Thursday, May 30, 2024

 "தமிழன் உறவுமுறை"
..
கோவில் கட்ட நிலம் தருகிறான் இஸ்லாமியன்.. புதுப் பள்ளிவாசல் திறந்தால் சீர் வரிசை  கொண்டு வருகிறான் இந்து என அறியப்படும் தமிழன்.. எப்படி இங்கே மட்டும் இப்படி.. மாமனாய் மச்சானாய் உறவாட முடிகிறது.. இங்கே  சாதியோ  மதமோ பெரும் தாக்கத்தை கொண்டுவராது.. காரணம் எளிது இவன் மீது திணிக்கப்பட்டதுதான் சாதியும் மதமும்.. 
..
குமரியில் தியானத்திற்கு  வருகிறார் மோடி அவர்கள்.. தன்னை இந்துத்துவவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்
 இவர் தமிழகத்தின் வரலாற்றையோ மக்களின் பண்பாட்டையோ மொழியையோ அறியமாட்டார்.. விவேகானந்தர் குமரி பாறையில் தியானம் இருந்த போது மனோன்மணியம் சுந்தரனாய் சொன்ன வார்த்தையை நாமும் சொல்கிறோம்.. தமிழர்கள் இந்துக்கள் இல்லை (நாங்கள் இந்துக்கள் இல்லை என்றார்) ..
..
தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட "கோடபாடுகள்" மதமேறியதால் அதை கொண்டாட்டமாய் கொண்டாடும் மனநிலைக்கு தள்ளபட்டாலும் இயல்பாய் அவனின் பண்பாடு அவனை சுயம் "திரிச்சறிய" செய்கிறது.. அதனால் எல்லை மீறாமல் உறவுகளைச் சொல்லி மத வேற்றுமையை மறந்து இணைந்து நிற்கிறான்.. இங்குதான் "மதம் கொணடோர்" பதறுகிறார்கள்.. 
..
எங்கள் பெரிய தந்தை இருந்தவரை அவருக்குதான் கோவில் முதல் மரியாதை தந்தார்கள் அவரை "மதம்" கொண்டு வேறுபடுத்தி பார்க்வில்லை.. இது எல்லா இடங்களிலும் நடந்தது தான் நடப்பதுதான்.. திருமண அழைப்பிதழில் தாய்மாமன் மச்சான்,சித்தப்பா பெரியப்பா என்று அச்சிட்ட வரலாறு இரு மதத்தினரிடையே நடந்ததுதான் இப்போதும் உண்டு .. அப்படி ஒன்றுபட்டு வாழ்ந்த சமூகங்கள் இன்று "வெறியாட்டம்" கொள்கிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.. 
..
இங்கே தமிழ் மண்ணில் எத்தனை சதி செய்தாலும் உறவுமுறை மாறாது..மச்சானாய் மாமனாய் அப்பனாய் வாழும்.. சில விரும்பதகாதவைகள் கணக்கில் கொள்ள தேவையில்லை.. அவை கால விழுமங்களில் கரைந்துபோய்விடும்.. தமிழ் மண் சாதி மத கோட்பாடுகளை கடந்து மனிதத்தை, உலகுக்கு சொல்லும்.. அறிவின் நிழலில் சமுகம் மேம்படும், ஏனெனில் தமிழனின் பண்பாடும் பழக்கவழக்கமும் வழிகாட்டும் ஒளிவிளக்கு..  மொழியும் இலக்கியங்களும், வாழ்வியல் முறையும், இயற்கையானது 
..
மதங்களை கடந்த உறவுமுறையை யாராலும் எதுவும் செய்திட முடியாது.. தமிழ் மண்ணில் மதமேறியவர்களின் ஆசை நிறைவேறாது என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.. அண்ணன் தம்பியாய், வாழும் சமூகம் .. 
இதற்கு வேட்டுவைக்க யாராலும் இயலாது .. மகிழ்வோடு வாழ்வோம் ..
..
 மதம் = கர்வம், ஆணவம் 
மாச்சரியம்=பொறாமை ..
..
மத மாச்சரியம் கடந்து வாழ்வோம்..
..
ஆலஞ்சியார் 


Tuesday, May 7, 2024

இசையா?.. வரிகளா?.. சினிமா பாடல்களை முணுமுணுத்தவன் பாடல் வரிகளுக்கு தான் கைதட்டி நின்றான்.. இசை என்பது வரிகளை கொண்டு சேர்க்கும் படகு..
ஊஞ்சல் கட்டி ஆட இசை உதவும் பொருளுணர்ந்து சிரிக்கவும் கோபப்படவும் ,ஆர்ப்பரிக்கவும், லயிக்கவும், ஆசுவாசபடவும் இசை பெரும் பங்கை வகிக்கும்.. 
..
மொழியில்லாத இசை என்ன செய்யும்?.. அறிவை,சிந்தனையை தருமா.. எழுத்து இதயத்தை கிழித்து ஆழ பதிவிடும்.. 
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை".. 
"முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே  காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே".. 
"போனால் போகட்டும் போடா".. 
"அந்திமழை பொழிகிறது"..
"காமன் கோவில் சிறை வாசம் 
காலை எழுந்தால் பரிகாசம்" ..  சொல்லிக் கொண்டே போகலாம்.. இசை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் பூமாலையாக்கும் 
..
கவிதைகள் தனியொருவனின் ஆக்கம்.. 
இசை பலரின் பங்களிப்பை சரியாக ஒருங்கிணைப்பதாகும்.. மொழி அறிவைத் தரும், 
இசை லயிக்க, மெய்மறக்க, கண்மூட,  மனதை இலகுவாக்க, மறக்க செய்யும், ..
இசையை சில நேரம் ரசிக்கலாம் 
மொழியோடு கூடிய இசை எப்போதும் ரசிக்கலாம்.. 
இசை ஆற்றுப்படுத்துவது 
மொழி அறிவுபடுத்துவது..
..
இசை மயக்கம் தரும்..
பாடலற்ற இசை ஒரு கட்டத்திற்கு மேல் ரசிக்க இயலாது புழுக்கம் தரும்..
எழுத்து எப்போதும் நின்று பேசும் ,அறிவைத் தரும் ..
..
ஆலஞ்சியார்