Sunday, October 6, 2024

இன்னமும்கூட சிலர் சரியாக கணிக்க தவறுகின்றனர்.. நீங்கள் நகர்த்துகிற காய்கள் திசையறியாது நிற்கின்ற பரிதாபங்கள்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவன் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களின் சிறிய அசைவுகள் உங்கள் அடித்தளத்தையே அசைத்துவிடுகிறது..  
.. 
அதிகாரம் வேண்டுமென்று தன் சகாக்களை பேச வைத்து உருட்டுகிறீர்..  செழியன்கள் வருகிறார்கள் .. ஐம்பதாண்டு வரலாற்றில் உயர்கல்வித்துறை அமைசசராக்கி வாயடைக்க வைக்கிறார்.. எதிர் முகாமில் கூட "வாழ்த்துபா" வாசிக்கிறாரகள்
உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள்.. யாருக்கு தரக்கூடாது உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்களோ அந்த சமூகத்தின் பிரதிநியையை ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்.. நீங்கள் ஆட்டம் தொடங்கும் முன்பு அரண் அமைத்து "செய்வதறியாதுசெய்துவிடும்" ஆற்றல் மிகு தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் ..
Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
..
ராஜாஜி தூக்கிக் கொண்டு வருவதிலேயே உங்கள் கால்கள் ஆட்டம்காண தொடங்கிவிட்டதை உணர்த்துகிறது.. உங்களுக்கு தெரியும் திருமா அவர்களே! 1952 ஆண்டு நடந்த சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மூதறிஞர்..? ராஜாஜி துறை சார்ந்த கோரிக்கைகளை கேளுங்கள் சவுக்காரம் துணி துவைக்க தண்ணீர் படித்துறை வேண்டுமென கேளுங்கள் என்றவர் தான் ராஜாஜி.. 
..
மதுவிலக்கு சாத்தியமா என மனசாட்சியை கேட்டு பாருங்கள்.. மதுவிலக்கு மாநாடு  அருகில் மூன்றுநாள் வியாபாரம் ஒரே நாளில் நடந்தது.. மது  ஒழிப்பு  விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து பிரச்சாரங்கள் செய்யலாம் ..
..
தி.மு.கழகம் பவளவிழா கண்டு இன்னமும் நிமிர்நடை போடுகிறதே காரணம் தெரியுமா.. வசவுகளை கடும் கண்டனங்களை தொடர் துரோகங்களை சந்தித்தும் இன்னமும் மக்கள் பணியில் மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் திகழ்கிறதே! ஏன் தெரியுமா.. தெளிவான கொள்கை,  தீர்க்கமான சமூகப்பார்வை, நெஞ்சுறுதியோடும் நேர்மையோடும் அரசியல் செய்தல், தொலைநோக்குப் பார்வை இவைகள்.. இன்னமும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தி.மு.கழகம் செயலாற்றும்.. 
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோதே உங்கள் "சமூகநீதி"பார்வை அநீதியானது ..
..
திமுக தமிழர்களுக்கான இயக்கம்  திமுக விளிம்புநிலை மக்களுக்கானது.. எல்லோருக்கும் எல்லாம் என்ற பொது கோட்பாட்டை கொண்டது.. குறுகிய வட்டத்திற்குள் அமைத்திட முடியாது.. தி.மு.கழகம் இயங்கிக் கொண்டே இருக்கும்..
..
ஆலஞ்சியார்