Saturday, January 30, 2021

நம்ம ஸ்டாலின்

#உங்கள்தொகுதியில்ஸ்டாலின்
முதல்நாளிலேயே கண்களில் கனவுகளோடும் கைகளில் மனுக்களோடும் பெருந்திரளாய் மக்கள் .. 
உங்கள் நம்பிக்கையை காப்பேன் என்கிறார். #தலைவர்_தளபதி_ஸ்டாலின்
.. 
நல்ல தொடக்கம் மக்களின் விழிகளில் ஏக்கமும் வருங்காலத்தை இந்த பாசிசத்தின் அடிமைகளை விட்டால் நாசமாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் தெரிகிறது ..கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சு தரும் வேலையை அதிமுக அரசு செய்துவருவதை காண்கிறார்கள் ..மிக மோசமான காலத்தில் தமிழகம் நிற்கிறது.. தனக்கு வாய்பளித்தவரையே கழுத்தறுக்கும் கொடுஞ்செயலை கொஞ்சமும் சஞ்சலமின்றி செய்கிற பழனியும் .. தன்னை முன்னிறுத்தியவரை காட்டிகொடுத்தும் கழுத்தறுத்தும் பகைவரோடு கைகோர்த்து சப்தமில்லாமல் வேட்டுவைக்கும் பன்னீரும் ..பதவி பணம் பயம் இவை மூன்றும் கண்ணை மறைத்து தமிழக நலன்களை காவு கொடுக்கும் நயவஞ்சகூட்டம் ..இதை 
இனியும் அனுமதித்தால் நாடு சுடுகாடாய் போகும் ..பொய்யும் பித்தலாட்டமும் ஆயுதமாய் கொண்டு ஆட்சி நடத்துகிற அறிவிலிக்கூட்டம் தமிழர்கள் வாழ்வை நாசமாக்கி .. கல்வி வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவர் தடையின்றி நுழைய வழிவகுத்து தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் கயமையை கலக்கமின்றி செய்யும் கயவர்களை விரட்டிட வேண்டுமென்ற பெரும் கனவோடு வருகிறார்கள் 
..
நல்லதை தேர்வு செய்து விதைக்காமல் போனதால் விதைத்தது சொத்தையாகி போனதால் ..  இனி அந்த தவறை செய்வதில்லை என்ற உறுதியோடு திமுகவை நோக்கி வருகிறார்கள் .. தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சி காணபடுகிறது .. மக்கள் பேராதரவோடு திமுக அறியணை ஏறும்  என்பதை எதிரிகள் உணர்ந்திருக்கிறார்கள் ..அதனால் தான் கண்டதையும் பேசி திரிகிறார்கள் மத கலவரத்தை சாதிவெறியையூட்டி திசை திருப்பலாமென்ற நப்பாசையில் தமிழகம் மண் அள்ளி போட்டுவிட்டது .. அதனால் தான் தனிநபர் தாக்குதலை தரம் குறைந்து பேச தொடங்கியிருக்கிறார்கள் .. அவர்களின் இயலாமை கோபம் செல்லுமிடமெல்லாம் செருப்படி தரும் தமிழ் சமூகம் எழவே முடியாதவாறு புதைத்திருக்கிறார்களே என்ற ஆற்றாமை அவர்களை வரம்புமீறி பேசவைக்கிறது .. பாஜகவில் உள்ளவர்கள் எல்லாம் களவாணிகளும் தெளிவற்றவர்களும் கோழைகளும் முகவரியில்லாதவர்களும் தான் .. கொள்கையில்லாத மதவெறி ஏறிய மூடர்கள் .. பொய்யும் பணமும் அவர்களின் மூலதனம்.. அதிகாரத்திற்கு வருவதற்காக எதையும் #எதையும் செய்ய துணிவார்கள் .. திறக்கபடாத கதவுகளும் மடிக்கபடாத விரிப்புகளும் கூட ஆயுதமாக்க தயங்காதவர்கள் அவர்கள் புத்தி அதில் தான் போய் சேரும் .. நன்னெறி அரசியல் அறியாத முண்டங்கள் ..
#மானமிகு_கனிமொழி அவர்களை, மானங்கெட்ட கழிவறையில் கருவான அலசல்கள் பேசுவதிலிருந்தே அவர்களின் தரமும் நோக்கமும் புரியும்.. கருத்துக்களோடு மோத வக்கற்ற சவலைகள்.. திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றவுடன் இவர்களின் விரக்தி கழிவுகளாக வருகிறது .. கழிவுகளோடும் பொய்கதைகளோடும் அரசியல் செய்கிற கூட்டம் அது ..
..
நாம் நம் பயணத்தில் தெளிவாக இருப்போம் .. நல்லதைச் செய்வோம் நாடு நமது மக்களின் துயர்துடைக்கும் கரங்களாய் இருப்போம் ..வீணர்கள் விவரகேடுகள் விலைபோகும் பேதைகள் மானமறியா கோழைகள் கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைத்தேனும் சுயநலத்தோடு சுகமாக வாழ நினைக்கும் அற்பர்களை விரட்டுவோம் .. ஸ்டாலின் எனும் மகத்தான தலைவரை காலம் நமக்கு காட்டியிருக்கிறது அவரது கரத்தை பலமாக பற்றிக்கொள்வோம்.. நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையோடு .. 
உங்களின் கோரிக்கைகள் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் நிச்சயம் செய்து தருவார் கலைஞரின் மகன் .. கனிவோடும் கரிசனத்தோடும் தோள்கொடுக்கும் தோழனாய்.. உங்கள் வீட்டுப்பிள்ளையாய்..  நல்லதை எண்ணும் நெறிதவறா அரசியலை முன்னெடுக்கும் 
ஒய்வறியா உழைப்பாளி தளபதி அவர்கள் ..நம்
கவலைகள் எல்லாம் தீரும் .. 
உதயசூரியன் உதிக்கும் 
இருள் நீங்கும்....
..
#நம்மோடு_ஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்