..
மிரட் தொடர்ந்து இந்தூர் .. காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் இதில் காங்கிரஸும் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.. வேட்பாளர் தேர்வில் அதீத எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.. தேர்தல் தொடங்கிய போது 400 என்றவர்கள் மெல்ல உண்மை நிலை அறிந்து பதறுவதும் தன்நிலை மறந்து செயல்படுவதும் அரசியல் சூதாட்டத்தில் இறங்குவதும் அப்பட்டமான பயத்தின் வெளிபாடு..
..
இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் பிரதமராவார் என உள்துறை அமைச்சரே சொல்ல தொடங்கியிருப்பது கள நிஜம் பயமுறுத்தியிருக்கிறது.. எத்தனை சனநாயக வழிகளை அடைத்தாலும் புதிய வழியே உருவாக்கி சனநாயகம் மலரும் காரணம் மக்கள் சக்தி என்பது மகுடத்தை காலில் போட்டு மிதிக்கும் வலிமை கொண்டது .. விரல் கொண்டு புதிய புரட்சியை செய்யும் ஆற்றல் உண்டு .. மக்கள் மௌனமாய் அதிகார மோகத்தில் ஆடுவோரை சாய்த்து விடுவார்கள்..
..
எத்தனை தில்லுமுல்லு அதிகார மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் கோபம், அனைத்து அரசுதுறையும் வசப்படுத்தி எதிர்க்கட்சிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாலும் சனநாயகம் உயிர்த்தெழும்.. காரணம் இந்திய ஒன்றியம் சனநாயக வல்லமைக் கொண்டது .. சாமானியனே இங்கே அதிகாரம் கொண்டவன் அவனை அடித்தமர்த்த முடியாது .. பத்தாண்டுகள் தந்த வாய்ப்பை பாழாக்கிவிட்டு புதிய வேஷம் கட்டினால் நம்ப மாட்டார்கள் ..
..
பாஜகவின் வீழ்ச்சி தொடஙகிவிட்டது.. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது .. தனிமனித துதிப்பாடல் எதிர்க்கட்சிகளை முடக்கும், மிரட்டல், சர்வாதிகாரம் தோரணையில் கதைப்பது மதத்தை கையில் எடுத்தாடியது, பிற மதத்தின் நம்பிக்கையை ஒடுக்க முயன்றது, எதை உடுத்த வேண்டும் உண்ண வேண்டும் எழுதப்படாத சட்டமியற்றியது என தொடர்ந்து அதிகார அச்சுறுத்தல்கள் மக்களை வேறு பாதை தேட செய்தது..
..
இனி சனநாயகம் மலரும்
..
ஆலஞ்சியார்