Monday, April 29, 2024

 சனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வேடபாளர்களை விலைபேசுவதும் மிரட்டுவதுமாய் தன் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது  பாஜக..
..
மிரட் தொடர்ந்து இந்தூர் .. காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் இதில் காங்கிரஸும் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.. வேட்பாளர் தேர்வில் அதீத எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.. தேர்தல் தொடங்கிய போது 400 என்றவர்கள் மெல்ல உண்மை நிலை அறிந்து பதறுவதும் தன்நிலை மறந்து செயல்படுவதும் அரசியல் சூதாட்டத்தில் இறங்குவதும் அப்பட்டமான பயத்தின் வெளிபாடு..
..
இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் பிரதமராவார் என உள்துறை அமைச்சரே சொல்ல தொடங்கியிருப்பது கள நிஜம் பயமுறுத்தியிருக்கிறது.. எத்தனை சனநாயக வழிகளை அடைத்தாலும் புதிய வழியே உருவாக்கி சனநாயகம் மலரும் காரணம் மக்கள் சக்தி என்பது மகுடத்தை காலில் போட்டு மிதிக்கும் வலிமை கொண்டது .. விரல் கொண்டு புதிய புரட்சியை செய்யும் ஆற்றல் உண்டு .. மக்கள் மௌனமாய் அதிகார மோகத்தில் ஆடுவோரை சாய்த்து விடுவார்கள்.. 
..
எத்தனை தில்லுமுல்லு அதிகார மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் கோபம், அனைத்து அரசுதுறையும் வசப்படுத்தி எதிர்க்கட்சிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாலும் சனநாயகம் உயிர்த்தெழும்.. காரணம் இந்திய ஒன்றியம் சனநாயக வல்லமைக் கொண்டது .. சாமானியனே இங்கே அதிகாரம் கொண்டவன் அவனை அடித்தமர்த்த முடியாது .. பத்தாண்டுகள் தந்த வாய்ப்பை பாழாக்கிவிட்டு புதிய வேஷம் கட்டினால் நம்ப மாட்டார்கள் .. 
..
பாஜகவின் வீழ்ச்சி தொடஙகிவிட்டது.. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது .. தனிமனித துதிப்பாடல் எதிர்க்கட்சிகளை முடக்கும், மிரட்டல், சர்வாதிகாரம் தோரணையில் கதைப்பது மதத்தை கையில் எடுத்தாடியது, பிற மதத்தின் நம்பிக்கையை ஒடுக்க முயன்றது, எதை உடுத்த வேண்டும் உண்ண வேண்டும்  எழுதப்படாத சட்டமியற்றியது  என தொடர்ந்து அதிகார அச்சுறுத்தல்கள் மக்களை வேறு பாதை தேட செய்தது.. 
..
இனி சனநாயகம் மலரும்
..
ஆலஞ்சியார் 
தேர்தல் 2024 ..
மிகப் பெரிய சனநாயக நாட்டின் அதிகாரத்திற்கான போட்டி.. ஒவ்வொரு சாமானியனும் தன் வலிமையை உணர்த்துகின்ற தேர்தல்.. உங்கள் உரிமையில் தலையிடுவதல்ல நோக்கம் மாறாக சிலவற்றை ஞாபகபடுத்துவது தேவை என்பதால் இந்த பதிவு ..
..
கடந்த பத்தாண்டுகள் சனநாயக மரபுகள் மீறபட்டும் சர்வாதிகார எல்லையில் நின்று திமிரோடு தோள் உயர்த்தி இங்கே நானே யோக்கியன் என கூவும் மனிதர் மிகப் பெரிய பொய்யர்.. தன் கல்வி சான்றிதழிலேயே அவரின் முகம் நமக்கு தெரிந்துவிட்டது .. மக்களை மூளைச்சலவை செய்தால், மக்கள் மனதில் மதத்தை ஏற்றி வைத்தால், அவதார புருசரென புழுகினால் நம்பிவிடுவார்கள்  என்ற பழைய பாட்டை திரும்ப திரும்ப பாடி வரும் 
ஏமாற்றுக்காரன் ..
..
மக்கள் தரும் வரிப்பணம் சிலருக்கான தள்ளுபடியில் கரைவதும் தொடர்ந்து மக்கள் பிழியபடுவதும் உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலையில் கொள்ளை நடப்பதும் கண் கூடாக பார்க்கிறோம்.. சில முதலாளிகளுக்காக சிறு தொழில் முனைவோர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு முதலாளியாக இருந்தவன் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தும் அவலத்தை உருவாக்கியவன் நல்லவன் வேஷம் கட்டுகிறான்.. இங்கே ரௌடிகள் நல்லவனாகவும், கொள்ளையடித்தவன் பாஜகவில் சேர்ந்தால் புனிதராகவும் நொடியில் மாற்றபடும் விந்தை வேறெங்கும் கேட்டிராது, கண்டிராதது.. 
..
நமக்கானவர் யார்.. பலவேஷம்கட்டி பொய்யில் மூழ்கி பழங்கதை புரட்டைபேசி கடைசியில் சாதிமதவெறியை தூண்டும் அயோக்கியர்கள் அல்ல..மாறாக எளிமையாய் அனைத்து மக்களுக்காக பரிந்துபேசி துயர் துடைக்க ,அல்லல்படுவோர் ஆதிக்கத்தால் நசுக்கபடுவோர் விளிம்புநிலையோர், ஏழை எளியவர் வாழ்க்கை தரத்தை உயர்த்த சனநாயக மாண்புகளை மதிக்கும் நல்ல தலைவர் வேண்டும்.. நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை நம்மில் விதைக்கும் நல்லவர் வேண்டும்.. 
..
பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து 
தேசத்தை காக்க நம் விரல் கொண்டு போர் செய்வோம்.. பொய்யர்களை, PMCare என்ற பெயரில் நவீன கொள்ளையை, ஊழல் செய்தோரை புனிதபடுத்தி ஊழலை ஒழிக்கும் "மாமனிதரை" வீட்டுக்கு அனுப்புவோம்.. குடியரசு தலைவரையே நிற்க வைக்கும் தீண்டாமையை விரட்ட.. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம் 
I N D I A கூட்டணியை அரியணையேற்றுவோம்..  
..
சூன் 4ல் விடியும்..
..
ஆலஞ்சியார் 

Monday, April 15, 2024

இஃப்தார்.. Iftar..
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்போதெல்லாம் தற்பெருமை பேசும் நிகழ்வாய் மாறிப்போனது.. இயலாதோர்,  பணிச்சுமையில் சமைக்க முடியாதோர்,வழிப்போக்கர், வழியில்லாதோருக்கானது  இப்போது தங்களின் பொருளாதார பலத்தை தங்கள் இறுப்பை அகந்தையை காட்ட ஒரு ஏற்பாடாக மாறிவிட்டது .. ஒவ்வொரு தங்கள் கூட்டத்தை கூட்டி நடததும் நாடகம் ரசிக்க முடியாத காட்சிகளால் இயல்பை இழக்கிறது..
 ..
அரசியல் களமாய், தங்கள் அமைப்புகளின் பலத்தை காட்டவும் நானும்/நாங்களும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றிய ஒரு வாய்ப்பு அது அவ்வளவுதான்..  "துதி"பாடவும், பழங்கதை பேசவும், இறுமாப்பில் தலைநிமிரவும் தங்கள் பிரசாரக் கூடமாய், தங்களை விளம்பரபடுத்திக் கொள்ளவும், பலத்தை காட்டவும் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.. 
..
எளியோர்க்கும்,  வழிப்போக்கர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உணவு, புளிச்சேப்பகாரனுக்கு தரப்படுகிறது.. உண்மையில் இவர்களுக்கு "பக்தி" எல்லாம் இல்லை.. தற்பெருமை பேசவும் தங்களின் அடிவருடிகளின் புகழ்மாலையை கேட்டு ரசிக்கவும் பெருந்தொகை செலவு செய்து "புகழ்" மாலையை அணிந்துக் கொள்கிறார்கள்.. இதில் அறிஞர் பெருமக்களும் ஆன்றோரும் சேர்நது ஒத்தூதும் நிகழ்வுகள் காதுகளுக்கு எரிச்சலூட்டுகிறது..
..
எளிமையான மார்க்கம் ஆடம்பர, அடாவடிகளின் தற்சார்ப்பு குரலை ஓங்கி ஒலித்து நோன்பின் மகிமையை கேலிக்கூத்தாக்கிறது..
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், "சமூக" அமைப்புகளின் குஸ்தி சண்டை களமாக மாறிவிட்டது .. யார் பலம் பொருந்தியவர் என்பதை கணக்கீடு செய்யும் "களமாய் மாறிப்போனது ..
..
"பெருங்கூத்து"
..
ஆலஞ்சியார்