்குதலை நடத்த வைக்கிறது..
..
இன்னும் கூட கொடூரமாக பேசுவார்கள் அவர்களின் ஆற்றாமை அது.. இந்தியாவையே அலட்டுகிற நம்மால் இங்கே சிறு ஆணியை கூட பிடுங்கமுடியவில்லையே என்கிற கோபம் .. என்ன செய்தாலும் நகைப்பாக்கி நம்மையே கேலி செய்கிறார்களே என்கிற கோபம் .. உண்மை நம் பக்கமில்லையே ..எதையும் அறிவோடு விளக்கி பிடிங்கியெறிந்துவிடுகிறார்களே என்கிற கோபம் ..பாப்பான்களின் சொல்லில் தெரிகிறது.. அதே பாணியில் நாமும் பதில் தரலாம் தரமுடியும் எனினும் .. கண்ணியம் காப்பது நமது பண்பாடென்பதால் இந்த அறிவின் வறட்சிகளை.. காவி கழிசடைகளை புறந்தள்ளுவோம்..
ஏதோ இவர்களுக்கு மட்டும் தான் தேசப்பற்று இருப்பதாக நினைக்கிறார்..
இவர்களின் தேச சேவையைப்பற்றி எம்ஜிஆரை அறிந்தவர்களுக்கு தெரியும்
எம்ஜிஆர் பார்பனர்களை கிளி குயில் என பெயரிட்டு எதற்கு பயன்படுத்தினாரென்று தெரிந்தவர்களுக்கு புரியும் பிராமண லட்சணம்..
தமிழன் பிரசன்னாவை கடுமையாக தாக்குவதின் நோக்கம் நமக்கு புரியும்.. ஆண்டே என கைகட்டி நின்ற கூட்டம் இன்று கை நீட்டி பேசுவதை..அதைவிட விரட்டி விரட்டி சொல்லால் அடிப்பதை பொறுக்கமுடியவில்லை.. இத்தனை காலம் நாங்கள் கேட்டது தானே இப்போது நீர் கேளும் .. இன்னும் இதே முறையில் பார்பன வெறியர்களுக்கு பதில் தருவோம்..
..
எஸ்வி.சேகர் அவர்களே..
முடியவில்லை இன்னுமிருக்கிறது மிச்சம்
..
Aalanci Spm
Monday, April 2, 2018
திராவிடத்தின் நன்முத்து
ஆ.ராசா..
மூன்று நேர்காணல்கள்..
புதிய தலைமுறை நியூஸ்18 தந்தி ..
மிகச்சிறந்த தெளிவோடு கூடிய பதில்கள் குணா நேர்மையான ஊடகவிலாளரோடும் பாண்டே எனும் ஊடக அறமற்றவரோடும் பதலிளித்த விதமும் .. எந்த கேள்விக்கும் தான் கொள்கையிலிருந்து பிறழாமல் சொன்ன விதம் மிக சிறந்த அரசியல்வாதி...தகுதிவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருத வேண்டியிருக்கிறது..
..
மனோதிடம் கொண்ட கொள்கையில் உறுதி அறம் வெல்லுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை .தலைமை நம்மை கைவிடாது என்று கடைசி வரை தெளிவாக நின்று வென்று வந்தவர் .. கட்சியின் கொள்கைப்பரப்பு செயலராக மிக சாதூர்யமான கேள்விகளுக்கெல்லாம் அழகான நடையில் ஆணித்தரமாக பதிலை தந்து தன்னை திறமையாளராக சிறந்த ஆளுமையாக நிலைநிறுத்தியது மெச்சதகுந்தது..
..
ஆண்டிமுத்து ராசா .. திமுகவிற்கு கிடைத்த பொக்கிஷம் திறமையானவர்களை இனம் கண்டு எங்கள் திராவிட கிழவன் படையேற்றிவிடுவார்.. பகைவர் குலை நடுக்க வீறுக்கொண்டு எழும் சிம்மமாய் பாய்வர்.. எத்தனை இடைஞ்சல்கள் .. மிக மிக சூழ்ச்சியோடு பகைவர்களி பின்னிய வலையை .. அறுத்தெறிந்து வெளியே வரும் போது பகைவர் தலையையே கொண்டு வருவார்கள்.. எல்லாருக்கும் கொள்கை பிடிக்கும் செயல்படுவதில் ஆர்வம் கூட வரும் சிறப்பாக பணி செய்வர் ..ஆனாலும் பழிவரும் வேளையிலும் துவண்டுவிடாமல் எதிரிகளை துளைக்கும் கூர்வாளாய் .. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரம் பெற்ற அமைப்பைகளையும் ..தன் திறமையான வாதத்தால் தவறே நடக்கவில்லையென வாதாட துணிவு மட்டும் போதாது நெஞ்சுரம் மட்டும் போதாது
நேர்மை வேண்டும் ..அறம் வெல்லுமென்ற அசைக்கமுடியாத உறுதி வேண்டும்..
..
வலிமையானவர்களை கண்டெடுத்து பயிற்சியளித்து .. பண்படுத்தி.. துன்பம் வரும்வேளையிலும் துவண்டுவிடாமல் எழுந்துநிற்கும் களம் காணும் வித்தையை பயிற்றுவித்து செம்மைப்படுத்தி நம்மிடையையே தந்திருக்கிறார் கலைஞர்..
இன்னும் நிறைய மின்னும் வைரங்கள் உண்டு எம்மிடம் .. அறிவின் தெம்பில் பேராசான் பெரியாரின் நிழலில்.. கலைஞரெனும் பெருமகனின் பயிற்சியில் பண்பட்டு செயல்படும் பல்லாயிரம் நன்முத்துகள் உண்டு.. எதிரிகள் கலங்கடிக்க .. சிதறி ஓடவைக்க .. எம்மண்ணை இனத்தை மொழியை காக்க..
..
திரு.ராசா திராவிட இயக்கத்தின் இரத்தினக்கல்
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அவருக்கான உயரம் நிச்சயம் கிடைக்கும் காலம் தகுதியானவர்களை தந்துக்கொண்டே இருக்கும்
அது திராவிடத்தின் சிறப்பு..
ராசா.. திராவிடம் தந்த நன்முத்து
வீரியமிக்கமிக்க விதை ..
எதிர்கால நம்பிக்கை ..
..
Aalanci Spm
Sunday, April 1, 2018
தொடர் போராட்டம்
இன்றைய இந்துவில் மத்திய அரசின் திட்டங்களுக்கெதிராக செயல்படும் அமைப்புகளை தடை செய்ய உளவுத்துறை முடக்கிவிடப்பட்டிருப்பதாக செய்தி..
மீத்தேன் நியூட்ரினோ திட்டங்களுக்கெதிராக செயல்படுவோரின் கவனித்து அறிக்கை தருமாறு உளவுத்துறைக்கு உத்தரவு..
..
காவிரி பிரச்சனையில் திமுக போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருப்பதும்.. அதை வேகத்தோடு நடத்த .. விடுதலையானாலும் மீண்டும் மீண்டும் போராட திமுக முனைந்திருப்பதும்.. டெல்டா பகுதியிலிருந்து தொடர் பயணம் துவங்க திமுக முடிவெடுத்திருப்பதும்..ஒருவித பதட்டத்தை தமினகத்தில் உருவாக்குமென அறிந்து
ஒரு அவசரகால சூழலை நோக்கி தமிழகத்தை நகர்த்த மத்திய அரசு முயற்சிக்கிறது..
அதற்கான காரணங்கவிடயங்களை தேடி மீத்தேன் நியூட்ரினோ என திசைதிருப்பி.. காவிரி பிரச்சனையை நீரித்துப்போக செய்ய முயற்சியென சந்தேகம் வருகிறது..
..
இனியும் காலதாமதபடுத்தென்பது தற்கொலைக்கு சமம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கவேண்டும் சிறு சிறு பிரிவுகளாக தமிழக அமைப்புகள் பிரிந்து செயல்படுவது தமிழகத்திற்கு பலனை தராது .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் திமுக என்பதும் இன்றைய பிரதான எதிர்க்கட்சியான திமுகவோடு கருத்து வேறுபாடுகளை மறந்து
ஒருங்கிணைந்து போராடவேண்டிய தருணம்..நீதி கேட்கும்
நீண்ட நெடிய பயணத்தை தஞ்சையிலிருந்தே தொடங்கலாம் லட்சகணக்கானோர் அணிவகுப்பார்கள் .. இந்தியாவே திரும்பி பார்க்க வேண்டும் இந்த பாஜக அரசு தமிழக விரோதபோக்கை தொடர்ந்து நிகழ்த்துகிறது சில துரோகிகளை கொண்டு நம்மை கூர்பார்க்கிறது தமிழிசை போன்ற தமிழக விரோதபோக்கை கொண்டவர்கள் சட்டஒழுங்கைப்பற்றி பேசுகிறார்கள் .. திமுக பொறுப்பேற்க வேண்டுமாம்... சில பார்பனகும்பலும் சில இன துரோகிகளும் அடையாளம் கண்டு விரட்டபடவேண்டும்..
சில அப்பன் பெயர் தெரியாத முண்டங்கள் கடல்நீரை பெற்று தர உதவுவதாக சொல்கிறது பார்பன விசத்தை கக்கியிருக்கிறது நாம் இனி இந்த பரதேசிகளை நடமாடவிட்டால் இனியும் பேசுவார்கள்.. பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு இந்த கொடிய மிருகம் நம்மை நகைக்கிறது ..
தமிழகத்தில் இனி நடமாடமுடியாத வண்ணம் சரியான பாடத்தை புகட்டவேண்டும் ..
..
அவசரகால நிலையை நோக்கி நம்மை நகர்த்துவது பாஜகதானே தவிர.. நாம்அல்ல..
இவ்வேளையில் திமுக பொறுப்பேற்று .. இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்கிறவரை தொடர் போராட்டத்தை அறிவிப்பின்றி திடீரென மறியல்கள் கடையடைப்புகள் வேலைநிறுத்தம் ..என செய்யவேண்டும்.. பொதுமக்களுக்கு இடையூறு என எண்ணாமல் ஒட்டுமொத்த ஜீவாதார பிரச்சனையென்பதால் .. உணவளிக்கும் விவசாயத்திற்கான நீராதார .. தமிழகத்தின் 70 விழுக்காடு குடிநீர் பிரச்சனையில் தமிழகத்தை சுடுகாடாக்க நினைக்கும் பாஜகவை பணியவைக்க கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு ஆதரவு தருவார்கள்..
..
காவிரியில் விட்டுவீழ்ச்சியில்லை..
..
Aalanci Spm
Subscribe to:
Posts (Atom)