இன்றைய இந்திய ஒன்றியத்திற்கு மிக தேவையான அரசியல் சித்தாந்தம்.. ஜனநாயக மாண்புகள் எப்படி கடைபிடிக்க வேண்டும் எப்படி அரசு நிர்வாகம் செயல்படவேண்டும் .. எல்லா மத நம்பிக்கைகளுக்கும் எப்படி மதிப்பளிக்கவேண்டும் .. தனிநபர் சுதந்திரத்தை எப்படி காக்கவேண்டும் அவர்தம் உரிமைகளில் எதுவரை தலையிட வேண்டும் என பாடமெடுத்துக் கொண்டிருக்கிறது திராவிடமாடல்
..
அரசு நிதியை எப்படி கையாள்வதென்பதற்கும் எந்தவகையில் மோசடி நடந்தாலும் அதை வெளிச்சம்போட்டுகாட்டி மக்கள் முன் தோலுரித்து காட்டும் வல்லமை பெற்ற அரசு .. ஆளுநர் மாளிகைக்கு வழங்கபடும் பணம் எந்த வழியில் செல்கிறது யாருக்கு செல்கிறதென்று மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில் நம் நிதியமைச்சர் விளக்கி இவர்கள் நவீன முறையில் கொள்ளையடிப்பவர்கள் என உடைந்தெறிந்திருக்கிறார் ..
..
ஒரு அரசு மக்கள் நலனில் வெகு அக்கறை கொண்டிருக்கவேண்டுமெனில் அது மகளிருக்கு முன்னுரிமை தந்ததாக இருப்பது மிக அவசியம் பெண்களின் பொருளாதாரம் குடும்பம் மற்றும் சமூகத்தில் பரவலான மாற்றத்தை கொண்டுவரும் .. மிக நேர்த்தியாக ஓரு கோடி பெண்கள் பயனடைய திட்டம் தீட்டுவதெல்லாம் வேறலெவல் .. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களை கொண்டு சேர்க்கும் உயரிகல்வி மாணவிகளுக்கு மாதாமாதம் உதவி தொகை, பேருந்தில் கட்டணமில்லா பயணம் என தொடர்ந்து பெண்களுக்கான அரசாக திகழ்கிறது தமிழ்நாட்டின் திராவிட அரசு .. இவையெல்லாம் ஒன்றியம் கணக்கில் கொள்ளவே இருபதாண்டுகள் பிடிக்கும்
..
ஒன்றிய அரசு மாநிலத்தின் உரிமைகளை சிதைக்க மதவெறியை தூண்டி கட்சியை வளர்த்தெடுக்க ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்கிறது அதற்கு தடையாக இருப்பது தென்னகம் தான் அதில் முதலிடம் தமிழ்நாட்டிற்குண்டு அதிலும் நம் முதலமைச்சர் சிறிய விடயங்களில் கூட கவனமாக காய்நகர்த்தி பாசிசத்தின் தோலுரிக்கிறார் .. தயிர் விடயத்தில் தொட்டில் ஆட்ட முடியாதென பொட்டில் அடித்து ஆடியவுடன் பின்வாங்குகிறது
" நாடு வல்லரசாக வேண்டுமெனில் முதலில் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும்
மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் வெறுப்பு பேச்சு காணாமல் போய்விடும்
மதமும் அரசியலும் தனித்தனியாக பிரிக்கபடவேண்டும் அதுதான் தீர்வு
சக மனிதனின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என ஒன்றிய அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது ..
இதற்கு வேறெங்கும் "மாதிரி " தேட வேண்டியதில்லை திராவிட அரசை கண்டாலே புரியும் இங்கே சக மனிதனின் நம்பிக்கை கண்ணியம் காக்கபடுகிறது .. அவன் உரிமைகளில் தலையிடுவதில்லை
மதத்தை அரசியலில் கலப்பதில்லை.. சுயமரியாதை அறிவு தொலைநோக்கு எல்லோருக்கும் சமஉரிமை, செயல்திட்டங்களில் சமூகநீதி ஒடுக்கபட்டோரின் குரலாய் அரசே நிற்பது, சமதர்ம சமுதாயம் அமைக்க தொடர்ந்து பாடுபடுவது என தெளிவாக கருத்தோடு ஒரு நல்லாட்சியை முன்மாதிரியாக தருகிறார் "திராவிட அரசின் " தலைவர் மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
..
நாடே போற்றுகிறது பிற மாநிலங்கள் வியக்கின்றன் ஒன்றியம் பதறுகிறது ..
நாடு நன்னாக நாளைய நம்பிக்கையாய் மிளிர்கிறார்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆலஞ்சியார்