மத்திய அரசு கல்விக் கொள்கையை அறிவப்பதற்கு முன்பே முந்திக்கொண்டு ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு "பொதுதேர்வு" அறிவித்திருபிபதன் மூலம் நடப்பது அதிமுக ஆட்சியல்ல பாஜக ஆட்சிதான் என்பது தெரிகிறது .. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ..
இப்போதாவது புரிந்ததே திரு.ஸ்டாலின் அவர்களே அரசியலில் சரியான நேரத்தில் மிகச்சரியாக காய்நகர்த்தல் அது சூழ்ச்சியெனினும் செய்திருக்க வேண்டும் .. நேர்மையற்றவர்கள் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருகிறார்கள் அந்த கயமைத்தனத்தை மௌனமாய் அங்கரீத்தது மிகப்பெரிய தவறு ..எதிரி எந்த வழியை கையாள்கிறானோ அதே வழியில் சென்று வீழ்த்துவது கூட அறம் தான் .. இந்திய அரசியல் ஜனநாயகம் பாதையிலிருந்து மெல்ல விலகும் போது நீதி நேர்மை பேசிக்கொண்டு காலம் கடத்தியதன் விளைவு ஒவ்வொன்றாய் இழக்கிறோம் .. வாய்பிருந்தது இந்த அரசை வீழ்த்த வீட்டுக்கனுப்ப ஆனால் நாம் தான் தேர்தலில் வெற்றிப் பெற்று மக்கள் விருப்பத்தோடு ஆட்சிக்கு வருவோமென காத்திருந்ததால் இருக்கும் வரை ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து விடவாமென முடிவுகட்டி ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் ..
குனிய சொன்னால் படுத்தே விடுகிறவனிடம் நெஞ்சை நிமர்த்த சொல்வதெல்லாம் வீண் ..
..
காலம் கடந்த ஞானோதயம் பலன் தராது இன்றைய நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ திமுகவும் காரணமாகி போனது ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் இருந்தும் இந்த எடப்பாடி அரசு கலைய/கலைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும் ..
இன்றை தேர்தல் அரசியலில் பகுதி கெட்டுவிட்டது
அதிகாரமிருந்தால் தான் எதையுமே சாதிக்க முடியுமென்ற நிலை அதற்காக எந்த இழிவையும் சுமக்க தயாராக இருக்கிற கூட்டத்திடம் தமிழகம் சிக்கி நிற்கிறது ..திமுக தோழமைகள் நம்பிக்கைகுரியவர்களாகவோ நட்பிற்குரியவர்களாகவோ இல்லை மிக சாதூர்யமாக கையாள வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு வந்திருக்கிறது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதை செடியாக வளரவிட்டதால் .. விஷசெடியை வேரோடு பிடுங்க வேண்டிய நிலை
அதற்கான ஆயத்தத்தை செய்தே ஆகவேண்டும்
..
பாசிசத்தின் பிடியில் தமிழகம் மெல்ல மெல்ல முகமிழக்கிறதோ என வினவ வேண்டியிருக்கிறது
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வகுப்புகள் பள்ளிகளில் நடக்கிறதெல்லாம் அறியாமல் திமுக தலைமை இல்லை ஆனாலும் ஏன் இந்த மௌனம் .. இந்திய அரசியலில் ஜனநாயகம் கேலிகூத்தாக்கபடும் வேளையில் .. இந்திய நீதிமன்றங்கள் கள்ளமௌனம் காக்கின்றன தேர்தல் ஆணையம் நெறிதவறி வெகுநாட்களாகிவிட்டது இந்த சூழலில் தான் நாம் "நீதிநேர்மை " பேசிக்கொண்டிருக்கிறோம் .. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வது கூட அறம் தான் ..
விழித்துக்கொள்ளாவிடில் தமிழகமும் தமிழ் சமூகமும் நம்மை மன்னிக்காது
..
ஆலஞ்சியார்