Saturday, August 17, 2024

கலைஞர் நாணயம்.. 
நா நயத்தோடு சிலம்பமாடிய
தலைவனுக்கு 
இந்திய ஒன்றியம் நாணயத்தை வழங்கி சிறப்பிக்கிறது..
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்பட வேண்டுமென வாழ்வின் இறுதிவரை எப்படி போராட வேண்டுமென போதித்த பெருந்தலைவன்.. 
..
அரசியலில் பொதுவாழ்வில் புதிய இலக்கணம் படைத்து புதிதாய் வருவோருக்கு பாடமாய் அமைந்து வரலாறாய் திகழும் மகத்தான மனிதன்.. எதிரிக்கும் பகைமை கொண்டு அலைந்தோர்க்கும் சேர்த்தே உழைத்தவன்.. சிலரின் வசைகளும் திசைமாறி சென்ற பறவைகளின் எச்சங்களும் இவனை அசிங்கபடுத்த நினைத்து அவமானப்பட்டு நின்றதை காலம் நமக்கு கணக்கிட்டு காட்டியது ..  இறந்து கிடந்தபோதும் கூர்வாளோடு திரிந்த பாசிசத்தை வென்றவன்.. 
..
தமிழ்நாடு கண்ட சிறந்த தலைவர்களில் "தகைசால்" தலைவன்.. 
பகையும் அஞ்சியது 
இவன் படையோட்டம் கண்டு 
புயலாய் தென்றலாய் 
ரீங்காரமிடும் குயிலாய் 
தேன்மதுரத் தமிழில் இவன் பாடியது கண்டு ஆடியது தமிழர் கூட்டம்..
பகை மறந்து ஆடிவரும் உண்டு.. 
பஞ்சமாபாதகனும் இவன் 
மகுடிக்கு மயங்கியதுண்டு..
..
பொதுவாழ்வில் இவன் ஆட்டம் கண்டு
பதறியது எதிரிகள் கூடாரம்
எந்த கல்லூரியில் படித்தான் ராமன் என்ற வீச்சில் விழுந்தது  மொத்தமும் ..
நேர் நின்றால் மயங்கிவிடுவேன்  என பாதை மாற்றியவர்கள் உண்டு 
இந்த வசீகரனை கண்டு..

பசித்தவன், பாமரன், நடுங்கியவன் ,
நாதியற்றவன், நசுக்கப்பட்டவன்,
நிலை உயர நா நயத்தோடும் நாணயத்தோடும் (honest) உழைத்தவனுக்கு இந்திய ஒன்றியம் நன்றிக்கடன் செலுத்துகிறது..
#கலைஞர்நாணயம்
#தமிழ்வெல்லும்
..
ஆலஞ்சியார்
நான்..
யார் என்பதை 
நான் தான் சொல்ல வேண்டும் 
ஊர் சொல்ல தொடங்கும் போது
அழ நேரிடும்
..
என் உயரம் எனக்கு தெரிய வேண்டும்.. 
இல்லையெனில் 
வீழ்ச்சி தொடங்கும் ..
படைவீரர்களின் கால் நரம்பை துண்டித்துவிட்டு 
"ராஜா" படையோட்டம் நடத்த முடியாது..
கூட இருந்தவர்களை ஒவ்வொன்றாய் இழந்தால் 
பலவீனப்படும்
..
குறைகள் இல்லா எதுவுமில்லை 
குறைகளை உணராதவன் 
உயர்வதில்லை 
அகந்தையும் கர்வமும் 
அழிவின் தொடக்கம்..
நீ.. 
யாரென்று நீதான் தீர்மானிக்க வேண்டும்
..
ஓடும் பாதை மட்டுமே 
கண்ணில் தெரிந்தால் 
வெற்றி எளிதாகும் 
கூட 
ஓடுகிறவனை 
பார்த்துக்கொண்டே இருந்தால் பயம் வரும்.. 
தோல்வி வரும்
நடுக்கம் வரும்..

..
அடுத்தவன் திமிரில் 
முறுக்கி திரிந்தால் 
கால் நடுங்கதான்  செய்யும் 
உன் பலமறிந்து விளையாடினால் 
"பக்கபலம்" தானாய் வரும்..
நான் யாரென்பதை 
நான் தான் தீர்மானிக்க வேண்டும்..
..
நான் யார் என்பதை 
நானே முடிவு செய்து
என்
பலமறிந்து விளையாடினால் 
ஜெயிக்கிறனோ,இல்லையோ 
ரசிக்கும்படியாக இருக்கும்..
நீயே 
ரசிக்கும்படியாக இருக்கும்
..
சூழ்ச்சிகள் புத்திசாலித்தனமில்லை 
அழுகை வீரமில்லை..
அகந்தை வாழ்வதில்லை
அடக்கம் தாழ்வதில்லை 
அன்பு  வீழ்வதில்லை 
நீ..
யாரென்று..
..
அது சரி நான் யார்..?
காலம் சொல்லும்
..
ஆலஞ்சியார் 

 


Tuesday, August 6, 2024

கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, August 1, 2024

ஆந்திரம் இஸ்லாமியர்களுக்கு 5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் செல்லாது என்றது.. தமிழ்நாடு இஸ்லாமியர்களுக்கு 3.5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது..  அதிமுக வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீடு தந்தது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.. அருந்ததியர்களுக்கு 3% உள்விழுக்காடு திமுக தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என தீர்ப்பை தந்திருக்கிறது.. பீகாரில் இட ஒதுக்கீட்டை 65%ஆக உயர்த்தியதை ரத்து செய்தது.. 
..
காரணம் திராவிடம் எதையும் சரியாக அலசி ஆராய்ந்து சட்டத்தின் நிறை குறைகளை ஆய்ந்து எதுவெல்லாம் சட்டத்திற்கு உட்படும் என்ற தெரிந்து வரையறுத்து சட்டவடிவை தயாராக செய்து சம்பந்தபட்ட துறையின் அனுமதியைப் பெற்று சடட்மியற்றும் அதனால் தான் கலைஞர் கொணடு வந்த சட்டங்கள் செல்லுபடியாகின்றன.. ஏனோதானோ என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டால் அதிமுக அவசரகதியில் கொணடுவந்த "நாடக ஒதுக்கீடு" போல் ரத்து செய்ய நேரிடும்..
..
ஆந்திராவில் 5% விழுக்காடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்தபோது சிறுபான்மையினர் இஸ்லாமிய கிருஸ்துவ,ஜெயின் சமூகத்தை இணைத்து பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு பரிந்துரைக்கு அனுப்பி 8%விழுக்காடு வரை தரலாம் என்ற பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்க இஸ்லாமியர்களுக்கு 3.5% கிருஸ்துவர்களுக்கு 3.5% ஜெயின் சமுகத்திற்கு 0.5% என ஒதுக்கினார் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வியந்தது .. OBCஇட ஒத்க்கீட்டில் வன்னியர்களோடு இன்னும் 19 பிரிவினரை சேர்த்து வழங்கிய போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை கவனிக்க வேண்டும் 13%முதல்15.5% வரை வன்னியர்கள் பயனடைந்தார்கள்..
எதையும் ஆய்ந்தறிந்து திறம்பட செய்வதில் கலைஞரை மிஞ்சிய எவரும் இல்லை.. அதனால் அவர் தொட்டதெல்லாம் வென்று நிற்கிறது .. எந்தவொரு  சமூகத்திற்கு தரும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் முதலில் எதிர்ப்பது பாஜக தான் நேரடியாகவே மறைமுகமாகவோ அதை எதிர்ப்பார்கள் .. முஸ்லீம்கள் உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்பாரியே வைத்தார்கள் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு சிலரை தூண்டிவிட்டும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பாஜகவினர் ஆனால் இன்று "ஜெய்சிரிராம்" புகழ் முருகன் பிரதமர் சமூகநீதி காவலர் என சொல்கிறார் சொந்த புத்தியோ நன்றியுணர்வோ இல்லாதவர் தான் சார்ந்த அருந்ததியர் இனத்தின் விடியலுக்கு காரணியாக ஆனவர் கலைஞர் என்று தெரிந்தும் அதை மறைத்து தமிழ்நாடு தந்த உள் ஒதுக்கீடென கடந்து போகிறார் ..இவர் அதிகம் விரும்பும் "மீனாட்சியே" இதை கண்டு நகைப்பாள்..
..
தலையிலும் கையில் மலத்தை அள்ளும் இவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை தலையில் தூக்கி ஆடுகிறேன் பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் "பகுத்தறிவு" துணைக்கொண்டு என்ற பேரருளாளன் கலைஞரை இந்த நேரத்தில் ஆதி தமிழர் அருந்ததியர் மட்டுமல்ல அனைவரும் கொண்டாட வேண்டும்.. எத்தனை உன்னதமான சிந்தனை செயல் தமிழர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாய் வாழ்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் உயர்விற்கு காலமெல்லாம் உழைத்த உன்னத தலைவர் கலைஞர் ..
..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற குறளின் பொருளாய் விளங்கிய "பெருமானை" இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.. 
..
வாழ்க! எம்மான் கலைஞர் 
வாழிய !! கலைஞர் புகழ் !!! ..
..
ஆலஞ்சியார்