திமுக ..
தெளிவான பயணம் செய்கிறது
ஆட்சியென்பது தமக்கு வழங்கபட்ட பொறுப்பென்பதை உணர்ந்து யாருக்கும் எவருக்கும் சிறிதுகூட தீங்கிழைக்காத ஆட்சி அதிகாரம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பது தெரிகிறது ..
உரிமை மறுக்கபட்டவரை அழைத்து அருகில் அமர்த்தி உண்ணும் அழகு தெளிவான செய்தியை சொல்கிறது .. கோவில் குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ சமூகத்திற்கோ சொந்தமானதல்ல .. நம்பிக்கையுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் கும்பிடலாம் "அன்னமிடல்" சாதி மதம் பார்க்காது எளியவர் ஏற்றபெற்றவர் என அறியாது அனைவருக்குமானதென சமூகநீதியை சமநீதியை உரக்க சொல்வதோடு அனைவருக்கும் மௌனமாய் எச்சரிக்கை செய்திருக்கிறது ..
..
கடந்த பத்தாண்டாய் பாழான தமிழகத்தை சீர்செய்ய சில ஆண்டுகளேனும் ஆகுமென நினைத்தோம் ஆனால் முதல்வரின் உழைப்பும்,தனி கவனமும், அமைச்சர்களின் அக்கறையோடு கூடிய உழைப்பும், உயரத்திற்கு கொண்டு செல்கிறது.. ஒவ்வொரு செயலும் இந்திய ஒன்றிய அரசியலில் இதுவரை காணாததாய் .. ஒன்றியமே உற்றுபார்த்து வியக்கிறதே .. தமிழகத்தை தலைநிமிர செய்து தமிழகத்தை பெருமைபட வைத்த தலைவர்களின் வரிசையில் தளபதி #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பொன்னென மிளிர்கிறார்..
..
பெருந்தொற்று காலத்தில் மூடபட்ட பள்ளிகள்.. 600 நாட்களுக்கு பள்ளிக்கு வரும் செல்வங்களை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் பூங்கொத்துகள் இனிப்பு வழங்கி வரவேற்போம் .. தேர்ந்தெடுக்கபட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் வாசற்வரை வந்து வரவேற்க வேண்டும் .. இருவாரங்களுக்கு நம்பிக்கையூட்டும் கதைகள் சொல்ல பணித்திருக்கிறார் முதல்வர் .. இவரைப்போல் ஒருவர் தமிழகத்திற்கு கிடைத்ததற்கு பெருமைபடுவோம்..
வீடுதேடி கல்வி திட்டத்தை தாய்கழகம் கூட எதிர்த்த போதும்
நம்பிக்கையோடு பாசிச சக்திகள் நுழைய முடியாதென சொல்லி ஆசிரியர், இடதுசாரி தலைவர்கள் கூட ஏற்றுக்கொள்ள வைத்த தாம் ஆளுமை நிறைந்த தலைவராய் திகழ்கிறார்..
அண்ணாமலை போன்ற அரைகுறைகள் ஊழலென கூப்பாடுபோட அதை இடதுகையால் நகர்த்திய விதம் .. ஆவின் இனிப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு வாயடைக்க வைத்தார்..
..
தமிழ்நாடு தினம்
சர்ச்சையாகியிருக்கிறது மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்ட நாள் தான் வேண்டும் என்கிறார்கள் .. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கபட்ட பிறகு சில பகுதிகள் பிரிந்து சில பகுதிகள் சேர்ந்தது.. மெட்ராஸ் ஸ்டேட்
என்றிருந்ததை #தமிழ்நாடு என அண்ணாவால் சட்டமியற்றிய நாளே "தமிழ்நாடுநாள் " அதை தான் தமிழறிஞர்கள் கோரிக்கையாய் வைத்தார்கள் அதை ஏற்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்
வாழ்க! முதல்வர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
வாழ்க!! தமிழ்நாடு
..
ஆலஞ்சியார்