Saturday, October 30, 2021

திமுக ..
தெளிவான பயணம் செய்கிறது 
ஆட்சியென்பது தமக்கு வழங்கபட்ட பொறுப்பென்பதை உணர்ந்து யாருக்கும் எவருக்கும் சிறிதுகூட தீங்கிழைக்காத ஆட்சி அதிகாரம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பது தெரிகிறது ..
உரிமை மறுக்கபட்டவரை அழைத்து அருகில் அமர்த்தி உண்ணும் அழகு தெளிவான செய்தியை சொல்கிறது .. கோவில் குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ சமூகத்திற்கோ சொந்தமானதல்ல ..  நம்பிக்கையுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் கும்பிடலாம் "அன்னமிடல்" சாதி மதம் பார்க்காது எளியவர் ஏற்றபெற்றவர் என அறியாது அனைவருக்குமானதென சமூகநீதியை  சமநீதியை உரக்க சொல்வதோடு அனைவருக்கும் மௌனமாய் எச்சரிக்கை செய்திருக்கிறது ..
..
கடந்த  பத்தாண்டாய் பாழான தமிழகத்தை சீர்செய்ய சில ஆண்டுகளேனும் ஆகுமென நினைத்தோம் ஆனால் முதல்வரின் உழைப்பும்,தனி கவனமும், அமைச்சர்களின் அக்கறையோடு கூடிய உழைப்பும், உயரத்திற்கு கொண்டு செல்கிறது.. ஒவ்வொரு செயலும் இந்திய ஒன்றிய அரசியலில் இதுவரை காணாததாய் .. ஒன்றியமே உற்றுபார்த்து வியக்கிறதே .. தமிழகத்தை தலைநிமிர செய்து தமிழகத்தை பெருமைபட வைத்த தலைவர்களின் வரிசையில் தளபதி #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பொன்னென மிளிர்கிறார்..
..
பெருந்தொற்று காலத்தில் மூடபட்ட பள்ளிகள்..  600 நாட்களுக்கு பள்ளிக்கு வரும் செல்வங்களை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் பூங்கொத்துகள் இனிப்பு வழங்கி வரவேற்போம் ..  தேர்ந்தெடுக்கபட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் வாசற்வரை வந்து வரவேற்க வேண்டும் .. இருவாரங்களுக்கு  நம்பிக்கையூட்டும் கதைகள் சொல்ல பணித்திருக்கிறார் முதல்வர் ..  இவரைப்போல் ஒருவர் தமிழகத்திற்கு கிடைத்ததற்கு பெருமைபடுவோம்.. 
வீடுதேடி கல்வி  திட்டத்தை தாய்கழகம் கூட எதிர்த்த போதும் 
நம்பிக்கையோடு பாசிச சக்திகள் நுழைய முடியாதென சொல்லி ஆசிரியர், இடதுசாரி தலைவர்கள் கூட ஏற்றுக்கொள்ள வைத்த தாம் ஆளுமை நிறைந்த தலைவராய் திகழ்கிறார்..
அண்ணாமலை போன்ற அரைகுறைகள் ஊழலென கூப்பாடுபோட  அதை இடதுகையால் நகர்த்திய விதம் .. ஆவின் இனிப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு வாயடைக்க வைத்தார்.. 
..
தமிழ்நாடு தினம் 
சர்ச்சையாகியிருக்கிறது மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்ட நாள் தான் வேண்டும் என்கிறார்கள் .. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கபட்ட பிறகு சில பகுதிகள்  பிரிந்து சில பகுதிகள்  சேர்ந்தது.. மெட்ராஸ் ஸ்டேட்  
என்றிருந்ததை #தமிழ்நாடு என  அண்ணாவால் சட்டமியற்றிய நாளே "தமிழ்நாடுநாள் " அதை தான் தமிழறிஞர்கள் கோரிக்கையாய் வைத்தார்கள் அதை ஏற்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் 
வாழ்க! முதல்வர் 
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
வாழ்க!! தமிழ்நாடு 
..
ஆலஞ்சியார்

Saturday, October 23, 2021

 ஊழலற்ற இந்தியாவை நோக்கி எமது அரசு செயல்படுவதாக பிரதமர் பெருமிதம் கொள்கிறார் .. மேகாலயா ஆளுநர் தனக்கு இரண்டு கோப்புகள் வந்ததாகவும் இரண்டும் முறைகேடானதென்று தமது செயலாளர்கள் சொன்னதாகவும்
 அதில் ஒன்று பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடையவரது மற்றொன்று அம்பானியுடையது .. அம்பானிக்கு கையெழுத்திட்டால் ₹150 கோடி லஞ்சம் தருவதாக சொன்னார்கள் இதை பிரதமரிடம் சொல்லிவிட்டேன் 
வரும் போது 5 குர்தாவோடு வந்தவன் அதோடு வெளியேற எனக்கு தயக்கமில்லை என்கிறார்  ஆளுநர் சத்ய பால் மாலிக்..
..
P.M.Care என்னானது .. எவ்வளவு தொகை வந்தது எங்கே சென்றது அதில் எவ்வளவு செலவு செய்தார்கள் கேட்டால் அதற்கு பதில் இல்லை .. இவர்கள் நேர்மையானவர்களாம்.. 2ஜி வழக்கின் கற்பனைக்கொப்பாத பெருந்தொகையை சொல்லி வீண்பழி சுமத்தி திமுகவை இல்லாதாக்க நினைத்து கடைசியில் கரிபூசியக்கொண்டார்கள் .. சிஏஜி அறிக்கையை காரணம் காட்டியவர்கள் தாங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு நாடாளுமன்றத்திலேயே சிஏஜி அறிக்கையை காரணம்காட்டி குற்றம் சுமத்த கூடாதென  நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொன்னார்.. இவர்கள் தான் ஊழலை ஒழிக்கவந்தவர்களாம்..
உள்துறை அமைச்சரின் மகன் ஒரே ஆண்டில் 200% விழுக்காடு சொத்து மதிப்பு காட்டுகிறார் .. நம்ம A1 ஜெயலலிதா ஒரே மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதியில் ₹கோடிகள் லாபம் காட்டினாரே அதைப்போல.. வெளிப்படையாகவே அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்து தெரிந்தும் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்தியும்  அவர்களை ஆட்சியில் வைத்திருந்ததும் கொலை கொள்ளை வழக்குகள் என குற்றசாட்டு பலமாக வந்தும் ஆதரவுக்காக காப்பாற்றியவர்கள் ஊழலைப்பற்றி பேசுவது தான் கொடுமை..
..
திமுக அமைச்சர் மீது குற்றசாட்டு 
மாண்பிமை செந்தில் பாலாஜி ஆதாரத்தை தரவேண்டும் என கெடுவிதித்தும் Excel சீட்டை தந்து இதுதான் ஆதாரம் என்கிறார் அண்ணாமலை இவர் உண்மையிலேயே IPS படித்தாரா..
போலீஸ் அதிகாரியாக எப்படி செயல்பட்டிருப்பார் என சந்தேகம் வருகிறது இவர் காவல்துறையில் பணிபுரிந்த காலங்களில் நடந்த வழக்குகள் மறுவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் .. அரைகுறைகளும் அரைவேக்காடுகளும் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டுவருகிறார்கள் .. குற்றம் சுமத்தியவர் தெளிவான ஆதாரங்களோடு பேசவேண்டும் ..
தமிழக முதல்வர் மிக தெளிவாக சொல்லிவிட்டார் இந்த அரசு நேர்மையாக செயல்படும் .. வீண்விரயம் தவிர்க்கபடும் (முன்னாள் முதல்வர்கள் படத்தை நீக்கவேண்டாம் வீண்செலவு தேவையில்லை என்றவர்)  என சிறப்பாக செயல்படுகிறார்கள் .. பாலியல் தொல்லைகளும் பாலர்கள் வன்கொடுமைகளும் சர்வசாதாரணமாக நடக்கும் கட்சியில் இருந்துக்கொண்டு .. குற்றபின்னணி கொண்டவர்கள் ஞானஸ்தானம் செய்து கட்சிக்கு சேர்த்துக்கொள்ளும் இவர்கள் தூய்மை நேர்மை பற்றி பேசுவது கொடுமையிலும் கொடுமை..
..
வீரசிவாஜி 1967 ல் தமிழகம் வந்ததாக அதுவும் கல்வெட்டில் இருப்பதாக பேசும் ஞானசூன்யங்கள் நமக்கு பாடமெடுக்கிறது .. அதிமுக ஆதரவில்லாமல் நோட்டாவை கூட தாண்டமுடியாதவர்கள் இன்று அடிமை அதிமுகவால் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவுடன் துள்ளுகிறார்கள்.. 
கோவில் சொத்துகளை ஒரு கூட்டம் மட்டுமே கொள்ளையடிப்பதும் ஏகபோக உரிமை கொண்டாடுவதும், தடுத்து நிறுத்தபட்டிருக்கிறதே .. ஆபரணங்கள் உருக்கி  தங்ககட்டிகளாக சேமிக்கபடும் என்றவுடன் பதறுகிறார்களே எங்கே மாற்றிவைக்கபட்ட போலிநகைகளை தெரிந்துவிடும் என்றா .. அல்லது போலிகளுக்கு பதில் ஒரிஜினலை வைக்கவேண்டும் என்பதாலா .. பாஜக கடவுள் பெயரில் கலவரம் செய்யும் கூட்டம் கொள்ளையடிக்கவும் ஒருசிலரே பதவி சுகம் அனுபவிக்கவேண்டுமென விரும்பும் கூட்டம் .. சிவசேனா சொல்வதைப்போல இந்துக்களால் இந்த நாடு நன்றாக தானிருக்கிறது இந்துத்துவா பேசும் கயவர்களால் தான் கேடுவருகிறது .. 
ஊழல் அநீதி, சுரண்டல் ,பொய், பித்தலாட்டம் ,பாலியல் தொல்லை, பிரிவினை சமூக அநீதி சாதி மதவெறி, 
கயமைத்தனம் இவைகளின் கூட்டுதான் பாஜக .. விரட்டபடவேண்டியது மட்டுமல்ல வேரறுக்கபடவேண்டியது..
#கத்திபேசினால்உண்மையாகிவிடாது .. #நடிப்புகாலத்திற்கும்கைகொடுக்காது 
காலம் அதை செய்யும் 
பன்முகதன்மை கொண்ட இந்திய ஒன்றியம் நிச்சயம் செய்யும்
..
ஆலஞ்சியார்

Tuesday, October 19, 2021

காலம் வலிமையானது ..
வையாபுரிக்கு பட்டாபிஷேகம்..
வரும் 20ந்தேதி நடைபெறுகிறது ..
பட்டாபிஷேகம் என்ற பதம் கூட வைகோ நமக்கு அருளியது ..
யார்வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களின் உரிமை .. கட்சி ஏற்றுக்கொண்டால் நமக்கு கேள்வி எழாது ..மக்கள் மன்றம் ஏற்குமா என்பதை காலம் முடிவுசெய்யுெம்..
..
மாணவரணியில் தொடங்கி கிளை மாவட்டம் என உயர்ந்து படிபடியாக வந்தவரை தன் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்துகிறாரென கேள்வி எழுப்பியவர் .. அதில் கூட மக்கள் மன்றத்தில் தோல்வி வெற்றி இரண்டையும் சந்தித்து தொடர்ந்து உழைப்பை மட்டுமே நம்பிய .. மக்களிடத்திலே சென்று மக்களுக்காகவே உழைத்து .. கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக்கொள்ளாமல்  நேர்மையோடும் நன்னெறியோடும் அரசியலை பயின்று காலம் வாய்ப்பை தரும் என காத்திருந்தவர் தளபதி ..
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரென சொல்லவில்லை .. பகைவர்கள் கூட ஸ்டாலின் அரசியலுக்கு வருவதை இத்தனை அதிகம் எதிர்க்கவில்லை .. இனபகையை கொண்டிருந்த "சோ" கூட உழைப்பில் உயர்ந்தவரென சான்றிதழ் தந்தார் ..  கொள்கை ரீதியான விமர்சனம் வேறு ஆனால் பொதுவாழ்வில் தனக்கானதை தானே உழைத்து தயார் செய்கிறார் என புகழாரம் சூட்டினார்..
..
யாரையும் குறைகூறுவதற்கில்லை ஆனால் ஸ்டாலின் மீது ஏய்த்த அம்புகள் விரக்தியிலும், எரிச்சலோடும் எரியபட்டவைகள் .. அவரின் உழைப்பு நீண்ட அத்தியாயங்களை கொண்டது .. நீண்ட பயிற்சியும் தொடர்ந்து மக்கள் பணியில் ஒய்வில்லா உழைப்பும் கொண்டது .. கலைஞர் மகன் என்ற அடையாளம் தாமதபடுத்தியதே தவிர எப்போதோ அடைந்திருக்கவேண்டிய பதவிகளும் உரிமைகளும் காலதாமதமாகவே கிடைத்தது 
"ஆலமர நிழலில் வளராது " என்ற சொல் ஸ்டாலினுக்கு மிகவும் பொருந்தியது .. எல்லாவற்றையும் மக்கள் தந்தே பெற்றிருக்கிறார் .. வாய்ப்பிருந்தும் கொஞ்சம் சூழ்ச்சி செய்தால் எப்போதோ ஆட்சி பொறுப்பிற்கு வந்திருக்கமுடியும் .. கொள்கையை விட்டுகொடுத்தால் போதும் வாசல் தேடி வாய்ப்பு வரும் ஆனால் நேர்மை .. மக்கள் தந்ததாக இருக்கவேண்டும் அறியணை என்று காத்திருந்து மக்களின் பேரன்பில் பதவியை பெற்றார் .. 
..
மக்களிடம் செல் 
மக்களோடு கலந்துரையாடு 
மக்களிடமே அரசியல் பழகு ..
என்றார் பேரறிஞர் அண்ணா
மக்களுக்கானவர்கள் 
வரலாற்றில் என்றும் போற்றபடுவார்கள் 
வரலாறு போற்றும் நம்தளபதி
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, October 13, 2021

நற்சான்று 
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக வரலாறு காணாத வெற்றிக்கண்டிருக்கிறது .. உழைப்பு உண்மை நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ..
..
தளபதி.ஸ்டாலின் 
சொல் செயல் இரண்டிற்கும் பொருளாய் விளங்குகிறார் .. சொன்னதை செய்வதும் இந்த ஆட்சி நமது ஆட்சியென பிரகடனபடுத்தி நல்லாட்சியை தந்ததற்கு மக்கள் வழங்கிய நன்றி அறிவிப்பு..  இந்திய ஒன்றியமே வியப்போடு நோக்கி நிற்கிறதே அதற்கு மக்கள் சொன்ன சந்தோஷ மொழி ..
இப்படியொரு தலைவனை இத்தனை காலம் தவிர்த்ததற்கு கண்ணீரோடு நன்றி சொல்லி நானிலம் போற்றும் பரணி பாடிய நல்பாட்டு .. தேர்தல் வெற்றி என்பதை இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதில்லை .. மக்களின் மனம் கொண்டாடுகிற தலைவனை .. இங்கே எக்காரணம் கொண்டும் பாசிசதற்கு அனுமதியில்லை என்பதை உறுதிபடுத்தி மக்கள் தங்களின் மகத்தான தலைவன் பின்னால் அணிவகுத்திருப்பதின் அடையாளமாய் விளங்குகிறது ..
..
தமிழகத்தை சாதியைச்சொல்லி பிரித்துவிடலாம் மதத்தைச் சொல்லி மக்களை வன்முறைக்கு இட்டுசெல்லலாம் என்ற நாக்பூரின் கனவை சிதைத்து இங்கே அறிவின் அடிச்சுவட்டை பின்பற்றி சமூகநீதியை காத்து நிற்போம் என செய்தி சொல்லியிருக்கிறார்கள்.. எத்தனை திட்டங்கள் குறுக்குவழியில் அதிகாரத்தை அடைவோம் .. மெல்ல மெல்ல மக்கள் மனதில் விசத்தை விதைப்போம் என்ற பெரும்சூழ்ச்சியறிந்து மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் ..
தெளிவாக நல்லாட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் இது ..
திராவிடத்தை வீழ்த்த மொழியை மதத்தை சாதியை தூண்டி கலவரமூட்ட வந்தால் அடிவிழும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் .. அடிமைகள் இனி எழவே முடியாதவாறு புதைக்குழியில் வீழ்ந்து கிடப்பது அந்தோ பரிதாபம்..
..
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 140 ல் 138 வென்றிருக்கிறது .. ஜனநாயகத்தில் வன்விஜயம் கூட ஆபத்தென்ற மொழி உண்டு ..அதிமுக சரியான தலைமையை தேடவேண்டும் .. எடப்பாடி பன்னீர் இருதுரோகிகள் இனம்காட்டியிருக்கிறார்கள் மக்கள் .. சரியான தலைமையில்லாமல் போனால் அது பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணைபோகும் எச்சரிக்கை.. கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை என ஜெயா சொன்னார் ஆனால் உண்மையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரியே இல்லாத நிலையை தன் செயல்பாட்டால் தன் தலைமை தரும் நல்லாட்சியால் செய்துகாட்டியிருக்கிறார்..
..
திமுக புறவாசல் வழியாக வெற்றிபெற்றிருப்பதாக பழனியும் பன்னீரும் கூட்டறிக்கையில் சொல்கிறார்கள் .. பாவம் பழக்கதோசம் கூவத்தூரிலும் தவழ்ந்தும் புறவாசல் வழியே ஆட்சிக்கு வந்தவர்களுக்கு நேர்மையோடு தேர்தலில் நின்று வென்று மக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்திருக்கும் தளபதியாரைப் பற்றி பேச அருகதையில்லை ..
திமுக ஜனநாயக பேரியக்கம்..
அதிமுகவைபோல துரோகத்தால் வளர்ந்த இயக்கமல்ல..
..
திமுக தமிழகத்தின் நம்பிக்கை..
திமுக தமிழர் நலனுக்கானது..
தமிழர்களுக்கானது.. 
..
ஆலஞ்சியார்

Tuesday, October 5, 2021

எப்படி மனம் வந்தது.. போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது கார் ஏற்றி கொல்ல.. எத்தனை வன்மிருந்தால் இதை செய்வார்கள்.. பாஜக முதல்வர்கள் கொடூரமான மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .. மனித உயிர் இவர்களுக்கு அத்தனை கேவலமா .. காந்தியையே சுட்டுக்கொன்ற பாவிகள் கூட்டம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்திய ஒன்றியம் முகம் கருத்துநிற்கிறது ..
..
ஒன்றிய பிரதமர் அவர்களே
ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றும் கொல்லும் காணொளி அதிர்ச்சியை தரவில்லையா .. இன்னமும் அவர் அமைச்சராக தொடர்வது என்ன நியாயம் .. குறைந்தபட்சம் இரக்கம் கூட இல்லையே.. மதவெறியும் முட்டாள்தனமும் பாஜகவின் பலமென்று நிற்கிறீர்.. அறுதிப்பெரும்பான்மை எதையும் செய்யலாம் .. யாரும் கேட்ககூடாது என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் .. ஜனநாயகம் வீறுகொள்ளும் போது இருந்த சுவடே தெரியாமல் அழிக்கபடும் அபாயம் இருப்பதை உணரவில்லை.. பொய் பித்தலாட்டம் ஒலிபெருக்கி முன் வீராவேசம், கூச்சபடாமல் திரும்ப திரும்ப
பொய்யை சொல்லி மக்களை திசை திருப்பும் கைங்கரியம் நீண்டநாள் கைக்கொடுக்காது பிரதமரே..
உ.பி.விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றிக்கொண்ட செயல்கண்டும் அமைதி காத்தால் செத்த பிணத்திற்கு சமம் என ராகுல் சொல்கிறார்.. பிணமாக இருக்க போகிறீரா..
..
நீண்ட போராட்டம்..
நாட்டின் முதுகெலும்பு என காந்தியார் சொன்ன விவசாயிகள் தெருவில் நிற்கிறார்கள்  ..நாட்டின் பிரதமர் யார் யாரையோ பார்க்க நேரம் ஒதுக்குகிறார் .. நள்ளிரவில் புதிய நாடாளுமன்ற  கட்டிடத்தை ஆய்வு செய்கிறார் விமானத்தில் பறந்து கொண்டு பைல் பார்க்கிறார் என போட்டோகிராபரை தூங்கவிடாமல் வேலை வாங்கும் பிரதமர் .. 20 மணி நேரம் உழைப்பதாக சங்கிகள் கதையளக்கிறார்கள் ஆனால் நடுத்தெருவில் நின்று போராடும் விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை 
..
நாடு கேடுகெட்டவர்களின் கையில் மதத்தை மூளையில் ஏற்றி தாண்டவமாடுகிறார்கள் பொய்களால் கட்டிய கூடு என்பதை உணருவதில்லை அதிகாரம் ஆணவம் கொள்ள செய்கிறது .. அகிம்சையை போதித்த தேசம் இன்று ஹிம்சை செய்கிறது .. அறிவுஜீவிகள் கொல்லபட்ட போதே இவர்களை விரட்டியிருக்கவேண்டும் .. கயவர்கள் கொலைகாரர்கள் மதவெறியர்கள் சாதிவெறியர்கள் கூடாராமாய் ஆட்சியாளர்கள்.. இந்திய ஒன்றியம் எதை நோக்கி செல்கிறது சகிப்புதன்மை சமநீதி எல்லாம் காணாமல் போனது .. மாட்டை காக்க காப்பகங்கள் செய்ய தயார் ஆனால் மனிதனை கொல்வோம் மதம் பெயரில் மாட்டின் பெயரில் என்றால் நீங்கள் மூளை மழுங்கியவர்கள்..
..
சர்வாதிகாரத்தை வீழ்த்த எதிரணிகள் ஒன்றிணைய வேண்டியது கட்டாயம் .. 
பாசிசத்தை வேரறுக்க வேண்டியது நமது கடமை ..
நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நாட்டிற்கு பாசிச வளர்க்கும் நாடகமாடும் மோடிகள் தேவைஇல்லை ..
நாசகார சக்திகளை வீழ்த்த ஸ்டாலின்களே தேவை ..
..
ஆலஞ்சியார்