Friday, December 31, 2021

இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
மனிதர் என்னமாய் உழைக்கிறார் எனும் குரல் ஓங்கியொலிக்கும்போதே கூடவே கவனம் முதல்வரே எனும் கரிசனம் கூட கேட்கிறது ..
..
தஞ்சையில் திருச்சியில் மூன்றுநாள் பயணம் முடித்து சென்னை வந்தவர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்காமல் அதிகாரிகளை நள்ளிரவில் அழைத்து சென்னை மழை குறித்து விவாதிக்கிறார் .. பாழாய் போன பத்தாண்டால் தொடரும் அவலம் குறித்து கவலைக் கொள்கிறார் .. அடுத்த பருவத்தில் நீர்தேங்கா சென்னை வேண்டுமென வல்லுநர்களை அமைத்து திட்டம் தீட்டுகிறார் .. 
சாதியை வைத்து அரசியல் செய்யலாமா, மதவெறியை தூண்டி பிறமதத்தவரை வம்பிக்கிழுத்து காலூன்றலாமா, இனம் தேசியம் மொழியென திசைதிருப்பலாமா என்கிற சிந்தனையில் சில அரசியல்வாதிகள் செயல்படும்போது இவரோ எதைப்பற்றியும் கவலையில்லை மக்கள் தந்த வாய்ப்பை சரியாக செய்தானிவன் என வரலாறு பேசவேண்டும் என உழைத்துக்கொண்டிருக்கிறார் 
..
அரசியல் செய்ய எதிரிகளை பழிவாங்க பகைவர்களை இல்லாதாக்க வழிகள் கிடைத்தும் சட்டமும் நேர்மையாய்  செயல்படவேண்டும் இங்கே யாவர்க்கும் நான் முதலமைச்சர் 
என நெறியோடு அரசியல் செய்கிறார்.. பகையை அறிந்திருக்கிறார் .. ஏற்ற கொள்கையில் தெளிவும் திராவிட தந்த கொள்கையில் பிறழாமல் சமூகநீதியை நிலைநாட்டி சமத்துவம் செய்திடவே இங்கு வந்திருக்கிறேன் .. ஒற்றைநாளில் கிடைத்திடவில்லை .. தோளால் நூலால் கிடைத்திடவில்லை ஒவ்வொரு அடியும் செதுக்கியது  திராவிடப் பேராசான்கள் வழிகாட்டி வளர்த்தெடுத்தவன் பயணத்தில் தெளிவுண்டு இலக்கு அறிவேன் .. இடர்களும் விமர்சனங்களும் மேம்படுத்தவே அன்றி திமுகவே அசைத்திட முடியாது அதன் தலைவன் என்கிற திமிர் உண்டு .. மக்கள் பணியில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் சகித்து கடமையாற்றுவேன் என 
எம் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செயல்படுகிறார் ..
பேரருளாளன் கலைஞர் சொன்னது தான் 
ஸ்டாலின் என்றால் 
உழைப்பு உழைப்பு உழைப்பு 
..
10 வருடமாக குட்டிசுவராக்கி வைத்திருக்கிறார்கள்
விமர்சனம் செய்ய தயாராக இல்லை  அடுத்த மழை சீசன் வருவதற்குள் சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார்..
சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு விரைந்து செயல்படும் முதல்வர் தமிழகத்தின் விடிவெள்ளி 
இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு நாம் கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, December 22, 2021

 
பேச்சுரிமை பற்றி எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்..,
விமர்சனங்களும் வன்சொற்களையும் நிறைய கேட்டு பழகியவர்கள் .. விமர்சனம் என்ற பெயரில் கேடுகெட்ட தீய எண்ணங்களை கடும்சொற்களை நூற்றாண்டுகள் கடந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இடது கையால் தள்ளியவர்கள் தான்..
ஆனால் .. எங்கள் கொள்கையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு .. ஆனால் தனிநபர் தாக்குதலை கேவலமாக சித்தரிப்பதை தொடர்ந்தால் எங்களுக்கும் கம்பை கையிலெடுக்க தெரியும் என சொல்வந்ததை தான் நேற்றைய தினம் நாதக தம்பிகள் மீதான தள்ளுமுல்லு.. 
தம்பிகள் பேசியதில் சில..

தி.மு.க வுல ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும் கலைஞருக்குப் பிறந்தவனுகதான்..

நாப்கின் அட்டையை ராசாத்திக்கு குடுப்பியா..
ஒரு அப்பனாத்தாளுக்கு பொறந்திருந்தா.. அவர்களின் உடல்மொழி மிக கேவலமாக இருக்கும்.. இப்படி பேசியும் மௌனம் காத்தோம் .. இவர்கள் தகுதியற்றவர்கள் வீணான விந்தின் விளைச்சல்கள் என அறிவோம் .. ஆனால் செருப்பை தூக்கி காட்டியபிறகு அமைதியாக செல்ல இயலாது அவர்கள் நோக்கம் கலவரம் அதை பாஜக செய்யாது அதற்கு அடியாள்கள் தேவை அதை சரியாக செய்ய நாதக தம்பிகளால் முடியுமென நம்பி பொறுப்புதரபட்டிருக்கிறது .. ஆனால்  திமுக சரியாக அறியாததால் ஆடுகிறார்கள்..
..
ஒருவர் மீது அல்லது இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்றால் அது சிறந்த நடைமுறையாகாது .. தொடர்ந்து 'நாதக' சிலவண்டுகள் அறிவிலித்தனமாக பேச தொடங்கியவர்கள் ஆபாசமாக மாறி செருப்பை கழட்டி காட்ட தொடங்கியதும் களம் மாற தொடங்கியது ..
திமுக மீது தொடர்ந்து பொய்யான பரப்புரையை செய்து புலிகள் மீது பொதுவெளியில் வெறுப்பு வர காரணமானவர்கள் இவர்கள் .. திமுகவிற்கு  ஈழ துரோக பட்டத்தை சுமத்தி பிழைப்பு நடத்தும் இந்த கும்பலுக்கு ஈழ வரலாறும் தெரியாது
பிரபாகரனைப் பற்றியும் முழுமையாக அறிந்துமில்லை..
..
திராவிட இயக்கங்கள் ஈழத்திற்கு இழந்ததெல்லாம் கணக்கிட்டால் இன்னும் பலதலைமுறைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிகடன் பட்டிருக்கவேண்டும்.. எதையும் எதிர்பார்க்காமல் செய்தவர்கள் திமுகவினர்.. ஈழ இறுதிபோரில் திமுகவும் கலைஞரும் துரோகம் இழைத்ததாக சொல்லி திரியும் இவர்கள் அறியமாட்டார்கள் "இவர்களே தேடிக்கொண்ட அழிவு என்று ".. ஈழ மக்கள் இந்த நாதக கும்பலை அறிவார்கள் பணத்திற்காக பொய்பேசி திரியும் கயவர்கள் என்று .. வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்கள் பிரபாகரன் வைத்திருத்த நிலை என்ன.. ஒரே ஒரு போட்டோ வைத்துக்கொண்டு கற்பனைகதைகளை (ஆமைக்கறி தோளில் சாய்வார்) 
என தொடர்ந்து புளுகும் கயவன் சீமான்..
..
பழைய திமுகவைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் 
ஒரேயொரு உதாரணம்
வை.கோபால்சாமி கட்சியிலிருந்து நீக்கபடுகிறார்.. அவரோடு ஒன்பது மாவட்ட செயலர்கள் தினகரன் கந்தசாமி போன்றவர்கள் செல்கிறார்கள் திமுகவிற்கு உரிமை கோருகிறார் வைகோ.. திமுக பொதுக்குழு தஞ்சையில் கூடுகிறது குருதயாள்சர்மா மண்டபத்தில் காலையில் பொதுக்குழு முடிந்து கலைஞர் ஓய்வெடுக்க வருகிறார் மாலையில் திலகர் திடலில் பொதுக்கூட்டம் .. நடத்தவிடமாட்டொமென  என வைகோ விசுவாசிகள் பேச கலைஞர் காதுக்கு செய்தி வருகிறது .. உடனே என்ன மணி(கோ.சி.மணி) உன்னை நம்பிதானப்பா வந்தேன் என்கிறார் .. இங்கே இரு வருகிறேன் என திடலுக்கு விரைகிறார்.. யார்றா .. அவன் இங்கே தான் கூட்டம் நடக்கும் எவனாவது கலாட்டா செஞ்சீங்க  இங்கேயே புதைச்சுருவேன் என கர்ஜித்தார் .. சத்தம் போட்டவனெல்லாம் பதுங்கிவிட்டார்கள் ..  திரும்ப வந்த மணி அண்ணன் "போய் பேசு போ" என சொன்னார் கலைஞரின் கண்களில் கண்ணீர் வந்தது .. அப்படிபட்ட
தளபதிகளும் தொண்டர்களும் உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் .. அமைதியாகவே இருப்போமென கருதுவது சிறுப்பிள்ளைத்தனம் .. 
..
நாதக தம்பிகள் சீமானை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்.. இளையாங்குடியில் எதுவும் நடக்கலாம் கலவரம் செய்ய திட்டமிடுகிறார்கள் கைது செய்து அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் .. 
நாதக தம்பிகள் கவனம் .. 
..
ஆலஞ்சியார்


Sunday, December 12, 2021

கருத்து சுதந்திரம் 
ஒருவர் வாய்க்குவந்தபடி பேசுவதும் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசுவதும் தனிநபர்களை கேவலபடுத்துவதும் தொடர்ந்து செயல்படும்போது அவர் கண்காணிக்கபடுகிறார் .. சரியான நேரத்தில் கைதுநடவடிக்கை என்றவுடன் பதறுகிறார்கள் ..
..
எது கருத்துசுதந்திரம் 
திமுக தேசதுரோக கட்சியென தொடர்ந்து குற்றம்சாட்டுவது தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பா..? என கேள்வி எழுப்புவது ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதென தொடர்ந்து பேசிவந்த மாரிதாஸ் 
முப்படைத்தளபதி மரணம் குறித்து சந்தேகம் என்ற பெயரில் ட்விட் செய்ய எலி பொறியில் மாட்டிக்கொண்டது ..
..
விமர்சனம் செய்வதற்குமுன் அதற்கான தகுதியை பெற்றிருக்கவேண்டும்.. "முற்போக்கு" பார்ப்பனர்கள் கூட மாரிதாஸின் வீடியோக்களை தொடர்ந்து இரண்டு நிமிடம் பார்க்க முடியாது என எழுதுகிறார்கள் .. அவரது பேச்சு செயலும் கழிசடைத்தனம் .. ஆனாலும் திமுக இதுவரை பொறுமைகாத்ததே தவறென்று நினைக்கிறேன் ..
..
கிஷோர் கல்யாணராமனுக்கு பதறாத பாஜக இப்போது பதறுவதன் நோக்கம் புரிகிறது மாரிதாஸை இயக்கியவர்கள் "குரு" உச்சத்திலிருந்தாலும் வளையத்திற்குள் வரநேரிடும் என அஞ்சுவதும் தொடர் கைதுகள் சரியான பாதையில் சென்றால் பாசிசக் கூட்டம் சிதறும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறாமல் போகுமென அறிவார்கள் ..அதனால் தான் பதற்றம் அதிகரிக்கிறது 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு காத்திருந்து கொத்தும், ஆடவிட்டு அடிபலமாக  விழவேண்டுமென அமைதிகாக்கிறது .. இன்று கருத்து சுதந்திரம் என பொங்குகிறவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை அள்ளிவீசும் போது எங்கே போனார்கள் .. சாக்கடைநீரை வீசும் போது நாறும் என அறியவில்லையா ..
இன்னமும் இருக்கிறது .. மதவெறி சாதிவெறியை தூண்டி, குற்றவாளிகளை ரௌடிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கலவரம் செய்யவேண்டுமென திட்டமிடுவதும் அதை திமுக இடதுகை கொண்டு கையாள்வதும் நாம் காண்கிறோம் ..
..
எங்க பொறுமையை சோதிக்கவேணாம் என்கிறார் பாஜகவின் அண்ணாமலை .. 
"எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா " எனும் வடிவேலு காமெடி நினைவிற்கு வருகிறது ..
ஆளுநரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது .. அதுசரி பாஜக உறுப்பினரே அல்லாத  மாரிதாஸுக்காக பதறுகிறவர் பாஜக உறுப்பினரான கல்யாணராமனுக்கு இவ்வளவு வேகம் காட்டவில்லையே.. புரிகிறதா..
..
கடைசியாக..
பாசிசத்தை பாஜகவை எதிர்த்து பேசியதற்காக ஆனந்த டெல்டும்பே, கவுதம்,
நெல்லை கண்ணன் போன்றவர்களை சிறையில் அடைத்தும், பாஜக சித்தாந்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக கௌரிலங்கே கல்புர்கி, பன்சாரே போன்ற அறிஞர்கள் கொன்ற கூட்டம் "கருத்து சுதந்திரம்" பேசுவது தான் கொடுமை.. 
உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள்.. 
ஒரு முதலமைச்சரால் எவ்வளவு  அதைவிட அதிகமாக தமிழ்நாடு முதலமைச்சர் உழைக்கிறார்  அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காதீர்கள்"  என்றார் ..
ஆனால் 
நாங்கள் விமர்சனம் செய்வதை கூட வரவேற்கிறோம், குறைகூறவில்லை ஆனால் அவதூறை பரப்பாதீர்கள் ..  
மீறும் போது  கைது என
கதறவேண்டிவரும் .. சரியான நடவடிக்கையை வரவேற்போம்.. 
..
ஆலஞ்சியார்