எழுபதை தொட்டு நிற்கும் எங்கள் தலைவர் .. இந்திய திருநாட்டின் நம்பிக்கை .. சலனமில்லை களக்கமில்லை துளியும் சோர்வில்லை எப்படி இந்த மனிதனால் இப்படி இயங்க முடிகிறது என வியக்கிறார்கள் ..
வெற்றி கண்ணை மறைக்கவில்லை அது எந்தவித தாக்கத்தையும் இயல்பாய் இயங்குகிறார் .. "உழைப்பு உயர்வு தரும் " என விளக்கும் போது பள்ளிகளில் ஸ்டாலின் படத்தை போட்டு மாணவச் செல்வங்களுக்கு வகுப்பெடுக்கலாம்
..
தெளிவான பாதை, யாருக்கும் அஞ்சுவதில்லை, கொண்ட கொள்கையில் உறுதி இலக்கை நோக்கி பயணம் .. திராவிட மாடல் ஒன்றே இந்திய ஒன்றியத்தின் இன்றியமையாததென அனைத்து மாநிலத்திற்கு உணர்த்தி செயல்படும் வித்தை .. 2024 யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாதென பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லி பாசிச பாஜகவை வீழ்த்துவது அவ்வளவொன்றும் கடினமில்லை என பறைச்சாற்றி போர்முரசொலிக்கும் தளபதி
..
முடியாது கனவு காணவேண்டாம் என ஆருடம் சொல்லியவர்கள் "மிக ஆபத்தானவரென அப்பனை விட" என பதறுவதிலேயே தலைவனின் அணுகுமுறையும் அதிர்ச்சி வைத்தியமும் தெரிகிறது .. "குறையொன்றுமில்லை" என மக்கள் கொண்டாடுகிறார்கள் .. இவ்வளவு வெளிப்படையான அரசை இதுவரை கண்டதில்லை.. விமர்சனங்கள், எள்ளிநகையாடல் எதுவும் சஞ்சலபடுத்தவில்லை காரணம் நேர்மை நெறியோடு கூடிய செயல்முறை கடின உழைப்பு, சொன்னதை செய்து முடிக்கவேண்டுமென்ற உறுதி இதுவரை 85% விழுக்காடு நிறைவேற்றியாகிவிட்டதென மக்களிடத்தில் சொல்லும் தைரியம் இந்திய ஒன்றியம் வியப்போடு பார்க்கிறது
..
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெரும்பேறு! .. ஓய்வறியா சூரியனைப்போல உழைப்பு .. கனிந்து நிற்கும் உள்ளம்.. "இதனை இதனால் " என
எப்போதும் உறுதி செயல்படுத்தும் பேராற்றல் .. எதிரிகள் சிதறுண்டு கிடக்கிறார்கள் .. பொய்கால்கள் இனி ஆடாது /இனி விளங்காது என மக்கள் தெளிவோடு தளபதியாருக்கு பெருந்துணையாய் நிற்கிறார்கள்
..
தமிழ்நாடு மகிழ்ந்து ஒளிர்கிறது
நாடு பாதுகாப்பாய் தளபதியின் கைகளில் .. இந்திய ஒன்றியம் இப்படியொரு தளபதிக்காக காத்திருக்கிறது ..
இனி தொடர் வெற்றிதான் ..
இனி சோழனின் ஆட்சி வடக்கிலும்
Emperor of Dravidian @M.k.stalin
திராவிடப் பேரரசர் மு.க.ஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment