Saturday, September 28, 2024

சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதலமைச்சராகும் போது திருமா ஏன் ஆக கூடாது.. கட்சியில் சேர்ந்த உடன் துணைப் பொதுசெயலாளரான விசிகவின் ஆதவ் அர்ஜூனா சொல்கிறார் .. வட மாவட்டங்களில் விசிக தயவில்லாமல் திமுக வெற்றிப் பெற முடியாது ..
எங்கேயோ கேட்ட குரலாக தெரிகிறதா.. இதே தொனியில் தான் பாமகவும் பேசியது இன்று தங்கள் "பெல்ட்" என்றவர்கள் நிலை ஊரறிந்தது.. 
..
சாதிய நிலைபாட்டிலிருந்து தன்னை மீட்க நினைக்கும் திருமாவிற்கு இது 'திருச்சடியை' தரும்.. கூட்டணி தர்மம் என்பதெல்லாம் ஒரு எல்லை வரைதான் தேர்தல்கால கூட்டில் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுமே தவிர கொள்கையோடு இணைந்து செயல்படுவதாக எண்ணுவதே மடத்தனம்.. விசிகவின் பொதுச் செயலாளர் விளக்கம் அளித்திருக்கிறார் அதுவும் ஆ.ராசா எதிர் குரலை தொடர்ந்து.. இதை முளையிலேயே கிள்ளியெறிந்தால் நலம்..
..
விசிகவின் அடிப்படை பலமே தங்கள் சமூக கட்டமைப்புதானே தவிர பொது சமூக நீரோட்டத்திற்கானதல்ல .. தங்கள் கொள்கை ஒடுக்கபட்டவர்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் அங்கீகாரத்திற்காகதான்.. ஆனால் அதை நீண்டகாலம் திராவிட இயக்கங்கள் செய்துக் கொண்டுதானிருக்கிறது..
..
விசிக போனால் திமுகவிற்கு இழப்பாகும் என்ற நினைப்பை தூக்கி தூர எறியுங்கள்.. இதே குரலில் ஏற்கனவே பேசிய கட்சிகள் இருக்குமிடம் தெரியவில்லை.. திமுக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உயர்வுக்கும் உழைப்பை பாதுகாப்பை, உறுதி செய்து பயணிக்கிறது.. திமுக கட்சி அல்ல இயக்கம் என்பதை அறிந்துணர்ந்தால் ஏன் பாசிச சித்தாந்தவாதிகள் திமுகவை மட்டும் எதிர்க்கிறார்கள் அறிந்தால் பதில் கிடைக்கும்..
..
75ஆண்டு வரலாற்றில் நிறைய பார்த்தாயிற்று ஆனாலும் எல்லாவகை சூழ்ச்சிகளையும் வீழ்த்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.. ஏனெனில் தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு இந்த இயக்கம் மக்கள் பணியாற்றுகிறது..  இடைச்செருகல் (itaiccerukal) வரும் போகும் .. தி.மு.கழகத்தின் பயணம் தொய்வின்றி தொடரும்.. நிறைய எழுதலாம் எங்களுக்கு வேறு பணிகள் இருக்கிறது.. 
..
அதைப்போல மதுவிலக்கு சாத்தியமற்ற விடயம்.. மது பாவம் நரகம் தருமென நம்புகிற சமுதாய ஆட்சியாளர்கள் கூட கடை திறந்து நாளாகிவிட்டது.. கட்டுபாடுகள் விதிக்கலாம்.. ஆனால் முழுவதற்குமான தடை நடைமுறை சாத்தியமற்றது.. தனிமனித கட்டுபாடு மதுவால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யலாம் அரசியலுக்காக பேசுவதில் அர்த்தமில்லை.. திருமா பொதுவான அரசியலை முன்னெடுத்தாலும் தலித் அடையாளம் அவரை விடாது அதுவே அவரின் முகவரியாக காணப்படுகிறது.. 
..
திமுக தலைவர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பலம் பலவீனம் அறிந்தவர் அவரின் காய் நகர்த்தல் நிலைகுலைய செய்துவிடும்..
..
ஆலஞ்சியார்

Monday, September 23, 2024

அறிஞர் அண்ணா திமுகவுக்கு வைத்த பெயர் DPF.. இது எப்படி DMK ஆனது? மாற்றியது யார்?

அறிஞர் அண்ணா திமுகவுக்கு ஆங்கிலத்தில் வைத்த பெயர் என்ன தெரியுமா? அந்தப் பெயர் எப்படி மாறியது என்பது தெரியுமா? இன்றைக்கு உள்ள திமுகவினருக்கே இந்த வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அறிஞர் அண்ணா தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று பல குழப்பங்கள் இருந்தன. அவர் தனது தம்பிகளான, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று பிற்காலத்தில் திமுகவினரால் கருதப்பட்ட நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி நடராசன், ஈவெகி சம்பத், கலைஞர் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார்.

அவர்கள் கட்சிக்குப் பலவிதமான பெயர்களைச் சுட்டிக் காட்டினர். அன்று என்ன நடந்தது? திமுக என்ற பெயர் எப்படி உருவானது? அதை ஆங்கிலத்தில் டிஎம்கே எனச் சுருக்கியவர் யார் எனப் பல சந்தேகங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராம அரங்கண்ணல் அவரது சுயசரிதையில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

அவரது நூலில், "கட்சி ஆரம்பிக்கின்ற சூழ்நிலை வந்தாச்சு, அதுதானே உங்கள் எண்ணம்? அரங்கண்ணல், பேட் ஐ கொண்டுவா. கட்சிக்கு ஒரு பெயர் சொல்லுங்கப்பா" என்றார் அண்ணா. அங்கே அமர்ந்திருந்த வேலாயுதம் என்ன வாணன், உடனே முதல் நபராக 'தமிழ்நாடு சோஷியலிஸ்ட்கட்சி' என்று சொன்னார். அதைக் கேட்ட அறிஞர் அண்ணா 'நாம் புதியதாகக் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதில் திராவிடர் என்ற சொல் இருக்க வேண்டும். அது முக்கியம்' என்றார்.

அடுத்ததாக திராவிட சோசலிஸ்ட்டுக் கழக, திராவிட சமதர்மக் கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் என வரிசையாகப் பல பெயர்கள் வந்து கொட்டின. அனைத்தையும் கையிலிருந்த அட்டையில் எழுதிக் கொள்ளப்பட்டது. அடுத்ததாக தமிழ்ப் பெயர்களைத் தாண்டி ஆங்கிலத்தில் சில பெயர்கள் முன்வைக்கப்பட்டது. Dravidian Forward Block, Dravidian Progressive Association, Dravidian vanguard Party எனப் பல பெயர்கள் சூட்டிக்காட்டப்பட்டன.

உடனே அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா, "Dravidian Progressive Federation என்றார். அதில் Dravidian என்ற சொல்லும் இருந்தது. Federation என்று வருகிறது. அதை அப்படியே தமிழில் எழுதிப் பார்ப்போம் என்று எழுதினார்கள். திராவிடர் முன்னேற்றக் கழகம் என வந்தது. உடனே அங்கே இருந்த அனைவரும் ரொம்ப நல்லா இருக்கு என்றனர். ஒருமித்த கருத்தாக அது ஒலித்தது.

அதிலும் சின்ன திருத்தம் செய்ய ஒரு யோசனையை வைத்தார் அண்ணாதுரை. Dravidian என்பதை திராவிடர் என்று எழுதலாமா? திராவிட என்று எழுதலாமா? என்று கேட்டார் அவர். திராவிடர் என்றால் குறுகிய வட்டமாக இருக்கும் என யோசித்த மதி, "நாம் எல்லோரும் சோஷியலிஸ்ட்டுகள். பகுத்தறிவுக் கொள்கைகளை யார் ஒத்துக்கொண்டாலும் நம் கட்சியில் இருக்கலாம். பெரியாருக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும். திராவிட என்பது நிலப்பகுதியைக் குறிக்கிறது. இதுவே பொருத்தமாக உள்ளது' என்றார்.

அங்கே அமர்ந்து இருந்த இராம அரங்கண்ணல், தன் கையில் வைத்திருந்த அட்டையில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று முதன்முதலாக எழுதிப்பார்த்தார். இந்தப் பெயரை ஆதரவாளர்களிடம் சொல்லி ஒரு முடிவு எடுப்போம். அதுவரை இதுவே கட்சி பெயர் என்று யாரும் முடிவு செய்துவிட வேண்டாம் என்றார் அண்ணா. அதன்பின்னர் 'மாலை மணி' பத்திரிகை ஆபீசில் உள்ள ஆதரவாளர்களிடம் இந்தப் பெயரைக் காட்டி ஒப்புதல் கேட்டார் அண்ணா. அதைப் பலரும் ஏற்றனர்.

ஆரம்பக் காலத்தில் திமுக என்ற தமிழ் வார்த்தையைச் சுருக்கு DPF என்றே எழுதி வந்தார்கள். அதாவது Dravidian Progressive Federation என்பதன் சுருக்கம். இது எப்படி DMK ஆனது என்பதுதான் சுவாரஸ்யம். திமுகவை எதிர்த்து எழுதி வந்த 'தி இந்து' பத்திரிகை தான். திமுக ஆரம்பக் காலத்தில் நடத்திய டால்மியாபுரம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என மும்முனைப் போராட்டங்களை நடத்தியது. அதைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து, திமுகவைச் சுருக்கி ஆங்கிலத்தில் டிஎம்கே என்று எழுதியது. அது அப்படியே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது" என்று எழுதி இருக்கிறார் அரங்கண்ணல்.

ஒரு காலத்தில் ஆங்கில பத்திரிகை DPF என அண்ணா கட்சிக்கு வைத்த பெயரை மாற்றி DMK என்று எழுதியதால் காலப் போக்கில் இதுவே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது. அதனால் கட்சிக்கு ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட Dravidian Progressive Federation என்ற வார்த்தையும் மறைந்துவிட்டது. தமிழில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதுவதை அப்படியே ஆங்கிலத்தில் Dravida Munnetra Kazhagam எழுத வேண்டிய நிலை உருவானது.

Saturday, September 14, 2024

அண்ணா ..
எங்கள் அறிவுச் சுடரே
உன் ஒளியில் தான் 
நாங்கள் பயணிக்கிறோம் ..
எங்கள் 
கலங்கரை விளக்கே 
திசை தெரியாது நின்ற 
தமிழினத்தை கரை சேர்த்தது நீ
தம்பி படிக்கவா என்றாய் 
ஆளவே வந்துவிட்டோம் ..
ஒன்றியமே நம்மை எதிர்நோக்கிறது 
..
அண்ணா 
நீ..
எங்களுக்கு சுயமரியாதையை மட்டுமல்ல 
சுயமாய் எழவும் கற்றுதந்ததாய் 
உன் தமிழ் 
வீணை மீட்டிய இசை 
உன் சொற்களால் ஆடிய தாண்டவம்
ஆரியத்தை அதிரவைத்தது
திராவிட தருவே 
உன் நிழலில் தான் 
தமிழகம் இப்போதும் 
நிம்மதியாய்  நிற்கிறது 
..
"கடவுள் இல்லையென்றோ 
இருக்கிறாரென்றோ 
நான் சொல்லவில்லை அறிவோடு ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லென்று தான் கூறுகிறேன்",
எவ்வளவு தெளிவு..
ஆயுதம் கொண்டு இன்று சிலர் கலவரம் செய்ய துணியும் போதும் 
நீ கற்று தந்த அறிவாயுதம் கொண்டே வெல்கிறோம் ..
..
தமிழ்படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றாார் பெரியார்.. அதைதான் எமக்கு
மாசுமறுவற்ற மதமில்லை, நமக்கு
இனப்பற்று மிக்க இலக்கியமில்லை நமக்கு 
அன்பு தரும்,அறிவூட்டும்
சமுதாயம் இ்ல்லை நமக்கு  மனிதர்கள் மனிததன்மையோடு வாழ சுதந்திரமில்லை என விளக்கம் தந்தாய்.. ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் 
தமிழ்நாடு தந்தாய் ..
நாடு கேட்கிறார் ஜாக்கிரதை என ராஜகோபால் டெல்லிக்கு சொன்னபோது 
இந்தியா நாடே அல்ல அதுவொரு துணைகண்டம் என புரியவைத்தாய் .. சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென உச்சநீதிமன்றம் சொன்னபோது 
அதை சட்டமாக்கி சரித்திரம் படைத்தாய் ..
..
உன் வழியில் தான் தமிழகம் செல்கிறது..திராவிட மாடல் நீ தந்தது தான் ..
திராவிட போர்வையில் ஒளிந்திருந்த மகோரா(எம்ஜிஆர்) கூட உன் நாமத்தை சொல்லிதான் பிழைக்க முடிந்தது .. உன் தமிழ் கேட்டு தமிழகம் சொக்கிநின்றது .. உன் தம்பிமார்கள் படைகஞ்சா போர்வீரர்கள் .. 
நீ மாபெரும் ஜனநாயக வாதி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்
..
தமிழ் தேசியம் பேசி திரியும் சின்ன தம்பிகளே .. திராவிடம் என்றால்  கசக்கிறதா ..
இதோ எம் அண்ணா சொல்கிறார்

"திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல,கனவுலக கண்டுபிடிப்பும் அல்ல.
காவியத்தில் உள்ள சொல்..
வரலாற்றில் வருகிற பெயர்.
ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம்.அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம்.
இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல? எவ்வளவு தீர்க்கமான விளக்கம்..
..
இன்றைக்கு பாசிசத்தின் செயல்பாடுகளும், அவர்களின் தத்துபிள்ளைகளின் கூச்சல்களும் எமக்கு துருக்கிய பழமொழிதான் ஞாபகம் வருகிறது
"நரியிடமிருந்து மதத்தைக் கற்றுக் கொண்டவனுக்கு கோழியைத் திருடுவது தொண்டாகத் தோன்றும்".. ஆம் மதத்தை கையிலெடுத்து கலவரம் செய்ய முடியாத அமைதியாய் வாழும் தமிழகத்தை இரத்தபூமியாக்கி முடியாதா ..கலவர செய்து குளிர்காய முடியாதா என நினைக்கிறார்கள்  ஆனால் நாமோ அண்ணாவின் தம்பிகள் 
கலைஞரின் உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்
ஆம்
எம் அண்ணா எம்மை அறிவுக்கொண்டு வளர்த்தெடுத்தார் இப்போதும் 
சில கழிசடைகள் செய்யும் கீழ்தரமான செயல்கள் கண்டும் அமைதியாய் அறிவின் துணைக்கொண்டு வீழ்த்த நினைக்கிறோமே இதில் தான் அண்ணா வாழ்கிறார் ..
..
அண்ணா என்றால் 
தமிழ் 
அண்ணா என்றால் 
தமிழகம் 
அண்ணா என்றால் 
சுயமரியாதை
அண்ணா என்றால் 
வாசிப்பு 
அண்ணா தமிழர்களின் நாளம் 
..
வாழ்க! அண்ணாவின் புகழ் 
..
ஆலஞ்சியார்

Friday, September 13, 2024

ஒன்றிய அமைச்சரின் உடல்மொழியும், கேள்வி கேட்பவரை அற்பமான ஜீவனாக காணும் திமிரும் எல்லாம் தெரிந்தததைப்போல் பேசும் அறிவிலித்தனமும் தொடர்கிறது..
எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அலட்சிய மனப்பான்மையோடு அதிகாரத் தோரணையில் நடந்துக்கொள்கிறார்..
..
காரணம் அவர் மக்களை சந்திக்க போவதில்லை அதிகாரம் தேடி வரும் என்பதுதான்.  
எளிய கேள்வி கேட்டவர் தன் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கலை சொல்கிறார் இதில் எங்கிருந்து தவறு வந்தது மனம் வருந்தி மன்னிப்பு கேட்க இதில் என்ன அவ்வளவு தப்பை கண்டீர்கள்..
எதிர் குரலே இருக்க கூடாதென்கிறீரகளா.. எப்படி நாடாளுமன்றத்தில் "பொய்" "ஊழல்" (unparliament word)பேச கூடாத வார்த்தையாக்கி ஊழலை ஒழித்துவிட்டோம் என்கிறீரீகளே அதைப்போலவா.? 
..
கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் அறிக்கை அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. அன்னபூர்ணா முதலாளி தவறாக பேசிட்டேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாராம் அப்படியே இருக்கட்டும் அதை படம்பிடித்து பொதுவெளியில் காட்டி எங்கள் எதிர்த்தால் இதுதான் கதி என எச்சரிக்கை விடுகிறீரகளா.. களம் தவறாக தேர்வு செய்துவிட்டீர்.. வட மாநிலம் அல்ல இது தமிழ்நாடு..
இன்று உலகமே உங்களின் செயலைக் கண்டது . உங்களின் தனி நிறத்தை மக்கள் அடையாளம் கண்டார்கள்.. தமிழகத்தில் கேள்வி கேட்கிற மன உறுதியை திராவிடம் விதைத்திருக்கறது ..
..
1892ல் விக்டரி மஹாலில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பரிநதுரைப்பதற்காக நடந்த கூடடத்தால் தஞ்சை ராமசாமி அய்யங்காரிடம் கேள்வி கேட்ட அறிவும் அனுபவமும் உண்டு..  ஆனால் எளியவரின் தலையை வெட்டி சந்தையில் வைக்கும் பழைய அகங்காரச் சிந்தனைதான் 
இன்னும் தொடர்கிறது..ஆனால் அதிகாரம் கை விட்டுப்போனால் மன்னிப்பு என்கிற ஆயுதம் இருக்கிறது.. 
வல்லவனுக்காக வளைந்து கொடுக்க முடிகிற உங்களால் சிறு தொழில் முனைவோரின் குரலுக்கு செவி சாய்க்க மனமில்லை..
..
அன்னபூர்ணா "அதிபர்" ஆர்எஸ்எஸ்காரராம் இருக்கட்டும் பாதிக்கபடுகிறவன் பின்னால் நிற்பதும் குரல் கொடுப்பதைதான் எங்கள் பெருஙகிழவன் செய்தது, செய்ய பழக்கியது.. மாண்பமை அமைச்சர் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமல் நடந்திருத்தாலும்
வருத்தம் தெரிவிப்பதுதான் சரி ..
..
பாசிசத்தின் பற்கள் கொடூரமானது என்பதற்கு மற்றொரு அடையாளம் மன்னிப்பு கேட்கும் காணொளி
..
ஆலஞ்சியார்
என்ன நடக்கிறது .. 
94 வயதுவரை கிழவன் ஊட்டிய அறிவும் அவனின் உழைப்பும் வீணாகிவிடுமோ என அச்சப்பட வைக்கிறது .. கலைஞர் எனும் மகத்தான தலைவன் செதுக்கிய கொள்கைவிளக்க கோட்பாடு, செயல்கள் விவர போதாமைகளால் என்னாகுமோ என கவலை வருகிறது..
..
அரசுப் பள்ளியில் அறிவிற்கொவ்வாத செயல்கள் எப்படி அரங்கேறுகின்றன.. மெல்ல மெல்ல சிதைக்கும் வேலைகளின் பின்னில் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. அரசு அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறார்கள்.. இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்கிற செயல்களுக்கு யார் அனுமதி தந்தது.. அமைச்சருக்கு  தெரியாமல் தான் நடக்கிறதா.. எல்லாவற்றையும் முதலமைச்சர் பார்த்துதான் "திருத்த" வேண்டுமா.. உங்கள் உள் அரசியலில் கால்கள் வழுவிலக்காமல் அதில் கவனம் செலுத்துகின்ற நீங்கள் கொள்கை உறுதியோடு தன் துறை சார்ந்த விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமா..
..
மாண்பமை அன்பில் மகேஷ் அவர்களே ..
Anbil Mahesh Poyyamozhi  உங்கள் தாத்தாவும் அப்பனும் சிந்திய வியர்வை துளிகள் கொள்கை கோட்பாட்டின் உறுதி,   கட்டுகோப்பாய் வழிநடத்திய பேராற்றல் இவையெல்லாம் கண்டு படித்தவர் உங்கள் செயல்களில் சரிவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. புனைவு கதைகளை அறிவு ஏற்காதவற்றை பள்ளி மாணவர்களிடத்தில் 
திணிக்கிறார்கள் .. பள்ளிக்கல்வித்துறையில் திராவிட சிந்தாந்தவாதிகளை, அறிவாளிகள் திமுக அனுதாபிகளை அழைக்க கூடாதென்பதை உறுதியாகவும்  ஆன்மீகம் என்ற பெயரில் அறிவை மழுங்கடிக்கும் சொற்பொழிவாளர்களை அதிகம் அனுமதிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் 
..
மகாவிஷ்ணு போன்ற அறிவிலிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை.. நிறைய மகாவிஷ்ணுகளை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்.. மந்திரத்தால் நெருப்பு மழை பெய்யும் என்றவனை அங்கேயே கேள்வி கேட்க சாமானியர்கள் நிறைய வருவார்கள்,அச்சம் தவிர்த்து அறிவுசார்ந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஆனாலும் துறை ரீதியான கடும் உத்தரவுகளும்,  கண்காணிப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் அவசிய தேவையாகிறது.. அறிஞர்கள் முற்போக்காளர்கள் பண்பாளர்களைக் கொண்டு இளம்தலைமுறையினரிடம் குறிப்பாக பதின் பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை அறிவார்ந்த விடயங்களை அறிவியல் தெளிவுகளை விளக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.. 
..
பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் செதுக்கிய தமிழ்நாட்டை சிதிலமடையாமல் காக்கும் பொறுப்பு இருக்கிறது.. பதவி பகட்டிற்கில்லை.. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் கொள்கை தெளிவோடும்செயல்படுவதற்கு.. 
தங்களின் நடவடிக்கைகள் சமாதானபடுத்துகிறது.. திருப்திபடுத்த வேண்டும்..
..
சொல்ல இரண்டிருக்கிறது

ஒன்று:

கண்மூடி மௌனம் காத்தவர்கள் மத்தியில் அறிவுக்கண்ணை திறந்த ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு நன்றி!.. 
..
இரண்டாவது
20.08.1970 விடுதலையில் அய்யா எழுதியதை நினைவூட்டுகிறேன் 
"பள்ளிக்கூடத்தில் சிறிது நேரம் ஒதுக்கி பகுத்தறிவை சொல்லித் தர வேண்டும்"..
..
ஆலஞ்சியார்

Friday, September 6, 2024



  " அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம் ;ஆனால், எழுத்தாளராக- மனிதத் தன்மையுள்ளவராக- இருக்கும் முதல்வர்
மு.கருணாநிதி அவர்கள் என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்கள்.

  தமிழ் உணர்ச்சிகளின் எழுச்சி உருவாய் 
மு.கருணாநிதி அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் வரும்போது மிகவும் நேர்த்தியோடு உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் நாட்டு நலன் பேணி காத்து வருகிறார்.

  இத்தகைய அருமையான இலக்கிய ஆற்றலுக்கும் அருஞ் செயலுக்குமாகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக கழகம்  அவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்திருக்கிறது.

    -தமிழக ஆளுநர் மேதகு கே.கே. ஷா.