Sunday, March 19, 2023

ஊடக அறம் ..
நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டிய இடம் ஒன்றுண்டு .. ஆம்  எப்போதும் "அறம் வெல்லும்" என்று நம்பிக்கையோடு நின்ற பேரருள் செல்வம் .. எத்தனை கீழ்த்தரமான செயல்கள் வந்து மோதி நின்றபோதும் அறம் தவறாமல் ஊடகத்தின் பொருள் உணர்ந்து செயல்பட்டவர் .. எத்தனை விலைபேசல்கள் மிரட்டல்கள் வந்தன .. மிசா ஒன்று போதும் முழுவதுமாக முடக்கபட்ட போது கூட துண்டு சீட்டில் அச்சடித்து மவுண்ட் ரோட்டில் விநியோகம் செய்த அறம் .. பொய்களால் வலைப்பின்னி நகரமுடியாமல் செய்திடலாம் என்ற போதும் கொள்கை உறுதியோடு நின்றாடிய அறம் .. குடும்பத்தை கேலி பேசியும் வஞ்சகத்தோடு இட்டுகட்டி மானம் கெடுக்க நினைத்த போதும் இவன் ஓடிவிடுவான் என நினைத்தோரை எதிர்த்துநின்று புன்னகையால் சாய்த்த அறம் 
அந்த அறத்திற்கு கருணாநிதி என்ற பெயருண்டு 
..
இன்றைக்கு உத்தமர் போல் வேடமிட்டு இனத்தையும் பண்பாட்டையும் சிதைப்போரிடம் கைட்டி நிற்போர் .. சில ஆயிரங்களுக்கு விலைபோகும் கயமை.. நெறியில்லா நெறியாள்கை தகுதியில்லாதோரிடம் ஊடகம் சிக்கி தவிக்கிறது .. கொள்கையை பேசுங்கள் சரியோ தவறோ உங்களுக்கென்ற பாதையை தேர்வு செய்து களமாடுங்கள் .. தவறென்றாலும் உங்களின் உறுதிபாடு முக்கியம் இன்றைய தவறு நாளை விளங்கங்களோடு சரிசெய்ய இயலும் .. ஆனால் விலைபோனால் "அடிமாடு" தான் 
..
ஊடகத்துறையை தேர்வு செய்யும் போது கொஞ்சமேனும் நன்மையோடு, மக்களுக்கு சேதியை கொண்டு சேருங்கள் .. நடுநிலை என்பது ஒருவகை இயலாமை .. தெளிவோடு பயணிக்க மறுப்பவர்களின் தடுமாற்றதிற்கு மறுபெயர் ..  இன்றைய ஊடகத்துறையின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது .. நாட்டுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் பணத்தை கொண்டு தீர்மானிக்கபடுவது கேவலமான ஒன்று ..  
..
கலைஞரை போல ஊடகத்தை கையாள முடியாது தலைவனாகவும் மூத்த பத்திரிக்கையாளனாகவும், எதிர்கருத்து கொண்ட பத்திரிக்கைகளுக்கு/பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தருவாதாகட்டும் ..  
அதே நேரம் செய்தியில் உண்மை கெடாமல் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அக்கறை .. ஜனநாயகமாண்பு கெடாமல் கையாண்டவிதம் .. ஒவ்வொருவரும் கற்கவேண்டிய பாலபாடம் .. அரசியலில் மட்டுமல்ல ஊடகத்திற்கும் கலைஞர் பெருமகனின் வாழ்வு புதிதாய் வருவோருக்கு அரிச்சுவடி 
..
இளம் ஊடகவியலாளர்களே 
நெஞ்சுரத்தோடு வாய்மை வெல்லும் என நம்பிக்கையோடு அறத்தின் பக்கம் நில்லுங்கள் .. விலைபோனவர்கள் விலாசம் தெரியாமல் போன வரலாறு நிறைய உண்டு .. 
அறம் வெல்லட்டும் 
ஆம் அறமே இறுதியில் வெல்லும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment