Wednesday, December 13, 2023

மீண்டு வருகிறது சென்னை..
அனைவருக்கும் நன்றி!  இந்த பெருமழை நிறைய செய்திகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது..எம்ஜிஆர் எனும் கோமாளியின் நிஜத்தையும், இரும்பு பெண்மணி என பார்ப்பன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பத்தையும் அதிமுக எனும் அறிவிலிகள கூட்டத்தையும் திமுக என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்கும் "நடுநிலை" களையும் தோலுரித்து காட்டி இருக்கிறது..
.. 
நாடாளுமன்றத்தில் ₹4000 கோடி எங்கே என தம்பிதுரை கேள்வி எழுப்ப அவரது அறியாமையை அவரே வெளிச்சம் போட்டார்.. முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து தான் அறிவுஜீவிகள் செல்வார்கள் அதில் பார்ப்பனர்கள் கை ஓங்கி அரசியல் சாசனத்தை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள் தான் என இறுமாப்போடு இருந்தவர்களை I Am Dravidian stock என அதிரவைத்து தொடர்ந்து வல்லமையோடு பேசும் அறிவார்ந்தவர்களை அனுப்பியது தி.மு.கழகம்.. தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் என்றாலே சபை உற்றுநோக்கும்.. அதை உடைத்து காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென பாடலை  பாட செய்த பெருமை ஜெயலலிதாவை சாரும் தங்களை விட யாரும் அறிவாளிகளாகிவிட கூடாது என்ற மனப்பான்மை முட்டாள்களை அனுப்பி தமிழ்நாட்டில் இப்படியும் சில கோமாளிகள் இருக்கிறார்கள் என காட்டினார் அப்படியான வரிசையில் வந்தவர் தான் தம்பிதுரை
..
47 ஆண்டுகளுக்கு இப்படியொரு பெருமழை பேரிடராய் வந்தது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தாலும நினைக்கவே அச்சமாகிறது.. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் என உளறிவைத்து அதையும் ஊடகங்கள் சொல்லி குதூகலம் அடைந்திருக்கும் .. பேரிடர் நிவாரணத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கும் தவிர்க்க முடியாதுதான்.. காலதாமதமும் தனக்கு கிடைத்துவிட்டதென சிலர் பகிர்ந்ததை கண்டு பலர் கோபம் கொள்வதும் தனக்கு தெரிந்த அதிகார மட்டத்தில் காரியம் சாதித்துக் கொணடவர்களின் இறுமாப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தான் .. ஆனாலும் விரைந்து சேவை செய்து மாநகரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.. அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் #துப்புறவுதெயவங்கள்  என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி பெருங்துயரிலிருந்து மீட்டுயிருக்கிறார்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
மாநகர மேயர்.. இவரின் உழைப்பை திறமை கேலிசெய்தவர்கள் சின்னப் பெண் என்றவர்களுக்கு தான் சிங்கப்பெண்  என நிரூபித்திருக்கிறார் .. ஊடகங்கள் சமூகவலைத்தளங்கள் நேர்மை தவறிய போதும் எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் தனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தன் உழைப்பின் மூலம் தான் யார் என்பதை உணர்த்தி திறம்பட செயல்பட்டிருக்கிறார் PriyaRajan DMK ..
.. 
அனைத்து 
களப்பணியாளர்களுக்கும் நன்றி!🙏
..
ஆலஞ்சியார்

Friday, December 8, 2023

மேயர்.. 
மாநகரின் முதல் பெண்மணி ..
இதுவரை கண்ட சென்னை மாநகராட்சியின் மேயர்களில் அதிகம் பேசப்பட்டவர் அதிகம் உழைத்தவர் .. விமர்சனம் என்ற கக்கும் விசமங்களை புறங்கையால் தள்ளிவிட்டு வீணர்களின் வெற்று கூச்சல்களுக்கெல்லாம் கலங்காமல் காரியம் ஓன்றே குறிக்கோளாய் செயலாற்றும் மாநகரின் செல்லமகள்..
..
இதுவரை கண்டிராத பெருமழை ஒரு வருடம் பெய்ய வேண்டியதை ஒரே நாளில் கொண்டிதீர்த்து இயற்கை தாண்டவமாடியது கொஞசமும் அசராமல்  அயராமல் ஓடிக் கொண்டே இருந்தார் கிடைத்ததை தின்று கார் பார்க்கிங்கில் உணவருந்தி  வீட்டிற்கே செல்லாமல் அரசு அலுவலகத்திலேயே குளித்து உடைமாற்றி தனக்கு தலைவர் தந்த பொறுப்பு உணர்ந்து  உழைத்துக் கொண்ட இருந்தார் .. உடல் நலத்தையும் கொஞ்சம் பாருங்கள் 
..
சிலரின் விமர்சனங்கள் பொறுப்பற்ற அரசியலாய் இருந்தும் ஒன்றுகூடி உழைக்கவேண்டிய நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை கக்குவதும்  பேஷன் ஷோ நடத்த முடியாமல் போனதாய் கிண்டல் அடிப்பதும் மனித நாகரீகமற்ற செயல் .. அவர் உடுத்து உடை உங்களுக்கு எரிச்சலை தருகிறதென்றால் அதை தொடர்ந்து செய்வோம் ..  
..
மேயராக பொறுப்பேற்றபோது சின்ன பெண் என்றார்கள் அவர் உழைப்பை கண்டு அவரின் ஒழுங்கை திறமை நிர்வாக திறனை கண்டு சிலர் வாயடைத்துப்போய் செய்வதறியாது நிற்கிறார்கள் ..
கொள்கை உறுதியோடு தலைமை தந்த பணிகளை செவ்வனே செய்து மக்களிடம் பெரும் மதிப்பை பெற்ற மேயராய் திகழ்கிறார் ..  விமர்சனங்களை கண்டு பெறாமல் நடிப்பது போலல்ல இது உதவி வேண்டுமா கேளுங்கள் என இடது கையால் தள்ளி தான் நிஜத்தில் இரும்பு பெண்மணி .. ஓடியொளிந்துக் கொண்டு நடுக்கத்தல் ஏரியை திறந்து திக்குமுக்காட செய்யும் பேதை அல்ல.. எதையும் எதிர்க்கொள்ளும் மனோபலமும் உழைப்பும் சரியாக செய்யம் ஆற்றலும் உண்டு என நிரூபித்திருக்கிறார் ..
வரலாறு காணாத பெருமழையில் நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்படும் அதற்காக இவரின் அர்ப்பணிப்பை கேவலபடுத்தாதீர்.. 

..
 இயற்கை பேரிடரை எதிர்கொண்டு மாநகர மக்களின் நலன் காத்த இவரை கொண்டாட மனமில்லாமல் போனாலும் குறைச் செல்லாதீர்கள்  இதுவரை தலைநகர் கண்ட மேயரகளில் தலைசிறநதவராய் திகழ்கிறார் .. நேர்மையும் கடின உழைப்பும், திறமையும் அவரை இன்னும் உயர்த்தும்  ..
வாழ்த்துகள் தாயி..
..
ஆலஞசியார்

Thursday, November 2, 2023

இரவில் 
சூரியனை கண்டவருண்டா!
குவைத்தில் 
இன்றிரவு..
திராவிடச்சூரியன்  உதிக்கிறது 🖤❤️
இரண்டு தினங்கள் 
திராவிடப் பெருவெளிச்சத்தில்  
கொண்டாடி மகிழ்வோம்..
.. 
பேரருளாளனின் 
நூற்றாண்டுவிழா
திராவிடத் தென்றல் 
மானமிகு கனிமொழி 
உரைவீச்சை கேட்க வாரீர்..
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் 
கொள்கைக்குன்று 
கலைஞரின் போர்முரசு 
பெரியாரின் கொள்கைவாரிசு 
ஆசிரியரின் மாணவி சிறப்புரையாற்றுகிறார் 
..
இந்திய ஒன்றியத்தின்
இன்றைய தேவையை..
திராவிடச் சித்தாந்தமே 
மனிதவள மேம்பாட்டிற்கு 
தேவையென பறைய வருகிறார்..
தமிழர்ப் பண்பாட்டை வாழ்வியலை
சங்கமமாய் தந்தவர் 
குவைத்தில் 
நிறைய கதைக்க வருகிறார்
திராவிட மாடல் தளபதியின் அடியொற்றி புதிய சேதிகளை சொல்ல வருகிறார்.. 
இதுவரை குவைத் கண்டிராத பெருவிழாவைக் காண வாரீர்
..
வாழ்ந்த காலமெல்லாம் 
மனிதம் பேசிய 
மாமனிதனின் புகழ்பாட..
வாழ்ந்து, வழிகாட்டி 
அரசியல் இலக்கணம் படைத்த 
இந்திய ஒன்றியத்திற்கே 
அரசியல் பாடம் தந்த பேரொளி..
பள்ளத்தில் கிடந்தவரை 
படிகளில் ஏற்றிய பகுத்தறிவாளன் 
தொலைநோக்கு பார்வை 
எதிலும் நிதானம் 
சொல்லும் செயலும் 
நன்னெறி தந்த ..
தமிழகத்தின் நவீன சிற்பியின்
நூற்றாண்டில் நாமெல்லாம்
புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டாமா..
கலைஞரெனும் பேரருளாளின்
புகழ்பாடும் சபையில் 
மகிழ்ந்திருப்போம் வாரீர்..
Kanimozhi Karunanidhi 
..
ஆலஞ்சியார்

Sunday, October 29, 2023

திராவிடம்..

திராவிடம் என்னவென்று தெரியாதவரெல்லாம் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருப்பது எவ்வளவு அசிங்கம் .. அதிமுக ஆரம்பித்தபோது கலைஞர் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. சிங்கத்திற்கு முன் "அ" சேர்த்தால் வருவதுதான் ..  

..

அறிவுடை இயக்கமாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மகோரா எனும் சாயபூச்சுகாரனின் அலங்கோலத்தால் மக்களின் கேளிக்கை மயக்கத்தில் மதியிழந்து நின்றதால் இன்றைய அவலங்களுக்கு நாமும் சாட்சியாகிறோம்.. இனப்பகைவர்கள் கூட நம் அறிவின் முன் மதிமயங்கி நின்றதெல்லாம் காலம் நமக்கு போதித்திருக்கிறது.. எதையும் அறிவுக்கொண்டு பார் எனச் சொல்லி வளர்ந்த தமிழர்கள் இன்று அறிவிலிகளால் தலைக்குனிவை நேரிடும் அவலம்.   திராவிடம் ஆரியம் அதெல்லாம் புராணத்தில் வரும் என உளறிவைத்து தன்னை தற்குறியாய் அடையாளப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி

..

திராவிடம் இந்த மண்ணின் இனம்.. இந்தியாவிற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில் தமிழர்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என அண்ணல் அம்பேத்கர் சொன்னதையாவது படித்திருக்கிறாரா.. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என மம்தாவிற்கு இருந்த புரிதல் கூட பழனிசாமிக்கு இல்லாமல் போனதேன்.. திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்திலேயே இருப்பது கூட இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாதா.. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவன் என பெருமைபேசிய பழனிக்கு திராவிடம் ஆரியம் என்றால் தெரியாதா..  அண்ணாவின் "ஆரியமாயை" யாவது தெரியுமா..  

..

திராவிட  இயக்க வரலாறு தெரியுமா.. இதெல்லாம் இவரைச் சொல்லி என்ன பயன்.. அதிமுக நிறுவனர் மகோரா எனும் எம்ஜிஆருக்கே தெரியாதே.. அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் அமரும் இலைகள் .. கலசமாகாது..  ஆரிய திராவிட போர் ஈராயிரம் ஆண்டு வரலாறும் கொண்டது .. பழனி போன்றவர்கள் திராவிட இயக்க வரலாறு தொகுப்பை  படிக்க வேண்டும் ..

வரலாறு தெரியாதவர்கள் விவரகேடுகள், வழிதவறிய பாதையில் இனியேனும் திராவிடம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே.. பெரியாரை பேரறிஞரை, திராவிட இயக்க முன்னோடிகள் படியுங்கள்.. இல்லையெனில் அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆரிய அடிவருடிகளாக இருங்கள் 

..

ஆலஞ்சியார்

 

Saturday, October 7, 2023

படிப்பு முக்கியமில்லை என்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் .. படிக்காமல் உயரலாம் அதிக பணம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டுவார்கள் நம்பாதீர்கள் .. முதலில் ஆன்மீகவாதிகள் அப்புறம் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் திரியும் மூடர்கள் தொடர்ந்து தமிழ் தேசியம் பிள்ளைகள் உளற தொடங்கியிருக்கிறார்கள் .. காமராஜர் படித்தாரா என கேள்வி எழுப்புவார்கள் அவர்தான் பள்ளிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தான் ராஜகோபாலச்சாரி எனும் பாசிசவாதியால் மூடப்பட்ட பள்ளிகளை திறந்து படிக்க வைத்தார்.. கலைஞர் பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்பார்கள் ஆனால் அவரின் படைப்புகள் பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முனைவர்கள் உருவானார்கள் ..
..
படிக்காதே என்று சொன்னால் எச்சரிக்கையாய் இரு.. அவன் உன் இடத்தை அபகரிக்க முற்படுகிறான்.. எங்கே நமக்கு சமமாக வந்து விட்டாானே என்ற கோவம் அவனை இப்படி பேச சொல்கிறது .. படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பான் நம்பாதே தொடர்ந்து முயற்சி நிச்சயம் கிடைக்கும்.. படித்த வேலை கிடைக்காதென்பான் நம்பாதே கிடைத்த வேலையில் புதிய அறிவும் அனுபவமும் கிடைக்கும் .. 
..
மாடு மேய்த்தால் வருமானம் அதிகம் என்பான் ஆனால் அவன் வீட்டு பிள்ளைகளை abroad 
ல படிக்க வைப்பான்.. விவசாயம் பார் பொட்டிகடை வை என்பான் அவன் குழந்தைகள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும்.. 
கல்வி தான் உன் பேராயுதம்.. உன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பாசிச / மடைமைவாதிகளுக்கும் உன் கல்வியறிவு மட்டுமே இடைஞ்சலாக இருக்கிறது அதனால் தான் கதற தொடங்கியிருக்கிறது .. அப்பன் தொழிலை பார் என "விஸ்வகர்மா "உன் குறையை தீர்க்குமென ஆசைகாட்டி காலகாலமாய் குலத்தொழிலில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆபத்தானவரகள் நம்பாதே ..
..
இது ஒருவகையான சூழ்ச்சி, ஒருவகை மூளைச்சலவை , படிக்காமலே பணக்காரனாகலாம் எனச் சொல்லி உன் சந்ததியை மடையர்களாக்கும் மந்திரம்.. மயக்கம் தரும் இச் சலவையின் முடிவு கிழிந்த நிலையை தந்துவிடும்.. எவன் தடுத்தாலும் படி.. என்ன வழியில் சொன்னாலும் உன் கல்வி மட்டுமே உன்னையும் உன் சந்ததியினரம் கரை சேர்க்கும்
..
கல்வியே பேராயுதம் ..
கல்வியே ஒளி தரும் விளக்கு..
கல்வியே விடியலுக்கு முதல் கூவல்
..
ஆலஞசியார்

Wednesday, October 4, 2023

அன்பு நண்பர் இக்பால்.. 
அஸ்ஸலாமு அலைக்கும்  
இன்று இரவு அரசு அய்யா அவர்களும், ஆசிரியர் பெருந்தகை ஜலீல் அவர்களும் நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களும், என் இல்லம் வந்து சிறப்பித்தனர்..  முதற்கட்டமாக 250  பிரதிகள் அர்த்தமுள்ள திராவிடம் " நூலை கொண்டு வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.. நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம்.. நல்ல பயனுள்ள பொழுதாய் அமைந்தது..
..
இன்று அர்த்தமுள்ள திராவிடம் நூலாக வருவதற்கு பெரும் காரணியாக இருந்த தங்களின் செயல், பெரும் பெருட்செலவை ஏற்ற
தங்களின் தயாள குணம் 
நன்றிகளால் நிரப்பிட முடியாது ..
தாங்கள் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்டு பேரன்பிற்கு நன்றி!.. தொடர்ந்து தமிழ் சேவை செய்திட வேண்டி விழைகிறேன்.. 
..
நன்றிகள் 
.. 
அன்பின்
ஆலஞ்சியார்
அனைவருக்கும் வணக்கம்

பெரியார் வழியில் கலைஞர் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்
..
பேராசான் வழியில் கலைஞர் ..
தான் கொண்ட கொள்கை வழியில் நின்று சமத்துவம், சமூகநீதி பெண்ணுரிமை என தமிழ் நாட்டில் மாபெரும் புரட்சி செய்தார் ..
பெண்களின் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தாருங்கள் என்றார் பெரியார்.. உங்கள் வீட்டில் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார் உங்கள் ஊரில் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார் அதைதான் கலைஞர் பெண்களின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கட்டணமில்லா கல்வியென்றார், எட்டாவது படித்திருந்தால் திருமண உதவித்திட்டம் என தொடங்கி அதை 12 வது என உயர்த்தி பெண் குழந்தைகளின் கல்விக்கு வழி வகுத்தார் 
..
ஐந்து கிலோ மீட்டரில் நடுநிலைப்பள்ளி, தாலுக்கா தோறும், கலைக்கல்லூரி மாவட்டந்தோறும் தொழில்ஙட்ப, மருத்துவகல்லூரிகள் கண்டார்..
அதுமட்டுமா
 ஒடுக்கபட்டோரில் குரலாய் நின்று கல்வி வேலைவாய்ப்பில் விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வழி வகுத்தார்.. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியின் காரணகர்த்தா கலைஞர் நவீன தமிழகத்தின் சிற்பி .. 
நூற்றாண்டு காணும் கலைஞர் புகழை பாடுவோம்..