Thursday, March 30, 2023

திராவிடம் ..
இன்றைய இந்திய ஒன்றியத்திற்கு மிக தேவையான அரசியல் சித்தாந்தம்.. ஜனநாயக மாண்புகள் எப்படி கடைபிடிக்க வேண்டும் எப்படி அரசு நிர்வாகம் செயல்படவேண்டும் .. எல்லா மத நம்பிக்கைகளுக்கும் எப்படி மதிப்பளிக்கவேண்டும் .. தனிநபர் சுதந்திரத்தை எப்படி காக்கவேண்டும் அவர்தம் உரிமைகளில் எதுவரை தலையிட வேண்டும் என பாடமெடுத்துக் கொண்டிருக்கிறது திராவிடமாடல் 
..
அரசு நிதியை எப்படி கையாள்வதென்பதற்கும் எந்தவகையில் மோசடி நடந்தாலும் அதை வெளிச்சம்போட்டுகாட்டி மக்கள் முன் தோலுரித்து காட்டும் வல்லமை பெற்ற அரசு .. ஆளுநர் மாளிகைக்கு வழங்கபடும் பணம் எந்த வழியில் செல்கிறது யாருக்கு செல்கிறதென்று மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில் நம் நிதியமைச்சர் விளக்கி இவர்கள் நவீன முறையில் கொள்ளையடிப்பவர்கள் என உடைந்தெறிந்திருக்கிறார் ..
..
ஒரு அரசு மக்கள் நலனில் வெகு அக்கறை கொண்டிருக்கவேண்டுமெனில் அது மகளிருக்கு முன்னுரிமை தந்ததாக இருப்பது மிக அவசியம் பெண்களின் பொருளாதாரம் குடும்பம் மற்றும் சமூகத்தில் பரவலான மாற்றத்தை கொண்டுவரும் .. மிக நேர்த்தியாக ஓரு கோடி பெண்கள் பயனடைய திட்டம் தீட்டுவதெல்லாம் வேறலெவல் .. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களை கொண்டு சேர்க்கும் உயரிகல்வி மாணவிகளுக்கு  மாதாமாதம் உதவி தொகை, பேருந்தில் கட்டணமில்லா பயணம் என தொடர்ந்து பெண்களுக்கான அரசாக திகழ்கிறது தமிழ்நாட்டின் திராவிட அரசு .. இவையெல்லாம் ஒன்றியம் கணக்கில் கொள்ளவே இருபதாண்டுகள் பிடிக்கும் 
..
ஒன்றிய அரசு மாநிலத்தின் உரிமைகளை சிதைக்க மதவெறியை தூண்டி கட்சியை வளர்த்தெடுக்க ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்கிறது அதற்கு தடையாக இருப்பது தென்னகம் தான் அதில் முதலிடம் தமிழ்நாட்டிற்குண்டு அதிலும் நம் முதலமைச்சர் சிறிய விடயங்களில் கூட கவனமாக காய்நகர்த்தி பாசிசத்தின் தோலுரிக்கிறார் .. தயிர் விடயத்தில் தொட்டில் ஆட்ட முடியாதென பொட்டில் அடித்து ஆடியவுடன் பின்வாங்குகிறது 
" நாடு வல்லரசாக வேண்டுமெனில் முதலில் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும் 
மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் வெறுப்பு பேச்சு காணாமல் போய்விடும்
மதமும் அரசியலும் தனித்தனியாக பிரிக்கபடவேண்டும் அதுதான் தீர்வு 
சக மனிதனின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என ஒன்றிய அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது ..
இதற்கு வேறெங்கும் "மாதிரி " தேட வேண்டியதில்லை திராவிட அரசை கண்டாலே புரியும் இங்கே சக மனிதனின் நம்பிக்கை கண்ணியம் காக்கபடுகிறது .. அவன் உரிமைகளில் தலையிடுவதில்லை 
மதத்தை அரசியலில் கலப்பதில்லை.. சுயமரியாதை அறிவு தொலைநோக்கு எல்லோருக்கும் சமஉரிமை, செயல்திட்டங்களில் சமூகநீதி ஒடுக்கபட்டோரின் குரலாய் அரசே நிற்பது, சமதர்ம சமுதாயம் அமைக்க தொடர்ந்து பாடுபடுவது என தெளிவாக கருத்தோடு ஒரு நல்லாட்சியை முன்மாதிரியாக தருகிறார் "திராவிட அரசின் " தலைவர் மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 
..
நாடே போற்றுகிறது பிற மாநிலங்கள் வியக்கின்றன் ஒன்றியம் பதறுகிறது .. 
நாடு நன்னாக நாளைய நம்பிக்கையாய் மிளிர்கிறார் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Monday, March 20, 2023

நிதிநிலை அறிக்கை..
முதலில் கைகொடுங்கள் மாண்பமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.. 
நல்லவர் என தெரியும்.. சரியான நபரை தேர்ந்தெடுத்து ,நிபுணர்களை கொண்டு நிதிச்சுமையை குறைத்து "வல்லவர்" என நிரூபித்திருக்கிறீர்கள் 
பொருளாதார ஆலோசனை குழுவை அமைத்து மிகச்சிறந்த நிதியமைச்சரை கொண்டு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்(நிதிநிலைஅறிக்கை) வரலாற்றில் பேசபடும்..
..
சிலர் எதிர்க்கவேண்டுமென்பதற்காகவே உப்புசப்பில்லா பட்ஜெட் என்கின்றனர் .. சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடாத சொரணயற்றதுகளின் பேச்சுகள் மக்கள் மன்றத்தில் எடுபடாது .. 
இப்போதாவது தந்ததில் மகிழ்ச்சி என பாஜக சொல்கிறது .. கூடவே 26000 சேர்த்து வழங்கவேண்டுமென சொல்ல தகுதி என்ன இருக்கிறது ..  2022க்குள் அனைத்து கிராமத்திற்கும் அதிவேக பைபர் வசதி செய்து தரப்படும் ,
2022 க்குள் அனைவருக்கும் வீடு கட்டிதரப்படும் ஒரு ரூபாயில் சாணிட்டரி நாப்கின் வழங்கபடும்..
என்ற 2019 சங்கல்ப் புத்ரா என்ற தேர்தல் அறிக்கையில் சொன்னதை மோடி செய்தாரா ..  ..
 கேள்வி கேட்கவும் தகுதி வேண்டும் அது பாஜகவிற்கு இல்லை..
சொன்னதை செய்ய திறனில்லாத பிரதமரும், எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிடலாமென்று "பொய்" கட்டி ஆடுவோருக்கு சொன்னதையும் சொல்லாமலும் நலன் செய்யும் அரசை கண்டால் ஒவ்வாமை வரத்தான் செய்யும் 
..
பெண்களுக்கான உரிமைகள் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவி தொகை
குடும்ப தலைவிக்கு உரிமை தொகை 
பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் என அக்கறையோடு செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் முகத்தில் பெரியாரை பார்க்கிறேன் .. பெண்களுக்கு கலைஞர் சொத்தில் சமபங்கு தந்தார், ஸ்டாலின் உரிமை தொகை தருகிறார் .. மகிழ்வில் பெண்கள்  கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்ததால் தான் 40ஆயிரம் கோடிகளை ஒதுக்கி தமிழ்நாடு கல்வியில் மிளிர வழிவகை செய்கிறார் .. எல்லா தரப்பும் பலனடைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தபட்ட நிதிநிலை அறிக்கை .. 
..
வருவாய் பற்றாக்குறையை பாதியாக குறைத்தது நிதியமைச்சரின் திறமையை காட்டுகிறது .. இதே நல்லாட்சி தொடர்ந்து பத்தாண்டுகள் இருந்தால் தமிழ்நாடு தன்னிறவு பெறும் .. இந்திய ஒன்றியம் பின்பற்ற தக்க நிதிநிலை அறிக்கை .. மூளையை கூட சுமையாக கருதும் ஒன்றியத்தை போலல்லாமல் அறிவின் துணையோடு ஆற்றல்மிகு வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 
ஆட்சி எப்படி நடத்தபடவேண்டும், மக்களை பிழியாமல் மனமகிழ்வோடு வாழ வழிசெய்யவேண்டுமென வழிகாட்டுகிறது தமிழ்நாடு .. ஒன்றியம் கற்றால் நல்லது 
..
இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு
..
ஆலஞ்சியார்

Sunday, March 19, 2023

ஆன்மீகம்..
ஒருவகை பொய்.. இங்கே மதம் கடவுள் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும்.. அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்..
மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும் எதையுமே ஏனென்று கேட்காமல் சொல்வதை ஏற்க நம் மூளையின் GOD பகுதியை சலவை செய்யும்..
மனித தேவைகளை மறந்த தெய்வத்தின் நிலை தேடும் போலி பாசாங்கு வரும்.. ஞானமெனும் அறிவை மழுங்கடித்து மெய்ஞானமெனும் பூச்சுற்றும் வேலை செய்யும்.. ஞானமென்றால் அறிவு அறிவெனில் அது தெளிவென்றே பொருள்.. பிறகெதற்கு மெய்யென்று பொய் சொல்லும் கூத்து .. 
..
ஆன்மீகவாதிகளை கூர்ந்து கவனியுங்கள்.. 
கவனமாக நம்மை அவர்கள் பக்கம் இழுப்பார்கள் ..எப்படியென்றோ ஏனென்று கேள்வி எழுப்பினால் .. நம்மை புறக்கணித்து சரிவராதென்றும் ஏன் 
 நம்பிக்கையில்லாமல் வந்தீர் என்பார்கள்.. ஆன்மீகவாதிகளின் ஆயுதம் பொய் .. மக்களின் பயம்/பலவீனம் அவர்கள் மூலதனம்.. வேதம்  கடவுளோடு தொடர்பு மனிதனின் செயல்பாட்டால் விளையும் கெடுதிகளுக்கு..  பரிகாரங்களென 
நம்மை மடமையில் வீழ்த்தும் வித்தை அறிந்திருப்பார்கள்...
துறவு அல்லது இல்லறத்தை விடுதல் என்பது இயற்க்கைக்கு முறணானது.. காமம் இயல்பான நமது ஆசைகளின் வடிகாலாய்.. இன்பமெனும் நிலையை அடைதல்.. இங்கே காமம் அசிங்கமாக பார்க்கபடுவதும்.. அதை தவறென்றும் கற்பென்றும் கட்டுபாட்டை கடுமையாக்கியதும் ..
ஒழுக்கமென்று நம்பவைத்ததும் .. காமத்தில் திருட்டுத்தனம் வந்தது அதற்கு ஆன்மீகம் பெருந்துணையானது.. எந்த ஜீவராசியும்  காமத்தை அழுக்காகியதில்லை மதம் பேசும் பித்தர்கள்..மக்களின் பலவீனத்தின் மீதே வீற்றிருப்பார்கள்.. சில செப்படிவித்தைகள் அறிந்திருப்பர்.. அதைவிட கடைசி ஆயுதமாக காமத்தில் நம்மை நிறுத்தி .. ஒருவகை ஆசையை தூண்டி அடிமைபடுத்தும் வேலை நடக்கும்.. காமம் அழகு.. எந்த ஜீவராசியும் காமத்தை அசிங்கமென்றதில்லை மனிதனை தவிர அதை திருட்டுத்தனமாக அடைய இந்த ஆன்மீகம் துணைக்குவரும்..
..
ஆன்மீகம் பேசுவோரை மதபோதகர்களை  பாருங்கள் தான் மட்டுமே சரி தன் கடவுள் மட்டுமே சரி .. நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோமென்று மூளைச்சலவை நடத்துவர்.. ஒருவகை போதை தரும் சொற்களால் நம்மை கட்டி போடும் சாகசம் அறிந்து பிற வழிபாடுகளின் மீது வெறித்தனமான வன்மத்தை 
விசவிதையை தங்களை பின்பற்றும் மக்களிடம் விதைக்கும் கேடுகெட்டவர்கள் தங்களுக்குள் போட்டிவந்துவிட்டால் அவர்களின் கடந்த கால நிகழ்கால அசிங்கங்களை பொதுவெளியில் வைத்து அதற்கு இறைவனை துணைக்கழைத்து விவாதிப்பார்கள்.. ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை நாம் ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் பேச வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் யோக்கியன் அவன் அயோக்கியன் என்கிற ரீதியில் கதைப்பதற்கு பெயர் இவர்கள் மொழியில் ஒழுக்கம் ..
..
இப்போதெல்லாம் ஆன்மீகம் ..அரசியலென்று ஆகிவிட்டது அது எவ்வளவு தீமையை தருகிறதென்பதற்கு நடந்தேறும் நிகழ்வுகளே சாட்சியம் வகிக்கின்றன.. எதை உண்பது என்பதில் தொடங்கி எதை செய்யவேண்டும் எதை பேசவேண்டுமென திணிக்கிறார்கள்.. எதுவாகயிருந்தாலும் அது திணிக்கபடுமேயானால் அது மக்கள் மனங்களிலிருந்து அறுந்துவிழும் .. 
இந்த உலகில் மனிதம் பேசுகிற இல்லாததை இல்லையென்று உரக்கசொல்லி .. பொய் புரட்டு இதிகாசம் வேதம் சாதி சடங்கு என மூடமும் மடைமையை புறக்கணித்து அறிவின் நிழலில் நிற்கிற இயற்கையை அதன் வழியில் நம்புகிற  வழிமுறையே  காலம் கடந்தும் நிலைக்கும் அதற்கு பெயர் நாத்திகமென்றால் அதுவே உலகிற்கு அமைதியை செழிப்பை உயர்வை நம்பிக்கையை ஒற்றுமையை தரும்.. மதமென்பது ஒருவகை பிரிவினை அதில் கடவுள் ஆன்மீகம் என்பதெல்லாம்.. ஒருவகை ஏமாற்று.. இது எல்லா மதத்திற்கு பொருந்தும்.. நானே உயர்ந்தவன் என்மதமே சரியென்கிறதைவிட அயோக்கியத்தனம் வேறேதுமில்லை..
..
அன்பே சிறந்த வழி..
..
ஆலஞ்சியார்
ஊடக அறம் ..
நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டிய இடம் ஒன்றுண்டு .. ஆம்  எப்போதும் "அறம் வெல்லும்" என்று நம்பிக்கையோடு நின்ற பேரருள் செல்வம் .. எத்தனை கீழ்த்தரமான செயல்கள் வந்து மோதி நின்றபோதும் அறம் தவறாமல் ஊடகத்தின் பொருள் உணர்ந்து செயல்பட்டவர் .. எத்தனை விலைபேசல்கள் மிரட்டல்கள் வந்தன .. மிசா ஒன்று போதும் முழுவதுமாக முடக்கபட்ட போது கூட துண்டு சீட்டில் அச்சடித்து மவுண்ட் ரோட்டில் விநியோகம் செய்த அறம் .. பொய்களால் வலைப்பின்னி நகரமுடியாமல் செய்திடலாம் என்ற போதும் கொள்கை உறுதியோடு நின்றாடிய அறம் .. குடும்பத்தை கேலி பேசியும் வஞ்சகத்தோடு இட்டுகட்டி மானம் கெடுக்க நினைத்த போதும் இவன் ஓடிவிடுவான் என நினைத்தோரை எதிர்த்துநின்று புன்னகையால் சாய்த்த அறம் 
அந்த அறத்திற்கு கருணாநிதி என்ற பெயருண்டு 
..
இன்றைக்கு உத்தமர் போல் வேடமிட்டு இனத்தையும் பண்பாட்டையும் சிதைப்போரிடம் கைட்டி நிற்போர் .. சில ஆயிரங்களுக்கு விலைபோகும் கயமை.. நெறியில்லா நெறியாள்கை தகுதியில்லாதோரிடம் ஊடகம் சிக்கி தவிக்கிறது .. கொள்கையை பேசுங்கள் சரியோ தவறோ உங்களுக்கென்ற பாதையை தேர்வு செய்து களமாடுங்கள் .. தவறென்றாலும் உங்களின் உறுதிபாடு முக்கியம் இன்றைய தவறு நாளை விளங்கங்களோடு சரிசெய்ய இயலும் .. ஆனால் விலைபோனால் "அடிமாடு" தான் 
..
ஊடகத்துறையை தேர்வு செய்யும் போது கொஞ்சமேனும் நன்மையோடு, மக்களுக்கு சேதியை கொண்டு சேருங்கள் .. நடுநிலை என்பது ஒருவகை இயலாமை .. தெளிவோடு பயணிக்க மறுப்பவர்களின் தடுமாற்றதிற்கு மறுபெயர் ..  இன்றைய ஊடகத்துறையின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது .. நாட்டுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் பணத்தை கொண்டு தீர்மானிக்கபடுவது கேவலமான ஒன்று ..  
..
கலைஞரை போல ஊடகத்தை கையாள முடியாது தலைவனாகவும் மூத்த பத்திரிக்கையாளனாகவும், எதிர்கருத்து கொண்ட பத்திரிக்கைகளுக்கு/பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தருவாதாகட்டும் ..  
அதே நேரம் செய்தியில் உண்மை கெடாமல் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அக்கறை .. ஜனநாயகமாண்பு கெடாமல் கையாண்டவிதம் .. ஒவ்வொருவரும் கற்கவேண்டிய பாலபாடம் .. அரசியலில் மட்டுமல்ல ஊடகத்திற்கும் கலைஞர் பெருமகனின் வாழ்வு புதிதாய் வருவோருக்கு அரிச்சுவடி 
..
இளம் ஊடகவியலாளர்களே 
நெஞ்சுரத்தோடு வாய்மை வெல்லும் என நம்பிக்கையோடு அறத்தின் பக்கம் நில்லுங்கள் .. விலைபோனவர்கள் விலாசம் தெரியாமல் போன வரலாறு நிறைய உண்டு .. 
அறம் வெல்லட்டும் 
ஆம் அறமே இறுதியில் வெல்லும் 
..
ஆலஞ்சியார்

Monday, March 6, 2023

நொடிக்குள் எதிர்வினையாற்ற முடியும் காலமிது .. ஆனால் அறுபது எழுபதுகளில் எவ்வளவு இலகுவாக சேற்றை வாரியிறைத்திருப்பார்கள்  எல்லாவற்றையும் மீறிதான் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள் 
"சிலதுகள்" பொய்களால் உருவானவர்கள் .. அவர்கள் கு.கா.மானியம் கூட கௌரவமாக கருதுபவர்கள் .. பொய் புரட்டில் பூமியை கட்டியாள்பவர்கள் .. அவர்கள் பிழைகள் 
..
சிலர் பெண்ணை இவ்வளவு கேவலமாக பேசுவதா இதைதான் கற்றீர்களா என கேட்கிறார்கள் .. எதிரிவினையில் சொற்கள் சேதபடதான் செய்யும் .. வகுப்பெடுக்கும் அளவிற்கு தரம்தாழவில்லை  எந்த வடிவில் வசைபாடல் வருகிறதோ அதைவடிவில் திரும்பவும் தாக்கும்..
விதைத்ததைதானே அறுக்கமுடியும் அவரையை விதைத்துவிட்டு துவரைக்கு காத்திருக்கலாமா..
..
பழைய மாடல் வண்டி ஓடவில்லை ஆனால் இருப்பை காட்டிக்கொள்ள இருமி தொலைக்கிறார் .. பாவம் யாரோ வாந்தியெடுத்ததை மீண்டும் நக்கி பார்க்கிறார் .. கண்ணதாசன் தன்னை சொல்லியதை குற்றவாளி ஜெயலலிதா திரிக்க அதை ஊதி பெரிதாக்க ஊடகங்களும் அவர் சார்ந்த சமூகமும் தூக்கிபிடித்தாலும் உண்மை தான்  வெல்லும் ..
..
பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் கலைஞர் பெயரை assassinate செய்கிறார்கள் தம்பிகள் .. 
கலைஞரோடு உன் வீட்டு பெண்கள் வந்தாரா என கேள்வி எழுப்பி கலைஞரின் character ஐ (குணம்) தரம்தாழ்த்த வேண்டுமா ..

 கலைஞர் வெகு இயல்பாக சொல்லிவிட்டார்  அவதூறுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் அதையேதான் செய்யமுடியும் .. 
..
 விமர்சனங்களும், வெறுப்புகளும், இழிசொற்களும், தரந்தாழ்ந்த பேச்சுகளும், பொய்களால் வீழ்ந்த முடியுமென்ற நினைப்பும் நிறைய பார்த்தாயிற்று .. கடும் சூழலிலும் கழகத்தை காத்தநின்றவர் மறைந்த பின்னும் வசைபாடல் தொடர்கிறதென்றால் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார்கள் எந்தளவு கடும் உழைப்பால் தமிழ் சமூகத்தை உயரத்தில் நிறுத்தியிருக்கிறார் என தெரிகிறது ..
கலைஞர் காவல் தெய்வம் 
தமிழ்நிலத்தின் எல்லைசாமி 
..
ஆலஞ்சியார்

தலைவன் ..
எழுபதை தொட்டு நிற்கும் எங்கள் தலைவர் .. இந்திய திருநாட்டின் நம்பிக்கை .. சலனமில்லை களக்கமில்லை துளியும் சோர்வில்லை எப்படி இந்த மனிதனால் இப்படி இயங்க முடிகிறது  என வியக்கிறார்கள் .. 
வெற்றி கண்ணை மறைக்கவில்லை அது எந்தவித தாக்கத்தையும் இயல்பாய் இயங்குகிறார் .. "உழைப்பு உயர்வு தரும் " என விளக்கும் போது பள்ளிகளில் ஸ்டாலின் படத்தை போட்டு மாணவச் செல்வங்களுக்கு வகுப்பெடுக்கலாம் 
..
தெளிவான பாதை, யாருக்கும் அஞ்சுவதில்லை, கொண்ட கொள்கையில் உறுதி இலக்கை நோக்கி பயணம் .. திராவிட மாடல் ஒன்றே இந்திய ஒன்றியத்தின் இன்றியமையாததென அனைத்து மாநிலத்திற்கு உணர்த்தி செயல்படும் வித்தை .. 2024 யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாதென பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லி பாசிச பாஜகவை வீழ்த்துவது அவ்வளவொன்றும் கடினமில்லை என பறைச்சாற்றி போர்முரசொலிக்கும் தளபதி 
..
முடியாது கனவு காணவேண்டாம் என ஆருடம் சொல்லியவர்கள் "மிக ஆபத்தானவரென அப்பனை விட" என பதறுவதிலேயே தலைவனின் அணுகுமுறையும் அதிர்ச்சி வைத்தியமும் தெரிகிறது .. "குறையொன்றுமில்லை" என மக்கள் கொண்டாடுகிறார்கள் .. இவ்வளவு வெளிப்படையான அரசை இதுவரை கண்டதில்லை.. விமர்சனங்கள், எள்ளிநகையாடல் எதுவும் சஞ்சலபடுத்தவில்லை காரணம் நேர்மை நெறியோடு கூடிய செயல்முறை கடின உழைப்பு, சொன்னதை செய்து முடிக்கவேண்டுமென்ற உறுதி இதுவரை 85% விழுக்காடு நிறைவேற்றியாகிவிட்டதென மக்களிடத்தில் சொல்லும் தைரியம் இந்திய ஒன்றியம் வியப்போடு பார்க்கிறது 
..
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெரும்பேறு! .. ஓய்வறியா சூரியனைப்போல உழைப்பு .. கனிந்து நிற்கும் உள்ளம்.. "இதனை இதனால் "  என 
எப்போதும் உறுதி செயல்படுத்தும் பேராற்றல் .. எதிரிகள் சிதறுண்டு கிடக்கிறார்கள் ..  பொய்கால்கள் இனி ஆடாது /இனி விளங்காது என மக்கள் தெளிவோடு தளபதியாருக்கு பெருந்துணையாய் நிற்கிறார்கள் 
 ..


தமிழ்நாடு மகிழ்ந்து ஒளிர்கிறது 
நாடு பாதுகாப்பாய் தளபதியின் கைகளில் .. இந்திய ஒன்றியம் இப்படியொரு தளபதிக்காக காத்திருக்கிறது ..
இனி தொடர் வெற்றிதான் ..
இனி சோழனின் ஆட்சி வடக்கிலும் 

Emperor of Dravidian @M.k.stalin
திராவிடப் பேரரசர் மு.க.ஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்