Friday, June 19, 2020

ராகுல்

ராகுல் 
மதிப்பிற்குரிய தலைவராக உயர்ந்துநிற்கிறார் 
பதவிக்காக எதையும் செய்யும் அரசியல் அறியாத மிகவும் பக்குவபட்ட தலைவராக வலம் வருகிறார் ..நாட்டை உண்மையாக நேசிக்கிறவர் .. பொய் அறியாதவர் தன்னை தேடி பதவி வந்தபோதும் மன்மோகன் எவ்வளவோ வற்புறுத்தி ஏற்காதவர் .. அன்று பதவியை ஏற்றிருந்தால் Dominate செய்கிறார் அதிகாரத்தில் தலையிடுகிறாரென பெயர் வந்திருக்கும் ..  இவர் மீது வைக்கபட்ட விமர்சனங்கள் அவதூறுகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பவர் .. இத்தாலி குடியுரிமை வெளிநாட்டில் காதலியென கதைவிட்டு பார்த்தும் பொதுவெளியில் மோடியை போல கண்ணீர்விடவில்லை ..
நல்ல தலைவனுக்கு தகுதி கற்றுக்கொள்ளல் அது ராகுலிடம் காணமுடிகிறது.. மிகச் சிறந்த தலைவர்களை காலம் தரும் .. 
இளைஞராக இந்நாட்டின் நாட்டுமக்களின் நம்பிக்கையாக வலம் வருவார்.
..
நாடகம் நடத்தவில்லை மார்பை விரித்து வீரவசனம் பேசவில்லை அடுக்கடுக்காய் பொய்பேசி திரியவில்லை அழுது புலம்பவில்லை, மதவெறியை தூண்டி கலவரம் செய்ய தெரியவில்லை சாதிவெறியூட்டி கீழானவர்கள் என விசவிதையை தூவி தாக்கவில்லை மாட்டிறைச்சி வைத்திருந்தவனை கொன்றவனுக்கு மாலை அணிவிக்க சொல்லவில்லை .. முன்பிருந்த ஆட்சியாளர்கள் மீது பலிபோடவில்லை .. 
இந்திராவையும் ராஜீவ் மரணத்தையும் வைத்து 
அரசியல் செய்ய தெரியவில்லை.. தொடர்ந்து தன்னை கேலி செய்தும் தரந்தாழ்ந்து தனிநபர் விமர்சனத்தை செய்ய தெரிவில்லை.. கண்ணீர் வடித்து என்னை தீக்கிரையாக்கிவிடுங்கள்  என நடிக்கவில்லை .. பாவம் வடஇந்திய அரசியலை அறியாதவராகிப் போனார்..
..
நேர்மையாக பேசி நல்ல நெறியோடு கூடிய அரசியல் அறத்தை அறிந்திருந்தார் .. தனக்கு தெரியாத துறைகளில் தெளிவு பெற அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களை கலந்தாலோசிக்கிறார் .. மக்கள் அவதிபடும் போது கைதட்ட சொல்லாமல் தானே நேரில் சென்று புலம்பெயர் மக்களோடு பேசுகிறார் .. 
எளிமையாக தன்னை முன்னிறுத்துகிறார் .. நீண்டகாலமாக காங்கிரஸில் இருந்த ஆர்எஸ்எஸ் பிராமணர்களின் துரோகத்தால் தனது அரசியல் பயணம் கேள்விக்குறியான போதும்.. ஊடகத்துறை ராகுலை ஏதோ தகுதியே இல்லாதவர் போல் போலி பிம்பத்தை உருவாக்கிய போதும் கலங்காமல் மக்கள் பணியை செய்கிறவர் .. 
..
நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் தளபதி.முக.ஸ்டாலின் ராகுல் பெயரை முன்மொழிந்தார் ஆனால் பதவி ஆசை/வெறிப்பிடித்த மாநில தலைவர்கள் ஏற்க மறுத்ததின் விளைவு .. சில இஸ்லாமிய கட்சிகள் உ.பி. கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்கை பிரித்து பாஜகவிற்கு துணைப்போனது இவையெல்லாம் இன்றைய 
துயரத்திற்கு காரணம் ..
திரு.ராகுல் அவர்களே .. 
நீண்ட பயணம் காத்திருக்கிறது .. அரசியல் ஆசான் கலைஞரை படியுங்கள் ..இந்த பாசிச கூட்டம் எப்படி தொடர்ந்து தொந்தரவு செய்தது ஊழல் வழக்கு உதிரிக்கட்சிகளை பிரித்தது 
திமுகவை உடைக்க மகோராவை முன்னெடுத்தது அடுத்தடுத்து தோல்விகள் வீழ்ச்சிகள் துரோகங்கள் என தொடர்ந்து அழுத்தபட்டபோதும் "அறம் வெல்லும் " என்ற துணிவோடு அரசியல் செய்தவர்..இன்று வரலாறு  புகழ்கிறது .. நேர்மையும் நெஞ்சுரமும் விடாமுயற்சியும் எதிரிகளின் சூழ்ச்சி அறிந்த வீயூகமும் துரோகிகளை இனம்கண்டு தூரத்தே நிறுத்தி செயலாற்றுங்கள் .. மக்களை சந்தியுங்கள் "நமக்குநாமே " நல்ல முன்னுதாரணம் .. மக்களிடம் செல்லுங்கள் 
மக்கள் என்றைக்கும் கைவிட மாட்டார்கள் பெருந்துயரத்தில் இருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது பொய் சொல்லாத நல்ல நிர்வாகத்தை தருகிற நேர்மையானவரை ..
நாணயமான நல்ல அரசியல் தலைவரை தான்..
நம்புங்கள் மக்களிடமே ஜனநாயகத்தின் உயிர்நாடி இருக்கிறது ..

வாழ்த்துகள் ராகுல்
..
ஆலஞ்சியார்