Wednesday, February 11, 2026

காமராஜர் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்சம் கூட குறையவில்லை.. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கடமையை சரியாக செய்தோம் அரசியலைத் தாண்டி அந்த மனிதர் மீதான பார்வை கண்ணியம் மிக்கதாக இருந்தது.. ஆனால் காமராஜர் காங்கிரஸிருந்து விலகிச் சென்ற பின் அவரை மிக கரிசனத்தோடு திமுக தலைவர்கள் காத்தார்கள் என்பதுதான் உண்மை..
..
இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு (இப்போதெல்லாம் காங்கிரஸ்காரர் இருக்கிறார்களா என கேட்க வேண்டாம்) காமராஜை கூட சரியாக படிக்காமல் அல்லது புரியாமல் வந்திருக்கிறார்கள்..
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது இனியும் அவரை விட்டு வைத்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாதென தீர்மானித்த பெரியார் குடியாத்தத்தில் நிறுத்தி வெற்றி பெற செய்தார் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க  துவங்கிய காலமது ஆனால் அண்ணா குணாளா,குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. இன்றைக்கு சாதிக்குள் அடைக்க நினைக்கும் நாடார்களுக்கு தெரியுமா.. பெரியார் குடியாத்தத்தில் நிற்க சொன்ன போது காமராஜர் அங்கே முதலியார்களும் முஸ்லிமானகளும் தானே அதிகம் என்னைப்போல மிகவும் பிற்படுத்தப்பட்பவனை தேர்வு செய்வார்களா என்றார் எப்படி ஜெயிக்க வேண்டுமென எனக்கு தெரியும் என்றவர் பெரியார்..
..

No comments:

Post a Comment