Sunday, October 29, 2023

திராவிடம்..

திராவிடம் என்னவென்று தெரியாதவரெல்லாம் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருப்பது எவ்வளவு அசிங்கம் .. அதிமுக ஆரம்பித்தபோது கலைஞர் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. சிங்கத்திற்கு முன் "அ" சேர்த்தால் வருவதுதான் ..  

..

அறிவுடை இயக்கமாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மகோரா எனும் சாயபூச்சுகாரனின் அலங்கோலத்தால் மக்களின் கேளிக்கை மயக்கத்தில் மதியிழந்து நின்றதால் இன்றைய அவலங்களுக்கு நாமும் சாட்சியாகிறோம்.. இனப்பகைவர்கள் கூட நம் அறிவின் முன் மதிமயங்கி நின்றதெல்லாம் காலம் நமக்கு போதித்திருக்கிறது.. எதையும் அறிவுக்கொண்டு பார் எனச் சொல்லி வளர்ந்த தமிழர்கள் இன்று அறிவிலிகளால் தலைக்குனிவை நேரிடும் அவலம்.   திராவிடம் ஆரியம் அதெல்லாம் புராணத்தில் வரும் என உளறிவைத்து தன்னை தற்குறியாய் அடையாளப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி

..

திராவிடம் இந்த மண்ணின் இனம்.. இந்தியாவிற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில் தமிழர்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என அண்ணல் அம்பேத்கர் சொன்னதையாவது படித்திருக்கிறாரா.. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என மம்தாவிற்கு இருந்த புரிதல் கூட பழனிசாமிக்கு இல்லாமல் போனதேன்.. திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்திலேயே இருப்பது கூட இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாதா.. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவன் என பெருமைபேசிய பழனிக்கு திராவிடம் ஆரியம் என்றால் தெரியாதா..  அண்ணாவின் "ஆரியமாயை" யாவது தெரியுமா..  

..

திராவிட  இயக்க வரலாறு தெரியுமா.. இதெல்லாம் இவரைச் சொல்லி என்ன பயன்.. அதிமுக நிறுவனர் மகோரா எனும் எம்ஜிஆருக்கே தெரியாதே.. அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் அமரும் இலைகள் .. கலசமாகாது..  ஆரிய திராவிட போர் ஈராயிரம் ஆண்டு வரலாறும் கொண்டது .. பழனி போன்றவர்கள் திராவிட இயக்க வரலாறு தொகுப்பை  படிக்க வேண்டும் ..

வரலாறு தெரியாதவர்கள் விவரகேடுகள், வழிதவறிய பாதையில் இனியேனும் திராவிடம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே.. பெரியாரை பேரறிஞரை, திராவிட இயக்க முன்னோடிகள் படியுங்கள்.. இல்லையெனில் அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆரிய அடிவருடிகளாக இருங்கள் 

..

ஆலஞ்சியார்

 

Saturday, October 7, 2023

படிப்பு முக்கியமில்லை என்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் .. படிக்காமல் உயரலாம் அதிக பணம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டுவார்கள் நம்பாதீர்கள் .. முதலில் ஆன்மீகவாதிகள் அப்புறம் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் திரியும் மூடர்கள் தொடர்ந்து தமிழ் தேசியம் பிள்ளைகள் உளற தொடங்கியிருக்கிறார்கள் .. காமராஜர் படித்தாரா என கேள்வி எழுப்புவார்கள் அவர்தான் பள்ளிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தான் ராஜகோபாலச்சாரி எனும் பாசிசவாதியால் மூடப்பட்ட பள்ளிகளை திறந்து படிக்க வைத்தார்.. கலைஞர் பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்பார்கள் ஆனால் அவரின் படைப்புகள் பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முனைவர்கள் உருவானார்கள் ..
..
படிக்காதே என்று சொன்னால் எச்சரிக்கையாய் இரு.. அவன் உன் இடத்தை அபகரிக்க முற்படுகிறான்.. எங்கே நமக்கு சமமாக வந்து விட்டாானே என்ற கோவம் அவனை இப்படி பேச சொல்கிறது .. படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பான் நம்பாதே தொடர்ந்து முயற்சி நிச்சயம் கிடைக்கும்.. படித்த வேலை கிடைக்காதென்பான் நம்பாதே கிடைத்த வேலையில் புதிய அறிவும் அனுபவமும் கிடைக்கும் .. 
..
மாடு மேய்த்தால் வருமானம் அதிகம் என்பான் ஆனால் அவன் வீட்டு பிள்ளைகளை abroad 
ல படிக்க வைப்பான்.. விவசாயம் பார் பொட்டிகடை வை என்பான் அவன் குழந்தைகள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும்.. 
கல்வி தான் உன் பேராயுதம்.. உன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பாசிச / மடைமைவாதிகளுக்கும் உன் கல்வியறிவு மட்டுமே இடைஞ்சலாக இருக்கிறது அதனால் தான் கதற தொடங்கியிருக்கிறது .. அப்பன் தொழிலை பார் என "விஸ்வகர்மா "உன் குறையை தீர்க்குமென ஆசைகாட்டி காலகாலமாய் குலத்தொழிலில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆபத்தானவரகள் நம்பாதே ..
..
இது ஒருவகையான சூழ்ச்சி, ஒருவகை மூளைச்சலவை , படிக்காமலே பணக்காரனாகலாம் எனச் சொல்லி உன் சந்ததியை மடையர்களாக்கும் மந்திரம்.. மயக்கம் தரும் இச் சலவையின் முடிவு கிழிந்த நிலையை தந்துவிடும்.. எவன் தடுத்தாலும் படி.. என்ன வழியில் சொன்னாலும் உன் கல்வி மட்டுமே உன்னையும் உன் சந்ததியினரம் கரை சேர்க்கும்
..
கல்வியே பேராயுதம் ..
கல்வியே ஒளி தரும் விளக்கு..
கல்வியே விடியலுக்கு முதல் கூவல்
..
ஆலஞசியார்

Wednesday, October 4, 2023

அன்பு நண்பர் இக்பால்.. 
அஸ்ஸலாமு அலைக்கும்  
இன்று இரவு அரசு அய்யா அவர்களும், ஆசிரியர் பெருந்தகை ஜலீல் அவர்களும் நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களும், என் இல்லம் வந்து சிறப்பித்தனர்..  முதற்கட்டமாக 250  பிரதிகள் அர்த்தமுள்ள திராவிடம் " நூலை கொண்டு வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.. நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம்.. நல்ல பயனுள்ள பொழுதாய் அமைந்தது..
..
இன்று அர்த்தமுள்ள திராவிடம் நூலாக வருவதற்கு பெரும் காரணியாக இருந்த தங்களின் செயல், பெரும் பெருட்செலவை ஏற்ற
தங்களின் தயாள குணம் 
நன்றிகளால் நிரப்பிட முடியாது ..
தாங்கள் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்டு பேரன்பிற்கு நன்றி!.. தொடர்ந்து தமிழ் சேவை செய்திட வேண்டி விழைகிறேன்.. 
..
நன்றிகள் 
.. 
அன்பின்
ஆலஞ்சியார்
அனைவருக்கும் வணக்கம்

பெரியார் வழியில் கலைஞர் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்
..
பேராசான் வழியில் கலைஞர் ..
தான் கொண்ட கொள்கை வழியில் நின்று சமத்துவம், சமூகநீதி பெண்ணுரிமை என தமிழ் நாட்டில் மாபெரும் புரட்சி செய்தார் ..
பெண்களின் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தாருங்கள் என்றார் பெரியார்.. உங்கள் வீட்டில் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார் உங்கள் ஊரில் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார் அதைதான் கலைஞர் பெண்களின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கட்டணமில்லா கல்வியென்றார், எட்டாவது படித்திருந்தால் திருமண உதவித்திட்டம் என தொடங்கி அதை 12 வது என உயர்த்தி பெண் குழந்தைகளின் கல்விக்கு வழி வகுத்தார் 
..
ஐந்து கிலோ மீட்டரில் நடுநிலைப்பள்ளி, தாலுக்கா தோறும், கலைக்கல்லூரி மாவட்டந்தோறும் தொழில்ஙட்ப, மருத்துவகல்லூரிகள் கண்டார்..
அதுமட்டுமா
 ஒடுக்கபட்டோரில் குரலாய் நின்று கல்வி வேலைவாய்ப்பில் விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வழி வகுத்தார்.. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியின் காரணகர்த்தா கலைஞர் நவீன தமிழகத்தின் சிற்பி .. 
நூற்றாண்டு காணும் கலைஞர் புகழை பாடுவோம்..