Saturday, June 8, 2024

Constitution of India..
மோடி தலை வணங்கினார் ..
இந்து ராஷ்ட்ரீயம் அமைப்போம் ராம ராஜ்ஜியம் என்று வெறியூட்டும் பேச்சுகளையே பேசி வந்தவர் இப்போது "அரசியலமைப்பு சட்டம்" தான் இந்தியாவின் உயிர்நாடி என தலை வணங்குகிறார்.. மோடிமீது நம்பிக்கை வரவில்லை மாறாக இயலாதவனின் "தந்திரம்" ஆக தெரிகிறது ..
..
ஆட்சி அமைக்கிறார் NDA வின் தலைவராக தேர்வு செய்யபட்டும் பாஜகவினரிடத்தில் "மலர்ச்சி" இல்லை ,மாறாக "இழவு" வீட்டின் அமைதி தெரிகிறது .. செய்வதறியாது கைகள் தானாக பிசைந்துக் கொள்கின்றன .. மதம்,ஆணவம் ,அகந்தை அடக்கபட்டிருக்கிறது.. இனி ஒவ்வொரு அடியும் அளந்து வைக்க வேண்டும்.. நிதிஷ்,நாயுடு கைகளில் கயிறு.. பொம்மையாய் மோடி .. "ஆட்டம்" ரசிக்கக்கூடிய இருக்குமா காலம் பதில் சொல்லும்..
..
இந்திய மக்களின் ஆன்மா அரசியலமைப்பில் இருக்கிறதென்பதை பத்தாண்டு காலம் மறந்து நின்றவர்..
தானே "ரட்சகன்" என்ற அகம்பாவம் புதிய இந்தியாவின் "கடவுள்" என்று பெரும் கூச்சல் இந்திய காதுகளில் சலிப்பை/சோர்வை தந்தது..ஆனால் ஆணவம் தலைக்கேறி எதிர்க்கட்சியே இல்லாத இந்தியா என்ற நிலையை அடைய எதையும் செய்ய துணிந்த மோடியின் கைகளை மக்கள் தங்கள் விரல் கொணடு கட்டியிருக்கிறார்கள்.. 
..
INDIA கூட்டணி அதிகாரம் கிடைக்காமல் போனாலும் "மகிழ்ச்சி" தெரிகிறது .. தோற்றவர்கள் ஏன் கொண்டாத்தில் ஈடுபடுகிறார்கள்
என தெரியவில்லை என்கிறார் மோடி .. இன்னமும் அவருக்கு புரியவில்லையா அல்லது புரிய்ததுபோல் நடிக்கிறாரா.. இந்தியாவில் எல்லா மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமென உங்கள் வாயால் சொல்ல வைத்திருக்கிறார்களே அதற்காக தான் இந்த கொண்டாட்டம் .. மாட்டுக்கறியும் மத அரசியலும் செய்தவரை அரசியலமைப்பு முன் மண்டியிட வைத்ததால் இந்த கொண்டாட்டம்.. மாநிலத்திற்கு ஒரு பேச்சு, மாநிலங்களிடையே பகைமையை வளர்த்த "கயமைக்கு" கடிவாளம் போட்டிருக்கிறார்களே மக்கள் அதற்காக இந்த கொண்டாட்டம்.. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடம் ஒரு பிரதமர் என்றவர் பெரும்பான்மை அரசு வரவேண்டும் என்றவர் இன்று கூட்டாட்சி பற்றி பேசுகிறார்.. இதைதான் திமுக மாநிலங்களில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற கொள்கை பிரகடனத்தை 50 ஆண்டுகளுக்கு முனபே சொன்னது.. 
..
வரும் ஆண்டுகளில் மோடி மாற்றப்படலாம் 
வேறொருவரை "ரட்சகன்" வேஷம் கட்டி நிறுத்தப்படலாம்.. ஏனெனில் தனிமனித துதி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு வேட்டு வைக்கும் என்பதை உணராதவர்கள் அல்ல .. பிராமணர்கள் நலனுக்கு தீங்கு வருமென்றால் தூக்கியெறிந்துவிடுவார்கள் .. 
தங்களின் "அடியாள்" விசுவாசமில்லாதவனெனில் குப்பையில் வீசவும் தயங்கமாட்டார்கள்.. மோடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதே உண்மை.. ரசிக்க இயலாத பொம்மலாட்டத்தின் காட்சிகள் இனி அரங்கேறும்.. எத்தனை இடர் வந்தாலும் இந்திய சனநாயகம் வலிமையானது தன்னை காததுக்கொள்ளும் வலிமை பெற்றது மக்கள் மிகத் தெளிவானவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் போனாலோ வரம்பு மீறினாலோ தூக்கியெறிய தயங்கமாட்டார்கள்..  சனநாயகம் வலிமைக் கொண்டது.. 
 ..
இனி NDA ஆட்சி 
(NDA) Naidu/Nitish Dependent Alliance 
..
ஆலஞ்சியார்

Wednesday, June 5, 2024

இந்திய சனநாயகம் வென்றது ..
பன்முகத்தன்மையை அகற்றி ஓரே தேசம், ஓரே மொழி, ஓரே கலாச்சாரமென்ற மோடியின் (பாஜக) கூற்றை புறந்தள்ளி மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.. சர்வாதிகாரத்தை நோக்கிய மோடியின் பயணத்தை, தான் "பிரம்மன்" எல்லாம் என்னால்தான் ஆனது என்ற அகந்தைக்கு மக்கள் மரண அடி கொடுத்து உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் எவனும் எஜமானன் இல்லை எவனுக்கும் தலை வணங்கமாட்டோம் நாங்களே யாரென்று தீர்மானிப்பவர்கள் என மக்கள் உணர்த்தி ஆணவகாரர்களின் புறடியில் அடித்தமர்த்தியிருக்கிறார்கள்..
..
இங்கே பல பண்பாட்டு இழையோடும் மக்களின் இயல்பும் இணக்கமும், வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் .. இங்கே எவ்வளவு  உயரத்தில் ஆடினாலும் சட்டென்று வீழ்த்திவிடும் வலிமை இந்திய விரல்களுக்கு உண்டு..
மதத்தை சாதியை,பிரிவினையை பேசி நீண்ட நாள் ஆட முடியாதென உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல் .. பச்சையாக மத துவேஷத்தை பேசி பிறமொழிகளை இகழ்த்தி ,மொழி வெறியை ஊட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்து கண்ணீர்விட்டு கைகூடாதென்ற போது கடவுள் "அவதாரம்" எடுத்து அத்தனை சித்துவேலைகளையும் செய்து தானென்ற ஆணவத்தில் ஆடியவர்.. நேற்று முகம் வாடி "ராமரை" மறந்து ஜெகந்நாதனை துணைக்கழைக்கிறார்..
..
இந்திய கண்ட பிரதமரில் மிக மோசமானவர் என வரலாறு அடையாளம் கொள்ளும்.. எதையும் உருவாக்க முடியாமல் போனாலும் அழிக்காமலாவது இருந்திருக்கலாம்.. மக்கள் மூளையில் மதத்தை ஏற்றும் வித்தை தெரிந்தவர்க்கு அறிவை தரவேண்டும் அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டுமென தெரியவில்லை..
56 இன்ச் மார்பு, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஊழல்வாதிகள், நான் மட்டுமே புனிதன், இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடாதே, பச்சைக் குழந்தைக்கு ஆக்ஸிஜன் இல்லையென்றாலும் பரவாயில்லை மாட்டுக்கு
 கொடு.. புல்டோசரை எப்படி பயன்படுத்த வேண்டுமென எங்களுக்குத்தான் தெரியும்  வாழும் வீட்டை இடித்து தள்ளு .. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு செய் மக்களை தெருவில் நிறுத்து ,கொரோனாவா கைதட்டு.. இதை தவிர வேறெதும் வளர்ச்சிக்கு வித்திட்டாரா கடவுளின் அவதாரம்.. மிக மோசமான கேவலமான பிரதமராக தொடர்ந்தார்.. தொடரலாம் ..
..
ஆனால் மக்கள் கடிவாளம் போட்டுவிட்டார்கள்.. எத்தனை காலம் இது தொடருமென தெரியாது காலம் தூக்கி எரியும் அப்போது தெரியும் .. PMCare ஊழலும் இதுவரை ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரிக்கப்படும்.. இனி ஊன்றுகோலோடுதான் இயங்கமுடியும்..
..
இங்கே மற்றொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.. தமிழ்நாட்டின் செங்குட்டுவன்.. ஆம் மு.க.ஸ்டாலின்.. வாய்ப்பே இல்லை கட்டம் சரியில்லை என்றார்கள்.. ஆனால் செங்குட்டுவனைப்போல சிறந்த ஆட்சியை மடடுமல்ல  சிறந்த ராஜதந்திரி என்றும் நிரூபித்திருக்கிறார் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. சொல்லி அடித்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் பாசிசத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார்..  40க்கு 40 வெற்றியை பெற்று தந்து தான் தேர்ந்த அரசியல்வாதி என்பதை தன்னை விமர்சிப்போருக்கு சொல்லியிருக்கிறார்..
..
ராகுல் மிகப்பெரிய முன்னெடுப்பு செய்து காங்கிரஸை சரியான பாதையில் நிறுத்தியிருக்கிறார்.. எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.. பாஜகவின் எல்.கே.அத்வானி சொன்னதை நினைவுபடுத்துகிறேன்  winners comes second .. 👏
..
திரு மோடியின் முகத்தில் சிரிப்பை காணோம்.. அவருக்கே தெரியும் இருவரும் எப்படிப்பட்டவர்களென்று.. ஆனால் இங்கே எண்ணிக்கைதான் அதிகாரத்தை தீர்மானிக்கும் .. புதிய அரசுக்கு வாழ்த்துகள்..
இனி பொம்மலாட்டம்..
..
ஆலஞ்சியார்