இளைஞர் ..
எதையும் சரியாக உள்வாங்கி எதற்கும் அஞ்சாமல் செயல்படும் துணிவுமிக்கவர்.. தெளிவான அரசியல் புரிதல், களமறிந்து எதிரியை திணறவைக்கும் சொல்லாற்றல், பணிவும் பக்குவமும் நிறைந்தவராய், நொடிக்குள் திணறடிக்கும் ஆற்றல் உடையவராய் பழுத்த பழங்கள் கூட தடுமாறும் நிலையில் செவ்வனே செயல்படும் செயல்வீரர்..
..
தாத்தனின் அறிவும் அப்பனின் உழைப்பும் பேராசான் பெரியாரின் வழியொற்றி தன் அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர்.. திராவிட கருத்தியலை சரியாக அடையாளப்படுத்தி அரசியல் செய்கிறார் .. எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசியலை முன்னெடுக்கும் தலைவரின் படையோட்டத்தின் தளபதியாய் சுழன்று இவர் தமிழ்நாட்டின் இன்முகமாய் மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம்..
..
கலைஞரைப் போல நகைச்சுவை உணர்வு.. சட்டென்று சாய்த்துவிடும் நுணுக்கம்,அக்காவிற்கு வேலையில்லை என்ற ஒரே வரியில் தமிழிசையை தரைதட்டிய விதம் கேள்வி கேட்பவரே எதிர்பாராமல் பதிலளிக்கும் உத்தி சில நேரம் செவிட்டில் அறைந்தாற்போல் நிலைகுலைய செய்கிறார்.. எதிரிகள் தலைவர் ஸ்டாலினைவிட இவரிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டிவரும்..
..
இளஞ்சூரியன் உதயநிதி வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமம்.. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் முன்னெடுப்பு.. சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற பிரகடனம் ஒன்றே போதும் யார் இவர் என்பதற்கு .. உண்மையில் பழைய கலைஞரை பார்த்த மகிழ்வு
..
உங்கள் வெற்று வார்த்தைகளும் வீண் சவால்களும் என் பயணத்தை தடுத்து நிறுத்திட முடியாது ..
இது ஒன்றே போதும் வருங்காலம் தமிழ்நாடு சிறக்கும் என்றும் கருப்பசிவப்பு பறக்கும்
வாழ்த்துகள் உதய்
..
ஆலஞ்சியார்