"அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்,
சண்டை போட்டுக் கொண்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று"
கனிமொழியின் கவிதை ..
..
கனிமொழி கருணாநிதி ..
எளிமையான அணுகுமுறை, எதற்கும் அஞ்சா துணிச்சல்,கொள்கை தெளிவு, அரசியல் புரிதல், நேர்பட பேசும் ஒழுங்கு, தலைச்சிறந்த தலைவரின் மகள் என்ற அகந்தையில்லாமை , தலைமைக்கு கட்டுப்படும் பண்பு, கனிவான பார்வை, எதிரிகளை இன்முகத்தோடு அடித்தமர்த்தும் ஆளுமை என தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.. கனிவு,திடம், மனவலிமை,முற்போக்கு சிந்தனை இவையனைத்தும் கொண்ட பகுத்தறிவாளர் கனிமொழி..
..
கலைஞர் தன் இலக்கிய வாரிசு என சொன்னவர் அரசியலில் "கவிஞர்" கனிமொழி கருணாநிதி என விளித்து அறிமுகம் செய்தார்
அரசியலில் இலக்கியமாய் திகழ்கிறார் கனிமொழி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முதல்முறை மாநிலங்களவைக்கு சென்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக வேண்டும் மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற வேண்டும் என தூத்துக்குடியை தேர்வு செய்து மக்களோடு கலந்தார்..
..
தன் தொகுதி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்வதும் இந்த பேரிடரில் நான் இருக்கிறேன் நம்பிக்கையை தந்ததும் மூழ்கும் நிலை வந்தாலும் நானும் வருவேன் என தண்ணீரில் இறங்கி நிவாரணப்பணிகளை செய்து நன்மதிப்பை பெற்றார்..
கலைஞரின் குணத்தை கண்டேன்
உயர்சாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசிய தோழர் ரங்கராஜனுக்கு எதிராய் சினம் கொண்டு நின்ற போது போராளியாய் காட்சிதந்த போது பெரியாரின் பெயர்த்தியை கண்டேன்..
..
சிறந்த சனநாயகவாதியாக, பேச்சில் நாகரீகமும்,நயமும் பழுத்த அரசியல்வாதியைப் போல நேர்த்தியாக அதேவேளை கொள்கை உறுதியோடு மக்கள் நலன் சார்ந்து இனம் மொழி கலை பண்பாட்டில் நின்று முரசொலிக்கும் மங்கை.. பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கேள்வி கேட்க தவறியதில்லை.. சமைப்பீர்களா என கேட்டவரை நோக்கி
ஏன் இந்த கேள்வியை ஆண்களை பார்த்து கேட்பதில்லை அப்பாவை (கலைஞர்) பார்த்து, என் அண்ணனை பார்த்து கேட்பதில்லை என தைரியமாக பெண்ணியம் பேசிய பெருமைக்குரியவர் ..
..
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாய், மக்கள் பிரச்சனையில் வாதிட தயங்காதவர், சிரித்துக் கொண்டே செம்மட்டியடி அடிப்பதில் அப்பனைப்போல.. அரசியலில் இன்னமும் பெண்களுக்கு போதிய அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கவில்லை என்பதறிந்து
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், திராவிடம் பேசும் இயக்கங்கள் கூட இன்னமும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், அதிகாரத்தை அலங்கரிக்க செய்யவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. வாய்ப்பு கிடைக்கும் ஒருசிலரையும் "ஆண்" வழி நடத்தும் நிலை மாற வேண்டும்..
..
கனிமொழி இயக்கத்தின் மிக முக்கிய பொறுப்புகளை அடைய வேண்டும்..
காலம் கனியும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
கனிமொழி
Kanimozhi Karunanidhi
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment